Results 1 to 7 of 7

Thread: இங்கா...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0

    இங்கா...

    இங்கா...

    இதோ எங்கோ ஒரு அசௌகர்யம்
    ஆரம்பமாகி விட்டது
    இப்போது நெளிய ஆரம்பிக்க வேண்டும்
    மேலே அதென்ன ஒரு முகத்தையும்
    காணவில்லை
    சரி கொஞ்சமாக கத்திப்பார்ப்போம்
    வந்து விடுவாள்
    "இங்கூ... இங்கூ..."

    தலையை திருப்பி திருப்பி பார்த்தும்
    ஒன்றும் தெரியவில்லை
    இம்ஹூம் வருவதாக தெரியவில்லை
    அதற்குள் ரொம்ப வயிற்றை என்னமோ செய்கிறதே
    சரி வேறு வழியில்லை வேகமாக கத்த...
    உர்ரே...உர்ரே.....இம்ம்ம்...ம்மா...
    இங்கா....இங்கா....இங்கா...

    அட பதறியதித்து வருபவள்
    அவளே தான் என் தேவதை, அம்மா

    அச்சச்சோ பிள்ளைக்கு பசிக்குதா?
    இதோ அம்மா வந்துட்டேன்
    அழாத செல்லம் என்று
    இன்னும் என்னென்னவோ சொல்லி
    தூக்கி கொஞ்சினாள்
    பாலை வாயில் கொடுப்பதாய் தெரியவில்லை

    இரு தங்கம் பாட்டி இங்கா ஆத்துறாங்க
    இப்போ சாப்பிடலாம்
    என்றபடி தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டாள்
    இப்போ கொஞ்சம் அதென்ன? பசி... பரவாயில்லை
    அட திரும்பவும் என்ன
    இனி முடியாது
    மீண்டும் கத்த வேண்டும் போலிருக்கு
    அப்போதான் தருவாங்க
    ஆ...இங்கா...இங்கா...

    அப்போது பால் புட்டியின்
    முனை வாயில் செருகப்பட
    அப்பாடி ஒரு வழியா கொடுத்.....
    முடக் முடக் என்று குடித்த வேகத்தில்
    எல்லாம் மறந்து போயிற்று

    அட குடித்து முடித்து விட்டேன்
    இன்னும் இந்த அம்மா
    புட்டியை எடுக்க மாட்டேங்குறாளே?
    திரும்ப முயற்சி செய்த போது
    இன்னொரு கை தலையை
    நகர விடாதபடி பிடித்தது

    வாயையும் வெளியில் எடுக்க முடியல
    தலையையும் திருப்ப முடியல
    ஆனா நான் குடிச்சிட்டேனான்னு
    கூட பாக்க மாட்டேங்குறா...
    என்ன அம்மா இவ?
    சரி இப்படியே இன்னும்
    எவ்வளவு நேரம் இருக்கனுமோ?

    குழந்தை குடிச்சுட்டன் பாரு
    தூக்கி தோளில் போட்டுத்தட்டு
    ஏப்பம் விடட்டும்
    என்ற அந்த குரல்
    நல்ல வேளை சீக்கிரமே வந்தது.

    அடாடா குடிச்சிட்டியா
    சரி என்றபடி ஏப்பம் விட வைத்தாள்
    பின் மீண்டும் கொஞ்சி விட்டு
    படுக்கையில் போட்டு விட்டாள்
    துணியை மாற்றி துடைத்துவிட்டு

    மாவு அடிக்கும் போது
    கொஞ்சம் வாசம் வந்தது
    நல்ல நெடி மூக்கில் ஏறிவிட சச்சு இதென்ன?
    அய்யோ பிள்ளை தும்முறான் சளி இருக்குமோ?
    எதையோ எடுத்து தலையிலும் நெஞ்சிலும் தடவ
    இது என்ன வேறு வாசத்துடன் ஜில்லுன்னு இருக்கே
    கொலோன் தடவினா சளி சரியாகிடுமாம் தங்கத்துக்கு
    சொல்லிக்கொண்டே தேய்த்தாள்
    சளி இருந்தாத்தானே?

    பவுடர் மூக்கில் ஏறி தும்மினேன்னு இவளுக்கு ஏன் புரியல
    மக்கு அம்மா
    இன்னும் என்ன செய்யிறா?
    இந்த வெயில்ல கைக்கும் காலுக்கும் உறை போடுறாளே
    இனிமே குளிறாது நல்லா தூங்குங்க சரியா?
    மறுபடியும் முத்தம்

    மடியில் கிடத்தி...
    ஏன் இப்படி தட்டுகிறாள்?
    நானே தூங்குவேனே...
    இது என்ன கண்ணை மூடி இழுக்குதே
    சரி இம்ம்..தூங்குவோம்....

    ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் இங்கா...
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    குழந்தைத்தனமும் , தாயுள்ளமும் சேர்ந்து இது கவிதையா இல்லை வசன கவியா என்ற குழப்பத்தை தவிர்த்து ரசிக்க செய்தது .... அதிலும் அந்த மழலை மொழி .... தமிழினும் இனிது ......... ......... வாழ்த்துக்கள்
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நல்லவேளை, எந்தக் குழந்தையும் எதையும் நினைவில் வைத்திருக்கவில்லை. இல்லையெனில் முன்னதாகவே முதியோர் இல்லம் அனுப்பப்பட்டிருப்பார்கள் மூர்க்கமனம் படைத்தவர்களின் பெற்றோர்கள்! வித்தியாசமான சிந்தனை. நன்று அபி.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    நல்லவேளை....குழந்தைகள் பேச ஆரம்பிக்க கொஞ்ச மாதங்கள் ஆகின்றன....இல்லையென்றால்.......இதுமாதிரி கூவல்கள்தான் கேட்கும் !

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    குழந்தை மீது காட்டும் அன்பின் தொகுப்போ? அருமையான கவிதை ..அதுசரி இங்கா என்றால் என்ன அர்த்தம் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    இங்கே வா... என்பதன் சுருக்கமோ ?

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    அழகான சிந்தனை
    ரசிக்க வைக்கும் கவிதை

    சரி குழந்தைகளின் இயல்புகள் என்ன மொழியில் அமைக்கப் பட்டிருக்கும்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •