உயிரில்லா மெய்யாய்
உணர்வின்றி தவித்திருக்க
உயிர் தந்து, உளம் வென்றாய்.
உணர்வதனைத் தந்து நீ
உயிர்ப்பித்தாய் மெய்யை..
உயிர்ப்பித்த மெய்யை
உணவின்றி வாட்டி, உளம்
வென்ற உணர்வைக் கொண்டே
உயிர் துறக்கச் செய்வாயோ??
அன்றி, உளம் மகிழ, என்
உணர்வுக்கு உயிர் தந்து
என் மெய்க்கு மெய்யான
உயிர் தந்து, உயிர் மெய்யாய்
உயிர்த்திருக்கச் செய்வாயோ??
Bookmarks