வெறுமை
தனியாய் உட்கார்ந்து யோசிக்கும்போது தடங்கலில்லாமல் வருவது
அனைவரும் நீங்கிச் செல்லும்போது ஆக்கிரமித்துக் கொ(ல்)ள்வது!
நண்பர்கள்
உறவைக் கெடுப்பவர்கள் கொடியவர்கள் என்றால்
நண்பர்களும் கொடியவர்கள்தான்
எனக்கும் துன்பத்திற்குமான உறவை ஆனந்தத்தைத்
தெளித்துக் கெடுப்பதால்!
தனிமை
எழுத்துக்கள் ஒளிர்வது தனி மையில்தான்!
எண்ணங்கள் மிளிர்வது தனிமையில்தான்!!
Bookmarks