Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 48

Thread: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 22 (நிறைவுப்பகுதி)

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 6

    ண்மையில் மாணிக்கத்தின் கண்கள் ஏமாந்துதான் போயின.

    மாணிக்கம் பின்னாலிருந்து பார்த்த போது விக்னேஷ் வசந்தியைக் கட்டிப்பிடித்து நின்ற மாதிரி தெரிந்தாலும் உண்மையில் அன்று வசந்தி கண்ணில் விழுந்து ரொம்ப நேரமாக அவளைக் கண்கலங்க வைத்துக் கொண்டிருந்த தூசியை அவ்வளவு நெருக்கத்தில் நின்று அவள் கன்னத்தை ஏந்தி நின்று ஊதியதால் மாணிக்கம் இருந்த குழப்பத்தில் கட்டிப்பிடித்ததாக எண்ணிவிட்டான். ( அப்பாடா... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு மு மன்ற வாசிகள் கிட்ட : ) )

    மாணிக்கம் தன்னை சுதாரித்துக்கொண்டு கனைத்தான். அப்போது தான் இவனைத்திரும்பிப்பார்த்த விக்னேஷ் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இவனிடம் அங்கே இருந்த சேரைக்காட்டி உட்கார வைத்துவிட்டு தன் பணியைத் தொடர்ந்தான்.

    கண்ணில் இருந்த தூசி வெளியானதும் ஆசுவாசம் அடைந்த வசந்தி - வயது 27 - கல்வி பி ஏ பி எல். - கல்யாணம் ..? ஊஹூம். இன்னும் இல்லை. ராஜ சக்தி விமல் சிவஹரி போன்ற எளிஜிபில் பேச்சலர்களுக்காகக் காத்திருக்கும் கொள்ளை அழகி வசந்திக்கு ஒரே லட்சியம் விக்னேஷ் போல மிகப்புகழ் பெற்ற டிடெக்டிவாக ஆக வேண்டும் என்பது தான்.வசதி மிக்க பெற்றோரின் செல்ல மகள்.சுருக்கமா சொல்லப்போனால் ஓர் ஆண் பாரதி..!

    அவள் விக்னேஷிடம் அசிஸ்டண்டாக சேர்ந்து இரண்டே வருடம் தான் ஆகிறது. அதற்குள் மிக சிக்கலான கேஸ்களில் இருக்கும் முடிச்சுகளைக் கூட அவிழ்க்கும் திறமையை விக்னேஷ் கற்றுக்கொடுத்து இருந்தான்.

    விக்னேஷ் போன்ற டிடெக்டிவ் புலியுடன் இணைந்து செயலாற்றுவதில் கர்வம் உண்டு அவளுக்கு.

    ஏன் இருக்காது...?

    விக்னேஷ் தமிழகத்தின் மிகச்சிறந்த துப்பறிவாளனாக பெயர்பெற்று ஐந்து வருடங்கள் ஆகின்றன. 35 வயதில் அவன் இத்தனை பேர் பெற்றதுக்கு முக்கிய காரணம் அவனது சுறுசுறுப்பான மூளை. அவனிடம் வருபவர் தரும் சிற்சில நுனிகளைக் கொண்டு உடனேயே ஐம்பது சத விகிதம் என்ன நடந்தது என்பதை ஊகித்துவிடுவான். ஆனால் அதை யாரிடமும் பகிரமாட்டான். அவனுக்குரிய தனிபாணியில் விவரம் சேகரிப்பான்.

    இத்தனை தகுதி இருந்தும் மணம் முடிக்காமைக்கு காரணம் - அவன் கல்யாண வாழ்க்கையை நம்புபவன் இல்லை. அது போகட்டும். அது அவன் தனிப்பட்ட பிரச்சினை.

    ’’ போய் நல்லா முகம் கழுவி கலைஞ்சு போன மேக்கப்பை டச் பண்ணிக்கிட்டு வா வசந்தி’’ - என்று புன்முறுவலுடன் அவளை தன் அலுவலக உள் அறைக்கு அனுப்பிய விக்னேஷ் ‘’ சொல்லுங்க மாணிக்கம் ... வாட் கேன் ஐ டூ ஃபார் யூ ’’.. - என்றான்.

    மாணிக்கம் வியப்பின் உச்சியில் சேரின் நுனிக்கே வந்தான்.

    ’’ என் பெயர் மாணிக்கம்னு எப்படி உங்களுக்கு தெரியும் ’’ - என்றான்..

    ’’ அது மட்டுமா ..? நீங்க அமைச்சர் ஆ ஆறுமுகத்தின் அந்தரங்க ஆலோசகர் என்பதும் தெரியும்..’’ - மாணிக்கத்தின் வியப்பை இன்னும் அதிகமாக்கினான் விக்னேஷ்.

    என்ன தான் அமைச்சரின் பி ஏ என்றாலும் கூடிய வரை பொது இடங்களில் தன்னைத் தலை காட்டிக்கொள்ளாமல் இருந்தான் மாணிக்கம். அவன் நேரடியாக அரசியலிலும் தலையிடுவது இல்லை. நெருங்கிய சொந்தமான ஓரிருவருக்கு மட்டுமே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவி இருக்கிறானே தவிர வேறு எதிலும் தலையிட்டதும் இல்லை.

    மாணிக்கம் அப்படி பட்டும் படாமலும் இருக்க வலுவான காரணம் ஒன்றும் உண்டு. என்ன தான் மாணிக்கம் ஆறுமுகத்தின் அந்தரங்க நிழல் என்றாலும் அவன் அவர் சார்ந்த கட்சியையும் அதன் போக்கையும் அறவே வெறுத்தான். நிறைய படித்து அரசியல் ஞானமும் உலகவியலும் மனோதத்துவமும் பொருளாதாரமும் கணிணி அறிவும் நிறைந்த மாணிக்கம் இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியலை விரும்பாமல் இருப்பதில் வியப்பில்லை.

    தன் அறிவுக்கும் திறமைக்கும் தக்க மேடை கிடைக்காமல் ஏழ்மையில் உழன்ற மாணிக்கத்தை இப்போது கோடியில் புரளும் மனிதனாக மாற்றிய அமைச்சருக்கு அவன் மிகுந்த நன்றியுடன் இருக்கிறான். அவ்வளவுக்குமேல் அவன் யோசிப்பதும் இல்லை. விரும்புவதும் இல்லை.

    இப்படி இருக்க இப்போது தன்னை அடையாளம் தெரிந்துகொண்டு விக்னேஷ் அப்படி கேட்டதும் அவன் வியப்பில் ஆழந்தான்.

    ’’ என்ன யோசிக்கிறீங்க...?நான் சொன்னது தப்பா...? ’’- என்ற விக்னேஷின் கேள்வி அவனைச் சுயத்துக்கு கொண்டு வந்தது.

    ‘’ நான் கேள்விப்பட்டதை விட நீங்க வெரி ஸ்மார்ட்...’’ - மனம் விட்டு பாராட்டினான் மாணிக்கம்.

    ’’ஓகே தாங்க் யூ ’’- வெட்கத்துடன் நெளிந்த விக்னேஷ் கேட்டான். ‘’ நான் எப்படி உங்களுக்கு உதவனும்..? ‘’

    இதை இங்கே பேசுவது உசிதமான்னு தெரியலை. நீங்க விரும்பினா அமைச்சர் வீட்டுக்கே வரலாம். - என்று கூறிய மாணிக்கம் விக்னேஷைக் கூர்ந்து கவனித்தான்.

    அதற்குள் அங்கே வந்த வசந்தியைக் கண்டதும் மாணிக்கம் இவள் முன் பேசலாமா என்பது போல் அர்த்தமுள்ள பார்வையை விக்னேஷ் மேல் வீசினான்.

    ’’ இவமுன்னால எதையும் நீங்க சொல்லலாம். இவளை விட்டு என்னை விட்டு வெளியில் கசிவதில்லை எதுவும். என் க்ளையண்ட்ஸ் என் மேல் அபரிதமான நம்பிக்கை வைப்பதே இந்த நம்பகத்தன்மை காரணமாத்தான்.. கேரி ஆன் ப்ளீஸ்... - மாணிக்த்தின் மனதை வாசித்தது போல் விக்னேஷ் கூறினான்.

    மாணிக்கம் எல்லா விவரத்தையும் விரிவாகக்கூறினான். இந்த பிரச்சினை தீர்த்து வைத்தால் குறிப்பிட்ட சதவீதம் ஃபீஸ் ஆக தருவதாகவும் கூறினான்.

    ‘’ வாவ்’’ - சத்தமாகவே விசிலடித்தான் விக்னேஷ்.

    ’’என் ஃபீஸ் என்ன தெரியுமா ..? ‘’ - என்று கண்களில் குறும்புடன் கேட்ட விக்னேஷை சட்டென கூர்ந்து பார்த்தான் மாணிக்கம்.

    ’’ மொத்த மதிப்பில் நாற்பது சதவீதம்’’. - இப்படி விக்னேஷ் சொன்னதும் அவனை மிரண்டு போய் பார்த்தான் மாணிக்கம்.


    துடிப்புகள் தொடரும்...!

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 7

    கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 7


    மூளையில் ஒரு அதிரடி மின்னல் உருவாக , அந்த ஏபிஎஸ் ஏ ஏ மற்றும் சி பிஎஸ் எழுத்துகள் ஒரு வைரச்சுரங்கத்தின் சாவிகளாக மாறி அவனைச்சுற்றி தட்டாமாலை ஆடிக்கொண்டு இருந்தது..!

    உடனடியாக தமிழ்மன்றத்தில் பதியப்பட்டு இருந்த விக்கிலீக்ஸின் ஸ்விஸ் வங்கிக் கணக்குப்பட்டியலை மீண்டும் பார்த்தவன் இந்த சிடியில் இருக்கும் கோடிங்குக்கும் அதற்கும் எதோ தொடர்பு இருக்கவேண்டும் என உறுதியாக முடிவெடுத்தான்.

    உடனடியாக இணையத்தில் ஸ்விஸ் வங்கிகளின் செயற்பாடுகளைப் பற்றிய விவரங்களைப் பற்றி தகவல்கள் சேகரித்தான். வங்கிக்கணக்கு துவக்குவது எப்படி செயல்பாடுகள் எவ்விதம் என்றெல்லாம் முழுக்கவனத்துடன் வாசித்தான்.

    இடையில் உணவுக்காக வந்து அழைத்த மனைவியிடம் உணவு பிறகு சாப்பிடுவதாகவும் காபி மட்டும் கொண்டு வரும்படியும் சொன்னான். மிகத்தீவிரமான சிந்தனைகள் அவனை அலைக்கழிக்கும் போதும் தீவிரமாக எதிலும் ஈடுபடும் போதும் காபி அவனுக்கு மிகவும் உபயோகமான உற்சாகமூட்டியாக இருந்து வந்துள்ளது.

    ஸ்விஸ் வங்கிகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொன்றுக்கும் தனிவித லாகின் முறைகள் இருப்பினும் பொதுவான வழிமுறைகள் என்னவென்பதை கூர்ந்து அவதானித்தான். அவற்றில் யுபிஎஸ் வங்கியின் நடைமுறைகளில் பயன்பாட்டு விதிகளின் டெமோக்களும் தென்பட்டன.

    கிட்டத்தட்ட அனைத்து ஸ்விஸ்வங்கிகளின் நடைமுறைகளைப் படித்த அவன் முக்கிய வழிமுறைகளைத் தொகுத்து கீழ்க்கண்ட பட்டியலை எழுதினான்.

    முக்கியமான தேவைகள் மற்றும் குறியீடுகள்.

    1.பி ஏ எஸ். ( பர்சனல் அக்ஸசிங் சிஸ்டம்.)

    2.காண்ட்ராக்ட் எண்.(ஒவ்வொரு முறைக்கும் இது மாறுபடும். குறிப்பிட்ட நேரம் வரையே செல்லுபடும்.தலை சொரிய அங்கே நேரமில்லை. மிகச்சரியாக ஆறு இலக்கம்.)

    3.பி ஐ என். ( பர்சனல் ஐடண்ட்டிஃபிகேஷன் நம்பர்.) யூனிக்.தொலைந்தால் / மறந்தால் கிட்டத்தட்ட கோவிந்தா.

    4.அக்செஸ் கார்ட் நம்பர்.கார்ட் ரீடர் மற்றும் அக்செஸ் கீ. மிக மிக முக்கியமானது.

    5.வாய்ஸ் ரெகக்னிஷன். ( சில கேஸ்களில் )

    6.ரேகை ரெகக்னிஷன். ( ஆப்ஷனல் )

    7.எஸ் எஸ் எல். ( செக்யூரிட்டி சாக்கெட் லேயர் ) கோட். உயர்ந்த வகை பாதுகாப்புக்கு.

    8. காம்பினேஷன் ஆஃப் அல்காரிதம். ( பொதுவாக அனைத்து ஸ்விஸ் வங்கிகளின் நடைமுறை. மிகவும் உயர்தர பாதுகாப்பு உறுதி.

    9. ஐ எஸ் பி காம்பினேஷன் ஐடண்டிஃபிகேஷன். ( ஆப்ஷனல். ஆனால் பாதுகாப்பானது )

    10. பிரௌசர் காம்பினேஷன் ஆப்ஷன். ( சர்டிஃபிகேட் வெரிஃபிகேஷன் எனேபில்ட், ஆப்ஷனல்.)

    11. இண்டர்னெட் கேஷ் மெமரி எரேசர். ( ஆப்ஷனல் ஆனால் சிபாரிசிக்கப்பட்டது.)

    இந்த குறிப்புகளுடன் எச்சரிக்கை விதிமுறைகள் நிறைய கிடைத்தன. லாகின் எளிதென்றாலும் குறிப்பிட்ட பெனிஃபிசரிக்கு பணம் செலுத்தும் போது ட்ரான்சாக்சன் பாதுகாப்புமுறைகள் பக்கங்களாக நீண்டதால் அவற்றை பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என ஒதுக்கிவிட்டு லாகின் முறைகளை வரிசைப்படுத்தி கீழ்க்கண்டவாறு எழுதி தயாரித்தான்.

    1.முதலில் லாகின் பக்கம் திறக்க வேண்டும்.

    2.அடுத்து அக்செஸ் எண் அல்லது காண்ட்ராக்ட் எண் குறிப்பிட்ட இடத்தில் பதியவேண்டும். காபி பேஸ்டிங் முதலானவை தடை செய்யப்பட்டு இருக்கும். நேரடியாக தவறின்றி தட்டச்சு செய்தல் மிக முக்கியம். அவசியமெனில் விர்ச்சுவல் கீபோர்ட் பயன்படுத்தலாம். இது பாதுகாப்பு மேம்பாட்டின் மிக உயர் தரமான வழிமுறை.

    3.உள்நுழை விதிகள் கவனிக்கப்படவேண்டியவை.

    அ. சரியான குறியீடுகள்.
    ஆ. செக்யூரிட்டி கோடிங் சிஸ்டம் சரி பார்த்தல்.
    இ. ஸ்டெப் பை ஸ்டெப் டெமொக்கள். சரியான முன்பயிற்சி.

    4. செக்யூரிட்டி கேள்விகள் ( குறைந்த பட்சம் மூன்று ) அவற்றின் சரியான பதில். குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியாக அளிக்கவேண்டியவை. மூன்று தடவைகளுக்கு மேல் கணக்கு முடக்கப்படும் அபாயம்.

    5. தாங்கள் தேர்ந்தெடுத்த வாய்ஸ் மற்றும் ரேகை ரெகக்னிஷன் ப்ரொசீஜர்ஸ்.

    6 உள் நுழைந்து விட்டீர்கள்.

    ராகவன் மலைத்துப் போனான்.

    கணிணித்துறையில் பலவித சவால்களை எடுத்துக்கொண்டு முறியடித்தவன். ஹாக்கிங் டிகோடிங் முதல் வலுவான பாஸ்வேர்ட் க்ராக்கிங் வரை அவனது திறமை அவன் அலுவலகத்தில் மிகப்பிரசித்தம்.

    பலமுறை இவன் மங்களத்தின் மென்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் வேளையிலும் ஹன்சிகா மோத்வானியின் சுகமான கனவு அணைப்பில் இருக்கும் போதும் அவனது மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான கொலம்பியா தலைமை அலுவலகத்திலிருந்து ஹாரிசன் ஸ்டோன்மேன் மற்றும் நிகோலஸ் ஆகியோரின் தொலைபேசி கால்களால் துரத்தப்பட்டு அதிவேக தனது இணைய இணைப்பின் மூலம் அவர்களின் பிரச்சினைகளை மூன்று முறை இடையில் கொட்டாவி விட்டுக்கொண்டே தீர்த்துவைப்பவன்.

    எனினும் இது புதுமையானதாகவும் சுவாரசியமாகவும் தென்பட்டது.மேலும் இதுவரை இவன் பணியில் குறுக்கிடாத ஒரு விசிலடிக்க வைக்கும் பணியாகப் பட்டது.

    சிடியில் இருந்த கோடிங்குகள் அவனது சிந்தையைக் கிளறியது. மீண்டும் மீண்டும் அந்த சிடியை ஓடவிட்டான். பல வீடியோ கிளிப்புகளை முதன் முறை பார்த்த போது ஸ்கிப் செய்தவன் இப்போது ஒரு கணம் விடாமல் கூர்ந்து கவனித்தான். சில பல ஆளும்கட்சியின் திருமுக மந்திரிகளின் உப்புக்கு மதிப்பு பெறாத உரைகளைக் கவனித்தான். பார்த்துக்கொண்டே வந்தவன் ... அட ... அமைச்சர் ஆ ஆறுமுகம் கூட பேசி இருக்கிறாரே... கேட்டுக்கொண்டு வந்தவன் அமைச்சர் ஆறுமுகம் பேசும் பகுதிகள் மிக அமைதியாக குண்டூசி விழுந்தால் கேட்கும் பின்னணியில் பேசியது வியப்பாக இருந்தது... அட அட... சட்டென அவன் முகம் பிரகாசித்தது... வாய்ஸ் ... வாய்ஸ் ... மைகாட்.. அவன் தனது சேரின் முன் நுனிக்கு வந்தமர்ந்தான்.

    ‘’ இந்த ஆட்சியில் மனித வளம் பெருகியுள்ளது. ஔவை பாடினார்.. கூன் குருடு செவிடு பேடி நீங்கிப் பிறத்தல் அரிது என்று... ஆயினும் அவ்வம்மையார் இன்று இருந்தால் இந்த திருமுக ஆட்சியில் பிறந்தால் எவ்வித குறைபாடு இருந்தாலும் ஒன்று எட்டு பதினாறு எழுபத்திரண்டு நூற்று ஒன்பது நூறு ஆயிரம் கோடி என்ற வகையில் மக்கள் மிகவும் மேம்பாடு அடைந்து இன்று ஒரு அரசனைப்போல் எல்லா மக்களும் வாழ்கிறார்கள் என்றால் அந்த பெருமை என் யானை பூனை பானை சேனை தானைத் தலைவனுக்கே சென்று சேரும் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதற்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.. ‘’

    சட்டென்று சில பிரகாசமான பொறிகள் அவனது மூளையில் பறக்கத்தொடங்கின.அதே சமயம் எச்சரிககை உணர்வொன்றும் அவனைத் தொற்றிக்கொண்டது.

    இந்த விடயத்தை மிகக்கவனமாக கையாள வேண்டிய அவசியம் அவனுக்கு தென்பட்டது. நெட் மாஸ்கிங் ஏற்படுத்தினான். ஃபேக் ஐ எஸ் ப்ரோட்டோகால் தயார் செய்தான்.இதில் அவன் மிக மிக கைதேர்ந்தவன்.

    ஆஹா... இப்போது எந்த கொம்பனாலும் இவனது நடவடிக்கைகளை ட்ரேஸ் செய்ய இயலாது.

    ’’ மங்கள்ம் இன்னொரு காபி...’’- உள்பக்கம் குரல் கொடுத்தவன் தீவிரமாக அந்த சிக்கல்களில் மூழ்கிப்போனான்.

    துடிப்புகள் தொடரும்...!

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 8

    ’’ நாற்பது சதவீதமா ...? ’’ - வாயைப் பிளந்தான் மாணிக்கம். ‘’ இது பத்தி ஐயாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கனும் விக்னேஷ் சார்..’’ - என்று பரிதாபமாக விழித்தான்.

    ‘’ அட கவலைப்படாதீங்க சார்... நான் சும்மா தமாஷுக்கு சொன்னேன். வேலை முடித்த பிறகு என் ஃபீஸ் என்ன என்பதையும் என்னென்ன வகையில் செலவினங்கள் என்பதையும் பில் அனுப்புவேன். அதை கொடுத்தால் போதும். கோடிக்கணக்கா வாங்கி உங்களைப்போல நெருப்பை வயித்தில் கட்டி அலையனுமா நான்..’’ - குறும்புடன் விக்னேஷ் கூறும் போது அவனைப் பெருமிதமாக விழுங்கிவிடுவதைப் போல பார்த்தாள் வசந்தி.

    ‘’ சரி சரி ... எனக்கு சில விவரங்கள் வேண்டுமே.. ‘’ - என்று மாணிக்கத்திடம் சீரியசான முகத்துடன் கேட்டான் விக்னேஷ்.

    ‘’ கேளுங்க சார்.. ‘’ - உண்மையில் மாணிக்கத்தின் மனதில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுவிட்டான் விக்னேஷ். இப்போது இருக்கும் நெருக்கடியில் பாதிக்குப் பாதி கிடைத்தாலே கூட சரியென்று சொல்லி இருபபார் ஆ ஆறுமுகம். இந்த நிலையில் முன்பே சொன்னபடி திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல தான் அவர்களின் நிலை இருந்தது.

    நினைத்து இருந்தால் போலீசின் உதவியோடும் சைபர் க்ரைம் போலீசார் உதவியோடும் செயலில் இறங்கி பிரச்சினையைத் தீர்த்து இருக்கலாம். ஆனால் இப்போது தேர்தல் நெருக்கத்தில் இருக்கும் நிலையில் போலீசார் இவருக்கு நன்றியுடன் உண்மையுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. மேலும் தேர்தலுக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஏற்கனவே இந்தியா முழுக்க கறுப்புப்பணத்திற்கு எதிரான முழ்க்கம்வேறு வலுப்பட்டு இருக்கும் நிலையில் இருப்பதை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலை.

    இத்தகைய இக்கட்டில் விக்னேஷ் கேட்ட தொகையைக் கொடுக்க தயாராக இருந்தார்கள் தான். இருப்பினும் விக்னேஷின் இந்த நேர்மையும் பேராசைப்படாத இயல்பும் மாணிக்கத்துக்கு இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று வியக்க வைத்தது.

    ’’ முதல்ல என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க... முதன்முதலில் இப்படி ஒரு தொகை ட்ரான்ஸ்ஃபர் செய்யபப்ட்டதை எப்போ கண்டு பிடிச்சீங்க...? இதுக்கும் முன் இப்படி நடந்து இருக்கா..? - விக்னேஷ்.

    ‘’ இல்லை சார். இன்னைக்கு காலையில் அமைச்சர் என்னை அழைத்து விவரம் சொன்னப்பதான் எனக்கும் தெரியும். ‘’ - மாணிக்கம்.

    ‘’ மொத்தம் எத்தனை கோடி கணக்கில் இருந்தது..? ’’ - விக்னேஷ்.

    இந்த கேள்விக்கு பதில்சொல்ல சற்று தயங்கினான் மாணிக்கம். அவன் கண்கள் ஒருமுறை வசந்தியைப் பார்த்துவிட்டு தாழ்ந்தன.

    ‘’ இதோ பாருங்க மாணிக்கம்.. டாக்டர் மற்றும் வக்கீல்கள்கிட்ட மாத்திரம் இல்லை. எங்களைப்போன்ற டிடெக்டிவ் கிட்டயும் எதையும் மறைக்கக்கூடாது. நான் முன்பே சொல்லிட்டேன். ரகசியம் காக்கப்படும்னு. நீங்க நம்பித்தான் ஆகனும். வேற வழியும் இல்லை. ‘’ - விக்னேஷின் வார்த்தைகள் திட்டவட்டமாக வந்தன.

    ’’ உண்மைதான் சார் ... மொத்தம் 3300 கோடிகள். ‘’ - தயக்கத்துடன் மெல்லிய குரலில் சொன்னான் மாணிக்கம்.

    ‘உய்ய்ய்ய்ய்’ - வியப்பான சீழ்க்கை ஒலி கிளம்பியது விக்னேஷிடமிருந்து.

    வசந்தியோ மயங்காத குறையாய் கண்கள் இடுங்க புன்னகைத்தாள்.

    ’’ ஓகே ஓகே... இந்த தொகைஅளவும் கணக்கு விவரங்களும் யாருக்கெல்லாம் தெரியும்..? - விக்னேஷ் தொடர்ந்து கேட்டான்.

    ’’ கண்டிப்பா எங்க ரெண்டு பேருக்குத்தான் தெரியும். ‘’ - மாணிக்கத்தின் கண்கள் தாழ்ந்தன.

    ‘’ கம் ஆன் மாணிக்கம் சார்... கண்டிப்பா நீங்க எதையோ மறைக்கிறீங்க.நீங்க அனுபவிப்பது யாரோ ஒரு கலைநுணுக்க நிபுணர் நிர்மாணித்த எழில் கூடத்தைத் தான். சொல்லுங்க ... அந்த டெக்னீஷியன் - அந்த மூனாவது ஆள் - யாரு..? எங்க இருக்கார்..? ‘’- விக்னேஷின் திறமை மாணிக்கம் சொல்லத்தயங்கிய விஷயத்தைச் சட்டென வெளிக்கொணர்ந்தது.

    நாம் லேசுப்பட்ட ஆள்கிட்ட வரலை. மிகச்சிறந்த மனோதத்துவ நிபுணர் கிட்ட வந்து இருக்கோம் என்பதை உணர்ந்த மாணிக்கத்துக்கு கண்டிப்பா இதைக் கண்டுபிடிச்சு துப்பு துலக்கத்தான் போகிறான் விக்னேஷ் என்பதை நொடியில் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டான்.

    ‘’’ ஆமாம் விக்னேஷ்.. ( ஓரளவு நட்புணர்வு வந்துவிட்டு இருந்தது. எனவே சாரைத் தவிர்த்தான் மாணிக்கம். ) நீலமேகம்னு ஒருத்தர். அவர் பன்னாட்டு வங்கிகளின் இண்டர்நேஷனல் ஏஜண்ட். அவர் சிங்கப்பூரில் ஒரு வங்கியில் பத்து வருடங்கள் பி ஆர் ஓ ஆக இருந்து விட்டு தமிழகம் வந்துவிட்டார். அவர் சில பல நிழலான அமைச்சர்களுக்கு வெளிநாட்டு வங்கிகளின் பி ஆர் ஓ ஆக இருந்து வந்தார். ..’’ - நிறுத்திய மாணிக்கம் ‘’ குடிக்க தண்ணீர் கிடைக்குமா..? ‘’- என்றான்.

    உடனே வசந்தி அடுத்த அறையில் இருந்த குட்டி ஃப்ரிட்ஜிலிருந்து குளிர்ந்த நீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

    குடித்து ஆசுவாசப்பட்டுக்கொண்ட மாணிக்கத்துக்கு அந்த ஏசி அறையிலும் வியர்த்தது.

    விக்னேஷ் வியக்கவில்லை. ஏனென்றால் இது போன்ற மல்டிக்ரோர்ஸ் விவகாரத்தில் மனம் பரபரத்ததிலும் வியர்த்ததிலும் வியப்பில்லை தானே..?

    தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் மாணிக்கம் தொடர்ந்தான்.

    ‘’ அவர் தான் அமைச்சர் ஆறுமுகத்துக்கு கார்ப்பரேட் அக்கவுண்ட் ஓபன் செய்து கிட்டத்தட்ட 18 நாட்கள் எங்கள் இருவருக்கும் ட்ரெயினிங் கொடுத்தார். கொடுக்கல் வாங்கல் ஹவாலா பணம் மாற்றல் முதலான அனைத்து நுணுக்கங்களும் கற்றுத்தந்தார்.அது நடந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறது.’’ - நிறுத்தினான் மாணிக்கம்.

    ‘’ ம்ம்ம் ... அப்படியானால் உங்கள் மூன்று பேருக்கும் இந்த கணக்கு தொடர்பான அனைத்து விவகாரங்களும் தெரியும் இல்லையா..? ‘’ - கேள்வியை கேட்டுவிட்டு மாணிக்கத்தின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான் விக்னேஷ்.

    ‘’ ஆமாம் விக்னேஷ்... இன்ஃபாக்ட் அவர்தான் வாய்ஸ் ரெகக்னிஷன் முறையில் பல லேயர் செக்யூரிட்டியுடன் கணக்கை ஆபரேட் செய்யவைத்தார். ‘’ - இப்போது ஓரளவுக்கு சகஜப்பட்டு விட்டிருந்தான் மாணிக்கம்.

    இவர்கள் உரையாடலில் எந்த ருசியும் காட்டாதது போல் சில ஃபைகளை திறந்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தாலும் அத்தனையையும் ஒரு தலை சிறந்த உளவாளியைப்போல கவனித்துக்கொண்டு இருந்தாள் வசந்தி.

    ’’ மிஸ்டர் மாணிக்கம்.. ஒருவேளை இந்த வேலையை அந்த நீலமேகம் செய்து இருக்கலாமில்லையா...? நீங்கள் சொன்னதை வைச்சுப் பார்க்கும் போது இந்த 200 கோடி சிங்கப்பூர் வங்கிக்கு மாற்றப்பட்டு இருக்கு. மேலும் மிகவும் சாதுரியமான முறையில் இந்த வேலை செய்து இருக்காங்க.. நீலமேகம் முன்பே சிங்கையில் இருந்ததைக் குறிப்பிட்டு இருக்கீங்க... அப்படி பார்க்கும் போது இது ரெண்டும் ரெண்டும் நாலு என்பது போல் பொருந்தலையா...? ‘’ - விக்னேஷ் இதைக் கூறி தானே அதை நம்பாதவன் போல லேசாக சிரித்தும் கொண்டான்.

    ’’ இல்லை விக்னேஷ்... கண்டிப்பாக இல்லை.என்னால் நிச்சயம் உறுதியாக கூற முடியும்.. ‘’ - மாணிக்கத்தின் குரலில் உறுதி இருந்தது.

    ‘’ எப்படி நிச்சயமாக உங்களால் சொல்ல முடியுது..?’’ - விக்னேஷின் முகத்தில் கேள்விக்குறி.

    ‘’ காரணம் ... வந்து ... நீலமேகம் இறந்துட்டார்... ‘’ - மாணிக்கத்தின் குரலில் பதட்டம் துலங்கியது.


    துடிப்புகள் தொடரும்..!

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    வித்யாசமான திருப்பத்துடன் ஒரு கதை அருமை தோழர் தொடருங்கள் ..நேரம் கிடக்கும் போது படிக்க முடியாததை தொடர்கிறேன்....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    சந்தடி சாக்குல ராகவரு கால வாரி விட்டுடீங்க.

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    கதை நல்ல விறு விறுப்புடன் போகிறது. தொடருங்கள் கலை
    சேகுவேரா
    கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
    வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)


  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    மிக்க நன்றி ஜெய், சாய் சரண் மற்றும் செகுவேரா..!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 9

    மாணிக்கத்தின் அந்த பதிலை எதிர்பார்த்திருந்த விக்னேஷுக்கு அது வியப்பளிக்கவில்லை தான். ஆனால் அவரகளின் உரையாடல்களைக் கண்டு கொள்ளாதது போல் கவனித்துக்கொண்டிருந்த வசந்திக்கு அது அதிர்ச்சியை அளித்தது. பிறந்ததுமுதல் பணப் பற்றாக்குறையைப் பார்த்திராத வசந்திக்கு பணத்தின் மீது பற்றும் இல்லை. அந்த மனநிலையில் இருக்கும் வசந்திக்கு பணத்திற்காக கொலையும் செய்துவிட்டார்களா பாவிகள் என்ற வருத்தம் அவள் முகத்தில் துல்லியமாகத் தெரிந்தது.

    ’’ கொன்றே விட்டீர்களா நீலமேகத்தை..? ‘’ - முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் விக்னேஷ் வினவினான்.

    ‘’ இல்லை விக்னேஷ்.. நாங்கள் கொல்லவில்லை. அவருக்கு மாரடைப்பு வந்தது.இயற்கையான மரணம் தான் ‘’ என்ற மாணிக்கம் நடந்ததை விரிவாகக் கூறலானான்.

    ‘’ நீலமேகம் எலலா அரசியல் வாதிகளுக்குமே நிழலான குருவாக இருந்து வந்தார். முறைகேடான முறையில் லைசன்ஷியேட் மற்றும் தொழிற்சாலை அனுமதி என்று பலவகைகளில் அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் கையூட்டுகள் அன்பளிப்புகள் அதீதமாக இருக்கும். அப்படிப்பட்ட பணத்தை - அதுவும் கோடிக்கணக்கான பணத்தை - இந்திய வங்கிகளிலோ அல்லது இந்திய சொத்துக்களிலோ முதலீடு செய்து வைத்தால் அரசியல் வாதிகளுக்குப் பெரும் பிரச்சினை வரும் என்பதால் பல வருடங்களாக இதற்கு என்ன வழி என்பதை யோசித்துக்கொண்டு இருந்த அரசியல் வாதிகளுக்கு நீலமேகம் போன்ற வெளி நாட்டு வங்கிகளின் ஏஜண்ட்கள் வரப்பிரசாதமாக அமைந்தனர். ’’ - இடையில் குறுக்கிடாமல் அமைதியாகக்கேட்டுக்கொண்டு இருந்தான் விக்னேஷ்.

    மாணிக்கம் தொடர்ந்தான்.

    ’’ இந்தியாவில் இது போன்ற ஏஜண்ட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்கள் பல மாநிலங்களில் பரவலாக இருக்கிறார்கள். இவர்கள் தோற்றத்தில் மிகச்சாதாரணமாக இருப்பார்கள். பெயருக்கு எந்த கம்பெனியிலாவது லீகல் அட்வைசர் அல்லது பொதுஜன தொடபாளர்களாக விளங்குவார்கள். ஏன் இந்தியாவில் ஒரு சில பத்திரிகை ஆசிரியர்கள் கூட இந்த வேலையைச் செய்து வருகிறார்கள்.’’ - சற்று நிறுத்தி விக்னேஷின் முகத்தைப்பார்த்து ‘’ தயவு செய்து அவங்க எல்லாம் யார் யாருன்னு கேட்டுடாதீங்க.. இது எல்லாம் டாப் சீக்ரெட். நான் இதை வெளியிட்டதாக சந்தேகம் வந்தாலும் என்னை தீர்த்துக்கட்டி விடுவார்கள். ’’- என்ற மாணிக்கத்தின் முகத்தில் மரண பயம் தெளிவாகத் தெரிந்தது.

    ‘’ இல்லை. கேட்கமாட்டேன். தொடருங்க மாணிக்கம். ‘’ - விக்னேஷ் ஊக்குவித்தான். அவனுக்கு இதெல்லாம் அதிக வியப்பைத் தரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. வியப்பின் உச்சிக்கு போனவள் வசந்தி மட்டும் தான்.

    மாணிக்கம் விவரிக்க விவரிக்க ஏற்கனவே சிவந்த அழகான வசந்தியின் முகம் வியப்பில் இன்னும் சிவந்து அவளது அழகை அதிகரிக்கச்செய்தது. இத்தனை சுவாரசியத்திலும் வசந்தியின் முகத்தில் மாறிமாறி வரும் அழகியல் மாற்றங்களைக் கவனிக்கத் தவறவில்லை விக்னேஷ்.

    இதை எல்லாம் கவனிக்காத மாணிக்கம் தொடர்ந்தான்.

    ‘’ அப்படிப்பட்ட எஜண்ட்களில் ஒருவர் தான் நீலமேகம். இவர் முன்பே பத்து வருடங்கள் சிங்கப்பூரில் இருந்த அனுபவம் இவருக்கு கை கொடுத்தது. ஸ்விஸ் வங்கிகளில் எலலாவற்றிலும் இவருக்கு பரிச்சயம் இருந்தாலும் இவர் அதிகம் டீல் செய்வது என்னவோ ஏபிஎஸ் பேங்க் தான். இவர் நினைத்தால் ஒரே நாளில் வங்கிக்கணக்கு துவக்கவும் உடனடி ட்ரான்சாக்சன் செய்து தரவும் இயலும்.

    எங்க மந்திரி ஆறுமுகம் இவரைப்பற்றி கேள்விப்பட்டதும் இவரை தன் வீட்டுக்கே வரவழைத்து இது சம்பந்தமான சந்தேகங்கள் கேட்டார். அவரது ஹை டெக் லேப்டாப்பிலேயே நீலமேகத்தை கணக்கு துவக்க வழி கேட்டார். இத்தனைக்கும் அமைச்சர் ஒரு முறை கூட ஸ்விட்சர்லாந்து போனது இல்லை. வீட்டிலிருந்தபடியே எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.பதினெட்டு நாட்கள் அமைச்சர் வீட்டுல தங்கி எல்லா வழிமுறைகளையும் சொல்லிக்கொடுத்தார்.

    ஒரு முறை கணக்கு துவங்குவது தான் கடினம். மேலும் அந்த அக்கவுண்ட்டிலிருந்து பணம் இன்னொரு பெனிஃபிசரிக்கு அனுப்புவதும் கடினம். நீலமேகம் அதில் சில சிக்கலான வாய்ஸ் கீ எண்ட்ரி செய்து வைத்தார். அதன்படி அமைச்சர் அல்லது நான் எங்கள் சொந்தக்குரலால் சில கோடிங்கு களைச் சொல்லி ட்ரான்சாக்ட் செய்ய வேண்டிய முறைப்படி அமைத்து தந்தார்.

    அதற்குப்பிறகு தாராளமாக பல லைசன்ஷியேட் கார்ப்போரேட் பர்மிட்கள் மூலம் கிடைத்த நூறு இருநூறு கோடிகள் எல்லாம் அமைச்சர்கணக்கில் போடப்பட்டு வந்தது.’’’ - கொஞ்சம் நிறுத்தி நிதானித்துக் கொண்டான் மாணிக்கம்.

    எல்லாவற்றியும் கவனமாகக் கேட்டுக்கொண்ட விக்னேஷ் .’’ அதெல்லாம் சரி ..நீலமேகம் எப்படி இறந்தார்..? ‘’ - என்று கேள்வி போட்டான்.

    ’’ இப்படி எல்லாம் நீலமேகம் செய்து தந்தாலும் ஆறுமுகம் அவரை நம்பவில்லை. எங்கே தனது ரகசியங்களை வெளியிட்டு விடுவாரோ என்று அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மறுத்தார். நீலமேகம் எவ்வளவொ சத்தியம் செய்தும் அவரை வெளியில் விட மறுத்தார். நானும் சொன்னேன் இது கிட்நாப்பிங் கேஸ் ஆகிடும் ஐயா... வேண்டாம் அவரை விட்டு விடுஙக்ள். அவர் அப்படி எதுவும் செய்ய நினைத்தால் அவரை நாம் கவனித்துக்கொள்ளலாம் என்று ஆசுவாசம் தந்த பிறகு வெளியில் விட சம்மதித்தார்.’’

    ‘’ இப்படி மிரட்டப்பட்டதால் நீலமேகம் மனதளவில் மருண்டு போய் ஆறுமுகம் ஐயா கொடுத்த இரண்டு கோடி ரூபாய் கேஷைக்கூட ( அவருக்கு ஃபீஸ் ) வாங்க மறுத்து தன் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு சென்றுவிட்டார். பிறகு அவரிடமிருந்து சில மாதங்கள் தகவலும் இல்லை. கடந்த மூன்று மாதங்கள்முன் சென்னைக்கு வந்து சென்றதாகவும் ஹார்ட் அட்டாக் வந்து சில நாட்களில் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும் செய்தி வந்தது. ஆனால் எங்க ஐயாமேல் பத்திரிகைகளின் சந்தேகங்கள் கறுப்புப்பண விவகாரங்கள் குறித்து செய்திகள் வெளி வந்த சமயம் என்பதால் அவரைப்போய் பார்க்க பயந்து நாங்கள் செல்லவில்லை. இதான் விக்னேஷ் நடந்தது. இதில் எந்த பொய்யும் நான் கூறவில்லை ’’ - என்று மாணிக்கம் கூறினான்.

    ‘’ சரி மாணிக்கம் .. எனக்கு நீங்க கண்டுபிடிச்ச டிரான்சாக்*ஷன் ரெஃபரென்ஸ் நம்பர் இதெல்லாம் கொஞ்சம் தர முடியுமா..? - விக்னேஷ் கேட்டுக்கொண்டு இருந்தபோது மாணிக்கத்தின் மொபைல் ஒலித்தது.

    ‘’ ம்ம்ம் சொல்லுங்கய்யா.. நான் விக்னேஷ் ஆபீசில் தான் பேசிக்கிட்டிருக்கேன்... என்னது ...? ஐயோ... இது எப்போ ஐயா...? அடக்கடவுளே...நீஙக் கவலைப்படாதீங்கய்யா.. உடல் நலம் கவனம்.. ‘’

    - பேசிமுடித்த மாணிக்கம் , ‘’ விக்னேஷ், இன்னொரு 250 கோடி ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்குதாம்... இம்முறை லண்டன் கணக்குக்கு .. ’’ - என்று பதட்டத்துடன் கூறினான்..!

    துடிப்புகள் தொடரும்..!

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    250 கோடி பணம் ட்ரான்ஸ்ஃபர் ஆகி மூன்று நாட்கள் ஆகிடுச்சே... விக்னேஷ் என்ன பண்றாரு?

  10. #22
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்பவும் மெனக்கெட்டு பல விஷயங்களை சேகரித்து எழுதுகிறீர்கள். மிகவும் சுவாரசியமாய் செல்லும் கதையின் அடுத்தடுத்த பாகங்களைப் படிக்கும் ஆவல் கூடுவதை தவிர்க்க முடியவில்லை கலை. தொடருங்கள்....தொடர்கிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    தாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன். விரைவில் தினம் ஒரு அத்தியாயமாக பதிந்துவிடுகிறேன்.!

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 10

    ன்னும் 250 கோடி கணக்கிலிருந்து ஸ்வாஹா ஆனதைக்கேட்டு விக்னேஷ் அதிக வியப்படையவில்லை. மாணிக்கம் தான் தன் குடியே மூழ்கினதைப்போல தலைகவிழ்ந்து கிடந்தான்.

    ‘’ என்ன மாணிக்கம் சார்...? நீங்க இன்னும் உங்க அக்கவுண்ட்டை லாக் செய்யலையா.? அல்லது பாஸ்வேர்டை மாத்தலையா..? சேகர் சுப்ரமணியம்னு எனக்கு தெரிந்த பேங்கர் எனக்கு சொல்லி இருக்கார். மாதம் ஒருமுறை கணக்கை மாற்றி லாகின் மற்றும் ட்ரான்சாக்சன் பாஸ்வேர்டை மாற்றனும் அடிக்கடி சொல்லுவார். நீங்க ஏன் அதை செய்யலை...? ‘’ - விக்ரம் அமைதியாகக் கேட்டான்.

    ‘’ முயற்சி செய்தோமுங்க... ஐபி லாக் செய்யப்பட்டு இருக்கு. அக்செஸ் மட்டும் ஆகுது. ஆனா பாஸ்வேர்ட் சேஞ்ச் ஆப்ஷன் டிசேபிள் செய்யப்பட்டு இருக்கு. நாங்க எவ்வளவு முயற்சி செய்தும் எங்க இன்னொரு பிரைமரி அக்கவுண்ட்டுக்கு இந்த அமௌண்ட்டை ட்ரான்ஃபர் செய்ய முடியவே இல்லை. ப்யூர் ஹாக்கிங் இது. ‘’ - மாணிக்கம் சோர்ந்த முகத்துடன் நிராசையுடன் சொன்னான்.

    ‘’ என்னது ..? பிரைமரி அக்கவுண்ட்டா...? அது என்ன ...? விளக்கமா சொல்லுங்க... ‘’ - முதன்முறையாக தனது சிமிழ் போன்ற சிவந்த உதடுகளைத் திறந்து வசந்தி கேட்டாள்.

    மாணிக்கம் வசந்தியை ஒரு முறை பார்த்துவிட்டு சொன்னான்.

    ‘’ பொதுவா ஸ்விஸ்ல மொத்தம் 400 க்கும் மேல வங்கிகள் இருந்தாலும் ஒரு சில வங்கிகள் தான் மிகப்பெரியவை. உதாரணத்துக்கு யூபிஎஸ் ( யூனியன் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லாண்ட் ) மற்றும் சி பி எஸ் (கிரெடிட் ஸ்யூஸ்ஸெ க்ரூப்) இந்த ரெண்டு வங்கிதான் மிகப்பெரியது. பொதுவா இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அண்டர்வேர்ல்ட் டான்கள் அனைவரும் இந்த இரண்டில் தான் பெரும்பாலும் தங்கள் கணக்கை வைத்து இருப்பாங்க.நம்பர்ட் அக்கவுண்ட் அப்படின்னு சொல்லுவாங்க.. அக்செஸ் நம்பருக்கு அவங்க ஒரு கிலோ சுத்த தங்கத்திலானான அக்செஸ் கீ தருவாங்க.. அப்படி ஓபன் செய்பவங்க பிரைமரி மற்றும் சப் அக்கவுண்ட் வைச்சுக்கலாம். எப்போது வேணும்னாலும் தங்கள் கணக்கில் தொகையை மாற்றிக் கொள்ளலாம். பாதுகாப்பு கருதி இந்த வசதி தந்து இருக்காங்க. ‘’ - மாணிக்கம் கொஞ்சம் நிறுத்திவிட்டு தன் பர்சில் வைத்திருந்த சிறிய புகைப்படம் ஒன்றைக் காட்டினான்.



    அதைக்கண்டதும் வசந்தியின் முகம் வியப்பால் மலர்ந்து இன்னும் அழகு பெற்றது.

    விக்னேஷ் அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் மாணிக்கத்திடம் கொடுத்தான்..

    ‘’ இன்னைக்கு காலை அமைச்சர் அந்த ட்ரான்சாக்சனைக் கண்டு பிடிச்சதும் என்னிடம் அழைத்துக் காட்டியதும் நாங்க முதலில் செய்ய முயன்றது அக்கவுண்ட் லாக் தான். ஆனா அதை லாக் செய்ய முடியாதபடியும் பாஸ்வேர்ட் மாற்றும் வாய்ப்பில்லாத படியும் முடக்கப்பட்டு இருக்கு. ஆனா ஆச்சரியம் என்ன என்றால் அக்சேஸ் கோட் மற்றும் பாதுப்பாப்பு சமாச்சாரங்கள் எல்லாமே மாற்றப்படவே இல்லை.இதனால் ரெண்டு பிரச்சினை எழும்..’’ - என்று கூறிவிட்டு விக்னேஷின் முகத்தைப் பார்த்தான் மாணிக்கம்.

    மேல சொல்லுங்க என்று சைகையால் காட்டிய விக்னேஷ் லேசாக கண்களை இடுக்கிக்கொண்டு யோசித்தான். அவன் அப்படி அரைக்கண் மூடினால் பிறருக்கு தூங்குவது போல் தோன்றினாலும் அதன் உண்மையான பொருள் வசந்தி மட்டுமே அறிவாள். தீவிரமாக சிந்திக்கும் போது விக்னேஷின் கண்கள் இடுங்கி அரைத்தூக்கம் போல் தென்படும்.

    இதை எல்லாம் அறியாத மாணிக்கம் தொடர்ந்தான்.

    ‘’ முதல் பிரச்சினை என்ன என்றால் பாஸ்வேர்ட் மாற்றும் போது சிறிய தவறுகள் கூட கணக்கை முடக்கிவிடும் ஆபத்து உள்ளது. அதனால் இதைக் கையாள்பவன் மாற்றாமல் இருக்கிறான். அதே சமயம் நாங்க மாத்திடுவோம்னு நினைச்சு அந்த ஆப்ஷனை டிசேபிள் செய்து இருக்கான். இதை முதல் அக்செஸ் போது செய்து இருக்கிறான். அதனால் எங்களால் அதை மீண்டும் எனேபிள் செய்ய முடியவில்லை.

    இரண்டாவது பிரச்சினை என்ன என்றால் கணக்கின் பாஸ்வேர்ட் மாற்றாமல் நாங்கள் பேங்குக்கு புகார் செய்தாலும் அதை வங்கி ஏற்காது. ஏன்னா எங்களுக்கு முதல் இன்ஸ்ட்ரக்*ஷன் என்னன்னா எந்த நெருக்கடியிலும் அக்செஸ் கோடை மாற்றிவிடனும் என்பது தான். அது செய்யாமல் இழப்பிற்கு வங்கியின் உதவி நாடினால் பயன் எதுவும் இல்லை.

    இதை எல்லாம் நல்லா தெரிஞ்சு வைச்சு இருக்கும் கில்லாடி தான் இதை செய்கிறான்.’’ - என்று முடித்தான் மாணிக்கம்.

    ‘’ செய்கிறாள் என்று கூட எடுக்கலாம் இல்லையா ‘’ - புன்னகைத்தான் விக்னேஷ்.

    ‘’ என்ன சொல்றீங்க விக்னேஷ்..? ‘’ - பீதியில் முகம் வெளுத்தது மாணிக்கத்துக்கு.

    ‘’ பயப்படாதீங்க .. பாசிபிளிட்டியைச் சொன்னேன் ’’ - ஆசுவாசம் அளித்தான் விக்னேஷ்.

    ‘’ இனி என்ன செய்யலாம் விக்னேஷ்... நீங்க தான் இதை எபப்டியாவது சால்வ் செய்யனும்... ‘’ - எழுந்து கெஞ்சாத குறையாக விக்னேஷின் கைகளைப் பிடித்து வேண்டுகோள் விடுத்தான் மாணிக்கம்.

    ’’ மாணிக்கம் ஒரு விஷயம் கவனிச்சீங்களா...? இந்த வேலை செய்பவன் நிதானமாக ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டுக்கு அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் செய்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கிறான். ஆனால் எல்லா பணமும் ஒரு கணக்குக்கு போகாமல் வெவ்வேறு அக்கவுண்ட்டுக்கு மாற்றுவது ஏன்..? அப்படியானால் அவனுக்கு எத்தனை நாட்டில் வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்..? இது ஒரு வேளை தீவிர வாதிகள் வேலையாகக் கூட இருக்கலாம். ஒரு மிகப்பெரிய கும்பலின் வேலையாகவும் இருக்க வாய்ப்பு இருக்கு. மேலும் உங்க ஒருத்தர் கணக்கிலிருந்து தான் எடுக்கிறான் என்றும் நிச்சயமாகக் கூற முடியாது....ம்ம்ம்... நான் சில வேலைகளை முடித்து இன்று மாலை 6 மணி சுமாருக்கு அமைச்சர் வீட்டுக்கு வரேன். எனக்கு அந்த லேப்டாப்பைப் பார்க்கனும்.சில விவரங்கள் சேகரிக்கனும்.. அதுக்கும் முன் நீலமேகம் முகவரி கொடுத்துட்டு போங்க நான் உங்களை சந்திச்சதும் இன்றிரவே நீலமேகம் ஊரான கும்பகோணம் போகிறேன்.’’ - சந்திப்பு முடிந்தது என்று சொன்னது போல எழுந்தான் விக்னேஷ்.

    ’’ அதுக்குள் இன்னொரு முறை பணம் எடுத்தான்னா...? - மாணிக்கத்தின் நியாயமான கவலை ( சுப்ரமணியம் சேகரின் கவலையும் கூடத்தான் . ) அவனைப் படர்ந்தது

    ‘’ பயப்படாதீங்க... 24 மணி நேரத்துல ஸ்விஸ் பேங்குல இருந்து இரண்டு ட்ரான்சாக்*ஷனுக்கு மேல் செய்ய இயலாது. சிறப்பு அனுமதி பெற்றுஇருந்தால் ஒழிய.. இது உங்களுக்கு தெரியாதா ...? ‘’ - விக்னேஷ் கேள்விக்குறியுடன் மாணிக்கத்தைப் பார்த்தான்.

    ‘’ தெரியும் விக்னேஷ்... ஆனா... ஐயாக்கு அந்த அனுமதி உண்டு .. ‘’ - கவலையில் அவன் முகம் பொலிவிழந்தது.

    ’’அப்படின்னா இறைவனை வேண்டிக்கோங்க... நான் மந்திரவாதி இல்லை. குறைந்த பட்சம் எனக்கு 24 மணி நேரம் அவசியம் ..'' என்று கூறி அவனுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு ..வசந்தியிடம் ‘’’ வசந்தி லேப்டாப்பை ஆன் செய்து வை. இதோ வரேன் என்று கூறிவிட்டு வெளியில் வந்து மாணிக்கம் சென்ற காரின் வழியை கவனித்தான். அவன் முகம் சந்தேகத்தால் இறுகியது.

    துடிப்புகள் தொடரும்..!

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •