Results 1 to 4 of 4

Thread: தேவன் வந்தான்!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Jun 2011
    Posts
    250
    Post Thanks / Like
    iCash Credits
    10,653
    Downloads
    0
    Uploads
    0

    தேவன் வந்தான்!


    தேவன் வந்தான்!
    अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
    ஒலி!
    எங்கிருந்தோ ஒலிக்கிறது!
    எதிரொலியும் மென்மையாக!
    வேதம். ரிக்வேதம்.
    ப்ரபஞ்சம் ஜனித்தது.
    வேத அத்யனனம் தொடர்கிறது.
    ஒளி!
    என்னே பிரகாசம்! சூர்யனின் தகிக்கும் சூடு! சந்திரனின் குளிர்ந்த நிலவு!
    அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!
    சாமகிரியைகள் எல்லாம் புதியவை. மங்கலமானவை. சாஸ்த்ரோக்தம்.
    எடுத்து வைத்து விட்டேன், குருநாதா!
    யாகசாலைக்குக் கோலம் போட்டுவிட்டேன்.
    செம்மண் கரையோரங்கள். வெள்ளைக்கோலங்கள், பிராணநாதா!
    புஷ்பமாலைகள் வகைக்கு ஒன்று, தொடுத்துக் கோர்த்து அடுக்கியிருக்கிறேன், அப்பா!
    முக்கனிகளும் கொணர்ந்தேன், தந்தையே! கூடை கூடையாக.
    ஸ்வாமி! நாங்கள் தான் அண்டை, அயல். அணிகள் பல கொணர்ந்தோம்; ஆபரணக்குவியல் பார்த்தீரோ! நவரத்னங்கள் கொட்டிக்கிடப்பதைக் கண்டீரோ! எல்லாம் சமர்ப்பணம்.
    சிஷ்யா! அக்னிதேவன் வந்தாரே. முகமன் கூறினாயோ?
    ஸ்வாமி! கடைந்துகொண்டு இருக்கிறோம்.
    अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
    எழுந்தருளவேண்டும், ஐயனே!
    நன்நிமித்தத்தீயே வருக.
    தெய்வத்திருமகனே வருக.
    அன்னை ‘ஸ்வாஹா’ வந்திருக்கிறாளோ!
    இருவரும் ஆசனத்தில் அமருக.
    அலங்காரங்கள், ஜோடனை, ஷோடசோபசாரங்கள், முகஸ்துதி, சாஷ்டாங்க நமஸ்காரம்.
    அக்னிதேவனுக்கு அதீதப் ப்ரீதீ! சிஷ்யா! மறுபடியும் எல்லாரும் தண்டனிடுவோம்.
    अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
    ஒரு பொறி பிறந்தது.
    பிறகு பறந்தது.
    தீ மூண்டது.
    अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
    கொழுந்து விட்டு எரிந்தது.
    ஸ்வாஹா: ஸ்வாஹா: ஸ்வாஹா: ஆஹூதி! பூர்ணாஹூதி!
    அக்னிதேவன் ஸ்வீகரித்துக்கொண்டார்.
    அக்னி தழுவ, தழுவ, முனகும் சப்தங்கள்.
    மற்றபடி நிசப்தம்.
    எனக்கு பசிக்கிறது.
    அம்மா! அப்பாவுக்கு பசிக்கிறதாம்.
    அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!
    அடுப்பில் உனக்கு வாசம். வா! சடுதியில் வா! அவருக்கு பசி தாங்காது.
    போஜனம்! தாம்பூலம்! அடுப்பில் பூனை! கணகணப்பும் உன் நல்வரவே!
    என்ன அங்கே ஹீனக்குரல்!
    அக்னி தேவன் யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார், தந்தையே!
    अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
    ஸ்வாமி! ரக்ஷிக்கணும்.
    அப்படியெல்லாம் பேசக்கூடாது. யான் சாமான்யன்.
    ஸ்வாமி! அடியேன் உங்கள் அகத்துக்கு எதிர்த்த வாடை.
    எஜமானன் வந்தார். என் அன்னை...
    தெரியுமே! அதனால் தான் அக்னி தேவன் யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார் போலும்!
    ஈஷ்வரோ ரக்ஷது!
    சாயுங்காலம்!
    சூர்யன் முழுதும் அஸ்தமிக்கவில்லை.
    சந்திரோதய வேளை.
    இருட்டவில்லை. மங்கிவிட்டது.
    ஸ்வாமி! அடியேன் உங்கள் அகத்துக்கு எதிர்த்த வாடை.
    சாகரம் சென்று வருகிறீர்களா?
    ஆம் ஸ்வாமி! அக்னிதேவன் வந்தார்.
    ஆற, அமர தழுவினார், என் அன்னையை.
    உன் அன்னை அங்கு செல்லவே இல்லை, அப்பனே!
    ஆம்! ஸ்வாமி! இல்லை, ஸ்வாமி!
    அக்னி! பிறகு ஜலம்! இனி நான் என் அம்மாவை காண முடியாது.
    அவள் உன்னுள் என்றும் வாழ்வாள். உனக்கும் நித்யவாஸ ப்ராப்தம்.
    अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
    ஒலி!
    எங்கிருந்தோ ஒலிக்கிறது!
    எதிரொலியும் மென்மையாக!
    வேதம். ரிக்வேதம்.
    ப்ரபஞ்சம் ஜனித்தது.
    வேத அத்யனனம் தொடர்கிறது.
    ஒளி!
    என்னே பிரகாசம்! சூர்யனின் தகிக்கும் சூடு! சந்திரனின் குளிர்ந்த நிலவு!
    அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!

    (இன்னம்பூரான்
    02 07 2011)

  2. Likes அனுராகவன் liked this post
  3. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    photon -இதுதான் பருண்பொருட்களின் தொடக்கமோ?

    வெப்பம் - இதுதான் சக்திகளின் மூலமோ?

    தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தை அளிக்கும் ஆதவனும் குளிர்வான் ஒருநாள்..

    வெடித்த சூப்பர்நோவாக்களும் ஒளிமங்கி கருந்துளையில் மறைந்தேகும் மறுநாள்..


    மகாவெடிப்பும்.... யாகநெருப்பு ஆகுதிகளும் தீ..

    அடுப்பில் சமைக்கக் கருவியாயும்
    அன்னை மரிக்க தகன ஊக்கியாகவும்.. தீ..


    சூடிருக்கும் வரை இயங்கும் சூத்திரம்
    மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும்....


    பாராட்டுகள் இன்னம்பூரான் அவர்களே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    தேவன் வந்தான்!
    अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
    ஒலி!
    எங்கிருந்தோ ஒலிக்கிறது!
    எதிரொலியும் மென்மையாக!
    வேதம். ரிக்வேதம்.
    ப்ரபஞ்சம் ஜனித்தது.
    வேத அத்யனனம் தொடர்கிறது.
    ஒளி!


    ஒலியில் இருந்து அருவம் உருவமாக ஒளியில் வளர்ந்தது ..... சிவனின் டமருவும் ( உடுக்கை ) மறு கையில் அக்னியும் கொழுந்துவிட்டு ஏறிய அவன் ஆட்டத்தில் அணுக்கள் பிறக்கிறது .... ஒன்று பலவாகி பலவும் ஒன்றாகி உருமாற்றம் காட்டும் வித்தகன் ஆண்டவனை பணிவோம்.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  5. Likes அனுராகவன் liked this post
  6. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அருமையான கவி..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •