Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: மீண்டும் உனக்காகக் காத்திருக்கிறேன்...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0

    மீண்டும் உனக்காகக் காத்திருக்கிறேன்...

    என் பலவருடக்
    காத்திருப்புக்குப் பின்
    எனை அள்ளிக்கொண்டாய்...
    என் நிறத்தில்
    இன்னும் சிலவற்றையும்
    சேர்த்துத்தான்..
    சந்தோஷமாக
    எங்கோ புறப்பட்டாய்...
    அன்று இரண்டாம் முறையாக
    உனக்கு உபயோகப்பட்டேன்..
    அன்று முழுதும்
    இன்பமாகவே இருந்தாய்...
    என்னுடன் நீ மிகவும் அழகாக
    இருப்பதாக எல்லோரும்
    சொன்னார்கள்...
    உன் முகத்தில் புன்னகை...
    இரவுக்கு முன் நிழலில்
    எனை உலர்த்தினாய்...
    உன் வியர்வை என்னிலிருந்து
    விடுபட்டுப்போக...
    உலர்ந்தேன்...காய்ந்தேன்...
    சற்று நேரத்தில் சூடு வாங்கி
    பின் காத்திருக்கப்போகிறேன்...
    அடுத்த அரை நூற்றாண்டில்
    அதிக பட்சம் ஒரு முறை
    உன் கண்கள் என் மீது
    மறுபடியும் விழும்
    என்ற நம்பிக்கையுடன்
    நீ ஆசையாய்
    எனை எடுத்து
    மீண்டும் அழுக்காக்க...
    என் போன்ற இன்னும் ஐந்தாறு
    பட்டுப் புடவைகளுடன்...
    உன் வீட்டு அலமாரியின்
    ஆரவாரமில்லா மூலையில்
    அலங்காரமாய்த் தொங்கியபடி
    தங்கக்கரையுடன்
    சிவப்பு நிறத்தில் நான்...
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    பருத்தி [ பட்டுநூல் ]வண்ணத்தில் தோய்ந்து, காய்ந்து, கவிதையாய் மலர்ந்ததோ.... நன்று !

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    Quote Originally Posted by ஜானகி View Post
    பருத்தி [ பட்டுநூல் ]வண்ணத்தில் தோய்ந்து, காய்ந்து, கவிதையாய் மலர்ந்ததோ.... நன்று !
    நன்றி ஜானகி!
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பட்டென்று சொல்லும்,
    புறந்தள்ளப்பட்டது
    புனிதமணப்பட்டோ?

    கண்பட்டு மண்பட்டு
    அழகுப்பட்டு அழுக்குப்பட்டு
    மனம் புண்பட்டுவிடுமோவென்றோ...?

    செம்பட்டு பார்த்ததும்
    பட்டென்று பழங்கதையும்
    பட்டதும் கெட்டதும் முன்வந்து
    பட்டுமனம் துடிக்குமோவென்றோ....?

    உம் கைப்பட்டு நெய்த கவிப்பட்டு
    திரும்பிய என் பார்வைப்பட்டு
    நெளியும் ஏராளப் பட்டுப்பூச்சிகளின்
    சாபம் தாங்கிய என் அலமாரிப்பட்டும்.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    கவிதை அழகு
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    பட்டென்று சொல்லும்,
    புறந்தள்ளப்பட்டது
    புனிதமணப்பட்டோ?

    கண்பட்டு மண்பட்டு
    அழகுப்பட்டு அழுக்குப்பட்டு
    மனம் புண்பட்டுவிடுமோவென்றோ...?

    செம்பட்டு பார்த்ததும்
    பட்டென்று பழங்கதையும்
    பட்டதும் கெட்டதும் முன்வந்து
    பட்டுமனம் துடிக்குமோவென்றோ....?

    உம் கைப்பட்டு நெய்த கவிப்பட்டு
    திரும்பிய என் பார்வைப்பட்டு
    நெளியும் ஏராளப் பட்டுப்பூச்சிகளின்
    சாபம் தாங்கிய என் அலமாரிப்பட்டும்.
    நன்றி கீதம்! கவி அருமை! அட மூன்று முறை படித்தும் இன்னும் முழுமையாய் புரியவில்லை! உங்கள் படைப்புகள் ஒரு வித முழுமையுடன், ஆளுமையுடன், அழகாக இருக்கின்றன.
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    நன்றி உமா மீனா!

    நன்றி த. நிவாஸ்!
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    பட்டொன்று தன்னிலை கூறும் உணர்மிகு வரிகள் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by simariba View Post
    நன்றி கீதம்! கவி அருமை! அட மூன்று முறை படித்தும் இன்னும் முழுமையாய் புரியவில்லை! உங்கள் படைப்புகள் ஒரு வித முழுமையுடன், ஆளுமையுடன், அழகாக இருக்கின்றன.
    என்னங்க அபி இப்படி சொல்லிட்டீங்க...?

    பட்டுப்புடவையைப் பத்திப் பேசினதாலே நானும் உணர்ச்சிவசப்பட்டு பட்டு பட்டுன்னு விளையாடிட்டேன்.

    அது ஒண்ணுமில்ல...

    Quote Originally Posted by கீதம் View Post
    பட்டென்று சொல்லும்,
    புறந்தள்ளப்பட்டது
    புனிதமணப்பட்டோ?
    கட்டாம வச்சிருக்கிறதா ஏங்குதே ஒரு பட்டுப்புடவை... அது கல்யாணத்துக்குன்னு எடுத்தாதான்னு கேட்டிருக்கேன்.

    அப்புறம் கல்யாணத்துக்கு எடுத்ததுன்னா அதை கட்டாம இருக்கிறதுக்கு ரெண்டு காரணம் இருக்கும்.

    Quote Originally Posted by கீதம் View Post
    கண்பட்டு மண்பட்டு
    அழகுப்பட்டு அழுக்குப்பட்டு
    மனம் புண்பட்டுவிடுமோவென்றோ...?
    ஒண்ணு... அந்த நாளின் சுகமான நினைவுகளுக்கு சாட்சியா இருக்கிற இந்தப்புடவையை அடிக்கடி கட்டினா அழுக்காகி வீணாகிடுமே... அப்படிங்கிற பயத்தால் கட்டாம இருக்குறது.

    Quote Originally Posted by கீதம் View Post
    செம்பட்டு பார்த்ததும்
    பட்டென்று பழங்கதையும்
    பட்டதும் கெட்டதும் முன்வந்து
    பட்டுமனம் துடிக்குமோவென்றோ....?
    ரெண்டாவது.... கொஞ்சம் வில்லங்கமானது. அதாவது அந்தக் கல்யாணத்தில் உடன்பாடில்லாது சம்மதிச்சிருந்தா... (பொதுவா சொன்னேங்க... உங்களைன்னு எடுத்துக்காதீங்க அபி) அந்த நாளைப் பற்றிய நினைவுகளை மறுபடியும் நினைவுபடுத்திடக்கூடாதேங்கிற எண்ணமா இருக்கலாம்.

    Quote Originally Posted by கீதம் View Post
    உம் கைப்பட்டு நெய்த கவிப்பட்டு
    திரும்பிய என் பார்வைப்பட்டு
    நெளியும் ஏராளப் பட்டுப்பூச்சிகளின்
    சாபம் தாங்கிய என் அலமாரிப்பட்டும்.
    கடைசி பத்தியில் என்னுடைய பட்டுப்புடவைகளும் கட்டும் வாய்ப்பில்லாம அலமாரியில் சும்மா அடுக்கிவச்சிருக்கிறதப் பாத்து உங்க கவிதை போலத்தான் புலம்புமோன்னு ஒரு நினைப்பும் கூடவே வருதுன்னு சொல்லியிருகேன். ஒரு பட்டுப்புடவைக்காக எத்தனைப் பட்டுப் புழுக்களை அழிச்சிருப்பாங்க... அதான் பட்டுப்பூச்சிகளின் சாபம்னு சொன்னேன்.

    இப்ப எல்லாம் ஓகேதானே... அபி?

  11. #11
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    ஒரு பட்டுபுடவையின் நிலையை அழகாய் உங்கள் கவிதையில் பார்க்கிறேன்
    கவிதை அருமை

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    நன்றி நாஞ்சில் த.க. ஜெய்!

    நன்றி கீதம், இப்போ புரியுது. சரி தான், கல்யாணப்பட்டு தான். வீணாகிட கூடாதேன்னு ஓரமா தொங்க விட்டு பத்திரமா வைச்சிருகேன்.

    நன்றி முரளி ராஜா!
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •