ஒரு மனிதன் கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான். கடவுள் அவன் முன்பு தோன்றி, " மகனே! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் தருகிறேன்" என்று சொன்னார்.
அதற்கு அவன்," ஐயா! மனிதர்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் என்பது தங்களுக்கு எவ்வளவு நேரத்திற்குச் சமம்?"
" ஒரு வினாடிக்குச் சமம்" என்று கடவுள் பதில் சொன்னார்.
" ஐயா! மனிதர்களுக்கு கோடி ருபாய் என்பது தங்களுக்கு எவ்வளவு செல்வத்திற்குச் சமம்?"
" ஒரு பைசாவுக்குச் சமம்" என்று கடவுள் பதில் சொன்னார்.
உடனே அவன், " ஐயா! எனக்கு ஒரு பைசா தாருங்கள் " என்று கேட்டான்.
அதற்குக் கடவுள், " மகனே! ஒரு வினாடி காத்திரு!" என்று சொன்னார்.
நன்றி: இந்து நாளிதழ்
Bookmarks