சான்வி
உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்
சான்வி
உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்
சரியாச் சொன்னீங்க.. ரொம்ப நாளைக்கு முன்னால சொன்ன விஷயத்தை ஞாபகப்படுத்தினீங்க
http://www.tamilmantram.com/vb/showt...477#post500477
http://www.tamilmantram.com/vb/showt...%BF#post354222
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தெரியாத கதையை யார் வேண்டுமானாலும் கற்பனை என எழுதிவிடலாம். தெரிந்த, அறிந்த விஷயங்களை எழுதுகையில் தேடலும் அதனால் வரும் சிரமமும் சற்றே அதிகமாக இருக்கும்.
எழுத்தின் கரு, என் மனதின் குரு என்பதால், சிரமமும் சற்று அதிகம்தான். ஆயினும், அந்த சிரமங்கள் எல்லாம் ஆதவனைக் கண்ட பணியாய் உருகித்தான் போயிற்று உங்கள் பின்னூட்டம் கண்டு.
இது போன்ற பின்னூட்டங்கள் மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் ஊட்டங்கள்.
இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் அமரன்
சான்வி
உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்
சான்வி
உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்
பகுதி எட்டு : துரோணர்
சண்டை அப்போதே நடந்திருந்தால், நமக்கும் ஒரு முடிவு தெரிந்திருக்கும், வில் வித்தையில் சிறந்தவர் யார் என்று. ஆனால் அது அப்போது நடக்கவில்லை.
கிருபராலும், துரோணராலும் அது தடுக்கப்பட்டது.
யார் இந்த துரோணர்??
இவர் பாரத்துவாச (பரத்வாஜ) முனிவரின் புதல்வர். இவருடைய மனைவி சதாநந்தரின் மகள் மற்றும் கிருபாச்சாரியாரின் சகோதரி கிருபை. அசுவத்தாமன் இவர்களின் மகன் ஆவான்.
துருபதனும், துரோணரும், துரோணரின் தந்தை பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தில் குருகுலத்தில் ஒன்றாய் வித்தை கற்றவர்கள். பால்ய காலத்து சிநேகிதர்கள். பயிற்சிக் காலத்தில் ஒரு நாள் காட்டில் மிக ஆபத்தான நிலையில் இருந்து, துருபதனை துரோணர் தன் உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றுகிறார்.
அந்த நன்றி உணர்வில், துருபதன், என் நாட்டில் பாதியை உனக்கு தருகிறேன் என்கிறார். அரசாட்சி அந்தணர்க்கு உரியது அல்ல என மறுத்துவிட்டு, நட்பை மட்டுமே வேண்டுகிறார்.
துருபதன், குருகுலம் முடிந்து நாடாள சென்று விட, இவரோ இங்கே, கிருபையை மணந்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
பாஞ்சாலத்தில் பெரும் பஞ்சம் வருகிறது. தனது மகன் அசுவத்தாமனுக்கு பாலுக்கு, ஒரு பசுவை தானம் பெற வேண்டி, தன் பால்ய சிநேகிதனான, துருபதனை சந்திக்கச் சென்றார்.
பாதி ராஜ்ஜியத்தை தருவதாக தான் தந்த வாக்குறுதியை மனதில் நினைத்து, அதற்காய் துரோணர் வந்திருப்பதாக எண்ணி துருபதன், துரோணரை அவமானப்படுத்தி, வெளியே அனுப்பி விடுகிறார்.
உணர்ச்சியின் கொந்தளிப்பில் அப்போது துரோணாச்சாரியார் ஒரு முடிவு எடுத்தார்...
அரசிருக்கும் அகந்தையில்
மமதை உன் சிந்தையில்
என் மாணவன் ஒருவனைக்
கொண்டு உனக்கு நான்
உண்மை உரைப்பேன்
ஒரு நாள்.... என.....
மனைவி மற்றும் மகனுடன், கிருபாச்சாரியாரிடமே தஞ்சம் புகுந்தார். அப்போதுதான், அவரது வித்தைகளையும், திறமையும் கேள்வியுற்ற பீஷ்மர் இவரை தன் பேரக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்குமாறு வேண்டினார்.
பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு பாடம் கற்பிப்பது மட்டும் இன்றி தன் மகன் அஸ்வத்தாமனுக்கும் கற்றுத் தந்தார். என்ன இருந்தாலும் மகன் அல்லவா?? அதனால் தனிக் கவனம் மற்றும் பாராட்டுதல்கள் அஸ்வத்தாமனுக்கு இருந்தன. அதைக் கண்டு பொறாமை உற்ற அர்ஜூனன், எப்படியும் ஆசிரியரின் உள்ளத்தில் ஒரு இடம் பிடிக்க வேண்டும் என வெறியுடன் இருந்தான்.
கடும் பயிற்சி மேற்கொண்டு அவர் உள்ளத்தில் இடம் பிடித்தான். அந்த குருகுலத்தின் மிகச் சிறந்த மாணவனாக அர்ஜூனன் இருந்தான்.
காலங்கள் உருண்டன. பயிற்சிகள் முடிந்ததும், குருதட்சினை தர பாண்டவர்கள் முன்வருகையில், துரோணர் கேட்ட குருதட்சினை இதுதான். அதுவும் அவரது பிரிய மாணவன் அர்ஜுனனிடம் “துருபதனை, போரில் வென்று என் முன்னே கொண்டு வந்து நிறுத்து” என்பதுதான். அவர் விருப்பத்தை அவ்வாறே நிறைவேற்றினான் அர்ஜூனன்.
துரோணர் போரில் தோல்வி அடைந்த துருபதனை நோக்கி..
"செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நின்றாயே..இப்போது உன் நிலையைப் பார். செல்வம் கடைசி வரை நில்லாது என்பதை உணர்ந்து ஆணவத்தை விட்டு அடக்கத்தைக் கடை பிடி என அறிவுரை சொல்லி, உன் நாட்டின் பாதியை எடுத்துக் கொண்டு..மறு பாதியை உனக்குத் தருகிறேன், நாம் நட்பைத் தொடரலாம்" என்று கூறி துருபதனை அவன் நாட்டுக்கே திருப்பி அனுப்பினார்
ஆனால், துருபதன் மனம் மாறவில்லை. துரோணரிடம் முன்னைவிட பல மடங்கு கோபம் கொண்டான்.
சான்வி
உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்
பகுதி ஒன்பதில் ஒன்று : துருபதன் கோபம்
துரோணரின் மீது பல மடங்கு கோபம் கொண்ட துருபதன், துரோணரை வெல்ல தனக்கு ஒரு புத்திரன் வேண்டி ஒரு வேள்வியை ஆரம்பித்தான்.
அது சௌத்ராமணி என்ற வேள்வி
அந்த வேள்விதீயிலிருந்து அக்கினி போன்ற முகமும் பயப்படத்தக்க உருவமும் கொண்டு கத்தி, வில், அம்பு , கவசம் ஆகியவற்றுடன் ஓர் ஆண்மகன் தோன்றினான்
அப்போது ஒரு அசரீரி எழுந்து இவன் துரோணரின் சீடனாக வளர்ந்து அவருக்கே யமனாக மாறுவான். இவனால் பாஞ்சால தேசம் புகழ் பெறும் என்று ஒலித்தது.
அதன் பின் மீண்டும் மந்திரம் கூறி அக்னியில் அவிர் சொரிந்தபோது யாககுண்டத்தில் கரிய மேனியுடன் கூடிய அழகும், தாமரை இதழ்கள் போன்று கண்களும் கொண்டு ஒரு பெண் எழுந்து வந்தாள். அரசகுலத்திற்கே படு நாசம் விளைவிக்க போகும் பாஞ்சாலி இவளே என்று கூறியது அசரீரி.
ஆணுக்கு திஷ்டத்துய்மன் என்றும் பெண்ணுக்கு திரௌபதி என்றும் பெயரிட்டனர்.
திஷ்டத்துய்மன் துரோணரிடம் சீடனாக சேர்த்தான். துரோணர் தமது ஞானதிருஷ்டியால் திஷ்டத்துய்மன் என்று தெரிந்து கொண்டபோதிலும் எதிரி என்று எண்ணி மறைக்காமல் அனைத்து வேதங்களையும் நன்கு உபதேசித்தார். முடிவில் இந்த திஷ்டத்துய்மன் கையாலே அவர் மரணம் அடைந்தார் எனப் போகிறது பாரதம்.
பகுதி ஒன்பதில் இரண்டு : கர்ணனும், பானுமதியும்:
இனி நாம் நம் கதையின் நாயகனைப் பற்றிப் பார்ப்போம். இதை பற்றிய தகவல்கள் அதிகமாய் எங்கும் இல்லாததால், இணையத்திலும் கூட..... இந்தப் பகுதி கர்ணன் திரைப்படத்தை தொட்டவாறு இருக்கும். கொஞ்சம் என் கற்பனையும்....
துரியோதனன் தன் நண்பனை தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே... தன் மன்னவன், தன்னை தவிர அனைத்தையும் சிறப்பாய் கவனிப்பதாய் தன் தோழியிடம் “பானுமதி” குறை கூறிக் கொண்டு இருக்கிறார்.
அன்னையைக் காண்பார், அவர் தந்தையைக் காண்பார்,
தன் சோதரர்கள் அனைவரையும் காண்பார், தன் மண்ணைக்
காண்பார், அதன் மக்களைக் காண்பார்... அனைத்தையும்
சிறப்பாய்க் காண்பார்... என்னைக் காண மட்டும் வேளை
இல்லையா அவருக்கு....
(ஏனடி தோழி கேள் ஒரு சேதி என ஒரு பாடல் வரும் கர்ணன் படத்தில்)
அப்போது உள்ளே நுழைகிறார்கள் இருவரும். புதிய ஒரு ஆண்மகனைக் கண்ட நாணத்தில் பானுமதி உள்ளே செல்ல விழைய, அவளைத் தடுத்து, கர்ணனை அறிமுகப் படுத்துகிறான் துரியோதனன்.
(கர்ணன் படத்தில் இந்தப் பாடல் முடியும் வேளையில் இவர்கள் இருவரும் வர, பானுமதி ஓட, அவர் பின்னே செல்லும் துரியோதனன், கூடவே கர்ணன்... அந்த உரையாடலை நான் மிக ரசித்தேன்... அதை இங்கே பதிக்கிறேன்)
கர்ணன் : நிற்கக் கூடாத பாடல் நின்று விட்டது...
(பானுமதி யார் இவர் என ஒரு பார்வை பார்க்க.....)
துரியோதனன் : பானுமதி யார் இவர் என்ற பார்வை வேண்டாம்.... அவர் சொன்னதற்கு சரியான ஒரு பதிலை நீ கூற வேண்டும்..
பானுமதி : நிற்கவில்லை... நின்று கொண்டே தொடர்கிறது....
கர்ணன் : புரியவில்லையே... பாட்டு எங்கே தொடர்ந்தது.... இங்கே யார் பாடினார்கள்???
பானுமதி : தாங்கள் இப்போது பேசவில்லையா???
துரியோதனன் : பலே... பார்த்தாயா நண்பா.. உன் பேச்சையே பாட்டாக்கி விட்டாள் ..... என் மனைவி...
கர்ணன் : பேசிய நான், இந்தப் பேச்சை கேட்டு நாணி விட்டேன் நண்பா... பேசத் தெரிந்தவர்கள் எப்படி பேசி விட்டார்கள்...
துரியோதனன் : ஆஹா இதல்லவோ.. பேச்சு... ம்ம்ம்ம் நிற்பது தொடரட்டும்....
பானுமதி : வேண்டாம். ஆசனத்தில் அமரட்டும் ....
கர்ணன் : ஆஹா நல்ல சிலேடை....
(இப்படியாகப் போகும் அந்த உரையாடல்... காணக் காண சலிக்காத காட்சி எனக்கு... அமுதும் தேனும் எதற்கு??? இப்படி தமிழ் கேட்டுக் கொண்டு இருந்தால் ???)
இனி கதைக்கு...
பானுமதி : தாங்கள், இவர் யார் என சொல்லவே இல்லையே....
துரியோதனன் : இவன்.. கர்ணன்.. என் உயிர் நண்பன், கௌரவர்களின் மானத்தைக் காக்க, மண் மீது தோன்றிய மாவீரன். சூரியனைப் போல பிரகாசித்து, எதிரிகளை களத்தில் சூறையாடும் வல்லமை கொண்டவன். தயாள சிந்தனை, இரக்க குணம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டவன். உன் அண்ணன்.
(கர்ணன் தன்னை பற்றித் தன் நண்பன் சொன்னதைக் கேட்டு பெருமிதத்தால் பூரித்து கண்கள் கசிய.. பானுமதிக்கு முகமன் சொல்கிறான்)
பானுமதி : அண்ணா, தங்களின் உறவும், நட்பும் எங்களுக்கு கிடைத்தது எங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம்.
அப்போது அங்கே வரும் சகுனியுடன் கர்ணனை அங்க தேசத்திற்கு அனுப்பி வைக்கிறான் துரியோதனன். கூடவே அன்பான வேண்டுகோளுடன்.
அங்கே சென்று பட்டமேற்ற பின் இங்கே வந்துவிடு நண்பா, நாடுதான் உனக்கு அது... வீடு இதுதான்.... நானும் உன் தங்கையும் உனக்காய் காத்திருப்போம் என்கிறான்.
கர்ணனுக்கு... பிறப்பில் இருந்தே... மற்றவருக்கு நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்ல என்ற கருத்து மனதிலே இருந்தாலும்... தன்னையும் ஒரு அரசனாக... தன்னையும் ஒரு மனிதனாக... திறமை கொண்ட வீரனாக மதிக்கும் துரியோதனின் பால் எல்லை இல்லா பிரியமும்.. நேசமும், நட்பும் அவன் உள்ளத்துள்ளே பொங்கி அவன் நெஞ்சை நிறைத்தன.
கர்ணனின் அங்க தேசத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.
சான்வி
உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்
"எடுக்கவோ? கோக்கவோ?" என்ற காட்சிக்காக காத்திருக்கிறேன்
மிக அருமை
மிக சுவாரசியம்
தொடருங்கள் தோழியே
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks