Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: நாக்கு!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    நாக்கு!

    நாக்கைப் பற்றிக் கேவலமாக நாலுபேர் பேசினால் பேசட்டும்
    நாக்கைப் பற்றி ஏளனமாக நாலுபேர் ஏசினால் ஏசட்டும்
    அதற்காக
    நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகவா முடியும்?

    நாக்கிலே நரம்பில்லாமல் பேசுவோரைக் கேட்கிறேன்
    அப்பர் நாவுக்கரசர் ஆனதும்
    அனுமன் சொல்லின் செல்வன் ஆனதும்
    நாக்கினால் தான் என்பதை இந்த நாடறியும்.

    அண்ணாவின் நாக்குதான் அழகு தமிழை அள்ளிக் கொடுத்தது
    திரு.வி.க.வின் நாக்குதான் தூய தமிழை சொல்லிக் கொடுத்தது.
    வாரியாரின் நாக்குதான் பக்திச்சுவையை வாரி வழங்கியது.
    பாரிலே நாக்கினால்தான் பலபேர் புகழ் பெற்றார்.

    நாக்கின் நீளமோ நான்கு அங்குலம்தான்
    மருமகளுக்கு நாக்கு நீளம் என்று மாமியார் சொல்வதும்
    மாமியாருக்கு நாக்கு நீளம் என்று மருமகள் சொல்வதும்
    புரியாது பேசுகின்ற புன்மொழிகள் அன்றோ!

    நாக்கு! அதை
    ஆளத் தெரிந்தோர்க்கு அற்புதமான ஆயுதம்
    ஆயிரம் பீரங்கிகளின் வலிமை கொண்டது.
    பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கும்
    மேடையில் முழங்கும் அரசியல் வாதிக்கும்
    கச்சேரி செய்கின்ற பாடகர் தமக்கும்
    வழக்காடு மன்றத்தில் வக்கீல் களுக்கும்
    நாக்கு இல்லையென்றால்
    நாறிப்போகும் பிழைப்பு!

    நாக்கிலே சரஸ்வதி வாழ்வதும்
    நாக்கிலே சனி வாழ்வதும்
    நாக்கின் குற்றமா? அல்லது நம் குற்றமா?
    நாக்கு!
    வாயெனும் கோவிலில் வாழுகின்ற தெய்வம்
    வழிபடுவோர் தமக்கு வரமளிக்கும் தெய்வம்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமையான கவிதை.

    மூளை என்ன சொல்கிறதோ அதைத்தானே நாக்கு செய்கிறது. ஆனால் எல்லாவற்றையும் செய்துவிட்டு மூளை சிவனே என்று இருந்துவிடுகிறது. ஆனால் நாக்குதான் படாதபாடு படுகிறது பாவம்.

    இன்னும் நிறைய கொடுங்கள்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    வரம் கொடுக்கும் சாமியோ
    உயிர் எடுக்கும் கொடும்வாளோ
    இதுதான் நான் என்று
    நீதான் தீர்மானிக்கிறாய்
    நான் அல்ல

    இப்படிக்கு உன் நாக்கு - ன்னு ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சான்வி,ஆரென் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    இருந்தாலும் நாக்கின் ஒரு முகம் பார்த்து புலம்பி இருக்கிறீர்கள். அதன் சுவை அறியும் திறன் வைத்து எத்தனை பிரச்சனை வருகிறது. அதற்கும் ஒரு கவி தாருங்கள் கவிஞரே....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #7
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    //நாக்கின் நீளமோ நான்கு அங்குலம்தான்
    மருமகளுக்கு நாக்கு நீளம் என்று மாமியார் சொல்வதும்
    மாமியாருக்கு நாக்கு நீளம் என்று மருமகள் சொல்வதும்
    புரியாது பேசுகின்ற புன்மொழிகள் அன்றோ!//
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Jun 2011
    Posts
    250
    Post Thanks / Like
    iCash Credits
    10,653
    Downloads
    0
    Uploads
    0
    நாக்கின் போக்கே அலாதி!
    சாக்குப் பல சொல்லும்;
    அக்கம் பககம் பாக்காது.
    சக்கம்மா! அதை காப்பாத்து!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    இரவி,நிவாஸ்,ஜார்ஜ் மற்றும் இ.பூ. அவர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நல்மனத்தின் உரைகல்லாம் நாக்கு பற்றி நல்லதோர் கவிதை.

    கல் தடுக்கிவிட்டது என்றேன் நான். நீயல்லவா உன் காலால் கல்லை இடறினாய் என்று திருத்தம் செய்து என் நா உரைத்த தவற்றை நயமாய் உணர்த்தியுள்ளீர்கள். நன்றியும் பாராட்டும் ஐயா.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கீதம் அவர்களுக்கு!
    " நாக்கு " பற்றி நீங்கள் பார்த்த கோணம் வேறு; நான் பார்த்த கோணம் வேறு. உங்கள் பணியை நீங்கள் சிறப்பாகவே செய்துள்ளீர்கள். உங்கள் கவிதைக்கு மறுப்புக் கவிதை எழுதியதாக எண்ணவேண்டாம். நாக்கு பற்றி நல்ல விதமாகவும் எழுதலாம் என்பதற்காகவே எழுதினேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    ஒரு வாக்கு வெல்லும் ஒரு வாக்கு கொள்ளும்
    தீயினால் சுட்ட புண் உல் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
    யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
    சொல்லிளுக்கு பட்டு

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •