ம்ம்ம் இதுதான் காதல் .... ஆழமான, அழுத்தமான காதல் ... அருமையாக போகிறது கதை .... ஒரு இல்லறத்தில் இது போல ஒரு கண்ணீர் , கலகலப்பு இல்லாவிட்டால் அது இனிக்காது.... தொடர்ந்து கீதம் பாடுங்கள் அக்கா ....
ம்ம்ம் இதுதான் காதல் .... ஆழமான, அழுத்தமான காதல் ... அருமையாக போகிறது கதை .... ஒரு இல்லறத்தில் இது போல ஒரு கண்ணீர் , கலகலப்பு இல்லாவிட்டால் அது இனிக்காது.... தொடர்ந்து கீதம் பாடுங்கள் அக்கா ....
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
பக்கத்து வீட்டில் நடப்பதை பைனாகுலரில் பார்த்து எழுதுகிறீர்களா என்ன...? இயல்பாக இருக்கிறது...தொடருகிறோம்
கசப்பும், இனிப்பும் போல கூடலும், ஊடலும் குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் என்பதை அழகாகக் காட்டிவிட்டீர்கள்! தொடரட்டும் உங்களது படைப்புகள்!
நான் பதிய நினைத்ததை சற்று முன்னதாக நீங்கள் பதிந்துள்ளீர்கள்.
மிக மிக எளிமையான நடையில் உங்களது எழுத்து பயணிக்கிறது. கணவன் மனைவிக்கிடையான சம்பாசனைகள் முதல் நண்பர்களிடையான சம்பாசனைகள் மற்றும் அவர்களிடையே உள்ள திரை மறை அன்நியோன்யம் போன்றவற்றை தெளிவாக உங்களது எழுத்து படம்பிடித்துக்காட்டுகிறது. தொடருங்கள்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அன்பு, இங்கு பக்கத்து வீட்டில் நடக்கிறதெல்லாம் தமிழ் மன்றத்தில் எழுதும்படியாவா இருக்கும்? உங்களுக்குத் தெரியாதா என்ன? நீங்களும் கேக்க நினைச்சேங்கறீங்க?
அடுத்த கதை எப்போ? எப்போ? அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தீங்களே... கதையைப் பதிச்சதுக்கப்புறம் இந்தப்பக்கம் ஆளையேக் காணலையே... சரி, நேரமில்லை போலன்னு நினைச்சேன். உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அன்பு.
பாத்திரங்களின் வடிவமைப்பும், தன்மையும் எழுத்துகளில் மூலம் இயலப்பாக கண்முன்னால். சம்பவங்களின் வர்ணிப்புகள் பிரமாதம்.
தொடருங்கள்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
ஜானகியம்மா....அது பக்கத்துவீட்ல நடக்கிற கதையில்ல...எங்க வீட்ல நடக்கிற கதை...அது எப்படி ஆஸ்த்திரேலியா வரைக்கும் போச்சுன்னுதான் ஆச்சர்யமா இருக்கு.
அழகான குடும்பம், காதல் வாழும் இல்லம்....இத்தனை சந்தோஷமும்தொலையப்போகிறதா....சுந்தரின் ஃப்ளாஷ்பேக் என்ன சொல்லப்போகிறது..
செமையான ஆவலைத் தூண்டிவிடுகிறது கதையும், எழுத்தும். தொடருங்க தங்கையே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
(4)
வாழவைக்கும் காதலுக்கு ஜே!
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே!
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே…
அம்பு விட்ட காமனுக்கும் ஜே…
வாசம் உள்ள பூவெடுத்துத் தூவி
நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே…
உற்சாகமாய்ப் பாடலை ஹம்மிங் செய்தபடி கம்ப்யூட்டர் வகுப்பிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்த சுந்தருக்கு, தெருமுனையில் திரும்பும்போதே வீட்டுவாசலில் ஒரு ஸ்கூட்டரும், ஒரு அழகான லேடீஸ் சைக்கிளும் கண்ணில் தென்பட, யாரோ வந்திருப்பது புரிந்தது. யாராயிருக்கும்?
அக்காவுக்குத் தோழிகள் இருந்தாலும் சைக்கிளில் வீட்டுக்கு வருமளவு பக்கத்தில் இல்லை. வேறு யார்? யாராவது வீடு பார்க்க வந்திருக்கிறார்களா?
குடித்தனக்காரர்களைத் தீர்மாணிப்பதில் அம்மாவுக்குதான் பிரதான உரிமை இருந்தது, இரண்டுநாள் முன்புவரை! இப்போது அது பறி போய்விடும் அபாயத்தில் இருந்ததால் அம்மா கடுப்புடனே இருந்தாள். பிரார்த்தனையெல்லாம் செய்துகொண்டிருந்தாள்.
அம்மாவின் பிரார்த்தனை பலித்ததா? அப்பாவின் நன்றிக்கடன் நிறைவேறியதா? நடந்தது என்ன என்றறியும் ஆவல் உந்த வேகமாக வந்தான்.
பக்கவாட்டிலிருக்கும் படிகளில் ஏறத்தலைப்பட்டவன், மேற்படிகளிலிருந்து பேச்சுக்குரல்கள் வழிய...இறங்குபவர்களுக்கு வழிவிட்டு கீழேயே நின்றுகொண்டான்.
அப்போதுதான் அந்தத் தேவதையைப் பார்த்தான். படிகளில் இறங்குபவளைப் பார்க்க, வானுலகத்திலிருந்து மிதந்து இறங்குவதுபோல் தோன்றியது. மாவினால் செய்ததுபோல் மொழு மொழுவென்றிருந்த அவள் பார்ப்பதற்கு ஒரு பொம்மை போலவே இருந்தாள். அவள் அணிந்திருந்த குட்டைக் கவுன் அவளது கைகளை முழுமையாகவும் கால்களை முக்கால்பாகமும் மறைக்காதுவிட்டிருந்தது. கவுனில் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள், பார்த்துக்கொண்டிருந்த சுந்தரின் மனதுக்குள் இடம்பெயரத் துடித்தன.
கன்னக்கதுப்புகளும் இளஞ்சிவப்பு வண்ண இதழ்களும் நெருக்கத்தில் அவனை நிலைகுலையவைத்தன. அருகில் வருமுன்னே ஆளைக் கிறங்கடித்த மணம் ஒரு வித புது அனுபவத்தைத் தந்தது. சீராய் வெட்டப்பட்ட கேசம் தோளிலும் முகத்திலும் புரண்டு காற்றோடு கபடி விளையாட.... கைகளால் மிக லாவகமாக ஒதுக்கியபடி அவனைக் கடந்தாள். இவள் யார்?
அவளுக்குப் பின்னாலேயே அப்பாவுடன் பேசியபடி அந்த மனிதரும் இறங்கிக்கொண்டிருந்தார். தோற்றத்தையும் பேச்சையும் வைத்து அவர்தான் துரை என்பது புரிந்தது. கீழ்விட்டுக்கு குடிவரப்போகிறவர் இவர்தானா? அப்படியென்றால் அந்தத் தேவதையும் வருவாளே... இவளையா தவறவிடத் துணிந்தேன்? என்ன மடத்தனம் செய்யப் பார்த்தேன்?
அப்பா இவனை அவருக்கு அறிமுகம் செய்துவைக்க, அவர் தன்னை 'ஆண்ட்ரூ’ என்று அறிமுகம் செய்து சிநேகமாய்க் கை குலுக்கினார். தேவதையின் பெயர் தெரியவில்லை. அவர் அவளை பேபியென்றே அழைத்தார். ஒருவேளை பேபி என்பதே அவள் பெயரோ? இவனை குறுகுறுக்கவைத்துவிட்டு அவள் சென்றுவிட்டாள்.
அவள் போக்கில் லேசான அலட்சியம் தென்படுவதுபோல் தோன்றினாலும் அதெப்படி முன்பின் அறியாத ஒருவனிடம் அவள் இயல்பாயிருக்கமுடியும் என்று மனதைத் தேற்றிக் கொண்டான். அவர்கள் புறப்படும்வரை அப்பா வாசலில் நின்று வழியனுப்பிவிட்டு வந்து சொன்னார்.
"வீடு பிடிச்சிருக்குன்னு சொல்லி அட்வான்ஸும் கொடுத்திட்டாரு, இனி உங்கம்மாவை எப்படி சமாளிக்கிறதுன்னுதான் தெரியல. மூஞ்சைத் தூக்கிவச்சிகிட்டு மாடிரூம்ல உக்காந்திருக்கா..."
இவனுக்கு அப்பாடா என்றிருந்தது. எங்கே அம்மாவின் பிடிவாதத்தால் அந்த அழகுப் பதுமையை இழந்துவிடுவோமோ என்று உள்ளுக்குள் தவித்துக்கொண்டிருந்தான். தேவதை வரும் நாளை எதிர்நோக்கி மனம் குதூகலிக்கத்தொடங்கியது.
மொட்டை மாடியிலிருந்த ஒற்றை அறையில் அம்மா தனியாக அமர்ந்திருந்தாள். தன் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என்று புலம்பினாள். அம்மாவின் புலம்பல் தாளாமல் அப்பா சொன்னார்.
"இங்க பார், பானு, அவங்க இப்போதைக்கு வரட்டும், ஒரு ஆறுமாசம் பாப்போம், சரிப்பட்டு வரலைன்னு வை, சித்ரா கல்யாணத்தைக் காரணம் காட்டி முழு வீடும் தேவைப்படுதுன்னு சொல்லி காலி பண்ணச் சொல்லிடுவோம், சரியா?"
அம்மாவுக்கு அதில் உடன்பாடு என்பதை அவளது பிரகாசித்த முகம் சொன்னது.
"எத்தனைப் பேராம்?"
"இவர், இவர் சம்சாரம், ரெண்டு பொண்ணுங்களாம்... இப்ப வந்தது சின்னப் பொண்ணாம், +2 படிக்குதாம், பெரிசு எங்கயோ வேலைக்குப் போவுதுன்னாரு. அப்புறம் இவரோட அம்மா...வயசானவங்களாம். மொத்தம் அஞ்சு பேர்தான். பெரிய பொண்ணுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணமாகப் போவுதுன்னும் சொன்னார்.”
"மிஸ்ஸி ஏன் வரலையாம்?"
"யாருக்குத் தெரியும்? புருஷனுக்குப் பிடிச்சிருந்தாப் போதும், புருஷன் சொல்லே வேதவாக்குன்னு நினைக்கிறாங்களோ என்னவோ?"
அம்மா முறைத்தாள்.
"முறைக்காதே... நீ கூடத்தான் வந்து வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லலை. உனக்கு முடியலைன்னு சொல்லி சமாளிச்சேன். அதே மாதிரிதான் அவரும் சொன்னாரு, சம்சாரத்துக்கு கொஞ்சம் முடியலைன்னு. வீட்டுக்கு வீடு வாசப்படிதானே..."
அடுத்த ஞாயிறு சாமான்கள் வந்திறங்கின. சுந்தர் மாடி பால்கனியிலிருந்தபடியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"சுந்தர், அவங்களுக்கு எதுவும் உதவி தேவையான்னு கேட்டு வாயேம்பா"
"எதுக்குப்பா? அவரே ஆளுங்களக் கூட்டி வந்திருக்காருப்பா"
"அதுக்கில்ல, காப்பி, கீப்பி வேணுமான்னு..."
"ஆமா, காப்பி குடுத்து உபச்சாரம் பண்ணி விருந்து வைங்க. பால் கூடக் காச்சல... அந்தப் பாட்டியம்மா ஆம்லெட் போட்டுகிட்டிருக்கு" அம்மா சொன்னாள்.
"ஆம்லெட்டா? உனக்கெப்படித் தெரியும்?"
"ம்? நானும் சித்ராவும் டீ போட்டு எடுத்திட்டுப் போய் குடுத்துட்டுதான் வரோம், மதியத்துக்கு வெளியில ஆர்டர் பண்ணிட்டாங்களாம்."
அம்மா சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு உள்ளே செல்ல, அப்பா அம்மாவைப் பார்த்தப் பார்வையில் பெருமிதம் பொங்கிவழிந்தது.
காலையிலிருந்து களேபரமாயிருந்த வீடு மாலை நாலு மணியளவில் ஓய்ந்திருந்தது. தஸ்ஸுபுஸ்ஸென்ற ஆங்கில உரையாடல்களும், ஆட்களிடம் அதை அங்கே வை, இதை இங்கே வை என்னும் அரைகுறைத் தமிழில் ஏவல்களும், சாமான்களை ஏற்றி இறக்கும் தடாபுடாவென்ற சத்தங்களும் அடங்கிவிட்டிருந்தன.
சுந்தர் மொட்டை மாடி அறையிலேயே பழியாய்க் கிடந்தான். அவனும் சித்ராவும் எந்த இடையூறும் இல்லாமல் படிப்பதற்காகவே கட்டப்பட்ட அறை அது. சித்ரா பெரும்பாலும் கீழேயே இருந்துவிடுவாள். அதுவும் கல்லூரி முடித்தப் பின் இந்த அறைப்பக்கமே வருவதில்லை. மொத்தமாய் இவனுடையது என்றாகிவிட்டது.
தனித்திருந்தாலும், அறை தனக்கென்று ஒரு சிறிய பால்கனியைக் கொண்டிருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தால் வீட்டின் முன்வாயிலும், இடதுபக்கத் தோட்டமும் தெரியும். பக்கத்திலிருக்கும் ஒட்டு மாமரத்தின் தயவாலும், முன்புறமிருந்த பலா மரத்தின் தயவாலும் அறையும் பால்கனியும் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். படிக்க இதமான சூழல் நிலவும்.
இன்று சுந்தர் அறையை விட்டு வெளியேறாது தஞ்சமடைந்திருந்ததற்குக் காரணம் படிப்பல்ல, தேவதை. அவள் வெளியில் வரும் நேரமெல்லாம் மனம் இறக்கைக் கட்டிப் பறப்பதை உணர்ந்தான். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றியது. எத்தனையோ பெண்களுடன் பேசிப் பழகியிருந்தும் இவளிடத்தில் கண்ட ஈர்ப்பு இதுவரை அறியாததாக இருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டே எதிரில் அமர்ந்திருக்கத் தோன்றியது. மற்றப் பெண்களைப் பார்த்தால் ரசித்துவிட்டுக் கடந்துசெல்லும் மனது, இவளைவிட்டு அங்குலமும் நகர மறுத்தது. ஆனால் அவள் பெயர் கூடத் தெரியவில்லையே...
"சுந்தர்... கொஞ்சம் கீழ வரியா?" சித்ரா குரல் கொடுத்தாள்.
"என்னக்கா?"
"அப்பா கூப்புறாங்க"
கீழே வந்தபோது இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
தேவதை அவன் வீட்டு வரவேற்பறையில்!
அவளைப் பார்த்தக் கணத்தில் மீண்டும் மனம் ஜிவ்வென்று உயரப் பறந்தது. அவனைப் பார்த்து புன்னகையை உதிர்த்தாள். அவன் பார்த்த மற்றப் பெண்களைப் போல் நெளியவில்லை, நாணவில்லை, இயல்பாயிருந்தாள். ஆனால் இவனைத் தடுமாறவைத்தன அவளது பழுப்பு நிறவிழிகள்.
“ஹாய், சுந்தர், ஐயாம் ஜாக்கி.... ஜாக்லின்”
அவள் கை நீட்டியபோது, அதை எதிர்பாராதக் காரணத்தால் சற்றே தடுமாறிப் பின் கை நீட்டினான். பூனைக்குட்டியின் உடலைப்போல் மெத்தென்றும் வெதுவெதுப்பாகவும் இருந்தன அக்கரங்கள். சுந்தருக்கு அது கனவு போல் இருந்தது.
"ஐயாம் சுந்தர்"
"யேஸ், ஐ நோ" அவள் அழுத்தமாய்ச் சொன்னபோதுதான் தவறு புரிந்து அசடு வழிந்தான். அவள் பொருட்படுத்தவில்லை. வெகு நாட்களுக்குப் பின் வந்திருக்கும் விருந்தாளி போல் அனைவரிடமும் சரளமாகப் பேசினாள். சித்ராவை 'சித்ரா' என்றே அழைத்தபோது அக்கா அதிர்ந்து பின் புன்னகைத்தாள்.
சித்ராவின் சுடிதார் எங்கு தைத்தது என்று வினவினாள். சுவரில் மாட்டியிருந்த கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் பற்றிக் கேட்டாள். அலமாரியில் இருந்த நாட்டியப்பெண்ணை ஆட்டிவிட்டு மகிழ்ந்தாள். நாற்காலியில் உட்காரும்போது கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். அம்மா அவளறியாமல் முகத்தைச் சுழித்தாள்.
சுந்தருக்கோ அவளது ஒவ்வொரு செய்கையும் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது. அவளை விடவும் அவள் பெயர் இனித்தது. ஜாக்லின்... ஜாக்கி... ஜாக்கி! ஜாக்கியை விடவும் ஜாக்லின் என்றபோது வாய்க்குள் கல்கண்டு உருளுவதுபோல் இருந்தது.
கனவில் மிதந்திருந்தவனை அப்பாவின் குரல் உலகுக்குக் கொண்டுவந்தது.
"அப்பவே துரை எல்லாரையும் வீட்டுக்கு வரச்சொன்னாரு. நான் தான் குடி வந்த களைப்பு போகட்டும், இன்னொருநாள் வரோம்னு சொன்னேன். கேக்கல, இப்ப பொண்ணை அனுப்பிவிட்டிருக்கார், அழைச்சிட்டு வரச்சொல்லி! குடும்பத்தாரை அறிமுகம் பண்ணனுமாம். வா... கூப்புட்ட மரியாதைக்கு ஒரு எட்டு பாத்துட்டு வந்திடலாம். சித்ரா.... அம்மா கெளம்பியாச்சாம்மா?"
"ஆச்சுப்பா...."
தயாராகி வந்த அம்மாவைப் பார்த்து, அப்பா அதிர்ச்சியானார்.
"ஏ... பானு, என்ன பட்டுப்புடவையெல்லாம் கட்டிட்டு வரே?"
"இது பட்டு இல்லீங்க, பட்டு மாதிரி, முதத் தடவையா போறோம், கொஞ்சம் நல்லா இருக்கட்டுமேன்னுதான் கட்டினேன். நீங்க எல்லாரும் இப்படியேவா வரீங்க? கொஞ்சம் நல்லதாப் போட்டுகிட்டு வந்தா என்ன?"
"சரிதான், கீழ்வீட்டுக்குப் போறதுக்கு இத்தனை முஸ்தீபா? சும்மா தலையைக் காட்டிட்டு வந்திடுவோம்."
அப்பா அம்மாவின் சம்பாஷனையை ஜாக்கி ரசித்துக்கொண்டிருந்தாள். ஜாக்கியை சுந்தர் ரசித்துக்கொண்டிருந்தான்.
படிகளில் இறங்கும்போது ஜாக்கி சித்ராவின் தோள்களில் கையைப் போட்டுக்கொண்டாள். அவளது நடவடிக்கைகளில் தெரிந்த தோழமையுணர்வு வெகுவாக ரசிக்கவைத்தது. இதோ வந்துவிட்டாள் உனக்கான தேவதை என்று ஆணித்தரமாய் அழுத்திச் சொன்னது. அந்தக் கரங்கள் தன் கழுத்தைச் சுற்றி வளைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று உள்மனம் உற்சாகத்தில் கூத்தாடியது.
நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது…
(தொடரும்)
Last edited by கீதம்; 25-07-2011 at 10:25 PM.
ஆஹா அழகுங்க,
காதல் பறவை சிறகடிக்கிறது, இளமைத்துள்ளல் ஆங்காங்கு எதார்த்தமாய் அழகாக, ஆழமாக உணரமுடிகிறது.
//ஜாக்லின் என்றபோது வாய்க்குள் கல்கண்டு உருளுவதுபோல் இருந்தது//
இதுபோன்ற சிலவரிகளில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks