வாக்களிக்க..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27769
அன்பு நண்பர்களே!
மன்றத்தின் போட்டித்தொடரை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்ற நோக்கத்தில் உங்கள் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கவிதைப்போட்டி 22 ஐத் தொடங்குகின்றேன்.
கவிதைத் தலைப்பு...
பிடிக்காதவளாக இருந்துவிட்டுப் போ..
(பிடிக்காதவனாக இருந்துவிட்டுப் போ என்ற தலைப்பில் கவிதை எழுதினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.)
போட்டி பற்றிய உங்கள் கருத்துகளையும், சந்தேகங்களையும் போட்டி நெறிகளை மீறாதவாறு இங்கே தெரிவியுங்கள். அல்லது எனக்குத் தனிமடலில் சொல்லுங்கள்.
- கவிதைகளை வழக்கம் போல எனக்குத் தனிமடலில் அனுப்புங்கள்.
- அனுப்பும் கவிதைகளை போட்டி முடியும்வரை வேறெங்கும் பதியாதீர்கள்.
- போட்டிக்கு கவிதை அனுப்பியதை எங்கும் அடையாளப்படுத்தாதீர்கள்.
- கவிதைகள் 25 அடிகளைக் கொண்டிருப்பது விரும்பத்தக்கது.
- ஒருவர் ஒருகவிதையை மட்டும் அனுப்பி போட்டியின் தரத்தைப் பேண உதவுங்கள்.
- முடிந்தால் கவிதையின் கருவுக்கு ஏற்ற நிழல்படத்தை இணைத்து அனுப்புங்கள்.
- கவிதைகளை 14.08.2011 க்கு முன்னதாக அனுப்புங்கள்.
நன்றி.
Bookmarks