Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: பாதை தவறிய பயணங்கள்

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    பாதை தவறிய பயணங்கள்

    போகவேண்டிய ஊருக்கான
    பயணப்பாதையைத் திட்டமிட்டு
    வரைபடமாய் மனதில் பூட்டிதான்
    வண்டிமாடுகளைப் பூட்டுகிறேன்.

    சென்றமுறைகளில் நிகழ்ந்ததுபோல்
    திசைமாறிவிடக்கூடாது என்பதில்
    திடமாய் இருப்பதோடு
    கண்ணயர்ந்துவிடக்கூடாது என்பதிலும்
    கவனமாய் இருக்கிறேன்.

    சாட்டை சுழற்றிச் சுழற்றி
    சரியான பாதையை உறுதிசெய்து
    காளைகளை விரட்டுகிறேன்.

    கொம்புச்சலங்கைகள் குலுங்கி இசைக்க...
    நுகத்தடிக்குள் நுழைக்கப்பட்டத் தலைகள்
    நுண்ணிய தாளலயத்துடன் இடவலமாட....
    எட்டுக்கால்கள் எட்டுவைத்துப் புழுதி கிளப்பியோட...

    உற்சாகக் கொப்பளிப்போடு
    வாலினை முறுக்கி,
    விரசாய் முடுக்கி,
    தார்க்குச்சியினையும் பதிக்க….
    தறிகெட்டோடுகின்றன காளைகள்!

    மனமெழுதிய பாதைகள்
    வகையாய் கண்வயப்பட...
    நிதானம் வெல்லும் மமதை
    மெல்லக்கிளர்ந்தெழுந்து பார்வை மறைக்க...

    தடுமாறிய கால்கள்
    தடம் மாறிய உணர்வற்று
    முன்னேறிய பயணத்தின்
    துணுக்குற்ற கணமொன்றில் துடித்துப்பதறி....

    பாய்ந்தோடும் பாரந்தாங்கிகளைப்
    பின்னிழுக்க இயலாது
    பெருமூச்சுடன் பார்த்திருக்கிறேன்.

    முடிவில் நின்றிருக்கிறேன்,
    முந்தையப் பயணங்களைப் போலவே,
    பார்த்தறியா ஊரின் மத்தியில்……
    நுரைதள்ளிப் பெருமூச்சுவிடும்
    காளைகளைச் சபித்தபடியே!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் கலாசுரன்'s Avatar
    Join Date
    31 Jan 2011
    Posts
    115
    Post Thanks / Like
    iCash Credits
    9,960
    Downloads
    0
    Uploads
    0
    நல்லா இருக்கு கீதம் "அதிலும் இந்த வரிகள்"
    பாய்ந்தோடும் பாரந்தாங்கிகளைப்
    பின்னிழுக்க இயலாது
    பெருமூச்சுடன் பார்த்திருக்கிறேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    நாங்களும், உங்களுடனேயே வந்து, திகைத்து நிற்பதைப் போன்ற பிரமை ஏற்படுகிறது.......நடைமுறை வாழ்க்கையைக் கவிதையெனும் திரையில் ரசிக்கிறோம்.....ரணம் மறந்து....நன்று !

    ' மமதை ' எனும் தடையினை அடையாளம் கண்டாயிற்று...இனி அதனை அகற்றும் மார்க்கமும் கைகூடும்...காத்திருப்போம் !

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கலாசுரன் View Post
    நல்லா இருக்கு கீதம் "அதிலும் இந்த வரிகள்"
    பாய்ந்தோடும் பாரந்தாங்கிகளைப்
    பின்னிழுக்க இயலாது
    பெருமூச்சுடன் பார்த்திருக்கிறேன்.
    ரசித்ததைப் பின்னூட்டமிட்டுச் சுட்டியதற்கு நன்றி கலாசுரன் அவர்களே.

    Quote Originally Posted by ஜானகி View Post
    நாங்களும், உங்களுடனேயே வந்து, திகைத்து நிற்பதைப் போன்ற பிரமை ஏற்படுகிறது.......நடைமுறை வாழ்க்கையைக் கவிதையெனும் திரையில் ரசிக்கிறோம்.....ரணம் மறந்து....நன்று !

    ' மமதை ' எனும் தடையினை அடையாளம் கண்டாயிற்று...இனி அதனை அகற்றும் மார்க்கமும் கைகூடும்...காத்திருப்போம் !
    உடன் பயணித்து உணர்வறிந்ததற்கு நன்றி ஜானகி அம்மா.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அருமை கீதம்.

    இரு கரங்கள்.. அதன் கட்டுக்குள்...வண்டி.. பாதை... பயணம்.. - இது தொடக்கம்..

    இரு காளைகள்.. எட்டுக் கால்கள்... சுமைகள்... மாற்றம் - இது இடையில்..

    முடிவு?


    நம் கட்டுக்குள்( இருப்பதாய் நாம் எண்ணிக்கொண்டிருக்கும்) வாழ்க்கைப் பயணம்
    எந்தப் புள்ளியில் மாறியது? ( என நாம் உணர்கிறோம்??)


    பாதையெல்லாம் மாறிவரும்..
    பயணம் முடிந்துவிடும்..
    மாறுவதைப் புரிந்துகொண்டால்
    மயக்கம் தெளிந்துவிடும்.


    மனக்கேணி நீர் இறைச்சலுக்கு
    மனம் நிறைந்த பாராட்டு!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    வலப்பக்க மாட்டின் கையிற்றை இழுத்து பிடித்து
    இடப்பக்க மாட்டை மட்டும் தட்டினால் போதும்
    வண்டி வலப்பக்கம் திரும்பும், இடப்பக்கம்
    திரும்ப இடப்பக்க மாட்டை இழுத்து வலப்பக்க
    மாட்டினை தட்டவேண்டும்,

    இப்படி நாம் சொன்னால் கேக்கும் மாடுகளை
    நம் கட்டுப்பாட்டை விட்டு அவை பாதைக்கு போக விட்டால்

    தெரியாத ஊரில் மட்டுமல்ல, சில நேரம் வயல் நடுவிலும் நிற்கக்கூடும்


    வழக்கம் போல்தான்
    கவிதை நல்லாருக்குங்க
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    அருமை கீதம்.

    இரு கரங்கள்.. அதன் கட்டுக்குள்...வண்டி.. பாதை... பயணம்.. - இது தொடக்கம்..

    இரு காளைகள்.. எட்டுக் கால்கள்... சுமைகள்... மாற்றம் - இது இடையில்..

    முடிவு?


    நம் கட்டுக்குள்( இருப்பதாய் நாம் எண்ணிக்கொண்டிருக்கும்) வாழ்க்கைப் பயணம்
    எந்தப் புள்ளியில் மாறியது? ( என நாம் உணர்கிறோம்??)


    பாதையெல்லாம் மாறிவரும்..
    பயணம் முடிந்துவிடும்..
    மாறுவதைப் புரிந்துகொண்டால்
    மயக்கம் தெளிந்துவிடும்.


    மனக்கேணி நீர் இறைச்சலுக்கு
    மனம் நிறைந்த பாராட்டு!
    உங்கள் பார்வையின் தனித்துவம் கண்டு மலைப்பும் வியப்பும் மிகக்கொண்டு மகிழ்வோடு திரிகிறது என் மனவண்டு.

    நன்றி இளசு அவர்களே.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    வலப்பக்க மாட்டின் கையிற்றை இழுத்து பிடித்து
    இடப்பக்க மாட்டை மட்டும் தட்டினால் போதும்
    வண்டி வலப்பக்கம் திரும்பும், இடப்பக்கம்
    திரும்ப இடப்பக்க மாட்டை இழுத்து வலப்பக்க
    மாட்டினை தட்டவேண்டும்,

    இப்படி நாம் சொன்னால் கேக்கும் மாடுகளை
    நம் கட்டுப்பாட்டை விட்டு அவை பாதைக்கு போக விட்டால்

    தெரியாத ஊரில் மட்டுமல்ல, சில நேரம் வயல் நடுவிலும் நிற்கக்கூடும்


    வழக்கம் போல்தான்
    கவிதை நல்லாருக்குங்க
    அழகாய்ச் சொல்லித்தருகிறீர்கள் மாட்டை வசப்படுத்தி பாதையில் பயணிக்கச்செய்யும் உத்தி. ஆனால்... நாமே நம் வசமில்லையெனில்... மாட்டை வழிநடத்துவது எப்படி?

    பாராட்டுக்கும் பின்னூட்டமிட்டு கருத்துரைத்ததற்கும் நன்றி நிவாஸ்.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    ஏன் என்னை சபிக்க வேண்டும்
    என்ன தவறு நான் செய்தேன்!
    எத்தனை முறை வந்திருப்பேன்
    என் இளங்கன்று பருவத்தில்
    ஓடிக் களித்த இடம் இதுவல்லவா!
    காளையானவுடன் கைகழுவி விட்டுவிட்டால்
    பிறந்தவிடம் மறந்திடுமா?
    வரும்பாதையிலே எருமையண்ணா
    சிரித்துப் பேசியதை பார்க்காமல் விட்டுவிட்டு
    திசைமாறி வந்ததாய் நீ ஏன் அரட்டுகிறாய்!
    கேள்வி ஏதும் கேட்காமல்
    என் ஜோடி காளையே சும்மா இருக்கும்போது
    நீ மட்டும் இப்படி புலம்பி கவி வடிக்கலாமா?

    [காளை மாடு சொன்னது எனக்கு மட்டும்தான் கேட்டுச்சு ]
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    முடிவில் நின்றிருக்கிறேன்,
    முந்தையப் பயணங்களைப் போலவே,
    பார்த்தறியா ஊரின் மத்தியில்……
    நுரைதள்ளிப் பெருமூச்சுவிடும்
    காளைகளைச் சபித்தபடியே!



    பழி ஓரிடம் பாவம் ஓரிடம்
    பாவம் என்ன செய்யும் காளைகள்
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கௌதமன் View Post
    ஏன் என்னை சபிக்க வேண்டும்
    என்ன தவறு நான் செய்தேன்!
    எத்தனை முறை வந்திருப்பேன்
    என் இளங்கன்று பருவத்தில்
    ஓடிக் களித்த இடம் இதுவல்லவா!
    காளையானவுடன் கைகழுவி விட்டுவிட்டால்
    பிறந்தவிடம் மறந்திடுமா?
    வரும்பாதையிலே எருமையண்ணா
    சிரித்துப் பேசியதை பார்க்காமல் விட்டுவிட்டு
    திசைமாறி வந்ததாய் நீ ஏன் அரட்டுகிறாய்!
    கேள்வி ஏதும் கேட்காமல்
    என் ஜோடி காளையே சும்மா இருக்கும்போது
    நீ மட்டும் இப்படி புலம்பி கவி வடிக்கலாமா?

    [காளை மாடு சொன்னது எனக்கு மட்டும்தான் கேட்டுச்சு ]
    அப்படியென்றால் அந்த ஜோடிக் காளை நீங்கதானா? என்னேயொரு கவித்துவக்காளை!

    அக்காளை நடக்கும் வழியே அக்காளும் நடப்பதுதான் நல்வழியோ?

    நன்றியும் பாராட்டும் கெளதமன்.

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Ravee View Post
    முடிவில் நின்றிருக்கிறேன்,
    முந்தையப் பயணங்களைப் போலவே,
    பார்த்தறியா ஊரின் மத்தியில்……
    நுரைதள்ளிப் பெருமூச்சுவிடும்
    காளைகளைச் சபித்தபடியே!



    பழி ஓரிடம் பாவம் ஓரிடம்
    பாவம் என்ன செய்யும் காளைகள்
    கண்போன போக்கிலே கால் போகலாமான்னு காளைகளைக் கண்டிப்பதைவிட்டு என்ன கரிசனம் அவற்றின் மேல்?

    பின்னூட்டத்துக்கு நன்றி ரவி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •