Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 48 of 48

Thread: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 22 (நிறைவுப்பகுதி)

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கொல்லத்துடிக்குது மனசு..! பகுதி - 17

    கொரியர் ஏஜண்ட்டிடம் எத்தனை போராடியும் விக்னேஷ் அந்த காணாமல் போன கொரியர் டாக்கெட் கிடைக்கப்பெறாமல் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டி வந்தது.

    அரைமணி பொறுக்கச்சொன்ன முதலாளி ஒரு மணி ஆகியும் தகவல் கூறவில்லையே என்று விக்னேஷ் அவரை அணுகிக் கேட்டபோது ‘’ சாரி சார். பையன் எவ்வளவோ தேடியும் அந்த டாக்கெட் கிடைக்கலை. ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க.. எப்படியாச்சும் தேடிக்கண்டுபிடிச்சு ஒப்படைக்கிறேன்..’’ என்று பணிவுடன் தன் இயலாமை வியர்வையாய் வழியக் கூறினார்.

    ’’ பரவாயில்லை சார்.. எங்கே அந்த டாக்கெட் இருந்தது நான் கொஞ்சம் பார்க்கலாமா ? ‘’

    இதோ என்றவர் விக்னேஷை உள்ளே அழைத்தார். வசந்தியை கடை வாசலில் இருக்கச்சொல்லிவிட்டு விக்னேஷ் உள்ளே நுழைந்தான்.

    கடையின் பின்புறம் அந்த கட்டிடத்தின் வாகன பார்க்கை நோக்கி திறந்ததால் அங்கே இருந்த தட்டுமுட்டு சாமான்கள் கவனக்குறைவாகவே வைக்கப்பட்டு இருந்தது.

    கடையின் உடனடிப் பின்பக்கம் ஏழெட்டு பைக்குகள் பார்க் செய்யப்பட்டு இருந்தன.

    கடைக்காரப்பையனை உதவிக்கு அழைத்த விக்னேஷிடம் பையனை ஒப்படைத்துவிட்டு கடையைக் கவனிக்க விரைந்தார் முதலாளி.

    ‘’ உன் பேர் என்னப்பா..?’’ விக்னேஷ் அவனிடமிருந்து தகவல்களை வரவழைக்கும் நோக்கில் அன்பாகத் தொடங்கினான்.

    ‘’ மாரிமுத்து சார்..’’

    ’’அது சரி.. இத்தனை அலட்சியமா எல்லா தளவாடங்களும் போடப்பட்டு இருக்கே ..? திருட்டு போகாதா..? ‘’

    ’’ இல்ல சார்.எல்லாம் பழைய ஜெராக்ஸ் மெஷின். பொண கனம் கனக்கும். இத்தை எடுத்துக்கினு போய் என்னா செய்யமுடியும்..? ‘’

    ’’ அது சரி .. டெலிவரி ஆகாத கொரியரை இப்படித்தான் இங்கே குப்பையாக கொட்டிவைப்பீங்களா..? ‘’

    ‘’ ஐயோ இல்ல சாரே.. தப்பித்தவறி உங்க கொரியர் டாக்கெட் மட்டும் எப்படியோ இங்க விழுந்து இருக்கும் போல.. கிடைச்சுடும் சார்.. நான் தேடித்தரேன்.. ‘’

    விக்னேஷ் புன்னகைத்தான்.

    ‘’ வேண்டாம் மாரிமுத்து. விடுங்க.. சரி இதைச் சொல்லுங்க .. இங்கே நிறுத்தி இருக்கும் பைக்குகள் எல்லாம் தினம் தினம் அதே இடத்தில் நிறுத்துவாங்களா இல்லை மாற்றி மாற்றி நிறுத்துவாங்களா..? ‘’

    ‘’ இல்ல சார்.. எல்லாருக்கும் தனி இடம் இருக்கு.. மாத்தி நிறுத்த மாட்டாங்க.. ‘’

    ‘’ ஓ.. உங்க கடையை ஒட்டி நிறுத்தப்பட்டு இருக்கே ஒரு டிவிஎஸ்.. அது யாருதுன்னு தெரியுமா..? ‘’

    ‘’ சரியா தெரியாது சார்.. அனேகமா டாப் ஃப்ளோர்ல இருக்காரு ஒருத்தர். ராகவன்னு பேருன்னு நினைக்கிறேன். ‘’

    ‘’ ஓ .. என்ன வேலை செய்றார்..? ‘’

    ‘’ அது தெரியாது சார்.. ஆனா ஸ்கேன் எடுக்க.. சில சமயம் பிரிண்ட் எடுக்க எங்க கடைக்கு வருவார்..லோனுக்கு டாகுமெண்ட் ஜெராக்ஸ் எடுக்க அடிக்கடி வருவாரு.. அப்படிதான் பழக்கம்.. ‘’ - ஏதோ குற்றம் செய்தவனைப்போல் அவன் குரல் சன்னமாக ஒலித்தது.

    சன்னமாக சீட்டி அடித்தான் விக்னேஷ்.

    ’’கமான் அவர் என்ன வேலை செய்றார்னு உனக்கு கண்டிப்பா தெரிஞ்சு இருக்கனும். சும்மா சொல்லுப்பா.. உன்னை ஒன்னும் போலீஸ் விசாரணை செய்யலை. பயப்படாதே..’’

    ‘’ சரி சார்... அது வந்து... அவர் சி ஐ டி எஸ் ல வேலை செய்றார். சாஃப்ட்வேர் எஞ்சினியர். ரொம்ப நல்லவர் சார்..’’ இப்போது மாரிமுத்து குரலில் தயக்கமேதும் இல்லை.

    கண்களை லேசாக இடுக்கிக்கொண்டு ஒரு கணம் யோசித்த விக்னேஷ் , ‘’ சரி சரி .. ரொம்ப நன்றிப்பா.. முடிஞ்சா அந்த டாக்கெட்டை சீக்கிரம் தேடிக்கண்டுபிடிச்சு எனக்கு கால் பண்ணு ‘’ என்றவன் தனது எண்ணைக் குறித்துக்கொடுத்துவிட்டு முன்பக்கம் விரைந்தான்.

    கடைமுதலாளியிடமும் அதையே சொல்லிவிட்டு வசந்தியின் கைகளை இறுகப்பற்றியவண்ணம் விரைவாக தனது பைக்கை நோக்கி விரைந்தான் விக்னேஷ்.

    அவன் பிடித்த இடம் கன்றிச்சிவந்து வலி எடுத்தாலும் வசந்திக்கு அது இன்பவேதனையாக இருந்தது என்பது அவள் கண்ணில் தெரிந்த பளபளப்பு காட்டியது.

    தனது ஹெல்மெட்டை மாட்டிய விக்னேஷ் , ’’ வசந்தி, நான் கொஞ்சம் ஃபாஸ்டா பைக் ஓட்டப்போறேன். நீ பயப்படாமல் என்னை பிடிச்சுக்கோ .. சரியா..? ‘’ என்றவனின் குரலில் கண்டிப்பாக காதல் இல்லை.

    ஆனால் வசந்திக்கு அந்த வார்த்தைகள் சொர்க்கத்துக்கே கொண்டு சென்றன.

    உணர்வுகளைக் காட்டிக்கொள்ளாமல் அவன் பின்னால் அமர்ந்து அவனுடன் பல்லி போல் ஒட்டிக்கொண்டாள்.

    சென்னையின் இரவு நேர இதமான சில்லென்ற காற்றும் விக்னேஷின் முதுகு வசந்தியின் மார்புக்கு அளித்த கதகதப்பும் அவளுக்கு தன்னை இழக்கவைத்தன.

    இதை ஒன்றும் அறியாத விக்னேஷ் விரைவாகச் செல்லவேண்டிய அவசியம் உணர்ந்து பைக்கை வேகமாகச்செலுத்தி தனது அலுவலகம் வந்து சேர்ந்தான்.

    அங்கே காரில் ஆ ஆறுமுகமும் மாணிக்கமும் கப்பல் கவிழ்ந்தாற் போல இவனுக்காகக் காத்திருந்தனர்.


    துடிப்புகள் தொடரும்..

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கொல்லத்துடிக்குது மனசு..! பகுதி * 18

    னது டி வி எஸ் மூச்சிரைக்க நிறுத்தி ஸ்டான்ட் போட்ட விக்னேஷின் பார்வை அமைச்சர் மற்றும் மாணிக்கத்தின் கவலையை அறிந்தே இருந்திருந்தான்.

    கிட்டத்தட்ட ஆறுமுகத்தின் ஸ்விஸ் கணக்கு வழித்தெறியப்பட்டு இருக்கலாம் என்பது எளிதில் ஊகிக்கக்கூடியது தானே..?

    இருவரையும் தனது அலுவலகத்துக்குள் வரவழைத்த விக்னேஷ் வசந்தியிடம் குடிப்பதற்கு எதாவது ஏற்பாடு செய்யும்படி பணித்துவிட்டு அமைச்சரை கூர்ந்து நோக்கினான்.

    அமைச்சரின் முகம் செத்த பிணத்தை விட மிகமோசமாக வெளுத்துப் போயிருந்தது. அடித்துப்பிடித்து கொள்ளையடித்த அத்தனை பணமும் பறிபோன வெறி முகத்தில் தாண்டவமாடியது.

    '' தம்பி, உங்களை ரொம்ப நம்பி இந்த வேலையை ஒப்படைச்சோம். ஆனா பயனே இல்லாம போயிடுச்சே.. என் கணக்கு முழுக்க முடக்கப்பட்டுடுச்சு. முடக்கப்படுமுன் நான் பார்த்த பேலன்ஸ் ஜஸ்ட் 700 கோடி தான். இப்ப அதுவும் இல்லாம அக்செஸே போயிடுச்சு.. இதான் உங்க திறமைக்கு அழகா..? ''

    அமைச்சரின் வயிற்றெரிச்சல் குரலில் பரிபூரணமாக பிரதிபலித்தது.

    '' ஐயா, நீங்க என்னை இல்லை, ஸ்காட்லாந்த்யார்ட் போலீசைக் கான்டாக்ட் செய்து இருந்தாலும் இது தான் நடந்து இருக்கும். நல்லா யோசிங்க.. ஒரு கஜானா சாவி ஒருத்தனுக்கு கிடைச்சுடுச்சு. அவன் என்ன கொஞ்சம் வழித்தெடுத்துக்கிட்டு மிச்சம் உங்களுக்காக விட்டு வைப்பானா..? '' விக்னேஷின் குரலில் தனது திறமையின் மீது அவர் செய்த விமரிசனம் குறித்த எரிச்சல் தென்பட்டது.

    மேலும் கூறினான். '' ஐயா நான் ஒன்னும் கண்டு பிடிக்கலைன்னு நினைக்காதீங்க. நீலமேகம் உங்களுக்கு உங்க கணக்கை செட் செய்து கொடுத்தபின் நீங்க அவருக்குக் கொடுத்த டார்ச்சரில் எரிச்சலாகி அனைத்து விவரங்களையும் நீங்க அப்ப வகிச்ச அமைச்சகத்தின் கலைநிகழ்ச்சிகள் பற்றிய சிடியில பதிஞ்சு தனது கும்பகோணம் முகவரிக்கு கொரியர் மூலம் அனுப்பிவைத்தார். அது போய் சேருமுன் அவர் ஊருக்குச் சென்று சேர்ந்து அதைக்கைப்பற்றிவிடலாம்னு நினைச்சப்ப விதி வேறமாதிரி விலையாடிடுச்சு. அவர் மன இறுக்கத்தில் ஹார்ட் அட்டாக்ல இறந்தும் போயிட்டார்..'' என்று கூறி நிறுத்தினான் விக்னேஷ்.

    அமைச்சரின் முகத்தில் பதட்டத்தின் சாயலும் இவன் எப்படி துல்லியமாக எல்லாம் விசாரித்தறிந்திருக்கிறான்னு வியப்பும் படர்ந்தது.

    மாணிக்கத்தின் நிலைமையும் கிட்டத்தட்ட அதே தான்.

    மேலும் விக்னேஷ் கூறினான், '' ஐயா துரதிருஷ்டவசமாக அந்த கொரியர் அமைச்சகத்திலிருந்து சென்னை சென்று சேர்ந்தபோது அதைப் பெற்றுக்கொள்ள யாருமில்லாத நிலையில் அந்த கொரியர் திரும்பிவிட்டது. ஆனால் அதை லாவகமாக யாரோ கைப்பற்றி இருக்காங்க.. இது வரை நான் கன்டறிந்த சுருக்கம் இது தான். அதை யார் கைப்பற்றினாங்கன்னு கண்டு பிடிப்பது தான் அடுத்த கட்ட நடவடிக்கை.. ''

    அமைச்சரின் முகத்தில் கோபம் ரத்தமெனப்பாய்ந்தது.

    '' அந்தத் ....... மவனைக் கண்டுபிடிச்சு என் கண்முன்னால நிறுத்து விக்னேஷ். அவனைக் கொல்லத்துடிக்கிது என் மனசு.. அவனைக் கண்டம் துண்டமாக வெட்டி கடல்ல வீச வைக்கிறேன்... '' என்றவர் நற நறவெனப்பல்லைக்கடித்தார்.

    மாணிக்கம் சொல்லவொண்ணா சோகத்தில் இருந்தாலும் அவனது மனநிலையும் அமைச்சரையே ஒத்திருந்தது.

    அமைச்சரது ஆவேசம் கண்ட வசந்தி இடிமின்னலைக்கண்ட புள்ளிமானாகத் திடுக்கிட்டாள்.

    இதுதான் அமைச்சரின் அசலான முகம் என்பதை அறிந்திருந்த விக்னேஷுக்கு மட்டும் வியப்பேதும் ஏற்படவில்லை.

    '' சொல்லு விக்னேஷ், உன் ஃபீஸ் எவ்வளவுன்னாலும் தரத்தயாரா இருக்கேன். எனக்கு அவன் மட்டும் என் கைக்கு கிடைக்கனும் '' என்று மேலும் புலி போல உறுமினார் அமைச்சர்.

    '' அதைக்கண்டுபிடிக்கத்தான் இப்போது முயன்றுகொன்டு இருக்கிறேன்.. அனேகமாக நாளை மாலைக்குள் கண்டிப்பாக நான் கண்டுபிடிச்சுடுவேன். உங்கள் பணத்தை என்னால் மீட்கமுடியவில்லை. அதன் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். காரணம் நாம் காலத்தின் இயக்கத்தில் செயல்படுகிறோம். அவனோ கணிணியின் வேகத்தில் செயல்படுகிறான். இப்போது அந்த வித்தியாசம் புரிந்து இருக்கும்னு நினைக்கிறேன்..'' என்று அமைதியாகக் கூறினான் விக்னேஷ்.

    '' இதுவரைக்கும் யார் மேலாவது சந்தேகம் இருக்கா சொல்லு விக்னேஷ்.. நம்ம ஆளுங்களை விட்டு அவனை அலாக்காகத் தூக்கி வரச்சொல்றேன்..''

    அமைச்சரின் குரலில் இருந்த ஆத்திரத்தில் தொடர்புடையவன் கிடைத்தால் அப்படியே கடித்தே தின்றுவிடுவார் போலிருந்தது.

    ''பொறுங்க ஐயா.. நாளை மாலை தெளிவாக எல்லாம் தெரியவந்துடும். '' விக்னேஷின் குரலில் எச்சரிக்கை உணர்வு தொனித்ததை வசந்தி மட்டுமே உணர்ந்து கொன்டாள். மீதி இருவரும் தான் ஆத்திரத்தின் ஆதிக்கத்தில் இருந்தார்களே..

    அமைச்சரும் மாணிக்கமும் புறப்பட்டுச்சென்றதும் புலியிடமிருந்து தப்பித்த புள்ளிமானைப்போல் நடுக்கம் நிற்காதிருந்த வசந்தியை அன்புடன் பார்த்தான் விக்னேஷ்.

    '' சாரி வசந்தி, உன்னை இது போன்ற ராட்சதர்களுக்கிடையில் இருக்கவிட்டிருக்கக்கூடாது தான் ..'' விக்னேஷ் குரலில் தெரிந்த நிஜமான கரிசனத்தில் எல்லாம் மறந்தாள் வசந்தி. அவள் மனம் ரெக்கை கட்டிப்பறந்தது.

    அவளை ஆதரவுடன் கையைப்பற்றிய விக்னேஷ் , '' எனக்கு நீ இன்னொன்னு செய்யனுமே வசந்தி..'' என்றான்.

    '' சொல்லுங்க விக்னேஷ் என்ன செய்யனும்..? '' அலாதீனிடம் பவ்யமாகக் கேட்ட பூதம் போலிருந்தது அவளது பாவனை.

    ’’ இன்னைக்கு இரவு எனக்கு கணிணியில் கொஞ்சம் நிறைய வேலை இருக்கு. களைப்பாகிவிடக்கூடாது நான். அதுக்கு உன் பேச்சுத்துணையும் தேனீர்ச்சேவையும் வேணும். நீ அலுவலகத்தில் இன்றிரவு தங்க இயலுமா..? என் மேல் நம்பிக்கை இருந்தால் மட்டுமே.. '' விக்னேஷின் குரலில் தயக்கமும் லஜ்ஜையும் தெரிந்தது. உண்மையில் அவன் இன்றிரவுக்குள் நிறைய கண்டுபிடித்தாகவேண்டும்..!

    '' அடடா மழைடா அடைமழைடா '' என்று கார்த்திக்கும் தமன்னாவும் வசந்தியின் மனதுக்குள் ஆடத்தொடங்கினார்கள்..!

    ‘’ பரவாயில்லை விக்னேஷ், நான் வீட்டில் சொல்லிடறேன். உங்களுக்கு துணையா இருக்கேன் ..’’ என்று உற்சாகம் பொங்க பதில் அளித்தாள் வசந்தி..!

    துடிப்புகள் ... தொடரும்..!

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கொல்லத்துடிக்குது மனசு..! பகுதி * 19

    ரவு முழுக்க கண்விழித்து லேப்டாப்பில் கவிழ்ந்திருந்த தலையை அவ்வப்போது வசந்தி கொடுத்த அருமையான டீ பிஸ்கட்டுக்காக மட்டும் நிமிர்ந்துவிட்டு வசந்தியின் சேவைக்கு மெல்ல புன்முறுவல் மட்டுமே செய்து நிறைய விடயங்களைக்கண்டறிந்தான் விக்னேஷ்.

    அவன் வேலை செய்யும் நேர்த்தியை கண்கொட்டாமல் அருகில் இருந்து பார்த்து ரசித்துக்கொண்டே அவ்வப்போது உறக்கம் கண்களைச் சுழற்றினாலும் விக்னேஷுக்கு துணையாக விழிக்கவேண்டிய கடமைகளை நிரைவேற்றினாள் வசந்தி.

    விக்னேஷ் மிகவும் லாஜிக்காக பிரச்சினைகளைக் கண்டறிந்தான்.

    ஆறுமுகமும் மாணிக்கமும் கொடுத்த அக்செஸ் தரவுசொற்களின் மூலம் அவர்களின் கணக்கினை துல்யமாக ஆராய்ந்த விக்னேஷுக்கு நிறைய செய்திகள் அறியவந்தன.

    அவற்றை அவ்வப்போது வசந்தியிடமும் விவாதித்தான். அவன் சொன்ன விவரங்களைக் கேட்டு வசந்தி வியந்து மூக்கில் விரலை வைத்து அழகாக திகைத்தாள்.

    அனைத்து ட்ரான்சாக்ஷனும் சமூக சேவை நிறுவனங்களுக்கும் அனாதை இல்லங்களுக்கும் தொன்டு நிறுவனங்களுக்கும் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக தமிழர்களின் நல்வாழ்வு குறித்த அனைத்து ப்ராஜக்ட்களுக்கும் தலா 200 கோடிகளை வாரி வழங்கியிருந்தான் அந்த முகமறியா சமூக சேவகன்.

    ஒரு பைசாகூட தனிப்பட்ட நபர் கணக்கில் செலுத்தப்படாத நேர்மையை விக்னேஷ் கண்டு மனதுக்குள் அந்த தயாளனை சல்யூட் செய்தான்.

    விடிய மூன்றுமணி நேரம் இருக்கும் போது வசந்தியை சற்று உறங்கச்செய்துவிட்டு விக்னேஷும் கண்ணயர்ந்தான்.

    காலை ஆறுமணிக்கு காபியின் அருமையான மணத்துடன் வசந்தி அன்று பூத்த நிலவாக விக்னேஷ் முன் வந்தாள்.

    காபியைக்குடித்துவிட்டு மிகவும் சுறுசுறுப்பாக தன்னைத் தயார் செய்துகொண்டு வசந்தியை அவளது வீட்டில் கொண்டுவிட்ட விக்னேஷ் அந்த சாகர் அபார்ட்மென்ட்ஸை நோக்கி விரைந்தான்.

    கொரியர் மற்றும் டாகுமென்ட்ஸ் கடைப்பையன் சொன்ன மூன்றாம் டாப் ஃப்ளோரில் அந்த வீட்டுக்கு முன் நின்று காலிங் பெல்லை விக்னேஷ் அழுத்தும் போது காலை மணி 8.

    இரண்டாம் முறை அழுத்த எத்தனிக்கும் முன் கதவு திறந்தது.

    கதவை லேசாகத் திறந்த எளிமையான நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த ராகவன் விக்னேஷைக் கண்டு முறுவலித்து கதவை முழுமையாகத்திறந்து

    '' வாங்க விக்னேஷ். இன்னைக்கு நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும். '' என்ற ராகவனை வியப்புடன் பார்த்தான் விக்னேஷ்.

    உள்ளே நுழைந்த விக்னேஷ் ராகவனைக் கைகுலுக்கி '' ஐ யாம் விக்னேஷ். பிரைவேட் டிடெக்டிவ் '' என்றான்.

    '' தெரியும் விக்னேஷ்.சென்னையின் லீடிங் டிடெக்டிவை அறியாதவர் இருக்காங்களா என்ன..? அதிலும் இத்தனை பெரிய குற்றத்தைச் செய்த நான் உங்களைக் கவனிக்காமல் இருப்பேனா..? நேற்று இரவே எதிர் பார்த்தேன் உங்களை. ''

    இப்போது விக்னேஷ் மேலும் வியந்தான்.

    ''அது எப்படி ? '' என்று தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் கேட்ட விக்னேஷை அடக்கி , '' வாங்க அந்த ரூமுக்கு போய் பேசுவோம். மங்களம். சாருக்கு எதுனா குடிக்க கொண்டுவா '' என்று மங்களத்திடம் கூறிய ராகவன் விக்னேஷைத் தன் தனியறைக்கு அழைத்துப்போனான்.

    அங்கே இருந்த பிளாஸ்டிக் சேரில் விக்னேஷை அமரவைத்த ராகவன் தானும் ஒரு சேரில் அமர்ந்து கொண்டான்.

    '' கோடிக்கணக்கான பணத்தை அங்கும் இங்கும் மாற்றிக்கொடுத்த வள்ளல் இத்தனை எளிமையா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை ராகவன் ..'' விக்னேஷின் குரலில் நிஜமாகவே வியப்பு இருந்தது.

    '' ம்ம்ம்... சொல்லுங்க விக்னேஷ்.. உங்களுக்கு என்ன தெரியனும்..? '' என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் ராகவன்.

    '' அதுக்கும் முன்னால நானே சில விவரங்களைச் சொல்கிறேன். சொல்லி முடித்தபிறகு எதுவும் சந்தேகம் இருந்தா மட்டும் கேளுங்க.. '' என்று சொல்லத்தொடங்கிய ராகவனின் குரலில் தடுமாற்றமோ குற்ற உணர்ச்சியோ எதுவுமே இல்லை.

    துடிப்புகள் தொடரும்..

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 20

    ‘’ தினந்தோறும் செய்திகளைப் பார்க்கும் போதும் நடப்பினைக் கூர்ந்து கவனிக்கும் போதும் எந்த ஒரு சராசரி இந்தியன் மனதில் எழும் கேள்விகளை நானும் கேட்டுக்கொண்டதுண்டு விக்னேஷ்.

    அம்பானிகளும் விஜய் மல்லையாக்களும் இன்னும் பல தொழில் முதலைகளும் இந்திய வங்கிகளில் கடனைப்பெற்றுக்கொண்டு நட்டக்கணக்கைக் காட்டி அந்த கடன்களில் இருந்து தப்பிக்க அரசியல் வாதிகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை அபேஸ் செய்வதை கவனிக்கலையா நீங்க..?

    ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் பத்தாயிரம் இருபதாயிரம் கடன் இருந்தால் அவனை வங்கிகள் கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்துகின்றனதானே..? ஏன் மேற்சொன்ன பணமுதலைகளைக் கண்டுக்காம இருக்காங்க..?

    இன்றைய தேதிக்கு உலக வங்கியின் இந்தியக்கடன் லட்சக்கணக்கான கோடிகள்..!

    அதேசமயம் இந்திய பணம் வெளிநாட்டுவங்கிகளில் பல லட்சக்கணக்கான கோடிகளில் முடங்கிக்கிடங்கின்றன.. இது வினோதமாக இல்லையா..?

    அரசாங்கம் * அது ஆண்ட அரசாங்கமா இருந்தாலும் ஆளும் அரசாங்கமா இருந்தாலும் ஆளப்போகும் அரசாங்கமா இருந்தாலும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஏன் ..? திருடர்கள் ... அனைவருமே திருடர்கள்..

    இதோ ஆற்காடு ஆறுமுகம் மந்திரி ஆவதற்கு முன் அல்லது எம் எல் ஏ ஆவதற்கு முன் எத்தனை கோடிகளுக்கு அதிபதியாக இருந்தார்..?

    இப்போது நமக்கு தெரிய வந்த ஒரே கணக்கில் மட்டும் 3300 கோடிரூபாய்கள்.. !

    இவை எல்லாம் யாருடையது..? அந்த ஆளுடைய பரம்பரைசொத்தா..? உழைத்து ரத்தமாய் வியர்வை சிந்தி உண்டாக்கிய பணமா..?

    இல்லை விக்னேஷ்,, இவை எல்லாம் நம் உழைப்பு..

    ஒருபக்கம் விவசாயிங்க எலிகளை சாப்பிட்டு உயிரைக் கையில் பிடிச்சு வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.. இன்னொரு பக்கம் இந்த கொள்ளையர்களின் ஆர்ப்பாட்டம்..கேட்கவே வேதனையா இல்லையா..? ‘’

    ராகவன் சொல்ல சொல்ல விக்னேஷின் மனம் அவன் பால் கொண்டிருந்த மதிப்பை பலமடங்காக்கியது.

    ராகவனுக்கு சில ஆயிரங்கள் கடன் இருப்பதை ஓரளவுக்கு அறிவான் விக்னேஷ். ஆயினும் தனக்காக அந்த பெரும் தொகையில் இருந்து ஒற்றை பைசாகூட பயன்படுத்திக்கொள்ளாத அசாத்திய நேர்மை ராகவனை ஒரு தேவதை ரேஞ்சுக்கு உயர்த்தி இருந்தது. இப்போது அவன் சொன்ன ஒவ்வொரு உண்மையும் பொட்டில் அறைந்தாற்போல இருந்ததால் அமைதியாக அவன் சொன்னவற்றை ஆமோதிக்கும் விதமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

    ராகவன் தொடர்ந்தான்.

    ‘’ விக்னேஷ், நானாக எதையும் தேடிப்பிடித்து திட்டமிட்டு இறங்கவில்லை. எனது பைக் பார்க்கிங்கிலிருந்து பைக்கை எடுக்கும்போது இடையில் சிக்கிய ஒரு பழைய கொரியர் பாக்கெட் என் சிந்தனைகளை தீவிரமாக்கி இறங்க வைத்தது.

    அந்த பாக்கெட்டில் நீலமேகம் என்பவர் அமைச்சகம் ஒன்றின் விழாக் காட்சியை பதிய வைத்து அதில் சில கோடிங் மூலம் ஆற்காடு ஆறுமுகத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்கு விவரங்களையும் அதை அணுகும் அனைத்து விதங்களையும் குறித்து வைத்திருந்தார்.

    முதலில் ஒன்றும் புரியாமல் விழித்த நான் இதற்காக நிறைய வாசித்தேன். ஒரு கவிதை எழுத பல நாள் சிந்தித்து பலமுறை திருத்தி எழுதி பதிப்பிக்கும் கலைவேந்தன் என்பவரை நான் இணையத்தில் அறிவேன். அந்த அக்கறையும் கவனமும் என்னை இந்த சிடியில் ஈடுபடுத்த ஊக்கிகளாய் உதவின. நிறைய கண்டுபிடிச்சேன்.

    நான் நினைத்திருந்தால் எனக்கும் ஒரு வெளிநாட்டு கணக்கை உருவாக்கி அனைத்து கோடிகளையும் என் கணக்கில் பெற்றுக்கொண்டிருக்க முடியும். அந்த அளவுக்கு விவரங்கள் கிடைத்தன. ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஏன்..?

    பிறகு எனக்கும் இந்த திருடர்களுக்கும் என்ன வித்தியாசம்..?

    ஆம் நானும் திருடனாய் மாறினேன். ராபின் ஹூடைப்பற்றி படிச்சிருப்பீங்க.. யெஸ். நானும் தமிழக ராபின் ஹுட் ஆக என்னை நினைத்துக்கொண்டேன்.

    ஒரே நாளில் அனைத்து பணத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கு மாற்ற முடிந்தாலும் அதற்கு என் உழைப்பு கடந்த 20 நாட்கள்..!

    இந்தாங்க விக்னேஷ்.. இந்த சிடியில் நான் செய்த அனைத்துமே பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

    என்னைக்காவது நான் மாட்டுவேன் என்பது தெரியும். அதிலும் ஆறுமுகம் போன்ற முதலை வெளிப்படையா இறங்காவிட்டாலும் மறைமுகமா இறங்கி விசாரிப்பார்னு தெரியும். அவர் உங்களை அணுகியது அறிந்து கொண்டேன். எப்படின்னு கேக்கறீங்களா..?

    ரெண்டு நாள் முன்பு உங்க லேப்டாப்பிலிருந்து அக்சஸைப் பார்த்தேன். உங்க ஐபி முகவரி தேடி நீங்க இதில் விசாரிக்க இறங்கி இருப்பதையும் அறிந்தேன்.

    உங்களையும் ஃபோலோ செய்து பாத்து நிலைமையைக் கண்டறிந்தேன்.

    இனி தப்பிக்க இயலாதுன்னு தெரிஞ்சு உங்களை எதிர்பார்த்தேன். நேற்று நீங்கள் கீழே இருக்கும் கொரியர் கடையில் விசாரித்ததையும் பார்த்தேன்.

    நேற்று இரவு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க முழுவிவரம் தெரிஞ்சுக்காம வரவிரும்பலைன்னு புரிஞ்சுகிட்டேன்.

    காலிப்பானையைச் சுரண்டிப்பார்ப்பது போல் நேற்று இரவு நீங்க ஆறுமுகம் அக்கவுண்ட்டை அக்செஸ் செய்து முயன்றதையும் கண்டுபிடிச்சு இதோ இப்ப உங்களை எதிர்பார்த்து தான் காத்திருந்தேன்.

    என்னை நீங்க போலீஸில் ஒப்படைக்கலாம் விக்னேஷ்.

    அட்லீஸ்ட் என் செயல்கள் இந்தியா முழுக்க வெளிவந்தா... என்னைப்போல பல ராகவன்கள் உருவாகலாம். எல்லா கறுப்புப்பணங்களும் அம்பலமாகலாம். நான் ரெடி விக்னேஷ். ‘’

    கொஞ்ச நேரம் ராகவனையே உற்றுப்பார்த்த விக்னேஷ்..

    அமைதியாக ‘’ என்னை உங்க நெருங்கிய நண்பரா ஏற்பதில் உங்களுக்கு மறுபரிசீலனை இருக்குமா ..? ‘’ என்று துல்லியமான ஆங்கிலத்தில் கேட்டான் ..


    துடிப்புகள் விரைவில் அடங்கும்..!

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    மூன்று நாட்கள் விடுமுறையில் சீக்கிரமாக கதையை மொத்தமாக பதித்துவிட்டீர்கள். படிக்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து விட்டது...

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 21

    ராகவனைச் சந்தித்து அலுவலகம் திரும்பிய விக்னேஷ் அடுத்து செய்யவேன்டியதை அமைதியாக ஆலோசித்தான். அவனது கண்கள் இடுங்கி அரைத்தூக்கத்தில் இருந்தது போல் இருந்தது.

    அவனது இயல்பை அணுஅணுவாகப்புரிந்திருந்த வசந்தி அமைதியாக அவனருகே அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

    சற்று நேர ஆலோசனைக்குப் பின் விக்னேஷ் மாணிக்கத்தைத் தொடர்பு கொண்டு அவனையும் அமைச்சரையும் சந்திக்க அமைச்சர் வீட்டுக்கு வருவதாகக் கூறினான்.

    வசந்திக்கு இதயமே கையில் வந்துவிடும் போலிருந்தது.

    '' விக்னேஷ், எதைச் செய்தாலும் தீர ஆலோசிச்சுதான் செய்வீங்க என்பது எனக்கு தெரியும். ஆனாலும் என்னமோ எனக்கு பயமா இருக்கு விக்னேஷ். நீங்க ராகவனைக் காட்டிக்கொடுக்கப் போறீங்களா..? அந்த பாவிகள் அவரைக் கொன்றே போட்டுவிடுவாங்க விக்னேஷ்..'' அவள் குரலில் பதட்டமும் நடுக்கமும் இருந்தது.

    ராகவனைக்காட்டிக்கொடுக்க விக்னேஷ் மனம் இடம் தராது என்று அவனை நன்கறிந்த வசந்தி அறிவாள். தன் மனதுக்கு இசைந்தவனின் அனைத்து இயல்புகளையும் குணங்களையும் தெரிந்து வைத்திருப்பவள் தான் உண்மையான துணைவி இல்லையா..?

    விக்னேஷ் அவளைக் கண்கொட்டாமல் சிரிது நேரம் கவனித்தான்.

    மெல்லியதாய் கண்மை இட்டு சிவந்த கன்னங்களில் பயத்தின் காரணமாய் இன்னும் சிவப்பேறி ஒரு பட்டுப்பூவாய்த் தோற்றமளித்தாள்.

    இவளைக் கட்டிக்கொள்ள நான் எத்தனை கொடுப்பினை செய்து இருக்கவேண்டும்.. தான் விரும்புவளை மணப்பதை விட தன்னை உயிராக நேசிப்பவளை அடைவது என்பது எத்தனை பெரிய நல்வாய்ப்பு..? பேசாமல் அமைச்சர் பிரச்சினையை முடித்துவிட்டு வசந்தியின் அப்பாவிடம் சென்று பெண்கேட்கலாமா..?

    ஏற்கனவே சிலமுறைகள் வசந்தியின் பெற்றோரைக் கண்டிருக்கிறான் விக்னேஷ். இவன் மேல் அவர்களுகு வாஞ்சையும் மதிப்பும் அதிகம் உண்டு. வசந்தியும் இவனைக் காதலிப்பதை அடிக்கோடிட்டு காட்டி இருக்கிறாள். எனவே திருமணத்துக்கு கண்டிப்பாக சம்மதிப்பார்.

    பெருமையும் ஏக்கமும் கலந்த பெருமூச்சொன்று எழுந்தது விக்னேனஷுக்கு.

    '' வசந்தி டியர், ஒரு நல்ல மனிதனாய் இருப்பவன் நல்லவர்களைக் காட்டிக்கொடுக்கமாட்டான். மேலும் நான் ராகவனிடம் பெரிதும் மதிப்பு மட்டும் வைச்சு இருக்கலை. சிறந்த நண்பனாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். காதலில் கூட துரோகம் மன்னிக்கப்பட*லாம். நட்பில் கூடவே கூடாது. நான் ராகவனை நிச்சயம் காட்டிக்கொடுக்கமாட்டேன்.. நீ கவலைப்படாதே.. பாரு பயத்துல இன்னும் சிவந்து ரொம்ப அழகாய்த்தான் இருக்கே.. இப்பவே உன்னைக் கட்டிக்கலாம் போல தோணுது.. '' என்ற விக்னேஷைக் கண்கொட்டாமல் பார்த்து வியந்தாள் வசந்தி.

    ஆகா... என்னை டியர் என்றானே.. இவன் நல்ல இயல்பு எனக்கு முன்பே தெரியுமே..திருடன்... என்னைக்கட்டிக்க தோணுதாமே.. அதை உடனே செய்தா என்னவாம்.. நானும் எப்போ எப்போன்னு காத்து இருக்கேனே.. பாவி.. பாவி.. அதை முதல்ல செய்யிடா..

    கனவிலிருந்து நினைவுக்கு மீண்ட வசந்தி '' அப்படியானால் அமைச்சரை என்ன சொல்லி சமாதானம் செய்யப்போறீங்க விக்னேஷ்.. கோபத்துல உங்களை எதுவும் செய்துடக்கூடாதே... எனக்கு அதான் பயமா இருக்கு.. '' மிரண்ட குரலில் மெலிதாய்க் கூறினாள் வசந்தி.

    '' ஹாஹா... நீயும் தான் என்னுடன் வரப்போறே.. எப்படி சமாளிக்கலாம்னு பார்ப்போம்.. என்னோடு அமைச்சர் வீட்டுக்கு வருவதில் பயமில்லையே..? '' என்று கண்ணடித்துக் கேட்டான் விக்னேஷ்.

    '' இல்லை விக்னேஷ்.. உங்க எங்க வேணும்னாலும் வரத்தயார். உங்களுக்கு ஒன்னுன்னா அது எனக்கு அப்புரம் தான் நடக்கனும்.வாங்க போகலாம்..'' குரலில் உறுதியும் தெளிவும் இருந்தது வசந்தியிடம்.

    '' இல்லை வசந்தி.. நீ வரவேண்டாம். அவர்கள் பொல்லாதவர்கள்.. நீயும் வந்து என்னுடன் ஆபத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். நான் விளையாட்டாகத்தான் வருகிறாயா என்று கேட்டேன்.. உன்னை அழைத்துப் போக எனக்கு விருப்பமில்லை.. '' விக்னேஷ் குரலில் முதன் முதலாய் முழுக்காதலும் சொட்டியது.

    '' நோ நோ விக்னேஷ்... உங்களை தனியா அந்த ஆபத்தில் அனுப்ப மனமில்லை. எதுவானாலும் ஒன்றாக நடக்கட்டும். நான் வரப்போவதை தடுக்காதீங்க ''' உறுதியாகக் கூறிவிட்டு அவனுடன் புறப்பட தன்னை சற்றே திருத்திக் கொண்டு தயாரானாள்.

    பைக்கில் அவன் முதுகுப்புறமாகத்தொத்திக்கொண்டு அட்டை போல் ஒட்டிக்கொண்டாள் வசந்தி.

    ஏற்கனவே அவன் மேல் இருந்த காதல் பலமடங்காகியது. காரணம் அவன் அவள் மேல் காட்டிய அக்கறையும் பொறுப்பும் தான்.

    தனக்கு மிகவும் பாதுகாப்பாக தன் துணையை நம்பும் எந்தப்பெண்ணும் அவன் மேல் பலமடங்கு காதலைப் பொழிவாள் தானே..?

    விக்னேஷின் பைக் அமைச்சர் வீட்டு வாசலில் நிறுத்தியபோது அமைச்சரும் மாணிக்கமும் தாமே முன் வந்து அவனை எதிர்கொண்டார்கள்.

    அமைச்சரின் முகத்தில் எரிமலை போல் கோபம் கொப்பளித்திருந்ததைக் கண்ட வசந்தி அரண்டே போனாள்.


    அடுத்த பகுதியில் .. நிறைவு பெறும்..!

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 22 (நிறைவுப்பகுதி)

    ருவர் தமது வீட்டுக்கு வந்து இருக்கிறார்களே, அவர்களை வரவேற்க வேண்டும் என்னும் பண்பாட்டைக் கூட இழந்துவிட்ட அமைச்சர், விக்னேஷை கையைப்பிடித்து இழுக்காத குறையாய் அழைத்துக்கொண்டு தமது அறைக்குப் போனார்.

    மாணிக்கமும் வசந்தியும் சிறந்த கவிஞர்கள் பின்னால் தொடர்ந்து செல்லும் சொற்களின் கூட்டம் போல பின் தொடர்ந்தனர்.

    மாணிக்கத்தை உட்கார வைத்துவிட்டு அமைச்சர் மட்டும் குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடந்துகொண்டே கேட்டார்.

    ‘’ சொல்லுங்க தம்பி... யாரந்த **** மகன்..? ‘’ *ஒரு பெண் உடன் இருக்கும் நினைவுகூட இழந்தவராய் அமைச்சர் ஆவேசமுடன் கேட்டார்.

    ‘’ சொல்றேன் ஐயா.. அதுக்கும் முன்னால எனக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக்குங்க.. இறந்து போன நீலமேகத்துக்கு மும்பய்ல தொடர்பு இருந்ததா..? ‘’ விக்னேஷ்.

    ஏதோ சிந்தித்தவராய் மாணிக்கத்தை ஒருமுறை பார்த்துவிட்டு அமைச்சர் சொல்லத்தொடங்கினார்.

    ’’ நீலமேகம் எங்களைப் போல அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லாம மிகப்பெரிய தொழிலதிபர்கள் பணமுதலைகளுடன் கூட தொடர்பு வைச்சு இருந்தார். எல்லாருக்கும் ஹவாலா மற்றும் கறுப்புப்பண பதுக்கல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி வந்தார். ஏன் என்னாச்சு விக்னேஷ்..? முப்பய் இல்லை இந்தியாவுல அவன் எங்கிருந்தாலும் அவனைத் தேடிப்பிடிச்சு கொல்லத்துடிக்குது என் மனசு.. சொல்லுங்க தயங்காம.. ‘’ ஆவலை அடக்க முடியாதவராய் பரபரத்தார்.

    ‘’ ஐயா, நான் உங்க நலன் மேல அக்கறை கொண்டவன். உங்க பாதுகாப்பை மிகவும் முக்கியமாகக் கருதிச் சொல்லுகிறேன். இந்த ஸ்விஸ் வங்கிக்கணக்கை இத்தோடு மறந்திடுங்க.. போனதொகை போகட்டும். அந்த தோகை மீண்டும் கிடைக்கவும் செய்யாது, அது மட்டுமில்லாம.. ‘’

    அவனை முடிக்க விடவில்லை அமைச்சர்.

    ‘’ விக்னேஷ், என் பலம் உனக்கு தெரியாது. தமிழ்நாட்டுல மட்டும் இல்லை. இந்தியாவுல எங்கும் என்னால ஆளைப் பிடிச்சு காரியத்தைச் சாதிக்கமுடியும். அதைப்பத்தி கவலைப்படாம நீங்க அவன் விவரம் மட்டும் கொடுங்க.. மீதி நான் பாத்துக்கிறேன். ஒன்னு இல்லை ரெண்டு இல்லை. மூவாயிரம் கோடி ... ஹூம்..’’ அவர் கிட்டத்தட்ட சிங்கம் போலவே கர்ஜித்தார்.

    ‘’ ஐயா.. நான் சொல்லபோற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும். பொறுமையா கேளுங்க..’’ என்ற விக்னேஷ் தொடர்ந்தான்.

    ‘’ நீலமேகம் உங்கள் ஸ்விஸ் அக்கவுண்ட்டை தொடங்கி வைத்து விவரங்களைச் சொல்லியதுடன் அதை எப்பவோ மறந்தும் இருப்பார். அவருக்கு தேவை கமிஷன் தொகை மட்டுமே.. அது நாள் வரை அவர் அனைவருக்கும் செய்ததும் அதுதான்..

    ஆனா உங்க விஷயத்துலமட்டும் அவர் மாறா நடந்துகிட்டார். அதுக்கு காரணம் நீங்க அவருக்குக் கொடுத்த மெண்ட்டல் டார்ச்சர். அவரை அறையில் சிறைவைத்து ஆட்டிப்படைத்த செயல்கள் அவரைக் காயபபடுத்திவிட்டது. எத்தனையோ பேருக்கு அவர் இந்த மாதிரி சேவைகளைச் செய்து கொடுத்தும் யாருமே தராத மன அழுத்தங்களை நீங்க கொடுத்ததால் உங்க மேல அவர் மிகுந்த ஆத்திரம் அடைந்தார்..உங்க அக்கவுண்ட் விவரங்களை எல்லாம் ரெககனைஸ் செய்து அதை அமைச்சகத்தின் கலைநிகழ்ச்சி சிடி மூலமாக பதிந்து கோடிங் செய்து அதை தனக்கே கொரியர் அனுப்பிக்கிட்டார். அந்த கொரியர் முகவரில அவரது மும்பை முகவரி போட்டிருந்தார். ஏன்னா நீங்க அவரை ட்ரேஸ் செய்துடுவீங்கன்னு பயந்தார். மும்பைல அவருக்கு ஒரு ஃப்ளாட் அரேஞ்ச் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே இருந்த நம்பிக்கையான வேலையாள் மூலம் கொரியரைக் கைப்பற்றுவது என்றும் பிற்பாடு அவர் மும்பை செல்லும் போது அந்த கொரியரை வைத்து உங்களுக்கு பிரச்சினை கொடுப்பது அவரது நோக்கம்.

    ஆனா நீங்க ஒருவழியா அவரை விடுவித்தபின்னால் கும்பகோணம் போனவர் அங்கே ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். கிட்டத்தட்ட அது கொலை போலதான். ஏன்னா அவர் மிகுந்த மனத்தெளிவும் ஆரோக்கியமும் கொண்டவரா இருந்தார். உங்க கஸ்டடில இருந்த பதினைந்து நாட்கள் அவரைத் தகர்த்துடுச்சு.

    அவர் மும்பைக்கு அனுப்பின கொரியர் அவர் கையில் கிடைக்காமலேயே போயிடுச்சு.

    ஆனா அந்த கொரியர் யார் கையில் கிடைச்சது தெரியுமா..? ‘’

    சற்று நிறுத்தினான் விக்னேஷ். அவனை வியப்போடும் பயத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தாள் வசந்தி.

    ஆ ஆறுமுகத்தின் ஒரே முகம் இருண்டு போயிருந்தது. உணர்வுகள் பல வந்து வட்டமடித்துச் சென்றன.

    மேலே சொல்லு என்பது போல் சைகை காட்டினார். தொடர்ந்தான் விக்னேஷ்.

    ‘’ அவருக்கு மும்பையில் தனி ஃப்ளாட்டும் வேண்டிய வசதிகளையும் கொடுத்து வைத்திருந்தவன் மும்பையின் டான் சாவூத் சுப்ராஹீம். அவன் கையில் தான் அந்த கொரியர் கிடைத்தது. உங்க பணத்தின் சாவி கிடைத்தது. ‘’ என்று விட்டு ஆறுமுகத்தின் முகத்தை ஆராய்ந்து நோக்கினான் விக்னேஷ்.

    ஆறுமுகம் மற்றும் மாணிக்கத்தின் முகம் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மரணக்களை பிராண பயம் தாண்டவமாடியது.

    இதைத்தானே விக்னேஷ் எதிர்பார்த்தான்.

    ‘’ ஐயா.. சுப்ராஹீமுக்கு ரொம்ப உதவிசெய்த நீலமேகத்தின் அறிமுகம் சுப்ரமணிய சேகர் என்னும் ஒரு பெரிய வங்கி வல்லுனர் மூலமாக சுப்ராஹீமுக்கு கிடைத்தது. நீலமேகத்தை இழந்த கோபம் இன்னும் சுப்ராஹீமை விட்டு அகலவில்லை. உங்களைக் கொல்ல நினைத்தவன் ஏதோ காரணத்தால் விட்டுவைத்துவிட்டான். ஆனால் அந்த ஆத்திரம் அடங்காமல் உங்க கணக்கைச் சுரண்டி அவனது உலகம் முழுக்க இருக்கும் கணக்குகளில் செலுத்திக்கொண்டுவிட்டான். இந்த வகையில் சுப்ரமணியம் சேகர் மிக உதவியாக இருந்தார். இனி என்ன செய்யப்போறீங்க..? ‘’ என்று கேட்டுவிட்டு அவரைக்கூர்ந்து நோக்கினான்.

    துளிக்கூட அச்சமில்லாமல் பேசும் விக்னேஷையே கூர்ந்து பார்த்த ஆறுமுகத்தின் முகம் ரத்தமிழந்த சவக்களை பெற்றது.

    ’’ இனி என்ன ஆகும் ..? ‘’ என்று அவனையே கேட்டார் ஆ ஆ.

    ‘’ இந்த விடயத்தை கண்டுக்காம விட்டுவிடுவது தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை. என்ன தான் உங்க கிட்ட பலம் இருந்தாலும் இந்த சாவூத் சுப்ராஹீமை அசைக்கக் கூட முடியாது என்பது தான் உண்மை. அவன் கில்லர்களை வெளி நாட்டில் இருந்து தருவிப்பவன். அவனைப்பத்தி நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.’’

    ஹூம் என்று பெருமூச்செறிந்தார் ஆறுமுகம்.

    ’’ நான் கும்பகோணம் சென்றிருந்தப்ப என்னை சிலர் கண்காணித்தாங்க.. முதலில் அது நீங்களாக இருக்கும்னு நினைச்சேன். பிறகுதான் தெரிந்தது. உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் சுப்ராஹீம் ஆளுங்க தான் என்னையும் ஃபாலோ செய்தது. இனி நீங்க கவனமா இருப்பது நலம். ‘’ பேச்சு முடிந்தது என்பதைப்போல தலை அசைத்துவிட்டு அமைதியானான் விக்னேஷ்.


    றுமுகத்தின் இல்லத்திலிருந்து வெளியேறிய விக்னேஷும் வசந்தியும் பைக்கில் மௌனமாகப் பயணித்தனர்.

    சட்டென்று யாருமில்லாத சாலையில் நிறுத்தச் சொன்னாள் வசந்தி.

    ‘’ விக்னேஷ்.. நீங்க பொய் சொல்லுவீங்களா..? அதுவும் இத்தனை கோர்வையாக..? ‘’ என்று அவன் முகத்தைப் பார்த்து தன் தலையைச் சாய்த்து ஸ்டைலாகக் கேட்டாள் வசந்தி.

    ‘’ நான் சொன்னது முழுக்க உண்மை வசந்தி, ஒரே ஒரு விடயம் தவிர. ராகவன் கையில் சிடி கிடைத்ததைத் தவிர. சுப்ராஹீம் ஆறுமுகத்தைக் கருவிக்கொண்டிருப்பது நிஜம். என்னைக்காவது ஒரு அமைச்சர் படுகொலை என்று செய்தி வந்தால் பதறாதே..’’ என்று கண்சிமிட்டினான்.

    ‘’ மேலும் வசந்தி... பொய்ம்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில் என்று வள்ளுவர் சொல்லி இருக்கார்.. ‘’ என்றான் விக்னேஷ்.

    சட்டென்று பாய்ந்து அவனை இறுகத்தழுவி அவன் எதிர்பாராத வண்ணம் அவன் இதழில் ஆழமாக தன் இதழைப் பதித்து நீண்டதொரு முத்தம் தந்தாள் வசந்தி.

    பைக் இப்போது உல்லாசமாகப் போய்க்கொண்டிருந்தது.

    ’’ இனி என்ன விக்னேஷ்..? ‘’ வசந்தியின் குரலில் ஆர்வம் தொனித்தது.

    ‘’ இப்போ நேரா ராகவன் கிட்ட போய் அவன் தப்பித்த தகவல் கொடுத்துட்டு ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் நாம் சாப்பிடப்போகிறோம். ‘’

    ‘’ அப்புறம்... ‘’

    ‘’ ஒரு முக்கியமானவரைச் சந்திக்கனும்.. ‘’

    ‘’ யாரை..? ‘’

    ’’ உங்க அப்பாவை.. ’’

    வசந்தி மௌனமாக அவனை பின்னால் இறுக்கி அணைத்துக்கொண்டாள். விக்னேஷுக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டது.


    நிறைவடைந்தது.

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    மூன்று நாட்கள் விடுமுறையில் சீக்கிரமாக கதையை மொத்தமாக பதித்துவிட்டீர்கள். படிக்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து விட்டது...
    உங்களை விடுத்து வேறு எவருடைய ஊக்கப்பின்னூட்டமும் இல்லாத நிலையில் ஏன் தொடங்கினோம் என வேதனித்து தொடங்கியதை முடித்தால் போதும் என்று முடிக்க நேர்ந்தது சர்சரண்.

    இன்னொரு கதையின் நிலையும் இதுவேதான். எனவே அதையும் முடித்துவிட்டேன்.

    இனி இங்கே தொடர் கதை எழுதுவதில்லை என்னும் முடிவுக்கும் வந்துவிட்டேன்.

    எழுத்தாளனுக்கு தேவை ஊக்கம். அது இல்லாதபோழ்து எழுதி என்ன பயன்..?

    உங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சர்சரண்..!

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    நன்றாய் இருந்தது கதை. தொடர்ந்து எழுதுங்கள்.

    இடையில் நிறுத்தி விடாதீர்கள்.

    உங்களுக்குள் இருக்கும் கற்பனை குதிரையை என் அனாவசியாமாக (பட்டினி போட்டு) கொல்கின்றீர்கள்?

  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நான் எழுதப்போவதில்லை என்று சொல்லவில்லை நண்பரே.. கொல்லன் தெருவில் ஊசி விற்பதைப்போல் ஆன நிலையில் இங்கே பதிவதில்லை என்றுதான் சொன்னேன்.

    என் எழுத்துகளை என் உயிர் இருக்கும்வரை யாரும் தடுக்க இயலாது நண்பரே..

    மிக்க நன்றி..!

  11. #47
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இக்கதையினை முன்பு ஒரு முறை பாதிவரை படித்திருந்தாலும் தொடரமுடியவில்லை இன்று அந்த வாய்ப்பு கிட்டியது ..அருமையான கதை டாப் கியரில் பயணித்து சுபமாக முடிந்தது ..இக்கதையில் தங்களின் தகவல் சேகரிப்பு அதில் மன்றத்தினை இணைத்து சொன்ன பாங்கு அருமை ..மற்றொன்று சுவிஸ் வங்கி பற்றிய தகவல்களையும் அறிய முடிந்தது ..இது போல் நிகழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற கற்பனையையும் தோற்றுவித்தது....நிச்சயம் மீண்டும் இது போல் பல தொடரவேண்டும் கலைவேந்தன் அவர்களே....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  12. #48
    புதியவர்
    Join Date
    30 Aug 2016
    Location
    TIRUNELVELI
    Age
    30
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    575
    Downloads
    0
    Uploads
    0

    பசுபதி

    கதை ரொம்ப சூப்பரா இருந்தது

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •