Page 3 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 122

Thread: கர்ணன் என் காதலன்

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    பரசுராமரின் இன்னொரு ஷத்ரிய மாணவன் - பீஷ்மர்
    அப்படியா...........
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நர நாராயணர் - எனக்குத் தெரிந்த கதைகள்..

    இரண்ய கசிபுவை அழித்த பின்னர் சாந்தமான நரசிம்மரின், நர உடலில் இருந்து நரனும், சிம்ம முகத்தில் இருந்து நாராயணனும் உருவானதாகக் கதைகள் சொல்கின்றன. சில கதைகள் நரநாராயணின் தந்தை தர்மதேவன் என்கின்றன. தரமதேவனுக்கும் தட்சனின் மகளான முருதி (அஹிம்சை) என்பவளுக்கும் குழந்தைகளாக பிறந்தனர் என்கிறது பாகவதம்.

    நர நாராயண அவதாரங்கள் ஏன் எடுக்கப்பட்டன என்பதற்கு பாகவதம் சொல்வது ரிஷிகள், முனிவர்கள் எப்படி வாழ வேண்டும் என உணர்த்த.

    இந்த நர நாராயணர்களைப் பற்றிய மூன்று கதைகள் உண்டு.

    நரனும் நாராயனனும் பத்ரிகாசிரமத்திற்கு அருகில் இருந்த இரு சிகரங்களில் தங்கி தவம் புரிந்ததாகச் சொல்லப் படுகிறது. இவை இரண்டு சிகரங்கள் ஆகும். நாராயணச் சிகரத்தின் அடிவாரத்தில்தான் பத்ரிநாத் கோவில் உள்ளது. இந்தப்பகுதி கந்தமானப் பர்வதம் எனப்படும். அனுமன் பெயர்த்தெடுத்த சஞ்சீவி மூலிகை கொண்ட கந்தமானப் பர்வதம் இங்கு இருந்ததாகக் கருதப் படுகிறது.

    நரனும் நாராயணனும் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் தவத்தைப் பார்த்து இந்திரன் வழக்கம் போலத் தவித்துப் போனான். தன்னுடைய வழக்கமான அஸ்திரங்களான மன்மதன் - ரதி, வசந்தன், அப்ஸரஸ் போன்றவற்றை அவன் ஏவ அவர்கள் இவர்களின் தவத்தைக் கலைக்க முயன்றனர். விழித்தெழுந்த நரன் எள்ளி நகைத்து தனது தொடையைத் தட்ட அங்கிருந்து கிளம்பினால் தொடைமயக்கி.. அதாங்க ஊர்(தொடை)வசி(மயக்குபவள்) ஹிஹி..

    இதனால் நரனின் தபோபலம் குறைந்தது. இந்திரனுக்கு நாரணர் தனது அவதார ரகசியம் சொல்ல, அவனும் அடங்குகிறான். ஊர்வசி இந்திரன் சபைக்குச் செல்கிறாள்.

    அடுத்து பிரஹலாதன் அப்பகுதிக்கு வேட்டைக்கு வருகிறான். வித்தியாசமான கோலத்தைக் காண்கிறான். இரு தவசிகள், மான் தோல்மேல். கையிலோ வில்லும் அம்புகளும். நாணேற்றியபடி தவம் செய்து கொண்டிருக்கும் அவர்களைக் கண்டதும் அவனுக்குச் சந்தேகம் வருகிறது. இவர்களோ ரிஷிகளைப் போலல்லாமல் ஆயுதங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் ஷத்ரியர்களைப் போலல்லாமல் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரென தெரியவில்லையே என எண்ணி அவர்களின் தவத்தைக் கலைத்து சண்டைக்கு அழைக்கிறான். நரனும் பிரஹலாதனும் சண்டை இட நரனை வெல்ல முடியாது இறுதியாக பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான் நம்ம பிரஹலாதன். விழித்தெழுந்த நாராயணன் மஹேஸ்வர அஸ்திரத்தால் பிரம்மாஸ்திரத்தை முறிக்க எதுவும் செய்ய முடியாமல் தோற்றுப் போன பிரஹலாதன் விஷ்ணுவை இறைஞ்ச, விஷ்ணு சொல்கிறார், நாராயணனை வெல்ல ஒரே ஒரு வழி உண்டு. அது அவனை வணங்குவதே ஆகும் என்று.

    தன் ஆட்சியை இரண்யகசிபுவின் சகோதரன் இரண்யாட்சன் (வராகவதார வில்லன்) மகனான அந்தகாசுரன் ஒப்புவித்து விட்டு நாராயணனை எண்ணி தவமிருக்கும் பிரஹலாதனுக்கு முக்தி கிட்டுகிறது.

    மூன்றாவதாக வருவதுதான் தம்போதவன் எனப்படும் சஹஸ்ர கவசன் என்ற கதை.

    சஹஸ்வர கவசன் பெறும் கவசங்களின் பலம் கீழ்கண்டவாறாகும்.

    அதை உடைக்க வேண்டுமானால் 1000 வருடங்கள் ஒருவன் போரிட வேண்டும். அப்படி ஒரு கவசம் உடைந்தால் உடைத்தவன் இறந்து போவான்..

    இதனால் நரன் 1000 வருடங்கள் அவனுடன் போரிட்டு ஒரு கவசம் உடைத்து மரணமடைவான். நாராயணன் தனது 1000 வருட தபோபலத்தின் பயனாகப் பெறும் ம்ருத சஞ்சீவினி மந்திரம் கொண்டு நரனை உயிர்பித்து விட்டுப் போரைத் தொடருவான். நரன் 1000 ஆண்டுகள் தவம் செய்து அடுத்த இரவுண்டுக்குத் தயாராவான்.

    1000 x 999 = 9,99,000 ஆண்டுகள் போர் தொடர்ந்தது. இதனால் த்ரேதா யுகம் தொடங்கிய போர் த்வாபர யுகத்திலும் தொடர்ந்தது. (பிரம்ம பிரளயம் வரலைங்க). 999 கவசங்கள் உடைந்ததும் பயந்து போன தம்போத்வன் சூரியனிடம் சரணடைகிறான். நரநாராயணர்கள் சூரியனை அசுரனை ஒப்படைக்கக் கேட்க, சூரியன் மறுத்து நாராயணனின் சாபத்திற்கு ஆளாகிறான்.

    எப்படி விஷ்ணுவின் அம்சம் நரன் + நாராயணன் என இரண்டாகியது அப்படி சூரியனின் அம்சம் தம்போத்வனுடன் சேர்ந்து மனிதனாகப் பிறந்து நர நாராயணர்களால் அழிக்கப்படுவான் என்பதே அந்தச் சாபம்.

    இதனால் கர்ணன் என்ற ஒரு மனிதனுக்குள் இரு அம்சங்களும் சமமாய் கலந்திருந்தன. சூரிய அம்சத்தினால் வள்ளலாக வாழ்ந்த அவன் அசுர அம்சத்தினால் கர்வமிக்கனாகவும் இருந்தான்.

    இராம அவதாரத்திலே

    இந்திரனின் அம்சமாக வாலி
    சூரியனின் அம்சமாக சுக்ரீவன்

    கிருஷ்ண அவதாரத்திலே

    சூரியனின் அம்சமாகக் கர்ணன்
    இந்திரனின் அம்சமாக அர்ச்சுனன்

    அங்கு வாலி கொல்லப்பட்டான்.. இங்கே சுக்ரீவன் கொல்லப்பட்டான். அங்கே பாதி பலம் பறிக்கும் மாலையின் பலத்தை மறைந்திருந்து இல்லாததாக்கினான் இராமன். இங்கு கவச குண்டலங்கள் இரந்து பெறப்பட்டது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #27
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //இராம அவதாரத்திலே

    இந்திரனின் அம்சமாக வாலி
    சூரியனின் அம்சமாக சுக்ரீவன்

    கிருஷ்ண அவதாரத்திலே

    சூரியனின் அம்சமாகக் கர்ணன்
    இந்திரனின் அம்சமாக அர்ச்சுனன்

    //

    அப்போ இறைவனின் அவதாரங்கள் அரக்கர்களை அழிக்க மட்டுமல்ல, தவறு செய்தால் தேவர்களையும் அழிக்கவும் எடுக்கப்பட்டிருக்கிறதா அண்ணா ?
    அன்புடன் ஆதி



  4. #28
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதன் View Post
    //இராம அவதாரத்திலே

    இந்திரனின் அம்சமாக வாலி
    சூரியனின் அம்சமாக சுக்ரீவன்

    கிருஷ்ண அவதாரத்திலே

    சூரியனின் அம்சமாகக் கர்ணன்
    இந்திரனின் அம்சமாக அர்ச்சுனன்

    //

    அப்போ இறைவனின் அவதாரங்கள் அரக்கர்களை அழிக்க மட்டுமல்ல, தவறு செய்தால் தேவர்களையும் அழிக்கவும் எடுக்கப்பட்டிருக்கிறதா அண்ணா ?
    அசுரர்களே தேவர்கள்தானே ஆதன்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #29
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    அசுரர்களே தேவர்கள்தானே ஆதன்..
    ஆமாயில்ல

    அதை நான் மறந்துட்டேன் அண்ணா.................
    அன்புடன் ஆதி



  6. #30
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    பரசுராமரின் இன்னொரு ஷத்ரிய மாணவன் - பீஷ்மர்
    தகவலுக்கு நன்றி அண்ணா. நானும் யார்கிட்டயும்

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  7. #31
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by கீதம் View Post
    சிக்கலான கதையை சிக்கலில்லாமல் தெளிவாக எழுதுவதற்கும், சரளமான எழுத்தோட்டத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் சான்வி. தொடர்ந்து வளரட்டும் கர்ணன் மீதான காதல்!
    மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் கீதம்

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  8. #32
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    என்னே நமது இதிகாசத்தின் சிறப்பு

    மிக்க நன்றி சான்வி தொடருங்கள்
    உண்மைதான். சிறப்பில்லாதது என என்ன உள்ளது?? அனைத்தும் சிறப்புதான்

    தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  9. #33
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    நர நாராயணர் - எனக்குத் தெரிந்த கதைகள்..

    ஐ... கதையா??? சொல்லுங்க.. சொல்லுங்க..

    இந்த நர நாராயணர்களைப் பற்றிய மூன்று கதைகள் உண்டு.

    ஆடி மாசத்துல தள்ளுபடிதான் கெடைக்கும்-ன்னு சொல்வாங்க. இங்கே பார்த்தா.. ஒன்னுக்கு மூனா போனஸ் ரொம்ப சந்தோசம்

    இதனால் நரனின் தபோபலம் குறைந்தது. இந்திரனுக்கு நாரணர் தனது அவதார ரகசியம் சொல்ல, அவனும் அடங்குகிறான். ஊர்வசி இந்திரன் சபைக்குச் செல்கிறாள்.

    இந்த கதை எனக்கு புதிது.

    தன் ஆட்சியை இரண்யகசிபுவின் சகோதரன் இரண்யாட்சன் (வராகவதார வில்லன்) மகனான அந்தகாசுரன் ஒப்புவித்து விட்டு நாராயணனை எண்ணி தவமிருக்கும் பிரஹலாதனுக்கு முக்தி கிட்டுகிறது.

    இதுவும் புதிது

    மூன்றாவதாக வருவதுதான் தம்போதவன் எனப்படும் சஹஸ்ர கவசன் என்ற கதை.

    (பிரம்ம பிரளயம் வரலைங்க).

    ஆனா, ஏன் வரலே??? நான் கதை கேக்கும்போது வந்திச்சு இல்ல??? ஜஸ்ட் கிடிங் அண்ணா. ப்ளீஸ் டோன்ட் மைன்ட்

    எப்படி விஷ்ணுவின் அம்சம் நரன் + நாராயணன் என இரண்டாகியது அப்படி சூரியனின் அம்சம் தம்போத்வனுடன் சேர்ந்து மனிதனாகப் பிறந்து நர நாராயணர்களால் அழிக்கப்படுவான் என்பதே அந்தச் சாபம்.

    தர்க்க ரீதியான கேள்விகளுக்கும் சரியான விடை தரும் இந்த விளக்கங்களை, அள்ளித் தந்த உங்களுக்கு என் சிறப்பு நன்றிகள்
    உங்களின் இந்த அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி. அறியாத பல தகவல்களை உங்கள் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா(அனுமதி இன்றி அழைத்து விட்டேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்)

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    அங்கு வாலி கொல்லப்பட்டான்.. இங்கே சுக்ரீவன் கொல்லப்பட்டான். அங்கே பாதி பலம் பறிக்கும் மாலையின் பலத்தை மறைந்திருந்து இல்லாததாக்கினான் இராமன். இங்கு கவச குண்டலங்கள் இரந்து பெறப்பட்டது.
    கர்ணன் என்று இருக்க வேண்டுமே அண்ணா
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  11. #35
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக அழகான நடை. ஒரு இதிகாசக் கதையைப் படிப்பது போலில்லாமல், விறுவிறுப்பான நாவலைப் படிப்பதைப்போல இருக்கிறது உங்கள் எழுத்து. ரொம்ப சுவாரசியமா போகிற கர்ணனை...இன்னும் காண விருப்பம் பலப்பல.....தொடருங்கள் தங்கையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #36
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இன்னும் காண விருப்பம் பலப்பல.....தொடருங்கள் தங்கையே.
    ஊக்கம் மற்றும் வாழ்த்தோடு மேலும் எழுத உற்சாகத்தையும் தந்த சிவாண்ணாவுக்கு பாசம் நிறைந்த நன்றிகள் பல

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

Page 3 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •