கோதண்டராமன் படுத்த படுக்கையாகக் கிடந்தார். பத்து நாட்களாக அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல், உடம்பு துரும்பாக மெலிந்து விட்டது.அன்றைய தினம் நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது.
நாடித்துடிப்பு மெல்ல, மெல்ல அடங்கிக்கொண்டே வந்தது. கால் பாதங்கள் ஜில்லிடத் தொடங்கின. கருவிழிகள் ஆடவில்லை. டாக்டர், நாடித்துடிப்பைத் தொட்டுப் பார்த்தார். அவருக்கு நம்பிக்கையில்லை. உறவினர்களை அழைத்து," சொல்ல வேண்டியவர் களுக்கு சொல்லி அனுப்பிவிடுங்கள். இன்று இரவு வரைக்கும் கூடத்தாங்காது" என்று சொன்னார். உறவினர்கள் எல்லோருக்கும் சொல்லி அனுப்பினார்கள்.
தான் சொன்னபடியே டாக்டர் கோதண்டராமன் அன்று இரவு 8 மணிக்குக் காலமானார்.
Bookmarks