Results 1 to 9 of 9

Thread: ஆனாலும் .......

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர்
    Join Date
    06 Apr 2003
    Posts
    1,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0

    ஆனாலும் .......

    உன் வாசல் வந்து
    நேசம் சொல்லிக் காத்திருக்கும்
    என் காதல்
    உன் காலடி பட காத்திருக்கிறது
    நீயோ செருப்பில்லாமல்
    பயணித்துக் கொண்டிருந்தாய்.....

    நீ பூவான நாளிலிருந்து
    என் நேசத்தை
    வேலியாக்கி உனக்கொரு
    காதல் பாதை அமைத்து
    கனவுகளோடு காத்திருந்தேன்...
    நீயோ தூங்க விடவுமில்லை
    தூங்க வைக்கவுமில்லை

    எப்படியாவது உன்னிடம்
    சேர்ப்பிப்பதற்காக எழுதிய
    கடிதங்கள்-உன் விரல்
    தொட்டு பிரிப்பதற்காக
    உறங்கிக் கொண்டிருந்தன...
    பத்திரமாக என் வீட்டு
    அலமாரியில்......

    உனக்கு தெரியாமல்
    உன்னிடமிருந்து எடுத்துப் போன
    சின்ன சின்ன பொருள்களுடன்
    வாழ்ந்து கொண்டிருந்தேன்
    பெரும்பான்மையாய் உன்னை
    மறந்து இருக்கும் நேரங்களில்....

    எல்லாமே விளையாட்டுதான்
    உனக்கு......
    கல் இடித்து ஏற்பட்ட உன்
    கால் காயமாகட்டும்....
    அதிகமாய் நீ நேசித்த உன்
    செல்ல நாய் செத்துப் போனதையும்....
    காதலைப் பிரித்து வெறிக் கூச்சலிடும்
    சினிமா வில்லனாகட்டும்...
    இன்னும் பிறவாகட்டும்...
    எல்லாமே விளையாட்டுதான்
    உனக்கு....
    என்னையே உருக்கி உன்
    மீது வைத்திருந்த
    என் காதலும் கூட....

    எப்படியாவது சொல்லி விட
    ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தன...
    உதடுகளும் மனசும்
    உன்னை நேசிக்கிறேன் என்பதை...
    சேர்ந்திருக்கும் நேரங்களில்
    எல்லா நேரங்களிலும்
    அவற்றை உணவாக்கி
    கொண்டிருந்தது நம்
    பாழாப்போன மௌனம்....

    ................................................
    ................................................

    இப்போதெல்லாம்
    உனக்கென இல்லையெனிலும்
    தினம் தினம் எழுதிக் கொண்டிருக்கிறேன்
    சில கவிதைகளை-சில ரத்தம் கசியும்
    ஞாபகங்களுடனும்
    படித்து பாதுகாத்து வைத்திருக்கும்
    என் மனைவிக்காகவும்.....
    Last edited by நிரன்; 06-01-2009 at 02:04 PM.
    இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
    ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
    - அன்புடன் லாவண்யா

  2. #2
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    அன்பே..
    எனக்கு உன் பார்வை வரம் வேண்டாம்...
    ஏனெனிலோ,
    பாடையில் போகும்
    மனிதனுக்கெதுக்கடி
    உன் பார்வை வரம்?



    பாராட்டுக்கள் லாவண்யா அவர்களே..
    Last edited by நிரன்; 06-01-2009 at 02:05 PM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    பேசவேண்டிய நேரத்துல பேசலைன்னா, இதுதான் கதி! நம்ம மனசுல இருக்கறதை அடுத்தவங்க அப்படியே புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்ப்பது எவ்வளவு தவறுன்னு பார்த்தீங்களா?

    லாவண்யாஜி, கவிதை நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ===கரிகாலன்
    Last edited by நிரன்; 06-01-2009 at 02:06 PM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    ஆனாலும்.. இந்த கவிதையைப் பாராட்டாமல் போனால் மனிதனே இல்லை நான்...

    பாராட்டுக்கள் லாவண்யா.
    Last edited by நிரன்; 06-01-2009 at 02:07 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாராட்டுகள் லாவண்யா அவர்களுக்கு....

    அன்று கடலில் பெய்த காதல் மழை
    இன்று கவிதை மேகமாய்
    மனவியின் மனதிலும்
    இந்த தமிழ்மன்றத்தின் முற்றத்திலும்....
    Last edited by நிரன்; 06-01-2009 at 02:08 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கவிதை லாவ்..
    Last edited by நிரன்; 06-01-2009 at 02:08 PM.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    எத்தனை நாட்கள் கழிந்தாலும், காதல் மட்டும் மாறாது. அதை எழுதும் வார்த்தைகளும் கசக்காது.......

    நன்றி லாவ்.......
    Last edited by நிரன்; 06-01-2009 at 02:09 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  8. #8
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    நன்றாக இருக்கிறது. மனதின் குரல் போல...இன்னும் தொடருங்கள்
    Last edited by நிரன்; 06-01-2009 at 02:10 PM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  9. #9
    இனியவர் பாலமுருகன்'s Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Chennai
    Posts
    579
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    காதல் திகட்டாதது...காதலின் வரிகளும்.... எழுதுங்கள் லாவன்யா...உங்கள் வரிகளும் எங்களுக்கு திகட்டியதே இல்லை..

    பாலா
    Last edited by நிரன்; 06-01-2009 at 02:10 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •