Results 1 to 9 of 9

Thread: சுவை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    சுவை

    என் தனிமைக்கும்
    அழுகைக்கும் ஒரே சுவை

    தனித்திருக்கையில் அழுகையா
    அழுகையில் தனிமையா
    எதுவென தெரியாமலே
    இரண்டும் வந்து சேர்க்கின்றன

    பொல பொலவென பொங்கி
    முழுக்க பரவி
    கணகணக்கும் கண்ணீரின் ஈரத்தில்
    எடை கூடி கனக்க ஆரம்பிக்கிற தனிமை
    சுமக்க முடியாததாகிறது

    மேலும் உறைந்தொரு பனிக்கட்டியாய்
    தன் குளிர்ச்சியின் கூரிய ஊசியை
    உயிர் முடிச்சில் பாய்ச்சி
    துடிதுடிக்கையில்
    குரூரப்பார்வையோடு எக்களிக்கிறது

    கூட்டித்தள்ளிவிட முடிகிற
    உலர்ந்த சருகை போலவோ
    தூசியை போலவோ
    இருப்பதில்லை தனிமை
    பெரும் பாறையை போல
    பெயர்த்துடுக்க இயலாத வண்ணம்
    அது பதிந்திருக்கிறது.

    யாருக்கு தெரியும்
    அந்த பாறைக்குள்
    ஓடிக் கொண்டிடுமிருக்கலாம்
    இன்னும் சிந்தாத கண்ணீரின் ஜீவநதி..

    என் தனிமை ஒருநாள்
    உன்னுடையதுமாய் ஆகும் போது
    உனக்கும் ஐயம் எழுலாம்
    எது அழுகையின் சுவையென!!!!
    அன்புடன் ஆதி



  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அழுத்தும் தனிமையின் பாரம் தாங்கவியலா மனம் கொண்ட கழிவிரக்கத்தின் வெளிப்பாடாய் அழுகைப்புலம்பல்கள். இறுகிக் கிடக்கும் பாறையையும் உடைத்துக் கிளம்பலாம் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் கண்ணீரின் ஜீவநதி, ஆனந்தத்தின் அடையாளத்துடன்! அப்போது அழுகையின் சுவையும் வேறுபடலாம்.

    தனிமை பற்றிய உங்கள் பார்வை என்னிலும் முரண்பட்டது என்றாலும் அழகாய் காட்சிப்படுத்தியதை ரசித்தேன். ஒதுக்கிவிட இயலாததும், பெயர்த்துவிட இயலாததுமாய் மனதில் படிந்த உவமைகள் வெகு பொருத்தம். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள் ஆதன்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    தனிமை உணர்வு கொடிதெனினும், அதை வரிகளில் வடித்த விதம் இனிமை.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    விரட்டியடித்தாலும் விடுவதில்லை
    இந்தத் தனிமை என்னை
    தண்ணீர்த் தொட்டியை நாடிவரும்
    தேனீயோ என்பதுபோல்

    கனத்தாலும் சரி கரைத்தாலும் சரி
    ரசிக்கமுடிகிறது என்னால்
    சிலநேரம் தேனின் சுவையை நினைவுபடுத்தினாலும்
    பல நேரம் கொட்டிவிடவே செய்கிறது

    இருந்தாலும் என்னால் ரசிக்க முடிகிறது
    தேன்சுவை நினைவையும், மரண வலியையும்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    தனிமையை பற்றி நிறையவே யோசித்து இருக்கிறீர்கள்..தனிமையில்..! அருமை...

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    9,454
    Downloads
    0
    Uploads
    0
    தனிமையிலே இனிமை காண முடியுமா..........



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

  7. #7
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jul 2008
    Location
    sri lanka
    Posts
    53
    Post Thanks / Like
    iCash Credits
    24,562
    Downloads
    6
    Uploads
    0
    துயரம் வந்து உயரங்கள்
    வராமல் போவதில்லை.....
    துயரத்தை விட்டு உயரத்தைப்பார்
    அது எங்கோ இருக்கையில்
    நீ மட்டும் ஏன்???

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் கலாசுரன்'s Avatar
    Join Date
    31 Jan 2011
    Posts
    115
    Post Thanks / Like
    iCash Credits
    9,960
    Downloads
    0
    Uploads
    0
    என் தனிமை ஒருநாள்
    உன்னுடையதுமாய் ஆகும் போது
    உனக்கும் ஐயம் எழுலாம்
    எது அழுகையின் சுவையென!!!!



    மிகவுன் ரசித்தேன் இந்த வரிகளை...

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    தனிமை கொடிதுதான். ஆதை கவிதையில் கொடுவித்த விதம் இன்னும் கொடிது.
    தனித்திருக்கையில் அழுகையா
    அழுகையில் தனிமையா
    எதுவென தெரியாமலே
    இரண்டும் வந்து சேர்க்கின்றன

    அழுகைக்கு தனிமை அவசியமில்லை. ஆனால் சில தனிமையில் அழுகை கட்டாய அவசியங்களாகின்றன. நன்றாய் தனிமையை அழுது வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •