படிக்காத மேதை அவர்
படிக்கட்டாய் நின்று பலரைப்
படித்திட வைத்தவர்
கல்விக் கண் திறக்க
பள்ளித் திட்டம் தீட்டிட
அள்ளித் தெளித்தவர்!
பசியோடு பள்ளி வந்தவர்கள்
புசித்து படித்திட செய்து
ரசிக்க செய்தவர்
முதல்வனாய் ஆண்ட போதும்
முதல்வானாய் பதவியிலே இருக்காமல்
முதல்வனாய் விலகியவர்.
தாயே ஆனாலும் சரிதான்
வாய் மாறாது - அரசின்
பாய் கிடையாது!
அவர் தான் கர்மவீரர் காமராஜர்
அக்டோபர் 2 அவரது நினைவு நாள்!
பி.கு: எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
Bookmarks