யாதுமாகிறாய்..
மண்ணில் பயிரை ஊன்றும் வேராய்..
எனது இலக்கினில் ஊன்றச் செய்கிறாய்!
ஊட்டத்தை உறிந்துத் தரும் வேர்ப்போல
நல்லவற்றை எனக்காய் பகிர்கிறாய்..
இலை, பூ, கனியைத் தாங்கும் தண்டாய்
எனைத் தாங்குகிறாய்.!என் இன்பதுன்பம்,
கோபம் எல்லாம் சேர்த்து..! நிலமேல்
மட்டுமிருக்கும் தண்டு..இது நியதி !
உணவை சேமிக்க இயல்பை மீறி
நிலத்தடி நீளும் சில தண்டுப்போல்...
நீயுமுன் இயல்பை மீறி அன்பாகிறாய்..
என் வெறுப்பினை மறந்து...!
தாயாய் முழுத் தருவிற்கும் உணவிடும்
இலைகளைப் போல் என்
தேவைகளை யெல்லாந் தருவாய்
அழகைக் கொடுத்து உருவம் சிதைத்து
கனியை உருவாக்கும் மலர்ப்போல்
எனக்காய் கொஞ்சம் சிதைந்து
என்னை இனியளாய் உருவாக்குகிறாய்...
விதையைப் பாதுகாக்கும் கனிப் போல்
எனைப் பாதுகாக்கிறாய்...
என்னை விருட்சமாக்க
நீ யாதுமாகிறாய்...
Bookmarks