" போன்ல யாருங்க?" ஜானகி, தன் கணவன் சீதாராமனைப் பார்த்துக் கேட்டாள்.
" உன்னோட அப்பாதான் பேசுனாரு!"
" என்னவாம்?"
" உன்னையும் என்னையும் இந்த தீபாவளிக்கு வரச்சொல்லி உங்க அப்பா கூப்பிட்டிருக்காரு!"
" நீங்க என்ன சொன்னீங்க?"
" யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன்"
" இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? ரெண்டு பேரும் வர்றோம்னு சொல்லவேண்டியதுதானே?"
" அதுக்கில்ல ஜானு! இந்த தீபாவளிக்கு நம்ம பொண்ணு மாப்பிள்ளைய அழைக்கலாம்னு நினச்சுகிட்டு இருந்தேன். அதான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன்."
மீண்டும் செல்போன் ஒலித்தது. சீதாராமன் போனை எடுத்தார்.
"ஹலோ!"
" நான் தான் பேசறேன் மாப்பிள்ளை!"
" சொல்லுங்க மாமா!"
" இந்த தீபாவளிக்கு நீங்க ரெண்டு பேரும் வரவேண்டாம் மாப்பிள்ளை!"
" ஏன் மாமா?"
" சொல்றதுக்கே கொஞ்சம் சங்கடமா இருக்கு மாப்பிள்ள!"
" சும்மா சொல்லுங்க மாமா!"
" அது ஒன்னுமில்ல மாப்பிள்ள! இந்த தீபாவளிக்கு வரச்சொல்லி எங்க ரெண்டு பேரையும் என் மாமனார் கூப்பிட்டிருக்கார். அதான்!"
Bookmarks