புகைப்படம் இல்லாத சலிப்பு வருதா? யாருப்பா உங்களை புகைப்படத்துக்கு போஸ் கொடுக்காம ஓரமா நிக்கச் சொன்னது? வந்து முன்னால் நில்லுங்க.... அடுத்த ஆல்பத்தில் ஜமாய்ச்சிடலாம்.
அமரப்பயணம் மிகவும் ரசித்துப் படிக்கிறேன். இந்தமாதிரி எழுத உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது. ஒவ்வொருவருக்கு ஒரு பாணி. அதில் உங்கள் பாணி அசத்தல்.
நன்றி தக்ஸ். தொடரட்டும் கலக்கல் பதிவுகள்!
உண்மையில் இந்தமாத நிழற்படம் உருவானதுக்கு உங்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும். சித்திரை வைகாசி மாத நிழற்படம் தயாரிக்கும் எண்ணம் நான்குநாள் முன்புவரையிலும் எனக்கு இல்லை.தொடர்ந்து நான்கு நிழற்படம் தயாரித்த சலிப்பினாலும், தொடர்கதை முடித்த அலுப்பினாலும் விட்டுவிட்டேன். அதனால்தான் நீங்கள் கேட்டிருந்தபோதுகூட யாராவது செய்யுங்கள் என்று சொல்லியிருந்தேன்.
ஆனால்... அமரனின் கல்யாணவைபோகத்தை என் வேண்டுகோளையும் ஒரு பொருட்டாய் மதித்து விரைவாகப் பதிவிட்டு முடித்தத் தன்மை கண்டு வியந்து உங்கள் வார்த்தையை மதித்து நானும் நிழற்படம் தயாரிக்க முனைந்தேன். ஒரே நாளில் முடிவானதால் அவசர அவசரமாக உருவான நிழற்படம் இது. அதனால் விடுபட்ட பதிவர்கள் மன்னிக்க.
சொல்வேந்தனின் தலையில் அம்மணிமகுடம் இருப்பதில் வியப்பென்ன? அதனால்தான் ஜொலிக்கிறீங்க...
அட, இந்த அளவுக்கு என்னை வாட்ச் பண்றீங்களா? நினைக்கவே பெருமையா இருக்கு. உங்கள் பாராட்டுகளால் உளம் மகிழ்கிறேன். ஆனா... இப்படியே சொல்லி எனக்கு ஐஸ் வச்சி வேற யாரும் செய்யாமல் தப்பிக்கலாம்னு நினைச்சிடாதீங்க.. கட்டாயம் நீங்களும் ஒரு மாத நிழற்படம் தயாரிக்கணும். இது என் அன்பான வேண்டுகோள் ஜானகி அக்கா....
நைஜீரியாவில் இருந்து ஈஃபில் டவரை எப்படிப் பார்க்கிறீங்க என்னும் வியப்பு எனக்கு.
என் விரல் தேயிறதைப் பத்திக் கவலையில்ல, தட்டச்சுப் பலகை அடிவாங்கிறதைப் பத்தி மட்டும் கவலைப்படுங்க.கரிசனத்துக்கு நன்றி நிவாஸ். (ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று தட்டச்சிலும் பயிற்சி பெற்றுத் தேறியவளாக்கும்)
யோசிச்சுப் பார்க்கிறேன்.. மனைவி கிரீடமாகவும் இருக்கிறாள் கால் செருப்பாகவும் இருக்கிறாள்.. சட்டையாகவும் இருக்கிறாள் டை-யாகவும் இருக்கிறாள்.. கோட்டாகவும் இருக்கிறாள். வாட்ச் ஆகவும் இருக்கிறாள் அலாரமாகவும் இருக்கிறாள். ஃபோன் ஆகவும் இருக்கிறாள். பெல்ட் ஆகவும் இருக்கிறாள். பேனாவாகவும் இருக்கிறாள். பர்ஸாகவும் இருக்கிறாள்.. கைப்பையாகவும் இருக்கிறாள்..கைக்குட்டையாகவும் இருக்கிறாள்.. சிலருக்கு முகமூடியாகக் கூட மனைவியே இருக்கிறாள்.
இப்படி நாம் அணியும் எதாகவும் அவளால் மாற முடிகிறது.
நம் உடை நமது அடையாளம் ஆகிவிடுவது போல அக்கம் பக்கத்தில் மனைவியின் முகமே நமது அடையாளமாக இருக்கிறது.
இவ்வளவு சொல்றேன்னு உடனே நெஞ்சு பெருமிதத்தில் நிமிர தலையை உயர்த்தி வெற்றிப் புன்னகை செய்யாதீங்க.. எல்லா மனைவிகளும் அப்படி இருக்கறதில்லை.
நல்ல உடை போட்டுகிட்டா கண்ணாடியைப் பார்த்து ஸ்டைல் பண்ணிக்கறதில்லையா? அதே மாதிரி நல்ல மனைவி அமைந்தவர்களும் அப்படி இப்படி முகத்தைக் கோணலாக்கிப் பார்த்து ஸ்டைல் செய்துக்கறது வழக்கம்தான்... கண்டுக்காதீங்க...
(இப்பதிவால் யார் மனமாவது சற்றேனும் வருத்தமடைந்தால் மன்னிக்க.. )
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks