Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: அது ஒரு பொற்காலம்

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    அது ஒரு பொற்காலம்


    கல்லும் உளியும் கணீர் கணீரென்று
    காதலால் மோதிக் கலந்திருந்ததொரு காலம்.
    தேர்ந்த சிற்பிகள் பலரும் சேர்ந்து நிறைந்திருந்த
    சிற்பக்கூடத்தின் சீர்மிகுப் பொற்காலம்!

    வளையாத கரங்களுக்கும் வசப்பட்டது
    கலையெழில் மிக்க சிலையழகுகள்.
    கண்ணால் பார்த்துக் கற்றுக்கொண்டன புதுக்கரங்கள்.
    கைபிடித்துப் பழக்கிவிட்டன முதுக்கரங்கள்.

    வேடிக்கை பார்க்கவந்த வெற்றுக்கரங்கள் சிலவும்
    கற்றுக்கொண்டன கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிலையை
    கண்டுபிடித்து வெளிக்கொணரும் கலையை!

    நுட்பமும் நுணுக்கமும் மேவிய கரங்கள்
    படைத்த சிற்பங்கள் பார்வை கவர்ந்தன.
    மூளி, முடமென முடக்கப்பட்டவையும்
    புனருத்தாரணம் அளிக்கப்பட்டு புதுவாழ்வு பெற்றன.

    அயர்ச்சியோ… தளர்ச்சியோ….
    அளவிலாப் பணிகளின் சுழற்சியோ….
    ஒத்திசைத்து ஒலித்திருந்த உளிகள்
    அத்தனையும் அதிரடியாய் ஓய்வு கொள்ள...
    அரவமற்றக் கூடத்தில் ஆங்காங்கே ஒலிக்கின்றன,
    ஒன்றிரண்டு உளிகள்!

    இவையும் நாளை ஓய்ந்துபோகலாம்,
    இயக்கம் முற்றிலும் நின்றுபோகலாம்.

    உளிகளின் ஓசை நின்றுபோனாலும்
    உயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் யாவும்
    படைத்த கரங்கள் பற்றிய பிரக்ஞையற்று
    மெளனமொழி பேசி நிற்கும் காலங்காலமாய்..

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    கீதம், உங்களின் கவிதை எனக்கு கல்கி அவர்களின் சிவகாமி சபதம் கதையை நினைவுட்டுகின்றன.

    அருமையான கவிதை.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    வான்புகழ் வள்ளுவனுக்கு குமரியில் சீர்மிகு சிலை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி அவர்கள் மறைந்த இந்தத்தருணத்தில் அவரை நினைவு கூறும் விதத்தில் (எதேட்சையாக அமைந்தாலும் கூட) சிறப்பானக் கவிதையைத் தந்த நண்பர் கீதத்துக்கு பாராட்டுக்கள்.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by meera View Post
    கீதம், உங்களின் கவிதை எனக்கு கல்கி அவர்களின் சிவகாமி சபதம் கதையை நினைவுட்டுகின்றன.

    அருமையான கவிதை.
    நன்றி மீரா.(நீங்க எங்கயோ போய்ட்டீங்க... )

    Quote Originally Posted by கௌதமன் View Post
    வான்புகழ் வள்ளுவனுக்கு குமரியில் சீர்மிகு சிலை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி அவர்கள் மறைந்த இந்தத்தருணத்தில் அவரை நினைவு கூறும் விதத்தில் (எதேட்சையாக அமைந்தாலும் கூட) சிறப்பானக் கவிதையைத் தந்த நண்பர் கீதத்துக்கு பாராட்டுக்கள்.
    கெளதமன், உங்கள் பின்னூட்டம் பார்த்தே சிற்பி கணபதி ஸ்தபதி அவர்களின் மறைவு குறித்து அறிந்தேன். அவருக்கு என் அஞ்சலி.

    முன்பு சிவப்பி கதை எழுதி பதிக்கவிருந்த சமயம், பாடகி சித்ராவின் குழந்தை குளத்தில் விழுந்து இறந்த செய்தி வெளியானதைக் கண்டு மனம் பதைத்தேன்.இப்போதும் அப்படியே.

    Quote Originally Posted by seguwera View Post
    சிற்பக்கலை குறித்த அருமையான கவிதை.
    சிற்பிகள் பேசாமல்
    சிற்பத்தை பேச வைத்தார்கள்.
    இந்த நவநாகரிக யுகத்தில் நாம் தொலைத்துக்கொண்டு இருக்கின்ற
    கலைகளிலும் இதுவும் ஒன்று.
    பின்னூட்டங்களால் தொடர் உற்சாகம் தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி சேகுவாரா.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    சிற்பக்கலை குறித்த அருமையான கவிதை.
    சிற்பிகள் பேசாமல்
    சிற்பத்தை பேச வைத்தார்கள்.
    இந்த நவநாகரிக யுகத்தில் நாம் தொலைத்துக்கொண்டு இருக்கின்ற
    கலைகளிலும் இதுவும் ஒன்று.
    சேகுவேரா
    கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
    வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)


  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Smile






    நம் நாகரீகத்தின் வரலாறு என்ன என்பதை பறை சாற்றுவது சிற்பங்கள். அதன் வரலாற்று ஆசிரியர்கள் சிற்பிகள் அவர்களை கௌரவப்படுத்தியதற்கு நன்றி அக்கா
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    காவியம் படைக்கும் கல்லுக்கும் கவிதை கொடுத்த நல்நெஞ்சமே....நன்று...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    இது எனக்கு ஆசிரியர்களையும், மாணாக்கர்களையும் பொருளுணர்த்துவதாய் உள்ளது

    கவிதை மிக அழகுங்க
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Ravee View Post

    நம் நாகரீகத்தின் வரலாறு என்ன என்பதை பறை சாற்றுவது சிற்பங்கள். அதன் வரலாற்று ஆசிரியர்கள் சிற்பிகள் அவர்களை கௌரவப்படுத்தியதற்கு நன்றி அக்கா
    அழகான சிற்பங்களின் படங்களோடு பின்னூட்டமிட்டதற்கு நன்றி ரவி.

    Quote Originally Posted by ஜானகி View Post
    காவியம் படைக்கும் கல்லுக்கும் கவிதை கொடுத்த நல்நெஞ்சமே....நன்று...
    பாராட்டுக்கு நன்றி ஜானகி அம்மா.

    Quote Originally Posted by Nivas.T View Post
    இது எனக்கு ஆசிரியர்களையும், மாணாக்கர்களையும் பொருளுணர்த்துவதாய் உள்ளது

    கவிதை மிக அழகுங்க
    இன்னும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இன்னொரு பொருளும் விளங்கும். பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கல்லேர் உழவருக்கு கெளரவம் செய்த
    சொல்லேர் உழவராம் கீதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    கல்லேர் உழவருக்கு கெளரவம் செய்த
    சொல்லேர் உழவராம் கீதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    அன்பின் மிகுதியால் அதீதமாய்ப் பாராட்டுகிறீர்கள். உங்கள் கவித்திறத்தின் முன் நான் எம்மாத்திரம்? தங்கள் பாராட்டுக்கு நெகிழ்வுடன் நன்றி சொல்கிறேன் ஐயா.

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆமாம் தங்கையே...அன்றைய காலத்தில்....கருங்கல்லை..சிலையாக வடிக்க உறவுகள் பல ஒட்டியிருந்தன...கூட்டுக்குடும்பத்தில். இன்றோ.....தனியாய்...தன்னந்தனியாய் செதுக்க யாருமின்றி தன் போக்கில் கல்லாய் மட்டுமே...அல்லது......தேவையற்ற வடிவங்களில் நிர்பந்தத்தால், சூழலால் உருவாக்கப்படுபவர்களாய்....

    அழகான கவிதை...அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துக்கள்ம்மா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •