Page 5 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast
Results 49 to 60 of 122

Thread: கர்ணன் என் காதலன்

                  
   
   
  1. #49
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கெட்டவனில் நல்லவன் என்பதற்கு துரியோதனனின் சில பண்புகள் உதாரணம்.

    தொடருங்கள் தங்கையே.
    உண்மைதான் சிவான்னா. நல்லவர்களில் சில கெட்ட பண்புகள் இல்லாது போகாது. அது போலே கெட்டவரிலும் சில நல்ல பண்புகள் இருக்கத்தான் செய்கிறது.

    தொடர்ந்து வந்து ஊக்கம் தர உம்போன்ற சகோதரர் இருக்கையில் தடையென்ன எனக்கு?? நன்றி அண்ணா.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  2. #50
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    கதையை நகர்த்தும் லாவகம் மிக அருமை

    தொடருங்கள்
    தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  3. #51
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post

    (இது ஒரு காலத்தில் அம்புலிமாமாவில் படிச்ச கதைங்கோ)
    ஒரு காலத்தில் படித்த கதையை நிகழ்காலக் கதைக்குள் கதையாய் சொன்ன விதம் நேர்த்தி.

    இது போன்ற விளக்கங்கள் மேலும் கதையை நன்கு விளங்கிக் கொள்ள உதவியாய் இருக்கும்.

    மிக்க நன்றி அண்ணா உங்கள் பகிர்வுக்கு.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சான்வி View Post
    உண்மைதான் சிவான்னா. நல்லவர்களில் சில கெட்ட பண்புகள் இல்லாது போகாது. அது போலே கெட்டவரிலும் சில நல்ல பண்புகள் இருக்கத்தான் செய்கிறது.

    தொடர்ந்து வந்து ஊக்கம் தர உம்போன்ற சகோதரர் இருக்கையில் தடையென்ன எனக்கு?? நன்றி அண்ணா.
    சரியாச் சொன்னீங்க.. ரொம்ப நாளைக்கு முன்னால சொன்ன விஷயத்தை ஞாபகப்படுத்தினீங்க

    http://www.tamilmantram.com/vb/showt...477#post500477


    http://www.tamilmantram.com/vb/showt...%BF#post354222
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #53
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by innamburan View Post
    நான் விரும்பி படிக்கும் தொடர் இது. திரு.ஜெய் சொல்வதில் (...புராணங்கள் கூறும் தகவல்கள் நிகழ்ந்தனவா இல்லையா என்று ஆராய்வதை விட அது கூறும் நற்கருத்துகளை ஏற்று கொள்வது மிக்க நன்று ...) யதார்த்தம் இருக்கிறது. ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். மகாபாரதம் போன்ற காப்பியங்களில் இடைச்செருகல்களும் உண்டு. புதிய பார்வைகளும் உண்டு: சாப விமோசனம்~ புதுமை பித்தன்.
    இன்னம்பூரான்
    மேற்கோளோடு என் குறிக்கோளுக்கு ஒளி காட்டிய தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  6. #54
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post

    எளிமையான தமிழ் நடையில் தொடரட்டும் இந்த பதிவு ....
    தொடரும் தங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  7. #55
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    அன்புத் தோழி,

    இணையத்தில் ஏற்கனவே படித்திருந்தேன். சொற்கட்டும் சொல்லும் விதமும் எழுதியவரை தேட வைத்தது. அவரே நமது மன்றத்தில் நம் நட்பாக உள்ளார் என்பதை நினைக்க பெருமையாக உள்ளது.

    தொடருங்கள். பின் தொடர்ந்து வருகிறேன்.. மீள் வாசிப்பு என்றாலும் சுவைக் குறைவில்லாத படைப்பு.
    தெரியாத கதையை யார் வேண்டுமானாலும் கற்பனை என எழுதிவிடலாம். தெரிந்த, அறிந்த விஷயங்களை எழுதுகையில் தேடலும் அதனால் வரும் சிரமமும் சற்றே அதிகமாக இருக்கும்.

    எழுத்தின் கரு, என் மனதின் குரு என்பதால், சிரமமும் சற்று அதிகம்தான். ஆயினும், அந்த சிரமங்கள் எல்லாம் ஆதவனைக் கண்ட பணியாய் உருகித்தான் போயிற்று உங்கள் பின்னூட்டம் கண்டு.

    இது போன்ற பின்னூட்டங்கள் மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் ஊட்டங்கள்.

    இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் அமரன்

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  8. #56
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    ஆமாங்க.. அப்படிப்பட்ட பல புதிய பார்வைகள் நம்ம மன்றத்தில் உதித்திருக்கின்றன என்பதும் பெருமைப் பட வேண்டிய விஷயம்.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  9. #57
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    சரியாச் சொன்னீங்க.. ரொம்ப நாளைக்கு முன்னால சொன்ன விஷயத்தை ஞாபகப்படுத்தினீங்க

    http://www.tamilmantram.com/vb/showt...477#post500477


    http://www.tamilmantram.com/vb/showt...%BF#post354222
    இன்னும் நான் இங்கே நெறைய படிக்க வேண்டி இருக்கு. அது மட்டும் எனக்கு நல்லா தெரியுதுங்க.

    கருத்து செறிவு மிகுந்த விவாதமாய் இருக்கும்போல. படித்து விடுகிறேன், வேலையின் இடையே வரும் இடைவெளியில்..

    நன்றி அண்ணா.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  10. #58
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1

    கர்ணன் என் காதலன் - 8

    பகுதி எட்டு : துரோணர்

    சண்டை அப்போதே நடந்திருந்தால், நமக்கும் ஒரு முடிவு தெரிந்திருக்கும், வில் வித்தையில் சிறந்தவர் யார் என்று. ஆனால் அது அப்போது நடக்கவில்லை.

    கிருபராலும், துரோணராலும் அது தடுக்கப்பட்டது.

    யார் இந்த துரோணர்??

    இவர் பாரத்துவாச (பரத்வாஜ) முனிவரின் புதல்வர். இவருடைய மனைவி சதாநந்தரின் மகள் மற்றும் கிருபாச்சாரியாரின் சகோதரி கிருபை. அசுவத்தாமன் இவர்களின் மகன் ஆவான்.

    துருபதனும், துரோணரும், துரோணரின் தந்தை பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தில் குருகுலத்தில் ஒன்றாய் வித்தை கற்றவர்கள். பால்ய காலத்து சிநேகிதர்கள். பயிற்சிக் காலத்தில் ஒரு நாள் காட்டில் மிக ஆபத்தான நிலையில் இருந்து, துருபதனை துரோணர் தன் உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றுகிறார்.

    அந்த நன்றி உணர்வில், துருபதன், என் நாட்டில் பாதியை உனக்கு தருகிறேன் என்கிறார். அரசாட்சி அந்தணர்க்கு உரியது அல்ல என மறுத்துவிட்டு, நட்பை மட்டுமே வேண்டுகிறார்.

    துருபதன், குருகுலம் முடிந்து நாடாள சென்று விட, இவரோ இங்கே, கிருபையை மணந்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

    பாஞ்சாலத்தில் பெரும் பஞ்சம் வருகிறது. தனது மகன் அசுவத்தாமனுக்கு பாலுக்கு, ஒரு பசுவை தானம் பெற வேண்டி, தன் பால்ய சிநேகிதனான, துருபதனை சந்திக்கச் சென்றார்.

    பாதி ராஜ்ஜியத்தை தருவதாக தான் தந்த வாக்குறுதியை மனதில் நினைத்து, அதற்காய் துரோணர் வந்திருப்பதாக எண்ணி துருபதன், துரோணரை அவமானப்படுத்தி, வெளியே அனுப்பி விடுகிறார்.

    உணர்ச்சியின் கொந்தளிப்பில் அப்போது துரோணாச்சாரியார் ஒரு முடிவு எடுத்தார்...

    அரசிருக்கும் அகந்தையில்
    மமதை உன் சிந்தையில்
    என் மாணவன் ஒருவனைக்
    கொண்டு உனக்கு நான்
    உண்மை உரைப்பேன்
    ஒரு நாள்.... என.....


    மனைவி மற்றும் மகனுடன், கிருபாச்சாரியாரிடமே தஞ்சம் புகுந்தார். அப்போதுதான், அவரது வித்தைகளையும், திறமையும் கேள்வியுற்ற பீஷ்மர் இவரை தன் பேரக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்குமாறு வேண்டினார்.

    பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு பாடம் கற்பிப்பது மட்டும் இன்றி தன் மகன் அஸ்வத்தாமனுக்கும் கற்றுத் தந்தார். என்ன இருந்தாலும் மகன் அல்லவா?? அதனால் தனிக் கவனம் மற்றும் பாராட்டுதல்கள் அஸ்வத்தாமனுக்கு இருந்தன. அதைக் கண்டு பொறாமை உற்ற அர்ஜூனன், எப்படியும் ஆசிரியரின் உள்ளத்தில் ஒரு இடம் பிடிக்க வேண்டும் என வெறியுடன் இருந்தான்.

    கடும் பயிற்சி மேற்கொண்டு அவர் உள்ளத்தில் இடம் பிடித்தான். அந்த குருகுலத்தின் மிகச் சிறந்த மாணவனாக அர்ஜூனன் இருந்தான்.

    காலங்கள் உருண்டன. பயிற்சிகள் முடிந்ததும், குருதட்சினை தர பாண்டவர்கள் முன்வருகையில், துரோணர் கேட்ட குருதட்சினை இதுதான். அதுவும் அவரது பிரிய மாணவன் அர்ஜுனனிடம் “துருபதனை, போரில் வென்று என் முன்னே கொண்டு வந்து நிறுத்து” என்பதுதான். அவர் விருப்பத்தை அவ்வாறே நிறைவேற்றினான் அர்ஜூனன்.

    துரோணர் போரில் தோல்வி அடைந்த துருபதனை நோக்கி..

    "செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நின்றாயே..இப்போது உன் நிலையைப் பார். செல்வம் கடைசி வரை நில்லாது என்பதை உணர்ந்து ஆணவத்தை விட்டு அடக்கத்தைக் கடை பிடி என அறிவுரை சொல்லி, உன் நாட்டின் பாதியை எடுத்துக் கொண்டு..மறு பாதியை உனக்குத் தருகிறேன், நாம் நட்பைத் தொடரலாம்" என்று கூறி துருபதனை அவன் நாட்டுக்கே திருப்பி அனுப்பினார்

    ஆனால், துருபதன் மனம் மாறவில்லை. துரோணரிடம் முன்னைவிட பல மடங்கு கோபம் கொண்டான்.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  11. #59
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1

    கர்ணன் என் காதலன் - 9

    பகுதி ஒன்பதில் ஒன்று : துருபதன் கோபம்

    துரோணரின் மீது பல மடங்கு கோபம் கொண்ட துருபதன், துரோணரை வெல்ல தனக்கு ஒரு புத்திரன் வேண்டி ஒரு வேள்வியை ஆரம்பித்தான்.
    அது சௌத்ராமணி என்ற வேள்வி

    அந்த வேள்விதீயிலிருந்து அக்கினி போன்ற முகமும் பயப்படத்தக்க உருவமும் கொண்டு கத்தி, வில், அம்பு , கவசம் ஆகியவற்றுடன் ஓர் ஆண்மகன் தோன்றினான்

    அப்போது ஒரு அசரீரி எழுந்து இவன் துரோணரின் சீடனாக வளர்ந்து அவருக்கே யமனாக மாறுவான். இவனால் பாஞ்சால தேசம் புகழ் பெறும் என்று ஒலித்தது.

    அதன் பின் மீண்டும் மந்திரம் கூறி அக்னியில் அவிர் சொரிந்தபோது யாககுண்டத்தில் கரிய மேனியுடன் கூடிய அழகும், தாமரை இதழ்கள் போன்று கண்களும் கொண்டு ஒரு பெண் எழுந்து வந்தாள். அரசகுலத்திற்கே படு நாசம் விளைவிக்க போகும் பாஞ்சாலி இவளே என்று கூறியது அசரீரி.

    ஆணுக்கு திஷ்டத்துய்மன் என்றும் பெண்ணுக்கு திரௌபதி என்றும் பெயரிட்டனர்.

    திஷ்டத்துய்மன் துரோணரிடம் சீடனாக சேர்த்தான். துரோணர் தமது ஞானதிருஷ்டியால் திஷ்டத்துய்மன் என்று தெரிந்து கொண்டபோதிலும் எதிரி என்று எண்ணி மறைக்காமல் அனைத்து வேதங்களையும் நன்கு உபதேசித்தார். முடிவில் இந்த திஷ்டத்துய்மன் கையாலே அவர் மரணம் அடைந்தார் எனப் போகிறது பாரதம்.


    பகுதி ஒன்பதில் இரண்டு : கர்ணனும், பானுமதியும்:


    இனி நாம் நம் கதையின் நாயகனைப் பற்றிப் பார்ப்போம். இதை பற்றிய தகவல்கள் அதிகமாய் எங்கும் இல்லாததால், இணையத்திலும் கூட..... இந்தப் பகுதி கர்ணன் திரைப்படத்தை தொட்டவாறு இருக்கும். கொஞ்சம் என் கற்பனையும்....

    துரியோதனன் தன் நண்பனை தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே... தன் மன்னவன், தன்னை தவிர அனைத்தையும் சிறப்பாய் கவனிப்பதாய் தன் தோழியிடம் “பானுமதி” குறை கூறிக் கொண்டு இருக்கிறார்.

    அன்னையைக் காண்பார், அவர் தந்தையைக் காண்பார்,
    தன் சோதரர்கள் அனைவரையும் காண்பார், தன் மண்ணைக்
    காண்பார், அதன் மக்களைக் காண்பார்... அனைத்தையும்
    சிறப்பாய்க் காண்பார்... என்னைக் காண மட்டும் வேளை
    இல்லையா அவருக்கு....


    (ஏனடி தோழி கேள் ஒரு சேதி என ஒரு பாடல் வரும் கர்ணன் படத்தில்)

    அப்போது உள்ளே நுழைகிறார்கள் இருவரும். புதிய ஒரு ஆண்மகனைக் கண்ட நாணத்தில் பானுமதி உள்ளே செல்ல விழைய, அவளைத் தடுத்து, கர்ணனை அறிமுகப் படுத்துகிறான் துரியோதனன்.

    (கர்ணன் படத்தில் இந்தப் பாடல் முடியும் வேளையில் இவர்கள் இருவரும் வர, பானுமதி ஓட, அவர் பின்னே செல்லும் துரியோதனன், கூடவே கர்ணன்... அந்த உரையாடலை நான் மிக ரசித்தேன்... அதை இங்கே பதிக்கிறேன்)

    கர்ணன் : நிற்கக் கூடாத பாடல் நின்று விட்டது...

    (பானுமதி யார் இவர் என ஒரு பார்வை பார்க்க.....)

    துரியோதனன் : பானுமதி யார் இவர் என்ற பார்வை வேண்டாம்.... அவர் சொன்னதற்கு சரியான ஒரு பதிலை நீ கூற வேண்டும்..

    பானுமதி : நிற்கவில்லை... நின்று கொண்டே தொடர்கிறது....

    கர்ணன் : புரியவில்லையே... பாட்டு எங்கே தொடர்ந்தது.... இங்கே யார் பாடினார்கள்???

    பானுமதி : தாங்கள் இப்போது பேசவில்லையா???

    துரியோதனன் : பலே... பார்த்தாயா நண்பா.. உன் பேச்சையே பாட்டாக்கி விட்டாள் ..... என் மனைவி...

    கர்ணன் : பேசிய நான், இந்தப் பேச்சை கேட்டு நாணி விட்டேன் நண்பா... பேசத் தெரிந்தவர்கள் எப்படி பேசி விட்டார்கள்...

    துரியோதனன் : ஆஹா இதல்லவோ.. பேச்சு... ம்ம்ம்ம் நிற்பது தொடரட்டும்....

    பானுமதி : வேண்டாம். ஆசனத்தில் அமரட்டும் ....

    கர்ணன் : ஆஹா நல்ல சிலேடை....

    (இப்படியாகப் போகும் அந்த உரையாடல்... காணக் காண சலிக்காத காட்சி எனக்கு... அமுதும் தேனும் எதற்கு??? இப்படி தமிழ் கேட்டுக் கொண்டு இருந்தால் ???)

    இனி கதைக்கு...

    பானுமதி : தாங்கள், இவர் யார் என சொல்லவே இல்லையே....

    துரியோதனன் : இவன்.. கர்ணன்.. என் உயிர் நண்பன், கௌரவர்களின் மானத்தைக் காக்க, மண் மீது தோன்றிய மாவீரன். சூரியனைப் போல பிரகாசித்து, எதிரிகளை களத்தில் சூறையாடும் வல்லமை கொண்டவன். தயாள சிந்தனை, இரக்க குணம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டவன். உன் அண்ணன்.

    (கர்ணன் தன்னை பற்றித் தன் நண்பன் சொன்னதைக் கேட்டு பெருமிதத்தால் பூரித்து கண்கள் கசிய.. பானுமதிக்கு முகமன் சொல்கிறான்)

    பானுமதி : அண்ணா, தங்களின் உறவும், நட்பும் எங்களுக்கு கிடைத்தது எங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம்.

    அப்போது அங்கே வரும் சகுனியுடன் கர்ணனை அங்க தேசத்திற்கு அனுப்பி வைக்கிறான் துரியோதனன். கூடவே அன்பான வேண்டுகோளுடன்.

    அங்கே சென்று பட்டமேற்ற பின் இங்கே வந்துவிடு நண்பா, நாடுதான் உனக்கு அது... வீடு இதுதான்.... நானும் உன் தங்கையும் உனக்காய் காத்திருப்போம் என்கிறான்.

    கர்ணனுக்கு... பிறப்பில் இருந்தே... மற்றவருக்கு நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்ல என்ற கருத்து மனதிலே இருந்தாலும்... தன்னையும் ஒரு அரசனாக... தன்னையும் ஒரு மனிதனாக... திறமை கொண்ட வீரனாக மதிக்கும் துரியோதனின் பால் எல்லை இல்லா பிரியமும்.. நேசமும், நட்பும் அவன் உள்ளத்துள்ளே பொங்கி அவன் நெஞ்சை நிறைத்தன.

    கர்ணனின் அங்க தேசத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  12. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    "எடுக்கவோ? கோக்கவோ?" என்ற காட்சிக்காக காத்திருக்கிறேன்

    மிக அருமை
    மிக சுவாரசியம்
    தொடருங்கள் தோழியே
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

Page 5 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •