இதயத்தின் வலி
இன்று தான் உணர்ந்தேன்
தாயின் பாசம்
தாய் நாட்டின் அருமை
உணர்ந்த நேரம்
உறவிழந்து உரிமையிழந்து
அன்னிய நாட்டில் அனாதையாய்..
"வா பா சாப்பிடலாம்"
அம்மாவின் அழைப்பு..
"வா மாமா விளையாடலாம்"
அக்கா குழந்தையின் மழலை மொழி
மனதில் ஒலிக்க
மரண வேதனை
மனதை பிசைய...
கண்களை இறுக மூடிக்கொண்டேன்
கனவில் கண்ட உறவுகள்
கலைந்துவிடாமலிருக்க..........
Bookmarks