Results 1 to 8 of 8

Thread: உருகினாள்.... கருகினாள்....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    உருகினாள்.... கருகினாள்....




    August 28, 2011
    மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.

    இந்த செய்தியின் தாக்கத்தால் மனம் வருந்தி விளைந்த கவிதை… இனி மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது இறைவா…


    பத்தினி என்று நிரூபிக்க
    தீக்குளிப்பார்கள் பெண்கள்....

    பத்தி நீ எரிந்தது
    எதை நிரூபித்திட பெண்ணே?!!

    தூக்கிற்கிரையாக
    போகிறவர்களை நினைத்து
    தீக்கிற்கிரையாகினாயோ?!! -

    செங்கொடியே....
    செந்தீயில்தான் கருகினாயோ?!

    மூவர்.....
    உயிரின் மேன்மையை
    உணர்த்த மறைந்தாய்!!

    உன்..
    உயிரின் மேன்மையையோ
    உணர மறந்தாய்!!

    'தீ'யவளை முத்தமிட்ட
    தூயவளே...

    உனக்காகவேனும்
    மூவரின் மரணம்
    ரத்தாகட்டும்..

    மீண்டும் நீ ஜனித்திட
    உன்னுயிர் இப்பூமியில்
    வித்தாகட்டும்...


    ஷீ-நிசி
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    தூய தமிழச்சியே உன்போன்றோர் உள்ளவரை தமிழினம் என்றும் பிழைத்திருக்குமம்மா உமக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் நாங்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அன்னா ஹஸாரே போல் வாழ்ந்து சாதிக்கவேண்டும், இப்படி உயிரை மாய்த்து அல்ல!

    இனிவரும் தலைமுறையாவது இதுபோன்ற செயல்களில் இறங்காமல் மன உறுதியுடன் போராடி வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை சேர்க்கவேண்டும்.

    எத்தனையோ தீக்குளித்தவர்களை மறந்த தேசமிது. அறியாப்பேதை, இவளைப் பெற்றவளை சற்று நினைத்திருக்கலாம்.

    போராட எத்தனையோ வழிகளுண்டு. ஏனோ இந்த அவலப் போராட்டம்?

    மனம் கனக்கிறது, ஷீ-நிசி!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    அவள் செய்தது தவறு என்றாலும் அந்த உணர்வை மதிக்கிறேன்..

    மனம் கனக்க வைக்கும் வரிகள் ஷீநிசி.. பாராட்டுகள்..!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இந்தக் கவிதை எழுதும்போது அப்பெண்ணின் செயலை குற்றம்சொல்லும்படியாய் இல்லாமலும், அதேசமயம் பாராட்டும்படியாய் இல்லாமலும் எழுதவேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொண்டேன்...

    கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    தூக்கிற்கு முன்னே துணிந்துவிட்டாய்
    இழப்பதற்கு உன் உயிரை.
    உன் ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் இதேவேளையில்
    எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம் தூக்கு தண்டணனை ரத்து செய்தியை. இன்னும்ஒரு உயிரை இதுபோல நாங்கள் இழக்காமல் இருக்க.
    நிச்சயம் தூக்கு தண்டனை ரத்தாக வேண்டும்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    உயிர் தியாகம் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று, வேற்று வழிகளில் அதை சாதித்திருக்கலாமே, ஏன் உன் உயிரை பலிகொடுத்துதான் இதை சாதிக்க வேண்டுமோ, எனகென்னவோ அன்ன ஹசாரேயின் ஊழழுக்கு எதிரான உண்ணாவிரத்தை ஒட்டு மொத்த இந்திய மக்களை திசைதிருப்ப எடுக்கப்பட்ட திட்டமோ என படுகிரது இந்த மூவரின் தூக்கு தண்டனை விவகாரம்.
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    @சேகுவேரா....

    நல்லதே நடக்கும் காத்திருப்போம்

    @மனோ அண்ணா...

    திசை திருப்பவதற்காக கருணை மனு நிராகரிப்பு நடந்திருக்கலாம்... ஆனால் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சியும் எதிர்ப்பும் தமிழ்ச்ச்கோதரர்களின் உயிர் மீது கொண்ட அக்கறையினால் ஏற்பட்டவை என்பதை நாம் மறுக்க முடியாது.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •