August 28, 2011
மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.
இந்த செய்தியின் தாக்கத்தால் மனம் வருந்தி விளைந்த கவிதை… இனி மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது இறைவா…
பத்தினி என்று நிரூபிக்க
தீக்குளிப்பார்கள் பெண்கள்....
பத்தி நீ எரிந்தது
எதை நிரூபித்திட பெண்ணே?!!
தூக்கிற்கிரையாக
போகிறவர்களை நினைத்து
தீக்கிற்கிரையாகினாயோ?!! -
செங்கொடியே....
செந்தீயில்தான் கருகினாயோ?!
மூவர்.....
உயிரின் மேன்மையை
உணர்த்த மறைந்தாய்!!
உன்..
உயிரின் மேன்மையையோ
உணர மறந்தாய்!!
'தீ'யவளை முத்தமிட்ட
தூயவளே...
உனக்காகவேனும்
மூவரின் மரணம்
ரத்தாகட்டும்..
மீண்டும் நீ ஜனித்திட
உன்னுயிர் இப்பூமியில்
வித்தாகட்டும்...
ஷீ-நிசி
Bookmarks