Page 4 of 22 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 261

Thread: பூக்கள் பூக்கும் தருணம் - நிறைவுப்பகுதி

                  
   
   
  1. #37
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அச்சு அசலாய் பக்கத்துவீட்டு சம்பவம் போன்ற அதி அழகான விவரிப்பும், உரையாடல்களும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் சுபாவங்களும்...அடடா....அழகு.

    என் வீட்ல நடக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னதால....அம்மா பேரையும் எங்க வீட்டம்மா பேராவே வெச்சது எப்படீங்கம்மா.....

    தொடருங்க தங்கையே....ஆவலோட தொடர்ந்து வரேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    சிலர் இயல்பாகவே அப்படி இருப்பார்கள். சிலர் வலிய உருவாக்கியிருப்பார்கள். வலிந்து உருவாக்கியதெனில் என்றேனும் தன்னையறியாமலேயே கலைந்துவிடும் அல்லவா?
    என்னைப்பற்றி என்னைத் தவிர முழுமையாய் எவருக்கும் தெரியாது.
    ஒவ்வொரும் நிச்சயம் அப்படித்தான். அந்த எல்லைகள் மனிதரின் இயல்புகளுக்கு ஏற்ப கூடிக்குறையுமே அன்றி, நிச்சயமான ஒரு எல்லையை எல்லோர் மனதும் தடுப்பரணாக்கி வைத்திருக்கும். அரணுக்குப் பின்னால், எவருக்கும் எதுவும் தெரியாத சில விடயங்கள் நிச்சயம் இருக்கும்.

    மூன்றாவது பாகம்...
    சில பாடல்களை வாசிக்கும்போதே இசையாய் நமக்குள் ஒலிக்கும்.
    அந்தவகைப் பாடல்களில் ஒன்றோடு ஆரம்பித்த இந்தப் பாகம், மற்ற உறவுகள் சொல்லியதுபோல,
    பக்கத்து வீட்டு மதிலால் எட்டிப்பார்த்து ஒட்டுக்கேட்டது போல இருந்தது.
    நல்லவேளை யாரும் என் தோள் தொட்டுத் தட்டி என்ன பார்க்கின்றாய் எனக் கேட்கவில்லை.

    இப்பதிவைப் போடுவதற்கிடையில் நான்காம் பாகமும் வந்துவிட்டதால்,
    அதைப்பற்றி...
    கீதம்+அக்கா...
    ஒரு இளைஞனின் மனதில் அரும்பும் காதல் உணர்வுகளை மிகத் துல்லியமாக வடித்துவிட்டீர்கள்.
    பக்கத்துவீட்டுக்குப் பருவப்பெண் ஒருத்தி வருவதென்றாலே பற்றும் தீ. அந்தத் தீயை அணைக்குமா நியாயம் பேசிய சுந்தர் அநியாயத்துக்கு விடும் ஜொள்ளு நீர்...
    என்னதான் எதிரியாய் இருந்தாலும், என்னதான் பிடிக்கவில்லை என்றாலும் இந்தப் பொண்ணுங்க, உடையலங்காரம் மட்டும் விட்டுப் போவதில்லை.

    இன்னுமொன்றைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்...
    புதிதாக அறிமுகப்படுத்தும் பாத்திரங்கள் திணிப்பாக இல்லாமல், எப்போது வந்தன என்று எண்ணவைக்காமல், பார்வையில் மங்கலாக இருந்து பார்க்கையிற் துலங்கும் பாத்திரங்களாக அமைக்கப்பட்டிருப்பது மிகச்சிறப்பு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    கதையின் இயல்பான போக்கும், கதையைத் தொடர்ந்துவரும் விமரிசனங்களும் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன...பாராட்டுக்கள்.
    [ கதையின் ஊடே சித்திரை மாதத்துச் சித்திரமும் வருமோ....]

  4. #40
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    ஆஹா அழகுங்க,

    காதல் பறவை சிறகடிக்கிறது, இளமைத்துள்ளல் ஆங்காங்கு எதார்த்தமாய் அழகாக, ஆழமாக உணரமுடிகிறது.

    //ஜாக்லின் என்றபோது வாய்க்குள் கல்கண்டு உருளுவதுபோல் இருந்தது//

    இதுபோன்ற சிலவரிகளில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை
    சிரிப்பு வருதா உங்களுக்கு? உங்களுக்குப் பிடிச்சப் பேரைச் சொல்லிப்பாருங்க.... உங்களுக்கும் வாய்க்குள் கல்கண்டு உருளும். எதிரில் கல்கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அச்சு அசலாய் பக்கத்துவீட்டு சம்பவம் போன்ற அதி அழகான விவரிப்பும், உரையாடல்களும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் சுபாவங்களும்...அடடா....அழகு.

    என் வீட்ல நடக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னதால....அம்மா பேரையும் எங்க வீட்டம்மா பேராவே வெச்சது எப்படீங்கம்மா.....

    தொடருங்க தங்கையே....ஆவலோட தொடர்ந்து வரேன்.
    அண்ணி பேரும் அதுதானா? அடடா, இப்போதே சுந்தரின் அம்மாவுக்குப் பெயர் மாத்திடறேன். இல்லையென்றால் என்னால் சுதந்திரமாக எழுதமுடியாது.

    தொடர்ந்துவந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி அண்ணா.

    Quote Originally Posted by ஜானகி View Post
    கதையின் இயல்பான போக்கும், கதையைத் தொடர்ந்துவரும் விமரிசனங்களும் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன...பாராட்டுக்கள்.
    [ கதையின் ஊடே சித்திரை மாதத்துச் சித்திரமும் வருமோ....]
    பாராட்டுக்கு நன்றி ஜானகி அம்மா.

    (சித்திரை மாதத்துச் சித்திரமா? ஒருவரே தொடர்ந்து வரைந்தால் ரசிக்காது. அதனால் எனக்கு கொஞ்ச காலத்துக்கு ஓய்வு. )

  5. #41
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    என்னைப்பற்றி என்னைத் தவிர முழுமையாய் எவருக்கும் தெரியாது.
    ஒவ்வொரும் நிச்சயம் அப்படித்தான். அந்த எல்லைகள் மனிதரின் இயல்புகளுக்கு ஏற்ப கூடிக்குறையுமே அன்றி, நிச்சயமான ஒரு எல்லையை எல்லோர் மனதும் தடுப்பரணாக்கி வைத்திருக்கும். அரணுக்குப் பின்னால், எவருக்கும் எதுவும் தெரியாத சில விடயங்கள் நிச்சயம் இருக்கும்.

    மூன்றாவது பாகம்...
    சில பாடல்களை வாசிக்கும்போதே இசையாய் நமக்குள் ஒலிக்கும்.
    அந்தவகைப் பாடல்களில் ஒன்றோடு ஆரம்பித்த இந்தப் பாகம், மற்ற உறவுகள் சொல்லியதுபோல,
    பக்கத்து வீட்டு மதிலால் எட்டிப்பார்த்து ஒட்டுக்கேட்டது போல இருந்தது.
    நல்லவேளை யாரும் என் தோள் தொட்டுத் தட்டி என்ன பார்க்கின்றாய் எனக் கேட்கவில்லை.

    இப்பதிவைப் போடுவதற்கிடையில் நான்காம் பாகமும் வந்துவிட்டதால்,
    அதைப்பற்றி...
    கீதம்+அக்கா...
    ஒரு இளைஞனின் மனதில் அரும்பும் காதல் உணர்வுகளை மிகத் துல்லியமாக வடித்துவிட்டீர்கள்.
    பக்கத்துவீட்டுக்குப் பருவப்பெண் ஒருத்தி வருவதென்றாலே பற்றும் தீ. அந்தத் தீயை அணைக்குமா நியாயம் பேசிய சுந்தர் அநியாயத்துக்கு விடும் ஜொள்ளு நீர்...
    என்னதான் எதிரியாய் இருந்தாலும், என்னதான் பிடிக்கவில்லை என்றாலும் இந்தப் பொண்ணுங்க, உடையலங்காரம் மட்டும் விட்டுப் போவதில்லை.

    இன்னுமொன்றைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்...
    புதிதாக அறிமுகப்படுத்தும் பாத்திரங்கள் திணிப்பாக இல்லாமல், எப்போது வந்தன என்று எண்ணவைக்காமல், பார்வையில் மங்கலாக இருந்து பார்க்கையிற் துலங்கும் பாத்திரங்களாக அமைக்கப்பட்டிருப்பது மிகச்சிறப்பு...
    உங்கள் கருத்துகளோடு ஒத்துப்போகிறேன், அக்னி. ஒருவர் நம்மிடம் வெளிப்படையாக இருப்பதாக நம்மை நம்பவைக்கலாம். ஆனால் வெளிப்படையாக இருக்கிறாரா என்பதை அவர் மட்டுமேதான் அறியமுடியும்.

    தொடர்ந்து தரும் ஊக்கமிகுப் பின்னூட்டங்களுக்கு நன்றி அக்னி. இதுபோன்ற விமர்சனப் பின்னூட்டங்களால் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகம் உருவாகிறது. மிகவும் நன்றி அக்னி.

  6. #42
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by கீதம் View Post
    அடுத்த கதை எப்போ? எப்போ? அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தீங்களே... கதையைப் பதிச்சதுக்கப்புறம் இந்தப்பக்கம் ஆளையேக் காணலையே... சரி, நேரமில்லை போலன்னு நினைச்சேன். உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அன்பு.
    நிதி வருட கடசி. கணக்கு சரிபார்க்கிறது அது இது என்று அலுவலகத்தில் கொஞ்சம் வேலை பழு. வீடு வந்தால் வீட்டிலிருக்கும் பெரியவர் விடமாட்டார்.

    கதையை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை. தொடருங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #43
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நிதி வருட கடசி. கணக்கு சரிபார்க்கிறது அது இது என்று அலுவலகத்தில் கொஞ்சம் வேலை பழு. வீடு வந்தால் வீட்டிலிருக்கும் பெரியவர் விடமாட்டார்.
    சரி. கிடைக்கும் நேரத்தில் படிங்க. உங்கள் வீட்டு வி.ஐ.பிக்கு என் அன்பான ஆசிகளைச் சொல்லிடுங்க.

    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    கதையை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை.
    உங்ககிட்ட இல்லையென்றால் என்ன? எங்கயாவது கொஞ்சம் கடன் வாங்கியாவது சொல்லுங்க.

  8. #44
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    (5)

    முகிலினங்கள் அலைகிறதே
    முகவரிகள் தொலைந்தனவோ
    முகவரிகள் தவறியதால்
    அழுதிடுமோ அது மழையோ


    முகிலினத்தின் அழுகையை அகிலமே அறிகிறது. ஆனால் இங்கொருவனின் அழுகையை அவனைத் தவிர எவருமே அறியவில்லை. இவனும் முகவரி தொலைத்தவன்தான். தனக்கான தேவதையின் முகவரி. விலாசம் தவறி வேறொருத்தியின் வாயிலில் போய் நின்று ஏமாறிய வேதனையை நினைத்து ஊமைக்கதறல் கதறுகிறான்.

    சுந்தருக்கு நினைக்க நினைக்க மனம் ஆத்திரத்திலும் ஆற்றாமையிலும் கொதித்தது. ஜாக்கி ஏன் அப்படி செய்தாள்? தன்னைப் பற்றிக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாளா? எல்லாம் திமிர்! என்னை வேண்டுமென்றே வெறுப்பேற்றினாளா? ச்சீ... இனி அவளைப் பற்றிக் கனவிலும் நினைக்கக் கூடாது.

    அவள் யார்? அவளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? பார்த்த மாத்திரத்தில் வருவதெல்லாம் காதலாகுமா? இதற்குமுன் வகுப்புத்தோழி ஸ்வாதியிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. அப்போதும் அதையெல்லாம் காதல் என்றே நினைக்கத்தோன்றியது. அதன்பின் ராஜேஷின் தங்கை பாமா... அஞ்சனா ஆண்ட்டியின் மகள் செளமி... எல்லாம் கொஞ்சநாள் இருந்தது. அதன்பின் போன இடம் தெரியவில்லை. இதுவும் அதுபோல் ஒரு இனக் கவர்ச்சிதான்.

    இதற்குமுன் இப்படியொரு பெண்ணைப் பார்த்ததில்லை என்பதால் அவனறியாமல் எழுந்த ஒரு ஈர்ப்பு. அவ்வளவே... இதுவும் கொஞ்சநாளில் காணாமற்போகக் கூடியதுதான். இன்று அது சட்டென்று நிகழ்ந்ததால் ஒரு அதிர்ச்சி. அதுதான் இப்படிக் கண் கலங்க வைத்துவிட்டது. ச்சீ.... இவளல்ல என் தேவதை! வேறெங்கோ இருக்கிறாள் எனக்கான... எனக்கு மட்டுமேயான என் தேவதை! நிச்சயமாய் இவளாக இருக்க முடியாது.

    என்னென்னவோ சமாதானம் சொல்லி மனதைத் தேற்றினான். அதுவும் சமர்த்துக் குழந்தையாய் கைகட்டி வாய்பொத்திக் கேட்டுக்கொண்டது. அன்று அத்தனை உற்சாகமாய் அவளைத் தொடர்ந்த மனம் இப்படிப் புலம்புமளவுக்கு என்னதான் நடந்தது. நடந்ததை மறுபடியும் நினைவுநாடாவில் சுழற்றினான்.

    "ஹா…..ய், கம்……மின், வாங்கோ..... உக்காருங்கோ..."

    ஜாக்கியின் அக்காதான் வரவேற்றாள். மழலைத் தமிழ் கொஞ்சியது. இவளும் பொம்மை போலவே இருந்தாள். ஜாக்கியை ஒரு குழந்தைப் பொம்மை என்றால் இவளை ஜவுளிக்கடை பொம்மை எனலாம். அவள் தன்னை சூசன் என்று அறிமுகம் செய்துகொண்டாள். பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டார்கள்.

    புதிதாய்க் குடிவந்த வீடு போலவே தெரியவில்லை. சாமான்கள் அனைத்தும் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அலங்காரப் பொருட்கள் கூட அலமாரியில் அழகாய் அணிவகுத்தன. பீங்கான் தட்டுகளும், கண்ணாடிக் கோப்பைகளும் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருந்தன. திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த வித விதமான மதுக்கோப்பைகளும் அங்கு இருந்ததைப் பார்த்த அம்மாவின் பார்வையில் கலவரம் தெரிந்தது.

    பாட்டியும் பெரிய பெண்ணுமே பேச்சில் கலந்துகொண்டார்கள். ஜாக்கி தொலைக்காட்சி முன் அமர்ந்து ஏதோ ஹிந்தி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஜாக்கியின் அம்மாவிடம் பெரிய அளவில் உற்சாகம் காணப்படவில்லை. வீடு மாற்றும் வேலைகளால் அவள் அதீதமாக களைத்துப்போயிருக்கலாம் என்று தோன்றியது. வரவேற்றுவிட்டு உள்ளே சென்றவளை அதன்பின் கண்ணில் காணவே இல்லை.

    பாட்டி மற்ற எல்லாரையும் விட நன்றாகவே தமிழ் பேசினாள். கேக்கும் ஜூஸும் கொடுத்தாள். அம்மா தொடவில்லை. விரதம் என்று பொய் சொன்னாள். மற்றவர்கள் எடுத்துக்கொண்டனர்.

    சுந்தரின் கவனம் முழுவதும் ஜாக்கியிடமே இருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லயித்தபடி கண்ணாடிக் குவளையில் பழரசத்தை உறிஞ்சிக் குடித்த அழகில் சொக்கினான். அறைக்குள் பாட்டியிடம் எதையோ கேட்டு அவர் தர மறுத்தபோது அவர் கழுத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடியே கெஞ்சியதை அவன் இருந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது. இன்னும் குழந்தை போல் இருக்கிறாளே என்றெண்ணி வியந்துகொண்டிருந்தபோதுதான் அவன் வந்தான்.

    ஒல்லியாக, உயரமாக இருந்தான். ஜீன்ஸும் டீ ஷர்ட்டுமாக ஸ்டைலாக இருந்தான். ஹிப்பி போல் தலைமயிரை வளர்த்திருந்தான். சிரிக்கும்போது அழகான பல்வரிசையுடன் தெரிந்த இளஞ்சிவப்பு ஈறுகள் அவனுடைய வசீகரத்தைக் கூட்டின. சூசனின் வருங்காலக் கணவன் லீ என்று அவனை அறிமுகப்படுத்தினார் ஆண்ட்ரூ. அவன் வந்ததுமே எல்லோர் முன்னிலையிலும் சூசனின் கன்னத்தில் சம்பிரதாய முத்தம் பதித்துப் பின் அவளது இடுப்பைத் தன் கரங்களால் வளைத்துப் பிடித்தபடியே உள்ளே அழைத்துச் சென்றான்.

    சித்ரா சங்கோஜத்துடன் நெளிய அம்மா வீட்டில் வேலையிருக்கிறதென்று சித்ராவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

    அப்பா நாகரிகம் கருதி அமர்ந்திருக்க, சுந்தரும் வேறு வழியில்லாமல் இருந்தான். மேலும் ஜாக்கியை ரசிக்க இது நல்ல வாய்ப்பாகவும் தெரிந்தது. இதுபோல் அவள் வீட்டில் அமர்ந்து, இயல்பாக இருக்கும் அவளைத் தரிசிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என்பது தெரியாத நிலையில் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவவிட மனமில்லை.

    சற்று நேரத்தில் லீ வந்து தொலைக்காட்சியின் முன் அமர்ந்து ரிமோட்டில் சானல்களை மாற்றத் தொடங்கினான். அதுவரை பாட்டியிடம் ஏதோ வம்பு செய்துகொண்டிருந்த ஜாக்கி ஓடிவந்து அவன் கையிலிருந்த ரிமோட்டைப் பிடுங்க முயற்சி செய்ய....அவன் தர மறுத்து இரு கைகளிலும் மாற்றி மாற்றி வைத்துப் போக்குக் காட்ட... இவள் அவன்மேல் விழுந்து பிடுங்க.... சரி, சின்னப்பெண்தானே என்று விடவேண்டாமா? பதிலுக்கு இவன் அவள் கையிலிருந்து ரிமோட்டைப் பிடுங்குகிறேன் என்று ஜாக்கியைத் திமிறத் திமிறக் கட்டியணைத்துக் கன்னாபின்னாவென்று அவள் மேல் விழுந்துகொண்டிருந்தான். ஜாக்கியோ செல்லச்சிணுங்கல் சிணுங்கியபடியும் ‘நோ…. நோ….’ என்று சத்தமிட்டபடியும் அவனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள்.

    சுந்தருக்கு ஜாக்கியின் மேல் கோபம் வந்தது. விட்டுத் தொலையவேண்டியதுதானே... இப்படிப் பலவந்தப் படுத்துகிறான், இவள் என்னவோ நாய்க்குட்டியுடன் விளையாடுவதுபோல் சிரித்துக்கொண்டிருக்கிறாளே.... இவளுக்கு இதெல்லாம் தவறு என்று யாரும் சொல்லிப் புரியவைக்க மாட்டார்களா? ஆமாம், அவன் எல்லோருக்கும் முன்னால்தானே இத்தனையும் நடத்துகிறான்!

    சுந்தர் ஆண்ட்ரூவைப் பார்த்தான். அவரோ அப்பாவுடன் மிகவும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். பாட்டி, சூசன் யாரையும் காணவில்லை. இவர்கள் கண்டுகொள்ளாதது அவனுக்கு வசதியாக இருக்கிறது. அந்த நிமிடத்திலிருந்து சுந்தருக்கு லீயைப் பிடிக்காமல் போனது.

    வெறுப்போடு பக்கத்திலிருந்த மாகஸினைப் புரட்டிவிட்டு நிமிர்ந்தவன் கண்ட காட்சி அவனை தடாலடியாகத் தலைகுப்புறத் தள்ளியது. தொலைக்காட்சியில் ஏதோ ஹிந்திப்படம் ஓடிக்கொண்டிருக்க, ஜாக்கி, லீ அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடி ஓரத்தில் அமர்ந்து விழாமலிருக்கும்பொருட்டு அவன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டுக்கொண்டு ரசித்துப் படம் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இதற்குமேல் தாங்காது என்று அவன் கிளம்ப … நேரமாகிவிட்டதென்று அப்பாவும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

    வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவின் கேள்விநேரம் துவங்கிவிட்டது.

    "இவ்வளவு நேரம் என்ன பண்ணிகிட்டிருந்தீங்க ரெண்டுபேரும்? போனோமா வந்தோமான்னு இருக்கணும்னு சொல்லிட்டு என்னவோ உறவுக்காரங்க மாதிரி மணிக்கணக்காப் பேசிட்டு வரீங்க?

    "சும்மாதான்.... ஆபிஸ் பத்திப் பேச்சு வந்திச்சு... பிள்ளைங்க படிப்பு.... அது இதுன்னு நேரம் போயிடுச்சி"

    "சரி, மிஸ்ஸி மறுபடி வந்துச்சா?"

    அம்மா குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டாள்.

    "அந்தம்மாவுக்கு நிஜமாவே உடம்புக்கு முடியலையாம் பானு. எதோ தூக்க வியாதியாம். இருந்தாப்புல இருந்து தூங்கிடுவாங்களாம், சமைக்கும்போது தூங்கிடுவாங்களாம், சாப்பிடும்போது தூங்கிடுவாங்களாம், பேசிகிட்டிருக்கும்போதே அப்படியே உக்காந்தமேனிக்கு தூங்கிடுவாங்களாம். வைத்தியமெல்லாம் செஞ்சுபாத்தும் பலனில்லையாம். பத்து பன்னிரெண்டு வருஷமா இப்படித்தான் இருக்காங்களாம். பாவமா இருக்கு."

    "இன்சோம்னியாவாப்பா?" சித்ரா கேட்டாள்.

    "இல்லம்மா... அது ராத்திரியில தூக்கம் வராத வியாதியில்ல... இதுக்குப் பேரு என்னமோ சொன்னாரு... மறந்திடுச்சி... சுந்தர்.... அது என்ன வியாதின்னு சொன்னாரு?"

    "எ... எது?"

    "அது கெட்டுது போ... என்னடா... உனக்குமா? அதான்... மிஸ்ஸிக்கு ஏதோ வியாதின்னு பேர் சொன்னாரே..."

    "நான் கவனிக்கலையேப்பா..."

    "சரி, ஏதோ ஒண்ணு.... அது ஒரு வியாதி... அவ்வளவுதான்."

    "அதான் அந்தம்மா சுரத்தே இல்லாம இருந்துச்சா? நான் பாக்கும்போதே நினைச்சேன்."

    "பாட்டியம்மாதான் வீட்டு வேலை முழுக்கச் செய்யிறாங்களாம், இந்தப் பொண்ணுங்களை வளர்த்ததும் அவங்கதானாம். அவர் சம்சாரம் உணர்ச்சிவசப்படக் கூடாதாம். சந்தோஷமா இருந்தாலும் துக்கமா இருந்தாலும் சட்டுனு சொன்னா அதிர்ச்சியில மயக்கம் போட்டுடுவாங்களாம். அதனால அந்தம்மாகிட்ட எதையுமே சொல்லுறதில்லையாம். என்ன கொடுமை பாரு...கேக்கவே மனசு கனத்துப் போச்சு..."

    "இப்படிக் கூடவா வியாதி வரும்? ஆனாலும் இத்தன வருஷமா அந்தப் பாட்டியம்மா மருமகளுக்கு சேவை செய்யிறாங்கன்னா நிச்சயம் பெரிய விஷயம்தான்."

    சுந்தருக்கு எதுவும் கவனமீர்க்கவில்லை. சிந்தனை முழுவதையும் ஜாக்கியே ஆக்கிரமித்திருந்தாள். அவள் மீது விருப்பும் வெறுப்பும் மாறி மாறி வந்து அலைக்கழித்தது.

    "அந்தப் பையனைப் பாத்தீங்களா? ஆளும் தலையும், எனக்குப் பாக்கவே என்னவோ போல ஆயிட்டு. வயசுப்பொண்ணை வேற கூட்டிட்டுப் போய்ட்டோமேன்னுதான் சட்டுனு கிளம்பிவந்துட்டேன். அவன்தான் அவங்க மாப்பிள்ளையாமா? அந்தப் பொண்ணுக்குப் போயும் போயும் இவனையா பிடிச்சிருக்கு?"

    "பானு, சத்தமாப் பேசாதே.... அவங்க காதுல விழுந்திடப்போவுது....."

    "எனக்கெதுக்கு வம்பு? இன்னும் பத்துப் பதினொரு மாசம் தானே? சகிச்சுக்கறேன்."

    அம்மா முடிவே செய்துவிட்டாளா? சுந்தருக்கும் ச்சீ என்றுதான் இருந்தது. சந்தனம் என்று நினைத்துச் சாக்கடையில் விழ இருந்தோமே என்று நினைத்துக்கொண்டான். ஆனாலும் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாய் ஒரு எண்ணம் தோன்றி அடிக்கடி அவனை அலைக்கழித்தது. தன்னை அழவைத்த அவள்மேல் கோபம் வந்தது. கோபத்தை எழவிடாமல் அவளது சிரித்தமுகம் கண்முன் வந்து பாடாய்ப்படுத்தியது.

    தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
    சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
    செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
    என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
    கண்ணீரில் தாலாட்டினாள்…
    என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
    கண்ணீரில் தாலாட்டினாள்…

    ஓ நெஞ்சே…..
    ஓ நெஞ்சே….. நீதான் பாடும் கீதங்கள்
    ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்


    (தொடரும்)
    Last edited by கீதம்; 25-07-2011 at 10:30 PM.

  9. #45
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    முதலில் ஒரு கோப்பில் இத்தொடரில் வரும் பாடல்கள் அனைத்தையும் சேமிக்க வேண்டும்.

    இப்பாகத்தினை வாசிக்கையில் சுந்தரின் மனநிலை மாற்றம் என் மனதிலும் மாறி மாறிப் பிரதிபலித்தது...

    தொடர்கின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    ஒருதலைக் காதலில் பலருக்கு ஏற்ப்படும் அனுபவம்தான் இது, ஆனால் அந்த வலி மிகவும் கொடுமையானது, அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

    மிகவும் சுவாரசியமாக உள்ளது

    தொடருங்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  11. #47
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பணிப்பளு, பயணத்தால் விட்டவற்றை எல்லாம் இனி கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வேண்டும்.

    பிரபல எழுத்தாளர்களைப் போன்று ஒரு எழுத்தாளுமை உங்களிடம் இருக்கிறது. கதையை சொல்லும் கைவண்ணமும் உங்களிடம் இருக்கிறது.

    பொருத்தமான பாடல்வரிகள் மனதை வருடுகின்றன. வாய்ப்பிருக்கும் நேரங்களில் கதையை தொடர்ந்து வாசிப்பேன். தொடருங்கள்.

    என் மனம் கனிந்த வாழ்த்து.

  12. #48
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    ம்ம்ம் ... எனக்கு இந்த சுந்தரை பார்க்க பாவமாய் இருக்கிறது . பாவம் இந்த பசங்களை பொண்ணுங்க இப்படி படுத்த கூடாது ( உங்களையும் சேர்த்துதான் அக்கா ,,, ஒரு பையன் மாட்டினான் என்பதற்காக இப்படி அழ விடகூடாது ) .... அப்புறம் எங்க செண்டம் எடுக்குறது .... கடவுளே சுந்தருக்கு ஒரு நல்ல வழி காண்பி....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

Page 4 of 22 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •