Results 1 to 5 of 5

Thread: தமிழின் சொல்வளம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    தமிழின் சொல்வளம்

    தமிழின் சொல்வளம் - மாலைகள்

    மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தொகுத்தளித்தவை.

    கண்ணி - இரு, இரு பூவாக இடைவிட்டுத் தொடுத்த மாலை.

    தொங்கல் - தொங்கல் விட்டுக் கட்டிய மாலை.

    தார் - கட்டிய மாலை.

    கதம்பம், கத்திகை - பல்வகைப் பூக்களால் தொடுத்த மாலை.

    படலை - பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த மாலை.

    தெரியல் - தெரிந்தெடுத்த மலரால் ஆய மாலை.

    அலங்கல் - சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை.

    தொடலை - தொடுத்த மாலை.

    பிணையல் - பின்னிய மாலை.

    கோவை - கோத்த மாலை.

    கோதை - கொண்டை மாலை.

    சிகழிகை - தலை அல்லது உச்சி மாலை.

    சூட்டு - நெற்றி மாலை.

    ஆரம் - முத்து மாலை.


    17-8-2011 "தெளிதமிழ்" இதழுக்கு நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    மாலைகளில் இத்தனை உண்டா உண்மையில் பாவாணர் தொகுப்பு அருமை.
    சேகுவேரா
    கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
    வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)


  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கண்ணி, கதம்பம், ஆரம் ஆகியவை மட்டுமே இன்று புழங்கப்படும் வார்த்தைகளாக உள்ளன. மற்றவை இதுவரை அறிந்திராதவை. பகிர்ந்த தங்களுக்கு நன்றி.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    கருத்துரைத்த இருவர்க்கும் நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அமுது மொழியின் மாலை அணிவகுப்புகள் அருமை குணமதி அவர்களே ...என்ன ,அதில் உள்ள ஒன்றிரெண்டை தவிர மற்ற எதையும் கேள்வி பட்டதில்லை ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •