Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: நட்பு..!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Lightbulb நட்பு..!!





    தீராது பேசி
    தீண்டிய நட்பொன்று..
    தீயாய் பறக்கிறாள்..
    காகிதத்தை இரையாக்க....

    பொழுதெல்லாம் பிரியாமல்..
    விழுதாகத் தொடர்ந்தவள்..
    தன் வீழ்ச்சிதனை சுமந்து
    தலைகாட்ட மறுக்கின்றாள்..

    நகை கொடுக்கும் அமுதவாய்க்காரி..
    நெஞ்செங்கும் நெருங்கியவள்..
    கல்யாணம் கண்டதும்
    கல்மனம் காட்டுகிறாள்..

    இருந்தாலும் நீயின்றி
    ஓர் நினைவும் இல்லையடி..
    வாழ்க்கைச் சுழற்சியிலே
    சந்திப்போமா சொல்லடி...!!

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பூமகள்!
    வாழ்க்கைச் சுழற்சியிலே
    சந்திப்போமா சொல்லடி...!!
    சொல்லடி இல்லாத
    வாழ்க்கைதான் ஏதடி
    சொல்லடி வீழாத
    வாயும்தான் ஏதடி..

    சொல்லடி தோழி.

    வார்த்தைகள் அல்ல
    வாழ்ந்து கொண்டிருக்கும்
    மனவானத்'தை...!!!

    நீ
    சிரிப்பை அடகு வைத்த
    சிற்றெறும்பாய் இருக்கக் கூடும்..

    நாளை
    அஞ்சாத வாசம் கொள்ள
    இன்று
    அஞ்ஞாத வாசம் கொண்டிருக்கக் கூடும்.

    ஆறுதலான அன்பு கூட
    கூறு போடும் நிலையெடுத்திருக்கக் கூடும்.

    தேங்கிய வெள்ளம் கடலாகும்
    கப்பல் காகிதம் தேடி
    ஓடும் துணிபு கொண்டிருக்கக் கூடும்.

    கூடும்.. கூடும்..
    கூடும் கூடும்.
    எல்லாம் கூடும்..!!!

    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    நட்புப் பின்னலில் விழுந்த விரிசல்
    மானம் போன வேதனை தரும்.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நட்பின் விலகல்...கவிதையின் கருவாய் இருந்தாலும்...சொல்லப்பட்டவை...ஈர்க்கும்படியாய் இல்லைம்மா பூ.

    தன் வீழ்ச்சிதனை, கல்யாணம் கண்டதும்....எதுவும் தெளிவாய் புரியாத காரணமாய் இருக்குமோ.

    வாழ்த்துக்கள் தங்கையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    என்ன சொல்ல?

    விரக்தியில் விழுந்த சிநேகமனம் கண்டு
    வேதனை கப்பிய பூமனம் ஒன்று
    நெகிழும் வரிகளில் நேசமனம் சொல்ல,
    அழகிய வரிகளால் அமரமனம் தேற்ற,
    மகிழ்வோடு காத்திருக்கிறேன்...
    பூமனம் குளிரும் நாள் பார்த்தும்,
    பூமணம் தவழும் கவி பார்த்தும்!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    நட்புக்காக அழகாக எழுதபட்டிருக்கும் கவிதை பிரிவை சொல்ல வரும் கவிதைக்கு முன்பு அந்த அழகான இரன்டு குழைந்த படத்தை போட்டது கவிதைக்கு மகுடம் வச்ச மாதிரி.
    Quote Originally Posted by பூமகள் View Post
    கல்யாணம் கண்டதும்
    கல்மனம் காட்டுகிறாள்..
    அது கல்மனம் அல்ல என்பதை புரியாத நட்புதான் கல்மனம்

    Quote Originally Posted by பூமகள் View Post
    வாழ்க்கைச் சுழற்சியிலே
    சந்திப்போமா சொல்லடி...!!
    ஆம் அவள் ஒரு சுழற்ச்சி முடிந்த பிறகு சந்திக்க வருவாள் அதற்குள் நீங்களும் ஒரு வாழ்கை சுழற்ச்சியில் சிக்கிவிட வாழ்த்துகிறேன்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Smile

    தோட்டத்தில் பூச்செடி ஒன்று
    மணமாலைக்கு பூ ஒன்று போக
    வாடும் காம்பு செடியோடு
    பூவின் பிரிவிலும் குற்றம் இல்லை
    காம்பின் ஏக்கத்திலும் குற்றம் இல்லை
    காலம் ஒன்றே அறியும் காரணம் தனை


    எப்போதோ நான் எழுதிய வரிகள்

    இறப்பதற்கு ஒரு நொடி முன்
    அந்த செவிலிப்பெண் சிரித்தாள் நடப்போடு
    இறக்கும் போதும் பிறந்த்து புது நட்(பு)பூ


    ஒருவர் போனால் பலர் இணைவார்கள் இந்த ரயில் பயணத்தில் கவலை படாதீர்கள் பூமகள்
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    @அமர்,
    கூடும் கூடுகட்டி
    குயிலிசைக் கவி பாடி
    பூவிதழ் விரிப்பில் ஆடி
    மனம் கொள்ளும் மாண்புக்கு என்னன்பு..!!

    @சிவாஜி,

    ஹ்ம்ம்.. இது பொதுக்கவிதையில்லை.. என் மனக்கவிதை.. ஆதலால் அர்த்தம் புரியாத புதிரில் நீங்கள்.. மன்னிக்கவும் அண்ணா..

    என் ஆற்றாமை கவிதை புரிய வாய்ப்பில்லை தான்..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    விமர்சித்து ஊக்குவித்த வாத்தியார் அண்ணாவுக்கும்,

    ஊக்கத்தோடு காத்திருக்கும் கீதம் அக்காவுக்கும் என் நன்றிகள்..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அருமையான கவிதை ரவி அண்ணா..

    காலச் சுழற்சியில் எத்தனை நட்புகள் வந்தாலும்.. பழைய நட்பின் மணம் தனியல்லவா??!!

    பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    முதல் எட்டு வரிகளில் உள்ள கருத்து புரியவில்லை.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    ஆடினோம் பாடினோம் கூடிபேசினோம்
    கவலை மறந் தோம் ...
    கால ஓட்டத்தில் பிரிந்தோம் சந்திக்கும்
    காலம் வரு மென்றே ...
    இடம் மாறி தொலைவுகள் கூடினாலும்
    நினைவுகள் பின் தொடரும் ....
    புதுநட்புகள் பல நம்முள் தோன்றினாலும்
    முதல்நட்பு என்றும் மாறாது ..
    இந்த பிரிவு நிரந்தரமல்ல மீண்டு
    மீண்டும் சந்திப் போம் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  12. #12
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    இந்த கவிதை படித்ததும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஞாபகம் வந்தது.

    [media]http://www.youtube.com/watch?v=KuBiwRqHkNw[/media]
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •