என் பழைய டைரியிலிருந்து...
சந்தித்த வேளையில்....
நீ பேசியதொன்றும் புரியவில்லை அன்பே !
நான் உன் பார்வையை
மொழி பெயர்த்துக்கொண்டிருந்ததால்.....
நீ பேசுவதை , மனம்
குறுந்தகடாய் பதிவு செய்யும்...
நீயில்லா பொழுதுகளில்
மீண்டும் மீண்டும் கேட்க !
நீ பார்த்தால்
என் உணர்வுகள் நடத்தும்
ஒத்துழையாமை இயக்கம்...
கண் பார்ப்பதை செவி கேட்பதில்லை..
கை செய்வதில் என் மனம் இல்லை...
உன்னால் என்
புலன்களுக்குள் உட்பூசலா ?
நம் பார்வை சந்திப்பில்...
வெளிநடப்பு செய்யும் உணர்வுகள்...
நீ காதல் சாணக்யன் அன்பே
பார்வைப் பகடையைப்
பொருளுடன் நகர்த்தி
எனை வீழ்த்துகிறாய் நிதமும் !
Bookmarks