Results 1 to 9 of 9

Thread: தூக்கம் விற்ற காசுகள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6

    தூக்கம் விற்ற காசுகள்

    இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
    வந்தவனுக்கோ சென்று விட ஆசை
    இதோ
    அயல்தேசத்து ஏழைகளின் ..
    கண்ணீர் அழைப்பிதழ் !

    விசாரிப்புகளோடும்
    விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
    கடிதங்களை நினைத்து நினைத்து
    பரிதாபப்படத்தான் முடிகிறது !

    நாங்கள் பூசிக்கொள்ளும்
    சென்டில் வேண்டுமானால்...
    வாசனைகள் இருக்கலாம்!
    ஆனால்
    வாழ்க்கையில்...?

    தூக்கம் விற்ற காசில்தான்...
    துக்கம் அழிக்கின்றோம்!
    ஏக்கம் என்ற நிலையிலேயே...
    இளமை கழிக்கின்றோம்!

    எங்களின்
    நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
    ஒரு
    விமானப்பயணத்னனூடே விற்றுவிட்டு

    கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
    கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
    மரஉச்சியில் நின்று ...
    ஒரு
    தேன் கூட்டை கலைப்பவன் போல!

    வாரவிடுமுறையில்தான்..
    பார்க்க முடிகிறது
    இயந்திரமில்லாத மனிதர்களை!

    அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
    எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
    இங்கே
    அலாரத்தின் எரிச்சல் கேட்டு
    எழும் நாட்கள் கசந்து விட்டன!

    பழகிய வீதிகள்
    பழகிய நண்பர்கள்
    கல்லூரி நாட்கள்
    தினமும்
    ஒரு இரவு நேர
    கனவுக்குள் வந்து வந்து
    காணாமல் போய்விடுகிறது!

    நண்பர்களோடு
    ஆற்றில் விறால் பாய்ச்சல்
    மாட்டுவண்டிப் பயணம்
    நோன்புநேரத்துக் கஞ்சி
    தெல்கா பம்பரம் சீட்டு கோலி என
    சீசன் விளையாட்டுக்கள் !
    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
    விளையாடி மகிழ்ந்த
    உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் !

    இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
    விசாவும் பாஸ்போட்டும் வந்து...
    விழிகளை நனைத்து விடுகிறது.!

    வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
    நண்பர்களின் திருமணத்தில் !
    மாப்பிள்ளை அலங்காரம் !

    கூடிநின்று கிண்டலடித்தல் !
    கல்யாணநேரத்து பரபரப்பு!

    பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
    பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி
    வறட்டு பிடிவாதங்கள் !

    சாப்பாடு பரிமாறும் நேரம்...
    எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!

    மறுவீடு சாப்பாட்டில்
    மணமகளின் ஜன்னல் பார்வை!

    இவையெதுவுமே கிடைக்காமல்
    "கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
    சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
    சங்கடத்தோடு
    ஒரு
    தொலைபேசி வாழ்த்னனூடே...
    தொலைந்துவிடுகிறது
    எங்களின் நீ..ண்ட நட்பு!

    எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
    நாங்கள்
    அயல்தேசத்து ஏழைகள்தான்!
    காற்றிலும் , கடிதத்திலும் வருகின்ற
    சொந்தங்களின்...
    நண்பர்களின் ...
    மரணச்செய்திக்கெல்லாம்
    அரபிக்கடல் மட்டும்தான்...
    ஆறுதல் தருகிறது!

    ஆம்
    இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
    ஒரு
    கடலைத்தாண்டிய கண்ணீரிலையே...
    கரைந்துவிடுகிறார்கள்;!

    " இறுதிநாள் " நம்பிக்கையில்தான்...
    இதயம் சமாதானப்படுகிறது!

    இருப்பையும் இழப்பையும்
    கணக்கிட்டுப் பார்த்தால்
    எஞ்சி நிற்பது
    இழப்பு மட்டும்தான்...

    பெற்ற குழந்தையின்
    முதல் ஸ்பரிசம் ...
    முதல் பேச்சு...
    முதல் பார்வை...
    முதல் கழிவு...
    இவற்றின் பாக்கியத்தை
    தினாரும் , திர்ஹமும்
    தந்துவிடுமா?

    கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்!

    கிள்ளாமலையே
    நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
    யாருக்குக் கேட்குமோ ?


    ஒவ்வொருமுறை
    ஊருக்கு வரும்பொழுதும்...
    பெற்ற குழந்தையின்
    வித்தியாச பார்வை...
    நெருங்கியவர்களின்
    திடீர்மறைவு ...

    இப்படி புதிய முகங்களின்
    எதிர்நோக்குதலையும்...
    பழையமுகங்களின்
    மறைதலையும் கண்டு...
    மீண்டும்
    அயல்தேசம் செல்லமறுத்து
    அடம்பிடிக்கும் மனசிடம்...


    தங்கையின் திருமணமும்...
    தந்தையின் கடனும்...
    பொருளாதாரமும் வந்து...
    சமாதானம் சொல்லி
    அனுப்பிவிடுகிறது
    மீண்டும் அயல்தேசத்திற்கு!

    - ரசிகவ் ஞானியார், துபாய்
    http://www.vaarppu.com/view/347/

    (நன்றி உண்மையான படைப்பாளிக்கே உறியன)
    Last edited by அமீனுதீன்; 06-10-2011 at 08:14 PM.
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    எவ்வளவு சம்பாதித்தும் என்ன? நாங்கள்
    அயல்தேசத்து அநாதைகள் தான்!
    பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசம் ...
    முதல் பேச்சு... முதல் பார்வை...

    இவற்றின் பாக்கியத்தை தினாரும்-திர்ஹமும்-டாலரும்
    தந்துவிடுவதில்லை?
    எவ்வளவு நிதர்சமான உண்மை வரிகள். உணர்வுகளை அப்படியே வெளிக்கொணர்ந்துள்ளீர்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆஹா, மாற்றங்கள் பல செய்திருந்தாலும் அதே தான்....

    எத்தனை முறை படித்திருப்போம் இந்தக் கவிதையை..!!


    தூக்கம் விற்ற காசுகள்


    இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
    வந்தவனுக்கோ சென்று விட ஆசை
    இதோ
    அயல்தேசத்து ஏழைகளின் ..
    கண்ணீர் அழைப்பிதழ் !

    விசாரிப்புகளோடும்
    விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
    கடிதங்களை நினைத்து நினைத்து
    பரிதாபப்படத்தான் முடிகிறது !

    நாங்கள் பூசிக்கொள்ளும்
    சென்டில் வேண்டுமானால்...
    வாசனைகள் இருக்கலாம்!
    ஆனால்
    வாழ்க்கையில்...?

    தூக்கம் விற்ற காசில்தான்...
    துக்கம் அழிக்கின்றோம்!
    ஏக்கம் என்ற நிலையிலேயே...
    இளமை கழிக்கின்றோம்!

    எங்களின்
    நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
    ஒரு
    விமானப்பயணத்னனூடே விற்றுவிட்டு

    கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
    கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
    மரஉச்சியில் நின்று ...
    ஒரு
    தேன் கூட்டை கலைப்பவன் போல!

    வாரவிடுமுறையில்தான்..
    பார்க்க முடிகிறது
    இயந்திரமில்லாத மனிதர்களை!

    அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
    எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
    இங்கே
    அலாரத்தின் எரிச்சல் கேட்டு
    எழும் நாட்கள் கசந்து விட்டன!

    பழகிய வீதிகள்
    பழகிய நண்பர்கள்
    கல்லூரி நாட்கள்
    தினமும்
    ஒரு இரவு நேர
    கனவுக்குள் வந்து வந்து
    காணாமல் போய்விடுகிறது!

    நண்பர்களோடு
    ஆற்றில் விறால் பாய்ச்சல்
    மாட்டுவண்டிப் பயணம்
    நோன்புநேரத்துக் கஞ்சி
    தெல்கா பம்பரம் சீட்டு கோலி என
    சீசன் விளையாட்டுக்கள் !
    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
    விளையாடி மகிழ்ந்த
    உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் !

    இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
    விசாவும் பாஸ்போட்டும் வந்து...
    விழிகளை நனைத்து விடுகிறது.!

    வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
    நண்பர்களின் திருமணத்தில் !
    மாப்பிள்ளை அலங்காரம் !

    கூடிநின்று கிண்டலடித்தல் !
    கல்யாணநேரத்து பரபரப்பு!

    பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
    பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி
    வறட்டு பிடிவாதங்கள் !

    சாப்பாடு பரிமாறும் நேரம்...
    எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!

    மறுவீடு சாப்பாட்டில்
    மணமகளின் ஜன்னல் பார்வை!

    இவையெதுவுமே கிடைக்காமல்
    "கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
    சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
    சங்கடத்தோடு
    ஒரு
    தொலைபேசி வாழ்த்னனூடே...
    தொலைந்துவிடுகிறது
    எங்களின் நீ..ண்ட நட்பு!

    எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
    நாங்கள்
    அயல்தேசத்து ஏழைகள்தான்!
    காற்றிலும் , கடிதத்திலும் வருகின்ற
    சொந்தங்களின்...
    நண்பர்களின் ...
    மரணச்செய்திக்கெல்லாம்
    அரபிக்கடல் மட்டும்தான்...
    ஆறுதல் தருகிறது!

    ஆம்
    இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
    ஒரு
    கடலைத்தாண்டிய கண்ணீரிலையே...
    கரைந்துவிடுகிறார்கள்;!

    " இறுதிநாள் " நம்பிக்கையில்தான்...
    இதயம் சமாதானப்படுகிறது!

    இருப்பையும் இழப்பையும்
    கணக்கிட்டுப் பார்த்தால்
    எஞ்சி நிற்பது
    இழப்பு மட்டும்தான்...

    பெற்ற குழந்தையின்
    முதல் ஸ்பரிசம் ...
    முதல் பேச்சு...
    முதல் பார்வை...
    முதல் கழிவு...
    இவற்றின் பாக்கியத்தை
    தினாரும் , திர்ஹமும்
    தந்துவிடுமா?

    கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்!

    கிள்ளாமலையே
    நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
    யாருக்குக் கேட்குமோ ?


    ஒவ்வொருமுறை
    ஊருக்கு வரும்பொழுதும்...
    பெற்ற குழந்தையின்
    வித்தியாச பார்வை...
    நெருங்கியவர்களின்
    திடீர்மறைவு ...

    இப்படி புதிய முகங்களின்
    எதிர்நோக்குதலையும்...
    பழையமுகங்களின்
    மறைதலையும் கண்டு...
    மீண்டும்
    அயல்தேசம் செல்லமறுத்து
    அடம்பிடிக்கும் மனசிடம்...


    தங்கையின் திருமணமும்...
    தந்தையின் கடனும்...
    பொருளாதாரமும் வந்து...
    சமாதானம் சொல்லி
    அனுப்பிவிடுகிறது
    மீண்டும் அயல்தேசத்திற்கு!

    - ரசிகவ் ஞானியார்
    துபாய்
    இனியாவது உண்மையான படைப்பாளிக்கு நன்றி கூறி, படித்ததில் பிடித்தது பகுதியில் பதிவிடலாமே நண்பரே.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    ஓவியன் சுட்டியிருந்த தளத்தை பார்த்தேன்.முற்றிலும் உண்மை.உரியவருக்கு அதாவது படைத்தோனுக்கு நன்றியை தெரிவித்திருக்கலாம்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6
    நன்றி உண்மையான படைப்பாளிக்கே உறியன....
    Last edited by அமீனுதீன்; 06-10-2011 at 08:01 PM.
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6
    அய்யா... நான் இக்கவிதையை மாற்றம் செய்யவில்லை எனக்கு மின்னஞ்சலில் வேருவர் அனுப்பினார்
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6
    நன்றி உண்மையான படைப்பாளிக்கே உறியன
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    இனி வரும் நாட்களில் ஆக்கியோனுக்கு நன்றி என குறிப்பிட்டுவிட்டால் போதும் அவ்வளவு தானே

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by ameenudeen View Post
    இருப்பையும் இழப்பையும்
    கணக்கிட்டுப் பார்த்தால்
    எஞ்சி நிற்பது
    இழப்பு மட்டும்தான்...
    உண்மை தான்
    Last edited by sarcharan; 07-10-2011 at 11:01 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •