ரயில் சென்றுவிட்ட
கடைசி நொடியின்
நிசப்தத்தில் பேச
ஆரம்பிக்கின்றேன்
ரயிலில் சென்றுவிட்ட
உன்னிடம்......
--------------------------------------------------------------------
விபத்தில் அடிபட்ட எவனோ ஒருவனைக்
காட்டிலும் அதிகமாக
அலறிய அன்றுதான்
என் அன்னை என்றும் உணர்ந்தேன் உன்னை.....
----------------------------------------------------------------------
எதிரொலிக்கும் மலைத் தொடரில்
தனித்து நின்று உன் பெயரை
உரத்துக் கூவுகிறேன்
எதிரொலியாக வருகிறது
என் பெயர்....
எங்கிருக்கிறாய் நீ...?
--------------------------------------------------------------
ஈரக் கால்களில் கொலுசு
சளி பிடித்து விடுமோ
சங்கீதத்துக்கு.....!
------------------------------------------------------------
மறந்து விடத்தான்
நினைக்கிறேன்
ஆஷ்ட்ரே நிறைய
உன் ஞாபகங்கள்....!
Bookmarks