Results 1 to 5 of 5

Thread: வசந்தம் தேடும் விழிகள்...

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2008
    Location
    tamilnadu
    Age
    41
    Posts
    98
    Post Thanks / Like
    iCash Credits
    28,721
    Downloads
    9
    Uploads
    0

    வசந்தம் தேடும் விழிகள்...

    அந்த
    தெருவெங்கும்
    பட்டாம்பூசிகள்
    விற்கப்படுகிறது...

    அழகழகாய்
    நிறங்கள்..,
    புதுப்புதிதாய்
    ஓவியங்கள்..,
    மெல்லிய
    படபடப்பின்
    கீதங்கள்....

    சூழலையே
    சொர்கமாக்கியவை அவை..,

    அவன் ஏனோ
    கோபப்பட்டான்,
    விற்றுக்கொண்டிருந்த
    குட்டிப்பயல்களை
    திட்டினான்...
    அவைகளை
    திறந்துவிட்டான்,,,
    அவர்களை
    விரட்டிவிட்டான்...

    சாலையோர
    வியாபார கூவல்கள்..,
    சலசலப்பாய்
    மக்கள் சத்தம்..,
    வாகன
    கலவை சத்தம்..,
    காற்றில் ஓடும்
    குப்பைக்கூட்டம்..,

    பட்டாம்பூச்சிகள்
    பத்தடிக்குமேல்
    பறந்துவிட்டன..,

    நான்
    ஏதோ நினைவுகளில்
    அவளின் வரவுக்காக
    தெருக்கம்பத்தில்
    சாய்ந்தபடி
    காத்துக்கிடக்கிறேன்...,

    - குளிர்தழல்
    "உன்னை விட திறமைசாலி யாரும் இல்லை"எனும்போது உன்னை விட புத்திசாலிகள் நிச்சயம் உண்டு.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஏதோ நினைவுகளில் ஆழ்ந்திருந்த மனம் சுற்றுப்புறச் சூழலைத் துல்லியமாய்ப் படம் பிடிக்க இயலுமோ? கொஞ்சம் முரண்.

    கடைசி பத்தி கவிதையோடு பொருந்தாமற்போனது போலொரு உணர்வு. கவியின் இருப்பு, சூழலுக்குப் பொருந்தாமற் போனதைப்போல்!

    மறைபொருள் புரிந்தால் இன்னும் ரசிக்கமுடியும்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    சொல்லவந்த கருத்தை சரியாக புரிந்துகொள்ள இயலவில்லை என்றாலும்

    கவிதை தொகுப்பில் ஒரு வித்தியாசம்காண முடிகிறது

    பாராட்டுகள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2008
    Location
    tamilnadu
    Age
    41
    Posts
    98
    Post Thanks / Like
    iCash Credits
    28,721
    Downloads
    9
    Uploads
    0
    கீதம் சொல்வது உண்மைதான்... நிழற்படம் போல சொன்னால் எதிர்பொருளும் நாமும் மட்டுமே களத்தில்... திரைக்கதை போல முயற்சித்தேன்,,, இன்னமும் தெளிவாய் சொல்லவேண்டுமென புரிந்துகொள்கிறேன்... மீண்டும் முயற்சிக்கிறேன் ஒரு மூன்றாம் பரிமாண நிகழ்வுடன் விரைவில்... இது சோதனை முயற்சி என கொள்ளலாம்... இருவருக்கும் நன்றி,,,,
    "உன்னை விட திறமைசாலி யாரும் இல்லை"எனும்போது உன்னை விட புத்திசாலிகள் நிச்சயம் உண்டு.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    பொருந்தா களத்தில் ஒரு மாறுபட்ட கவிதை ..பாராட்டுகள் குளிர்தழல் அவர்களே உங்கள் மாறுபட்ட முயற்சிக்கு...தொடருங்கள் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •