எதற்காகவும்
காத்துக்கிடக்கவில்லை...
நேரத்தை பற்றிய
அவசியமேதுமில்லை...
கண்கள் எங்கும்
சுழலவில்லை...
காற்றில் அசையும்
காகித துண்டையே
வெரித்துக்கொண்டிருந்த்து,
என் கண்களை கவர்ந்ததால்
காகிதத்தின்
வெற்றி களியாட்டம்
அடங்கவில்லை....
சுற்றி எல்லாமே
சுழன்றுகொண்டிருந்த்தது.,
"திருவிழாக்கூட்டம்"....
என் ரத்த ஓட்டத்தை
மிகையாய் சுழற்றும்
ஒரு காந்தம்.,
திருவிழாக்கூட்டத்திலும்
கொளுசுச்சத்தத்தை மட்டும்
பிரித்துத்தரும் சாகசம்.,
என் பேச்சுத்திறமையை
பூட்டி வைக்கும்
சிறைச்சாலை.,
மெதுமெதுவாய்
என் அசைவுகளை
கரைக்கும்
விழிக்கறையான்.,
கடந்து போகிறாள்.,
கடந்து போகிறாள்.,,
கண்கள் திரும்பவில்லை..,
உள்மன அழுகையை
மிதித்து மிதித்து
அழுத்தி வைக்கும் கண்ணீர்
அடிமனதில்
அடைத்துக்கொண்டதால்
சோம்பலாய் கிடக்கிறது
கண்கள்..,
ஒருதலைக்காதலாய்
காகிதம் இன்னமும்
ஆடிக்கொண்டிருக்கிறது
என்
ஆழம் புரியாமல்.,
அவள்
என்னைப்பார்க்கத்தான்
வந்திருப்பாளோ.,,,
-குளிர்தழல்
Bookmarks