Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: உறைக்குள்ளிருந்தே உயிர்மாய்க்கும் கத்தி!

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    உறைக்குள்ளிருந்தே உயிர்மாய்க்கும் கத்தி!

    சுவாதீனத்துடனிருங்கள்!
    எந்நேரமும் எதிர்கொள்ளநேரிடும்
    வலியின் சுவையறிந்த நாவுகளை!

    வன்சொற்கள் விதைத்து
    ரணங்களை அறுக்கும் கலையில்
    கைதேர்ந்த அவை,
    பதுக்கும் வலிகளையும் கண்டறிந்து
    பரிகசிக்கும் வல்லமை பெற்றவை!

    மேலாடையில் ஊர்ந்துசெல்லும்
    சிற்றெறும்பைத் தட்டிவிடுவதுபோல்
    அசட்டையாய் இருக்கக்கூடும் எனினும்,
    குத்தீட்டிவெல்லும் கொடுஞ்சொற்கள் ஏந்தி
    உதட்டு உறைக்குள் பதுங்கி
    உங்கள் பலவீனத்தைப் பார்த்திருக்கும் அவற்றிடம்
    உங்கள் பாசாங்கு பலிக்காமல் போகலாம்.

    பாராமுகமாய் ஒதுங்கும்போதும்
    பாய்ந்திழுத்துப் பேசி வளைத்து
    வன்மப்புன்னகையினுள் வெஞ்சினம் மறைத்து
    விடைபெறும் தருணம்
    விருட்டென்று குரல்வளையில் செருகப்படும்
    கூரிய சொற்களின் வீரியம் குறைக்கக்கூடும்,
    மற்றுமொரு தருணம்
    முனைப்புடன் தாக்கும் சொற்கள்…
    முன்னிலும் கூர்தீட்டப்பட்டும்
    முனைகளில் நச்சு தோய்க்கப்பட்டும்!

    சுதாரித்துக்கொள்ளுங்கள்!
    வக்கணை பேசும் இந்நாவிலும்
    வஞ்சனை கொஞ்சம் இருக்கலாம்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    ஒரு நாணத்திற்கு இரண்டு முகங்கள்

    எது உண்மையான முகம் என்று புலப்படுவதே இல்லை

    தீயவைக்குள் உள்ள நல்லெண்ணம் என்றும் பாதிப்பதில்லை
    நன்மைபோல் நடிக்கும் தீயஎண்ணம் என்றும்
    பாதிக்காமல் விடுவதில்லை

    பாதிப்புகளின் அனுபவம்
    சொல்லம்புகளின் வலி

    கவிதை வரிகளில் உணரமுடிகிறது
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    சகிப்புத்தன்மையும், மௌனமும் தான் நம்மிடம் இருக்கும் துருப்பிடித்த கேடயங்கள்.......அவற்றை உரிய விதத்தில் கையாண்டால் ....பயன் தெரியலாம்...இருந்தாலும் அதற்குள், தீச்சொற்களெனும் அமிலம் நம் மனதை சல்லடையாக்கிவிட்டிருக்கும்..........குறைந்தபட்சம் நாமாவது அந்தக் கொடிய ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளலாமே...

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Smile

    வார்த்தைகள் என்னும் வாள் வீச்சில்
    உயிர் அற்றுப் போய் விழுந்த முகங்கள்
    தனித்து போன நாக்குடன் பேச
    எவர் முகமும் இல்லை அங்கே
    தனிமை கொடுமைகள் அறிவுறுத்த
    தயவு செய்யச்சொல்லி
    எத்தனை முறை மன்னிப்புக் கேட்டும்
    பாரா முகமாய் போனது முகங்கள்
    நாவால் நல்லது கூறாமல்
    வார்த்தைகளால் பொசுக்கும் போது
    யார் இருப்பார் இவர் அருகே ....

    அருமையான சிந்தனை அக்கா ....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Jun 2011
    Posts
    250
    Post Thanks / Like
    iCash Credits
    10,653
    Downloads
    0
    Uploads
    0
    சுவாதீனத்துடனிருங்கள்! சுதாரித்துக்கொள்ளுங்கள்! இவை வஞ்சனையில்லா விழ்ப்புணர்ச்ச்சி எச்சரிக்கைகள்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    ஒருமுறைக்கு இருமுறை படித்தேன்.. நாவினை காக்க மறந்த மனிதனால் காயம் பட்ட மனதின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் கவிதை வரிகள் அற்புதம் அக்கா .....

    அக்கா தவறாக நினைக்காவிடில் எனக்கு தோன்றிய ஒரு கருத்தை கூறுகிறேன் ..

    மேலாடையில் ஊர்ந்துசெல்லும்
    சிற்றெறும்பைத் தட்டிவிடுவதுபோல்
    அசட்டையாய் இருக்கக்கூடும் எனினும்,

    ஆனால் இந்த கவிதையின் இந்த வரிகள் மட்டும் ஏனோ இக்கவிதையுடன் பொருந்துவது போல் தெரியவில்லை ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    ஆயுதமாயிருந்தால் போரிடலாம்
    சிலருக்கு அதுவேதான் கேடயம்,
    சிலருக்கு மனப்புண்ணின் அரிப்பை
    சொரிந்து சுகமளிக்கும் கை,
    சிலருக்கு ஆற்றாமையை தீர்க்கும் அருமருந்து,
    சிலருக்கு பொறாமையைத் தணிக்கும் நீர்,
    சிலருக்கு அதுவே தீராத நோய்.
    எப்போதும் தாக்கப்படலாம் என்றே
    எதிர்பார்த்து இருங்கள்
    தாக்குதல் இல்லையென்றால்
    அதற்கான சந்தர்ப்பத்தை அளியுங்கள்
    பாவம் பரிதாபத்துக்குரியவர்கள்.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
    நிலைகெட்டுப்போன நயவஞ்சகனின் நாக்குதான் அது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அக்கா..

    இதைப் படியுங்களேன்..
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14419

    இந்தக் கவிதைக்கும் அங்கிருக்கும் பின்னூட்டங்கள் மிக மிகப் பொருத்தமாக இருக்கும்..

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    ஒரு நாணயத்திற்கு இரண்டு முகங்கள்

    எது உண்மையான முகம் என்று புலப்படுவதே இல்லை

    தீயவைக்குள் உள்ள நல்லெண்ணம் என்றும் பாதிப்பதில்லை
    நன்மைபோல் நடிக்கும் தீயஎண்ணம் என்றும்
    பாதிக்காமல் விடுவதில்லை

    பாதிப்புகளின் அனுபவம்
    சொல்லம்புகளின் வலி

    கவிதை வரிகளில் உணரமுடிகிறது
    அந்த விநோதக் கத்திக்குத் தப்பியவர் யார்? உயிர்மாய்க்காவிடினும் உரசியாவது சென்றிருக்கும் எவரையும் எப்போதேனும்! பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஜானகி View Post
    சகிப்புத்தன்மையும், மௌனமும் தான் நம்மிடம் இருக்கும் துருப்பிடித்த கேடயங்கள்.......அவற்றை உரிய விதத்தில் கையாண்டால் ....பயன் தெரியலாம்...இருந்தாலும் அதற்குள், தீச்சொற்களெனும் அமிலம் நம் மனதை சல்லடையாக்கிவிட்டிருக்கும்..........குறைந்தபட்சம் நாமாவது அந்தக் கொடிய ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளலாமே...
    ஆயுதம் பயன்படுத்தாமல் வெறும் கேடயம் சுமந்தே எதிரிகளைக் களைப்படையச் செய்யலாம் என்கிறீர்கள். பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அம்மா.

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Ravee View Post
    வார்த்தைகள் என்னும் வாள் வீச்சில்
    உயிர் அற்றுப் போய் விழுந்த முகங்கள்
    தனித்து போன நாக்குடன் பேச
    எவர் முகமும் இல்லை அங்கே
    தனிமை கொடுமைகள் அறிவுறுத்த
    தயவு செய்யச்சொல்லி
    எத்தனை முறை மன்னிப்புக் கேட்டும்
    பாரா முகமாய் போனது முகங்கள்
    நாவால் நல்லது கூறாமல்
    வார்த்தைகளால் பொசுக்கும் போது
    யார் இருப்பார் இவர் அருகே ....

    அருமையான சிந்தனை அக்கா ....
    பாராமுகமாய் ஒதுங்கும்போதும்
    பாய்ந்திழுத்துப் பேசி வளைத்து


    என்ற வரிகள் இவர்களுக்காகவே சொல்லப்பட்டது ரவி. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதாமே... இவர்களின் நிலையும் அப்படித்தானோ? பின்னூட்டத்துக்கு நன்றி ரவி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •