இன்றைய தினம் நமது நண்பர்களின் பதிவுகளின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது மிகவும் வரவேற்க்கதக்கது ..ஒவ்வொருவரும் அவரவர் பதிவுகளினை கண்டு அவர்களின்பால் தொடர்புள்ளவர்களின் பதிவுகளுக்கு பின்னோட்டம் இடுவதுடன் மற்றவர்களின் பதிவுகளையும் கவனித்து பதிவிடுங்கள் மேலும் முன்னமே பதிவிட்ட பதிவுகளின் சாராம்சம் தொடர்புடைய பதிவுகளை ஒருபதிவாக இடலாமே ..குறிப்பாக கூறவேண்டுமெனில் பலபதிவுகளை கூறலாம் இன்றைய தினம் இருபதிவுகள் இது போன்று வந்துள்ளன ..இவைகள் ஒரே பதிவின் கீழ் இருந்தால் அந்த பதிவுக்கான காரணம் முழுமை அடையும் என்பது என் எண்ணம் ...அதுபோன்று மன்ற மூத்த உறுப்பினர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக எனக்கு படுகிறது ...அவர்களின் வேலைப்பளுவினால் இதனை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது அதேநேரத்தில் புதியவர்களாக நுழைந்து இன்று மன்றத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் நண்பர்களுடன் மூத்த நண்பர்கள் இடையேயான தொடர்பு தாமரை இலை மேல் ஒட்டிய தண்ணீராகவே உள்ளது ..இதனை மாற்ற நண்பர்களின் பங்கெடுப்பு மிகவும் அவசியம் அவர்களின் அனுபவம் என் போன்ற மன்ற இளையவர்களுக்கு வழி காட்டும் ஒளியாக இருக்கும்...
குறிப்பு :என் மனதில் தோன்றியதை தங்கள் முன் எடுத்துரைத்தேன் தவறிருந்தால் மன்னிக்கவும் ....
Bookmarks