Page 2 of 11 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 122

Thread: கர்ணன் என் காதலன்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளை உணர்த்துவதற்காகவே, இதிகாசங்களின் பாத்திரப்படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

    அந்தவிதத்தில் கர்ணனின் பாத்திரப் படைப்பு மிகவும் ஆழமானது. அதனை அழகான விதத்தில், நயமாக எடுத்துரைக்கும் உங்களது முயற்சி பாராட்டப்படவேண்டியதுதான்.

    வாழ்த்துக்கள்....தொடருங்கள்...பின்வருகிறோம்....மூழ்கி முத்தெடுக்கலாம்...

  2. #14
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கர்ணன்.......ஒரு காரணன்.....அவன் கதை சொல்ல விழைந்த சான்வியின் எழுத்தோட்டம்....அடுத்து வாசிக்க வைக்கிறது. அருமையான எழுத்து....எடுத்துக்கொண்ட கருவும் செழுத்து......வாசிப்போரை இழுத்து அமர வைக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி...மன்றத்தில் இன்னுமோர் அழகு தமிழ் தரும் தங்கை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    என் ஆதர்ச நாயகன் கர்ணனின் கதையினை திரையில் கண்டதை விடவும் இந்த எழுத்து வரிகளில் படிக்கும் போது புதியதாய் படிப்பது போன்றே என் ஆர்வம் இன்னும் பலமடங்கு பெருகுகிறது ....தொடர்ந்து எழுதுங்கள் சான்வி அவர்களே ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post

    சுவையாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.!!!
    உண்மை. ஏராளமான கிளைக் கதைகளுடன், சீரான, பல சிக்கல்கள் நிறைந்தது பாரதம்.

    சல்லியனுக்கும் முக்கிய இடமுண்டு நான் எழுதும் வரிகளிலும்.

    நன்றிகள் பல உங்கள் வரவுக்கும், ஊக்கம் தரும் வரிகளுக்கும்.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by ஜானகி View Post
    வாழ்த்துக்கள்....தொடருங்கள்...பின்வருகிறோம்....மூழ்கி முத்தெடுக்கலாம்...
    ஊக்கமும், உற்சாகமும் தந்து வாழ்த்தும் உங்கள் அன்பு உள்ளத்துக்கு உளம் நிறைந்த நன்றிகள்.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாழ்த்துக்கள் சகோதரி...மன்றத்தில் இன்னுமோர் அழகு தமிழ் தரும் தங்கை.
    மேலும் வளரவென வாழ்த்த ஒரு சகோதரர் இருக்கையில், கவலையை இருக்கையில் விட்டு, களமிறங்க நான் தயாரிகிவிட்டேன்

    மிக்க நன்றி அண்ணா.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    தொடர்ந்து எழுதுங்கள் சான்வி அவர்களே ...
    பெருகும் உங்கள் ஆர்வம் என்னுள்ளும், சிறப்பாய் எழுதும் ஆர்வத்தை பெருக்குகிறது.

    வரவுக்கும், ஊக்கம் தரும் வரிகளுக்கும் மிக்க நன்றி

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1

    கர்ணன் என் காதலன் - 3

    பகுதி மூன்று : சகஸ்ர கவசன் (கர்ணனின் முற்பிறவி)


    இதை படிக்கும் வரை என்னடா, ஒரு பாவமும் அறியாத ஒருவனுக்கு, பிறந்தது முதல், சாவின் விளிம்பு வரை கூட எத்தனை அவமானங்கள்?? எத்தனை ஏச்சு பேச்சுக்கள் என அடங்காத என்ன ஓட்டங்கள் என்னுள்ளும் இருந்தது உண்டு. படித்த பின் கொஞ்சம் ஆறுதல் இருந்தாலும்.........

    முதல் பிறவியில் கர்ணன் சகஸ்ர கவசன் என்னும் அசுரனாக இருந்தாராம். பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தின் படி அவருடைய உடலை ஆயிரம் கவசங்கள் மூடி இருந்தனவாம். அந்தக் கவசங்கள் இருக்கும் வரை சகஸ்ர கவசனுக்கு அழிவு என்பது இல்லை. எவர் ஒருவர் தொடர்ந்து பன்னிரண்டு வருடங்கள் தவம் புரிந்துவிட்டு பின்னர் தொடர்ந்து பன்னிரண்டு வருடங்கள் போர் புரிகின்றானோ அவனால் தான் அசுரனுடைய ஒரு கவசத்தை உடைக்க முடியும். இவ்வாறு இருபத்தி நான்கு வருடங்கள் எவன் ஒருவன் தவமும், போரும் செய்து ஒவ்வொன்றாய் அவனது ஆயிரம் கவசங்களை உடைப்பது?? பின்னர் அவனைக் கொல்வது???

    இந்த வரம் தனக்கு இருந்த காரணத்தால், சகஸ்ர கவசன் தொல்லைகள் எல்லை மீறித்தான் போய்விட்டனவாம். அனைவரையும் தாக்கி, பெரும் துயருக்கு ஆளாக்கி கொடும் செயல்கள் பல புரிந்தானாம். தேவர்கள் இந்த துயரங்கள் தாங்க இயலாது, மஹா விஷ்ணுவிடம் முறையிட, அசுரனை அழிக்க அவரே நரனாகவும், நாராயணன் ஆகவும் அவதாரம் எடுத்தாராம். நரன் பன்னிரெண்டு ஆண்டுகள் தவம் இருக்க, நாராயணன் அவனுடன் போரிட்டாராம். பின்னர் நரன் போரிட, நாராயணன் தவம் இருந்தாராம்.

    இப்படியே, வருடங்கள் பல கழிந்தனவாம். ஒன்றன் பின் ஒன்றாக தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது கவசங்கள் உடைக்கப்பட்டது. அதற்குள் பிரம்ம பிரளயம்*** வந்து விட்டதாம். அப்போது, சகஸ்ர கவசன், இருந்த ஒரே கவசத்துடன், சூரியனிடம் தஞ்சம் புகுந்தாராம்.

    இந்த சகஸ்ர கவசனே, மீதம் இருந்த ஒரே கவசத்துடன், கர்ணனாய், குந்தியின் மகனாய் பிறந்தானாம். இந்த அழிக்கப் பட வேண்டிய கவசத்தை அழித்திடவே, கிருஷ்ணர், நரனான அர்ஜுனனாகவும், நாராயணன் ஆகவும் பிறந்தனராம். வனவாசமாய் போன பன்னிரண்டு வருடங்கள் அர்ஜூனன் செய்த தவமாம்.

    (ஆனால் அர்ஜூனன் இந்திரனின் அம்சம் என மஹாபாரதத்தில் வருகிறதே... அது உண்மை இல்லையா??? என ஐயம் வருகிறது. படித்து அறிந்ததை பகிரும் ஆவல். பகிர்ந்துவிட்டேன்.)

    அந்த ஒரு கவசமும், இந்திரனால், கர்ணனிடம் இருந்து பெறப் பெற்றதை நாம் அனைவரும் அறிவோம் இல்லையா?? பின் வரும் அத்தியாயங்களில் மீண்டும் விளக்கமாக வரும்.

    கர்ணனின் சிறு வயதின் நிகழ்வுகள் அடுத்த அத்தியாயத்தில்....

    __________________________________________________ _

    ****பிரம்ம பிரளயம் : ப்ரபஞ்சம் அழியக்கூடியது. ஒரு முறை உருவாகும், மறு முறை அழியும். ஆக ஒரு சுழற்சியே. ப்ரம்மாவிற்கும் அழிவுண்டு.

    ப்ரம்மவின் பிறப்பு, இறப்பு காலத்தின் நடுவே உள்ளது "மஹாகல்பம்"; ப்ரம்மாவின் இறப்பிற்கு பிறகு வரும் ப்ரளயம் "மஹாப்ரளயம்".

    ப்ரம்மாவின் ஒரு நாள் "கல்பம்";; இந்த கல்பம் 14 மந்வந்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு மனு உண்டு.

    அந்த மனுவின் வாழ்நாள் ஒரு "மன்வந்திரம்". இந்த மன்வந்திரத்தில் 72 சதுர் யுகங்கள் உள்ளன.

    ஒரு சதுர் யுகம் என்பது நான்கு யுகங்கள் கொண்டது. அவை—க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்கள்.

    ஒவ்வொரு கல்ப காலம் முடிந்ததும் உலகம் அழிகிறது. அதை சிறிய ப்ரளயம் என்பர். ப்ரம்மாவின் வயது 120 வருடங்கள். ஆக ஒவ்வொரு ப்ரம்மாவின் காலத்திலும் 42,200 ப்ரளயங்கள் (120x360 approx.).உருவாகின்றன.


    இதிலும் இந்த யுகங்கள் எல்லாம் பல லட்சக் கணக்கான வருஷங்களைத் தன்னுள்ளே கொண்டதாம்

    க்ருத யுகம் – 17,28,000 வருடங்கள் கொண்டது
    த்ரேதா யுகம் – 12,96,000 வருடங்கள் கொண்டது
    த்வாபரயுகம் – 8,64,000 வருடங்கள் கொண்டது
    கலி யுகம் - 4,32,000 வருடங்கள் கொண்டது

    (ஷ்........ ஷப்பா இப்போவே கண்ணைக் கட்டுதே... அப்போ பிரம்மாவுக்கு வாழ்நாள் வருசத்துல சொல்ல முடியாது போல இருக்கே....)

    இந்த அரிய தகவல்களை எல்லாம் எனக்கு சொன்ன எங்க அப்பாவுக்கு இந்த பகுதி சமர்ப்பணம்.

    (எனக்கு இதை புரிய வைக்க அவர் பட்ட பாடு இருக்கே... பாவம் எங்க அப்பா )

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  9. #21
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1

    கர்ணன் என் காதலன் - 4

    பகுதி நான்கு : கர்ணனின் சிறு பிராயம்

    கர்ணனின் எழில் மிகு குழந்தை பருவத்தை பற்றிய நிகழ்வுகள் இவை:

    குழந்தையாய் இருக்கையிலும், அருகிருந்த முனிவரிடம் ஆசி பெற கர்ணனை எடுத்துச் செல்கையில், அவனது, கர்ண குண்டலங்களையும், உடலோடு போர்த்த கவசத்தையும், முக தேஜசையும் கண்ட முனிவர், அவனை எடுக்க, இரு கரத்தையும் நீட்டினாராம். உடனே குழந்தை, அதற்கு அணிவித்திருந்த அணிகலனை எடுத்து அவர் கையிலே வைத்தானாம்.

    அகம் மகிழ்ந்த முனிவரும், குழந்தையை வாழ்த்தி, இவன் கொடுப்பதற்கு என்றே பிறந்தவன், என சொன்னாராம். அப்போது இருந்தே கேட்பவருக்கு கொடுக்கும் பண்பு கர்ணனுக்கு இருந்திருக்கிறது.

    தன் தந்தை (வளர்ப்பு தந்தைதான்) அதிரதனைப் போலே தேர் ஓட்டினாலும், கர்ணனுக்கு போர்க்கலைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அனைத்துக் கலைகளிலும் அவனுக்கு ஆர்வம் இருந்தாலும், வில் வித்தையில் அவனுக்கு இருந்த ஈர்ப்பை வேறு எதுவும் ஈடு செய்யவில்லை.

    ஒரு பயிற்சி பெற்ற ஆசானிடம் முறையாய் இந்தக் கலையை கற்றிட வேண்டும் என உள்ளூர ஓடிய எண்ணத்தின் விளைவாய் அவன் தந்தையுடன், துரோணரிடம் சென்றானாம்.

    துரோணர், அப்போது, ஹஸ்தினாபுர இளவரசர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பணிவாய் அவரை நமஸ்கரித்து, வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் தன் ஆர்வத்தை சொல்கிறான். ஷத்ரியர்களுக்கு தான் கற்றுக் கொடுப்பேன் - எனும் விரதம் கொண்டிருந்ததால், தேரோட்டியின் மகனுக்கு வித்தை கற்றுத் தர இயலாது என மறுத்து விடுகிறார்.

    மனம் வருந்திய கர்ணன், ஆசான் இல்லாமலே நான் இந்த வித்தையை கற்றுக் கொள்கிறேன் பார் என மனதுக்குள் சூளுரைத்து, சுயமாகவே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான். இந்திய கலாசாரத்தின் படி, ஒரு வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால், அதற்க்கு கண்டிப்பாய் யாரையேனும் குருவாக கொள்ள வேண்டும்.

    கர்ணன் தன் தந்தையான சூரிய பகவானையே குருவாகக் கொள்கிறான். பகலெல்லாம் அஸ்திரங்கள் பற்றிய விவரங்களைத் திரட்டி, பின்னர், சூரியன் மறைந்ததும், அந்த அஸ்திரங்களை பயிற்சி செய்தான். இப்படியே கடுமையான பயிற்சி மேற்கொண்டு தன்னை தானே இந்த வித்தையில் உயர்த்திக் கொண்டான்.

    ஒரு சமயம், துரோணரின் குருகுலத்தில் மாணவர்களின் திறனை பரிசோதிக்க அவர் நடத்திய தேர்வை, கர்ணன் அறிய நேர்ந்தது. மரத்தால் செய்யப் பட்ட ஒரு பறவையின் உருவை, ஒரு மரத்தில் தொங்கவிட்டு, அதன் கண்ணை, இலக்காகக் கொண்டு அம்பு எய்யச் சொன்னாராம் அவர். பக்கத்தில் இருந்த பழ மரங்களில் கனிந்திருந்த பழங்கள் பல வீணானதுதான் மிச்சம். ஒருவர் கூட பறவையை அடிக்க வில்லையாம்.

    சரி என, மாணவர்களை அழைத்து என்ன தெரிகிறது என மட்டும் கேட்டாராம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாய் சொல்ல, அர்ஜூனன் மட்டுமே, அந்தக் பறவையின் கண் மட்டும் தெரிவதாய் சொல்ல, அவனை அம்பு எய்ய அனுமதிதாராம். இது அர்ஜுனனின் இலக்கை குறி பார்க்கையில் அவன் மனதை ஒருநிலைப்படுத்தும் திறனை சொல்லும் ஒரு விஷயம்.

    இதை கேள்விப்பட்டு நம் நாயகன் என்ன செய்தானாம்????

    அர்ஜூனன் ஒரு கண்ணை மட்டும் தானே அடித்தான், நான் அதே போல பறவையின் இரு கண்ணையும் அடிக்கிறேன் பார் என, பயிற்சிக் களத்தில் இறங்க, சொன்னதை செய்ய அவன் எடுத்துக் கொண்டதோ சில மணி நேரங்கள் மட்டும் தானாம். ஒன்றன் பின் ஒன்றாக இரு அம்பை ஒரே நேரத்தில் பொருத்தி, இரவிலே, தீவர்த்தியின் ஒளியில் இதை செய்தானாம்.

    இது, வில் வித்தையைக் கற்றுக் கொள்வதிலும், அதை பயன்படுத்துவதிலும், கர்ணன் தீராத தாகமும், வேகமும் கொண்டிருந்தான் என்பதற்கு ஒரு சான்று.

    இத்துணை கற்றுக் கொண்டாலும், தெய்வீக அஸ்திரங்களை, பயிற்சியில் சிறந்த ஒரு குருவினால் தான் தர முடியும் என்பதை கர்ணன் அறிந்தே இருந்தான். துரோணர் மறுத்து விட்ட படியால், அவரது குருவான பரசுராமரிடம் தான் அந்த வித்தைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான்.

    ஆனாலும், துரோணர் எப்படி, ஷத்ரியர்களுக்கு தான் கற்றுக் கொடுப்பேன் என இருந்தாரோ, அதுபோல பரசுராமர், பிராமணர்களுக்கு மட்டும் தான் கற்றுப் கொடுப்பது எனும் விரதம் பூண்டிருந்தார். பிராமணர் அல்லாதவர்களுக்கு அவர் கற்றுக் கொடுக்க மாட்டார்.

    எனவே இது ஒரு தடையாக இருந்தது கர்ணனுக்கு. கர்ணன், கற்றானா?? அஸ்திரங்களை பெற்றானா?? என்பதை இனி வரும் பகுதிகளில் காணலாம்.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    பரசுராமரின் இன்னொரு ஷத்ரிய மாணவன் - பீஷ்மர்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #23
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சிக்கலான கதையை சிக்கலில்லாமல் தெளிவாக எழுதுவதற்கும், சரளமான எழுத்தோட்டத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் சான்வி. தொடர்ந்து வளரட்டும் கர்ணன் மீதான காதல்!

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    கர்ணனை பற்றியும் அவனது கவசகுண்டலம் பற்றியும் நான் அறியாத பல தகவல்கள். அவ்வளவு நல்லவனான கர்ணனை ஏன் கடவுளே முன்வந்து அழிக்க வேண்டும் என்பதன் காரணம் மிக அருமை. என்னே நமது இதிகாசத்தின் சிறப்பு

    மிக்க நன்றி சான்வி தொடருங்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

Page 2 of 11 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •