Results 1 to 2 of 2

Thread: காதல் கவிதைகள்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    30 Sep 2011
    Location
    chennai-triplicane
    Posts
    31
    Post Thanks / Like
    iCash Credits
    9,625
    Downloads
    0
    Uploads
    0

    காதல் கவிதைகள்

    காதல் கவிதைகள்



    <<<<<அவள் அழகு>>>>

    உன் அழகுகளை பற்றி
    நீ உன் வீட்டு
    உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட...


    உணர்ச்சி கவிஞன்...
    என்னிடம் கேட்டால் சொல்லுவேன்
    அதன் சுகமான இம்சைகளை
    வண்டி வண்டியாய்...!!!


    <<<<<<காதலின் மறு பிம்பம்>>>>>>

    உறக்கமில்லாமல் -உனக்கு
    நான் எழுதிய கவிதைகள்
    என்னை பார்த்து அடிக்கடி சிரிக்கின்றது.....

    உனக்காக நான் -என்
    மீசையை மழித்துகொண்ட-அந்த
    நாட்கள் எனக்கு சிரிப்பாக இருகின்றது.....

    உனக்காக நான் -சாவின்
    விழிம்புவரை போய் வந்தது
    எனக்கு வெட்கமாக திண்னுது என்னை......

    உனக்காக நான்
    காதல் என்ற பெயரில்-நான்
    பண்ணிய முட்டாள்தனங்கள் -எனக்கு
    முகம் சுழிக்க வைக்கின்றது......

    மொத்ததில் உனக்காக -நான்
    பண்ணிய காரியமெல்லாம் -என்
    முகத்தில் காறியுமுழுதடி........

    <<<<<<,காதலித்து பார்>>>>>>>

    கண்ணடித்தேன்,
    கை பிடிப்பதற்காக!

    புன்னகைத்தேன்,
    நாணம் காண்பதற்காக!

    முத்தமிட்டு
    பறக்கவிட்டேன்-அவள்
    அச்சம் காண்பதற்காக!

    இத்தனையையும்
    பயந்து பயந்து
    செய்த என்னிடம்,
    பயப்படாமல்
    ஜாடை காட்டினாய்,
    பக்கத்தில் வா என்று!

    பெண்ணே காதல்
    வந்தாலே
    தானாக தைரியமும்
    வந்து விடுமோ!

    <<<<<<,நினைவெல்லாம் நீ>>>>>>>


    எத்தனை முறைதான்
    இப்படி ஏமாறுவது?

    நீ இல்லாத போதுகூட
    எனக்கேன்
    உன் வீட்டு ஜன்னல்
    நீயாகவே தெரிகிறது?

    <<<<<<<<<பெயர்ச்சொல்>>>>>>>>>



    பத்து நிமிடங்கள் எழுதினால்
    வலிக்கின்ற எனது கைகள்

    பல லட்சம் தடவை உனது பெயரை
    எழுதினாலும் வலிப்பதில்லையே ஏன்???

    என் தொலைபேசியில்
    அழைப்பு வரும்போதெல்லாம்
    உன் நினைவுகள்
    என்னைக்கொல்லுதடி!
    நீ எனக்காக விட்டுசென்ற
    உன்னுடைய குரல்தானே
    என் தொலைபேசியின் ரிங் டோன் ...
    நீ என்முன்னே இருந்தும்
    உன்னோடு பேசமுடியாத
    பாவியானேனடி, நான் !
    என்றாவது ,
    உனக்கு என் நினைவிருந்தால்
    ஒருநொடி பேசிவிட்டு போ ..

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    உங்களுக்கு எங்கிருந்து இம்மாதிரி கவிதைக்கேற்றாற்போல் படங்கள் கிடைக்கின்றன?கண்ணுக்கும் விருந்து.நல்ல கவிதை. நல்ல படம்.பாராட்டுக்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •