Page 3 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 25 to 36 of 63

Thread: தம்பி அவன் தங்க கம்பி- இறுதி பாகம்

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    குமரேசன் அவருடைய தம்பி தான் என்பது அந்த தழும்பு மூலம் நிருபணம் ஆகிடுச்சு ...சந்தோசமா இருக்கு ...
    போறதுதான் போறோம் ஒரு நல்ல காரியம் செஞ்சிட்டு போவோம் என்கிற நல்லெண்ணம் உள்ள மாணிக்கம் உண்மையில் மாணிக்கம் தான் ....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #26
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பலத்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பியபடி பயணிக்கிறது கதை. குமரேசனின் சித்தம் தெளிவானது எப்படியென்பதையும் அதில் மாணிக்கத்தின் பங்களிப்பையும் அறிய ஆவலாய் உள்ளேன். வெறும் ஏட்டுப்படிப்பை வைத்து ஒருவரின் குணநலன்களை எடைபோடக்கூடாது என்பதற்கு மாணிக்கம் நல்ல உதாரணம். தொடருங்கள், தொடர்கிறேன்.

  3. #27
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    குமரேசன் அவருடைய தம்பி தான் என்பது அந்த தழும்பு மூலம் நிருபணம் ஆகிடுச்சு ...சந்தோசமா இருக்கு ...
    போறதுதான் போறோம் ஒரு நல்ல காரியம் செஞ்சிட்டு போவோம் என்கிற நல்லெண்ணம் உள்ள மாணிக்கம் உண்மையில் மாணிக்கம் தான் ....
    உங்களுடைய அருமையான பின்னுட்டத்திற்கு பல நன்றிகள்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    பலத்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பியபடி பயணிக்கிறது கதை. குமரேசனின் சித்தம் தெளிவானது எப்படியென்பதையும் அதில் மாணிக்கத்தின் பங்களிப்பையும் அறிய ஆவலாய் உள்ளேன். வெறும் ஏட்டுப்படிப்பை வைத்து ஒருவரின் குணநலன்களை எடைபோடக்கூடாது என்பதற்கு மாணிக்கம் நல்ல உதாரணம். தொடருங்கள், தொடர்கிறேன்.
    உங்களுடைய அருமையான பின்னுட்டத்திற்கு பல நன்றிகள்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    தம்பி அவன் தங்க கம்பி-5

    உடலெல்லாம் வியர்வை, கடந்து செல்லும் வாகன்ங்களிலிருந்து வந்த புகை, கும்மிருட்டு இவற்ரையெல்லாம் பொருட்படுத்தாது ஒரு உத்வேகத்தில் நடந்தேன். தோளில் குமரேசன் தூங்கி கொண்டிருந்தான். ஆரப்பாளையத்திலிருந்து கிளம்பி வைகை பாலத்தை கடந்து பறவை ஊரை தாண்டி சமயனல்லூர் அருகே வந்து கொண்டிருந்த போது என்னை கடந்து சென்ற லாரி ஒன்று நின்று ரிவர்சில் என்னை நெருங்கியது. ஆள் நடமாட்டமில்லாத அந்த இடத்தில் தோளின் பையனையும் சுமந்து கொண்டு என்னால் அங்கிருந்து ஓட முடியவில்லை. சில லாரி டிரைவர்கள் ரொம்ப மோசமானவர்கள். பெண்களையும் சிறுவர்களையும் பாலியல் பலாத்காரம் செய்யவும் தயங்க மாட்டார்கள். பருத்தி வீரன் படத்தை பார்த்திருப்பிங்களே. அதில் கடைசி காட்சியில் வருவது போல பல சமயங்களில் நடந்ததை கேள்வி பட்டிருக்கிறேன். என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் பின்னால் வந்த ஒரு வாகனத்தின் வெளிச்சத்தில் என்னை கண்டு பிடித்து விட்டார் அந்த டிரைவர். லாரியை விட்டு கிழிறங்கி வந்து " அட மாணிக்கம் தம்பி! இந்த நேரத்தில எங்கே போயிட்டிருக்கே?" என்று கேட்டார் அவர். அவர் பெயர் முனுசாமி. எங்க தெருவுக்கு பக்கத்து தெருவில் வசித்து வந்தார். அவருடைய பையன் முத்துவும் நானும் பள்ளி தோழர்கள். அவர்கள் வீட்டுக்கு நான் நிறைய தடவை போயிருக்கிறேன்.

    " ஆமாம் தோள்ல யாரு பையன்?" என்று கேட்டார் அவர். " என்னோட தம்பி" என்று நான் சொன்னவுடன் உனக்கு ஒரு தம்பி இருக்கிறதா சொல்லவே இல்லையே. சரி சரி உன்னை பார்த்தா ரொம்ப களைச்சு போயிருக்கெ வா வண்டில ஏறு. இப்ப நான் சரக்கை ஏத்திகிட்டு வந்துட்டேன். நாளைக்கு திரும்பர போது உன்னை மதுரையில் உங்க வீட்டுல கொண்டு போய் சேர்த்துடறேன்." என்றார். அதற்கு நான் " நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். வீட்டுக்கு திரும்ப போறதா இல்லை" என்றேன். அவர் என்னை சற்று முறைத்து பார்த்து விட்டு " சரி வா வண்டில ஏறு. போய்கிட்டே எல்லா விசயமும் பேசலாம்" என்றார். நான் லாரியின் முன் சீட்டில் குமரேசனை படுக்க வைத்து விட்டு அவனுடைய கால்களை என் மடியில் போட்டுக் கொண்டு அமர்ந்தேன்.

    லாரியை ஓட்டிக்கொண்டே " எனக்கு எல்லா விசயமும் தெரியும் தம்பி. பரிட்சைல நீ பெயிலானதால உங்க அப்பா உன்னை ரொம்ப கோபிச்சுக்கறாருன்னு நம்ம பையன் சொன்னான். அதுக்காக பெத்தவங்களை விட்டு ஓடி வந்தது நல்லாயில்லை. நீ ஓடறது போதாதுனு உன் தம்பியை வேற கூட்டி வந்திருக்கிறயே உங்க அப்பா அம்மா மனசு என்ன பாடு படும். நான் சொல்றதை கேளு. நான் இந்த சரக்கு லாரியை கொடைக்கானலுக்கு கொண்டு போயிட்டிருக்கேன். அங்கே வந்து கொடைக்கானலை சுத்தி பாரு. நாளைக்கு சாயங்காலம் மதுரை திரும்பிடுவோம்" என்ற அவரிடம் உண்மைகளை கூறி அழுதுவிட்டேன். குமரேசனை தாயம்மளும் அவளுடிய கண்வனும் கடத்தி வந்து பிச்சைக்காரனா ஒரு ஏஜன்டிடம் விக்க போறாங்கனு கேட்டு அவனை எப்படியாவது அவங்க கிட்ட இருந்து காப்பாத்தணும்னுதான் இப்படி கிளம்பி வந்தேன் என்றேன். மேலும் அவரிடம் " அய்யா எனக்கு படிப்பு ஏறலை. தொழில் எதுவும் கத்துக்ககலை. வேலை வெட்டி பாத்து கல்யாணம் பண்ணிகிட்டு குழந்தைகளை பெத்து போட்டு ஒரு செக்கு மாடா வாழறது எனக்கு பிடிக்கலை. என்னால ஒரு நல்ல காரியம் பண்ன முடிஞ்சா பண்னனும்ங்கரதனால தான் இந்த பையனை தூக்கி வந்தேன். இவனுக்கு மூளை வளர்ச்சி குறைவு" என்றதும் அவர் ஸ்டீரிங் வீலிருந்து கையை எடுத்து தன் தலையில் அடித்துக் கொண்டார். என்னிடம் கோபமாக அவர் " நீ என்ன காரியம் பண்ணியிருக்கே? மூளை வளர்ச்சி இல்லாத பையனை எப்படி காப்பாத்தி குணப்படுத்த்தப் போற? இந்த பையனொட அப்பா அம்மா இவனை பிரிஞ்சு எத்தனை வேதனை படறாங்களோ? அவங்க போலீஸ்ல புகார் கொடுத்தா சீக்கிரமே போலீஸ் உன்னை பிடிச்சு ஜெயில்ல போட்டு பையனை அவங்க கிட்ட ஒப்படைச்சுடுவாங்க. இதெல்லாம் தேவையா உனக்கு?" என்றார்.

    அவர் கூறியதைக் கேட்டு அதைர்ச்சி அடைந்த நான் " அய்யா நீங்க தான் என்னை எப்படியாவது காப்பாத்தணும். கொடைக்கானல்ல எனக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுத்தீங்கனா நான் பொழைச்சுக்குவேன். குமரேசனை அவனோட அம்மா அப்பாகிட்ட சேர்த்தீங்கனா அவங்க அவனுக்கு சோறு போட்டு பாத்துக்கத்தான் முடியும். அவங்களுக்கு வேற குழந்தைகள் இருப்பாங்க. அவங்களையும் வளர்த்து இவனையும் குணப்படுத்த கஷ்டப் படுவாங்க. ஆனா எனக்கு அவன் தான் எல்லாம். என் உயிரைக் கொடுத்தாவது அவனை குணப்படுத்தி அவனுக்கு நல் வாழ்க்கை அமைத்து அவனோட பெற்றோர்கள்கிட்ட ஒரு நாள் ஒப்படைப்பேன்." என்று சொல்லி குமுறி குமுறி அழுதேன். அவர் ஒன்றும் பேசாமல் லாரியை செலுத்தலானார்.

    தொடரும்

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    தாயம்மாவின் சண்டை எனக்கு ஜீன்ஸ் பட ராதிகாவை நினைவு படுத்தியது

  7. #31
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தெளிவாத்தான் கேக்குறாரு பக்கத்து வீட்டு காரரு ..என்னதான் நல்லது பண்ணுறேன்னு கிளம்புனாலும் சிக்கல் வராதவரைக்கும் நல்லாத்தான் இருக்கும் வந்தா எல்லாம் இந்த சனியனால வந்ததுன்னு பழி அந்த குமரேசன் மேல போயிருக்கும் நல்லவேளை இதெல்லாம் நடக்கல ...சுத்தி இருக்கிறவங்க எல்லாம் நல்லவங்களா போயிட்டாங்க போல ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    தாயம்மாவின் சண்டை எனக்கு ஜீன்ஸ் பட ராதிகாவை நினைவு படுத்தியது

    நன்றி நண்பரே!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    தெளிவாத்தான் கேக்குறாரு பக்கத்து வீட்டு காரரு ..என்னதான் நல்லது பண்ணுறேன்னு கிளம்புனாலும் சிக்கல் வராதவரைக்கும் நல்லாத்தான் இருக்கும் வந்தா எல்லாம் இந்த சனியனால வந்ததுன்னு பழி அந்த குமரேசன் மேல போயிருக்கும் நல்லவேளை இதெல்லாம் நடக்கல ...சுத்தி இருக்கிறவங்க எல்லாம் நல்லவங்களா போயிட்டாங்க போல ...
    அருமையான பின்னுட்டத்திற்கு நன்றி நண்பரே!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    தம்பி அவன் தங்க கம்பி-6

    சிறிது நேர மவுனத்திற்கு பின் லாரியை செலுத்திக் கொண்டே முனுசாமி பேசலானார். " உன் நிலமை எனக்கு புரியுது தம்பி. பையனைக் கூட்டிகிட்டு வீட்டுக்கு போக முடியாது. போனா உங்க அப்பாவே உன்னை போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவாரு. பையனொட அப்பா அம்மா எங்க இருக்காங்கனும் உனக்கு தெரியாது. அதனால கொடைக்கானல்ல எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் மூலமா உனக்கு ஏதாவது வேலையும் த்ங்க இடமும் ஏற்பாடு பண்றேன். ஆனா ஒரு நிபந்தனை. ஒரு நாள் பையனோட பெற்றோர்கள் செய்தி தாள்ல பையனைக் காணோம்னு விளம்பரம் கொடுத்தாங்கன்னா நீ அவங்க விலாசத்துக்கு போய் பையனை அவங்க கிட்ட ஒப்படைச்சுடணும். அது வரைக்கும் போலீஸ் கண்ல படாம இருக்கறது உன் சாமர்த்தியம். என்ன விளங்குதா?" என்றார். நான் தலையை ஆட்டினேன்.

    வத்தலகுண்டு ஊருக்குள்ளே ஒரு டீக்கடை முன்னால் லாரியை நிறுத்தினார். " வா தம்பி டீ வாங்கி தறேன்" என்று சொல்லி வண்டியை விட்டு இறங்கினார்.குமரேசன் முழித்துக் கொண்டு மலங்க மலங்க பார்த்தான். நான் அவனுடன் கீழிறங்கி டீ கடைக்கு சென்றேன். கடையில் அந்த நள்ளிரவிலும் சினிமா பாட்டு ஒலித்தது. முனுசாமி கடைக்கார்ரரிடம் " பசங்களுக்கு பன்னு வாழப்பழம் டீ எல்லம் கொடுப்பா" என்று சொல்லிவிட்டு அங்கு வாளியிலிருந்த தண்ணிரில் முகம், கை கால்களை கழுவிக் கொண்டார். பன்னை கொடுத்ததும் வாங்கி அவசரமாக் குமரேசன் சாப்பிட்டான். பாவம் நல்ல பசி போலிருக்குனு நினைத்துக் கொண்டேன். எனக்கும் பசிக்கவே நானும் பன், பழங்களை சாப்பிட்டேன். டீயை வாங்கி குடிக்காமல் முனுசாமியையே பார்த்துக் கொண்டிருந்தான் குமரேசன். அவன் முகத்தில் பழைய சிரிப்பு தோன்றியது. முனுசாமி டீ க்லாசை ஆட்டி ஆட்டி உறிஞ்சு சாப்பிடுவதை பார்த்து டீயை என்னிடம் கொடுத்து முனுசாமியை நோக்கி கையை காட்டினான். எனக்கு அப்போது தான் விளங்கியது. சூடான டீயை ஆட்டி ஆட்டி ஆற வைத்து சிறிது சிறிதாக அவன் வாயில் ஊற்றினேன். அவன் அதை ரசித்து சாப்பிட்டான்.

    அங்கிருந்து கிளம்பியதும் என்னிடம் " நாம இன்னும் கொஞ்ச தூரத்தில மலைக்கு மேல ஏறப்போறோம். மேலே போக போக குளிர ஆரம்பிக்கும். இந்தா இந்த கம்பளியை போர்த்திக்கொ பையனுக்கும் போர்த்தி விடு" என்றார். அவரும் ஒரு கம்பளியை சுற்றிக் கொண்டு தலையில் மப்ளரால் முண்டாசு கட்டியிருந்தார். " உனக்கு உறக்கம் வந்தா தூங்கு" என்று சொல்லி விட்டு தனக்கு தெரிந்த தெம்மாங்கு பாடல்களை பாடலானார். குமரேசன் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். எனக்கு தூக்கம் வரவில்லை. லாரியின் ஹெட் லைட் வெளிச்சத்தில் ஓடி மறையும் வளைவு நெளிவான சாலையை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். கண்ணை விழித்த போது லாரி நின்று கொன்டிருந்தது வெளியே முனுசாமி பீடி புகைத்துக் கொண்டிருந்தார்.

    " அட முழிச்சுகிட்டயா? நாம கொடைக்கனலுக்கு அப்பவே வந்துட்டோம். இதோ இது எனக்கு தெரிஞ்ச க்ள்ப்பு கடை" என்று கையை காட்டினார். லாரி ஷண்முக விலாஸ் ஓட்டல் என்ற போர்டு தொங்கிய கடைக்கு முன்பாக நின்றிருந்தது. " கீழிறங்கி வா. பையனையும் எழுப்பு. பின்னால கக்கூஸ் இருக்கு. அங்க போயிட்டு பல் விளக்கிட்டு வா. பலகாரம் சாப்பிடலாம்" என்றார் அவர். குமரேசனை எழுப்பி கீழிறங்கி அவர் சொன்ன மாதிரி செய்துவிட்டு அவர் பின்னால் அந்த கடைக்குள் நுழைந்தோம். அங்கு கல்லாயில் நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து கழுத்தில் தங்க செயின் மின்ன முதலாளி அமர்ந்திருந்தார். " வாப்பா முனுசாமி இந்த தடவை எனக்கு என்ன கொண்டு வந்திருக்கே?" என்று கேட்டார் அவர். " சாமி உங்களுக்காக வற வழியில பண்ணைக்காடு தோட்டத்திலிருந்து செவ்வாழப்பளமும் ப்ள்ம்சும் கொன்டுவந்திருக்கேன் என்று சொல்லி அவரிடம் ஒரு குலை வாழப்பளத்தையும் ப்ள்ம்ஸ் பழங்களின் கூடையையும் கொடுத்தார் அவர்.

    " சாமி நீங்க எனக்கு ஒரு ஒத்தாசை பண்னனும். இந்த பசங்க எனக்கு ரொம்ப வேண்டிய பசங்க. மதுரைக்காரங்க தான். இந்த பெரிய பையனுக்கு ஏதாவது ஒரு வேலை போட்டு தாங்க ரொம்ப புண்ணியமா போகும்" என்றார் முனுசாமி. அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அங்கு வந்த வேலைக்கர கிழவி குனிந்து குமரேசனின் கன்னத்தை வருடி திருஷ்டி சுற்றி சொடக்கு போட்டாள். அதே நேரம் கடை முதலாளி " வேலை போட்டு தறேன். எனக்கும் எடுபிடி வேலைக்கு ஒரு பையன் தேவைப்படறான். உனக்கு தான் தெரியுமே இப்பொ சீசன் டைம். நிறைய சுற்றுலா பயணிகள் வறாங்க. நிறைய பேருக்கு நம்ம கடை சாப்பாடு பிடிச்சிருக்கு. அது சரி இவங்க எங்கே தங்க போறாங்க?" என்று கேட்டர் அவர். உடனே குமரேசனை கொஞ்சிக் கொண்டிருந்த அந்த கிழவி " சாமி பசங்க என் கூட தங்கிக்கலாம். நீங்க எனக்கு தங்கறதுக்கு கடைக்கு பின்னல ஒரு அறை கொடுத்திருக்கீங்களே அங்கே நான் தனியாதான் இருக்கேன்" என்றார். முனுசாமி சிரித்துக் கொண்டே " அப்புறம் என்ன பழம் நழுவி பால்ல விழுந்த கதையா போச்சு. மாணிக்கம் தம்பி நீ அத்ருஷ்டக்காரன்" என்றார்.

    தொடரும்

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  11. #35
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நல்லமனசுக்காரர்களுக்கு எல்லாமே நல்லதாய் நடக்கிறது. மாணிக்கமும் நல்ல மனசுக்காரனே....இனி வருவதை வாசிக்க ஆவலும் கூடுகிறது...தொடருங்கள் நண்பரே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #36
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மாணிக்கத்தின் நிலையைப் புரிந்துகொண்டு உதவிய லாரி ஓட்டுநரையும், தானிருக்கும் சிறு அறைக்குள் இன்னும் இரண்டு சிறார்களுக்கு தங்க இடமளித்த முதியவளையும் போன்ற நல்லவர்களின் இருப்புதான் வீட்டைவிட்டு வெளியேறிய மாணிக்கத்தை தவறான பாதையில் செல்லவிடாமல் தவிர்த்திருக்கிறது. மனநிலை தவறிய குமரேசனுக்கும் நல்வழி காட்டியிருக்கிறது. தெளிவான எழுத்துநடைக்குப் பாராட்டுகள். தொடருங்கள்.

Page 3 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •