Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: போதிமரம்!

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    போதிமரம்!



    அன்றாடம் நான் கடந்துசெல்லும் பாதையோரம்
    என் கவனமீர்க்கவென்றே
    காத்திருக்கும் அம்மரத்தைப் பற்றி நீங்கள்
    அறிந்திருக்க வாய்ப்பில்லை.
    என்னிடம் அறிவித்திராத தன் பெயரை
    அது உங்களிடம் சொல்லியிருக்க நியாயமுமில்லை..
    அதன் பெயர் அறியுமுன்னரே
    அதனுடன் இணக்கமாகிவிட்டது என் மனம்.

    உரிபொருளுளை உடலாய்க் கொண்ட
    அடிபெருத்த அம்மரம்…..
    இலையுதிர்காலத்தில் இலைகளை உதிர்ப்பதில்
    அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை.
    பதிலாய்…
    தன் உடல்பற்றிய ஆடையை
    உருவி எறியும் குறும்புக் குழந்தை போல்
    பட்டையுரித்து பரவசமாய் நிர்வாணம் காட்டி
    நிறுத்துகிறது தன்னிருப்பை.

    அரைகுறையாய் சட்டையுரித்து
    அலுங்காமற்செல்லும் அரவம்போன்று
    பதைப்பூட்டும் அது....

    பழந்துணிகளைப் படுதாக்களாய்த் தொங்கவிட்டு
    மறைப்பிலே மானம் காக்கும்
    பாதையோர வசிப்புகளின்
    பரிதாபத்தை நினைவுறுத்தும் சிலநேரம்…

    நைந்த கந்தலினும் மிகுதியாய்
    மனதின் நலங்கெட்டுத்திரிபவனை
    பேரதிர்வோடு நினைவுபடுத்தும் சிலநேரம்….

    உரித்தலுக்குப் பின்
    ஏமாற்றும் வெங்காயம் போல்
    சுவாரசியம் கெடுக்காமல்…
    நித்தமும் பட்டையுரித்து
    நவசித்திரங்களாய் விசித்திரத் தோற்றம் காட்டி,
    அன்றாடக் கவலைகளையும்
    அதுபோல் அப்புறப்படுத்தச் சொல்லித்தந்து
    உணர்வுகளைப் புதுப்பிக்கிறது,
    கடந்துசெல்லும் கணந்தோறும்!
    Last edited by கீதம்; 22-05-2011 at 10:13 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    பாதையோர மரமும் உங்களுக்கு போதிமரமாகக் காட்சியளிப்பது...அதிசயமே....உங்கள் பார்வையின் விசாலத்தையும், தீட்சிண்யத்தையும் கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை.....எனக்கும் ஏதாவது போதிமரம் தென்படுகிறதா என்று இனி கவனிக்கிறேன்...!

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    ஒரு மரத்தை இந்த கோணத்திலும் பார்க்கலாம் என்பதை உங்கள்
    கவிதைமூலம் அறிந்து கொண்டேன்
    கவிதை அருமை
    வாழ்த்துகள்

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஜானகி View Post
    பாதையோர மரமும் உங்களுக்கு போதிமரமாகக் காட்சியளிப்பது...அதிசயமே....உங்கள் பார்வையின் விசாலத்தையும், தீட்சிண்யத்தையும் கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை.....எனக்கும் ஏதாவது போதிமரம் தென்படுகிறதா என்று இனி கவனிக்கிறேன்...!
    சகமனிதர்கள் வாய்திறந்து அறிவுரை சொல்வார்கள். இயற்கையோ காட்சிகள் மூலமே கற்றுத் தருகிறது. கவனிக்க ஆரம்பித்தபின் கண்ணில் படுவதெல்லாம் போதிமரமே. பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அவர்களே.

    Quote Originally Posted by முரளிராஜா View Post
    ஒரு மரத்தை இந்த கோணத்திலும் பார்க்கலாம் என்பதை உங்கள்
    கவிதைமூலம் அறிந்து கொண்டேன்
    கவிதை அருமை
    வாழ்த்துகள்
    மரத்தின் படத்தைப் பார்த்தீர்கள் அல்லவா? என் கவனம் ஈர்த்ததில் ஆச்சரியமென்ன? பின்னூட்டத்துக்கு நன்றி முரளிராஜா

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சில மனிதர்களும் மரம் போன்றவர்கள்.... உதாரணத்திற்கு தமிழக மக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்... அவர்கள் மரம் போன்றவர்கள். அவர்களிடமிருந்து எவ்வளவு உரிக்கமுடியுமோ அவ்வளவு உரிக்கப்படும்!! ஆனால் மரப்பட்டை உரித்தாலும் மரத்திற்கு சேதாரமில்லை அல்லவா.. சிலசமயம் இலையுதிர்காலத்தில் உதிர்வதில்லை... மக்களின் வாய் குறுகியது! வார்த்தைகளை உதிர்ப்பதில்லை.
    அதேபோல, பாவப்பட்ட எல்லாரையும் இப்படி பொருத்திப் பார்க்கலாம்.

    மரத்தைக் கண்டபிறகு கிளை பெரியது, ஊஞ்சல் ஆடலாம், இலைகள், சருகுகள், நிழல், வேர் என்றெல்லாம் பழைய சங்கை ஊதாமல் புதிதாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மரத்தைப் பார்த்தால் இந்தியாவில் உள்ள மரம் போலத் தெரியவில்லை. ஆனாலும் பிரம்மாண்டமாக உள்ளது. கல்லும் கதை சொல்லும் என்பார்கள். தங்களுக்கு மரம் சொன்ன பாடம் அருமையான கவிதையாக உருவெடுத்துள்ளது.

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    சில மனிதர்களும் மரம் போன்றவர்கள்.... உதாரணத்திற்கு தமிழக மக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்... அவர்கள் மரம் போன்றவர்கள். அவர்களிடமிருந்து எவ்வளவு உரிக்கமுடியுமோ அவ்வளவு உரிக்கப்படும்!! ஆனால் மரப்பட்டை உரித்தாலும் மரத்திற்கு சேதாரமில்லை அல்லவா.. சிலசமயம் இலையுதிர்காலத்தில் உதிர்வதில்லை... மக்களின் வாய் குறுகியது! வார்த்தைகளை உதிர்ப்பதில்லை.
    அதேபோல, பாவப்பட்ட எல்லாரையும் இப்படி பொருத்திப் பார்க்கலாம்.

    மரத்தைக் கண்டபிறகு கிளை பெரியது, ஊஞ்சல் ஆடலாம், இலைகள், சருகுகள், நிழல், வேர் என்றெல்லாம் பழைய சங்கை ஊதாமல் புதிதாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்!
    பாராட்டுக்கு நன்றி ஆதவா.

    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    மரத்தைப் பார்த்தால் இந்தியாவில் உள்ள மரம் போலத் தெரியவில்லை. ஆனாலும் பிரம்மாண்டமாக உள்ளது. கல்லும் கதை சொல்லும் என்பார்கள். தங்களுக்கு மரம் சொன்ன பாடம் அருமையான கவிதையாக உருவெடுத்துள்ளது.
    நன்றி ஐயா. இந்த மரம் எங்கள் வீட்டருகில் (ஆஸ்திரேலியாவில்) உள்ளது. பெயர் தெரியவில்லை. அறிந்தபின் அறிவிக்கிறேன்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மரம் புதுப்பிக்கப்படுகின்றதா... புதுப்பிக்கின்றதா...

    இதுவரைக்கும் இம்மரத்தை எத்தனை பேர் கடந்திருப்பர்...
    கீதம் கடந்ததால் கவிபாடப்பெற்றது, கொடுத்து வைத்த மரம்...

    தோலுரிந்து போனாலும்
    பசுமை இழக்கமாட்டேன்
    எனக் குத்திக்காட்டுதோ
    பட்டை உரிக்கும் மரம்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    மாற்றத்திற்கு தன்னை தினமும் ஆட்படுத்திக்கொள்ளும் மரம் நமக்கு சொல்லும் பாடம் உலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது ... மாற மறுப்பதின் வாழ்க்கையை இயற்கை மறுத்துவிடுகிறது.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    மரம் புதுப்பிக்கப்படுகின்றதா... புதுப்பிக்கின்றதா...

    இதுவரைக்கும் இம்மரத்தை எத்தனை பேர் கடந்திருப்பர்...
    கீதம் கடந்ததால் கவிபாடப்பெற்றது, கொடுத்து வைத்த மரம்...

    தோலுரிந்து போனாலும்
    பசுமை இழக்கமாட்டேன்
    எனக் குத்திக்காட்டுதோ
    பட்டை உரிக்கும் மரம்...
    நன்றி அக்னி.

    Quote Originally Posted by Ravee View Post
    மாற்றத்திற்கு தன்னை தினமும் ஆட்படுத்திக்கொள்ளும் மரம் நமக்கு சொல்லும் பாடம் உலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது ... மாற மறுப்பதின் வாழ்க்கையை இயற்கை மறுத்துவிடுகிறது.
    நன்றி ரவி.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    தன்னை உரித்து
    உன்னை உணர்த்தி
    எண்ணம் தரித்து
    கவிதைத் திரிக்க
    போதனை தந்த
    போதிமரத்துக்கு நன்றி

    அழகான எண்ணோட்டம்
    நயமான வரிகள்
    ஆழ்ந்த கருத்துகள்

    பரட்டுகளுங்க....
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    தன்னை உரித்து
    உன்னை உணர்த்தி
    எண்ணம் தரித்து
    கவிதைத் திரிக்க
    போதனை தந்த
    போதிமரத்துக்கு நன்றி

    அழகான எண்ணோட்டம்
    நயமான வரிகள்
    ஆழ்ந்த கருத்துகள்

    பரட்டுகளுங்க....
    நன்றி நிவாஸ்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •