Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 28 of 28

Thread: புதுக் கட்சி - 10 ஏக்கர் நிலம் இலவசம்

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    மிக அருமையான பதிவு மூன்றாம் உலக போர் உனவுக்காக நடக்கும் என்று வல்லுனர்கள் சொன்னதில் தவறில்லை. அது உன்மைதான். இப்பவும் மூன்றாம் உலக போர் இலைமறைகாயாக பரவலாக வேவ்வேறு பெயர்களில் நடந்து கொன்டு இருக்கிறது. அதாவது பெரிய யுத்தமாக நடக்கவில்லை ஆனால் சிறிய கான்பிலிக்ட் மூலம் அறங்கேறுகிறது.
    வளைகுடா, ஈரான் போர் என்னை வளத்துக்காக பெரிய போராக நடந்தது (விரைவில் ஈரானும் ஆக்ரிமிக்க முயல்வார்கள்). லிபியா சிரியா அங்கும் என்னைக்காக போராட்டம் என்ற பெயரில் வல்லரசுகளுக்காக யுத்தம் நடக்கிறது. கசாப்பியன் நாடுகளில் ஆரங்சு போராட்டம் என்ற பெயரில் அந்நாட்டு மக்கள் நலனை காக்கும் அரசாங்கத்தை துரத்தி அமெரிக்காவுக்கு கூஜா தூக்கும் அரசாங்கங்கள் நிறுவ பட்டன. ஜார்ஜியாவிலும் முயற்ச்சி செஞ்சு அது தோல்வியில் முடிந்தது. ஆப்கானிஸ்தான் போர் என்னைவளங்களின் வழிதடத்திற்காக பல வருடமாக போர்களமாக இருக்கிறது. ஐவரி கோஸ்ட் கொக்கோவுக்காக போர் நடக்கிறது. எங்க பிரச்சனை மக்கள் புரட்சி என்ற முகமீடியில் நடக்கிறது என்றால் அதுவும் மேற்கத்திய நாடுகள் தலையீடு இருக்கு என்றால் அது நிச்சயம் ஏதாவது மினரல்ஸ் அல்லது விளை பொருளுக்காக நடக்கும் யுத்தமே.
    ஏன் காஸ்மீர் பிரச்சனையின் பின்னனியில் பாக்கிஸ்தான் சீனாவுக்கு இடையில் தடங்கலில்லாத வழிதடம் அமையவே நடத்து மெயின்டெயின் செய்ய படுகிறது.

    அடுத்தது நம் நாட்டில்
    இங்கு யுத்தம் தான் நடக்கவில்லை ஆனால் போராட்டங்கள், சர்சைகள், நீதிமன்ற வழக்குகள் எல்லாமே விளை நிலங்களை அபகரிக்க அல்லது அதை காப்பாறற நடக்கிறது. சிறப்பு பொருளாதர மன்றம் என்ற பெயரில் நாட்டில் லட்சகனக்கான விளை நிலங்களை அபகரிக்க கார்பரேட்கள் களம் இறங்கி இருக்கிறது. நதி நீர் பிரச்சனை இப்போது நீதிமன்றங்களில் சின்ன யுத்தமாக நடக்கிறது. தொழிற்சாலைகளின் மாசு கழிவு பொருட்கள் விவசாயத்தை நாசம் செய்து விவசாயம் கொஞ்சமாக நிறுத்த பட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றபட்டு வருவது நாம் அறிந்ததே. நக்ஸ்க்லைட் பிரச்சனை கூட விளை நிலங்கள் காடு நிலங்களை அபகரித்ததால் வந்த விளைவு. 10 வருடத்திறுக்கு முன்பு நம் சாலை ஓரங்களில் மரங்கள் நிறைய இருந்தன. போகும் வழி எல்லாம் பசுமையாக இருந்தன. ஆனால் இப்ப நான்கு வழி சாலையாக மாரி விவசாயம் அழிய தொடங்கி விட்டது. அதுவும் எல்லா சிட்டீசை சுற்றியும் பைபாஸ் அமைக்க விவசாய நிலங்கள் குறைந்த விலையில் ஆர்ஜிதம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் சொல்லலாம் ஏர்போர்ட் விரிவாக்கம் செய்ய ஏராளமான நிலங்களை பனக்காரர்களுக்காக பிடுங்க ஆரம்பம் ஆகி விட்டது
    உனவு தட்டுபாடு நம் நாட்டில் ஏற்பட ஆரம்பித்து விட்டது. அது இப்போதைக்கு விலையேற்றம் மூலம் நடக்கிறது விரைவில் விலை கொடுத்தாலும் கிடைக்காது. இப்ப ஏழை மக்கள் உனவு பழக்கம் மாறி பழங்களை சாப்பிடுவது குறைந்து சமையலில் காய்கறிகள் குறைத்து வெறும் மசாலா பொருட்களை வறுத்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  2. #26
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அற்புதமாகச் சொன்னீர்கள் லொள்ளு வாத்தியாரே...

    விரும்பியதை ருசித்துச் சாப்பிட்ட நிலை,
    கிடைத்ததைப் பசிக்குச் சாப்பிட என்றாகி,
    அந்நிலையும் ஏறும் விலைவாசியால் சுருங்கிப் போகும் அவலநிலை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #27
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    மனிதன் மிருகம் ஆக வேண்டும்!

    என்னடா திடீரென நம்மை மிருகமாய் ஆக வேண்டும் என்கிறானே என்ற கோவம் வருகிறதா? இருக்கட்டும் பரவாயில்லை. அதை உணராத உலகம் தானே இது!!!

    பத்து ஏக்கர் நிலம் வேணுமா? வேண்டாமா?

    சரி வேண்டாம் என்றே வைத்துக் கொள்வோம். வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?

    இக்கேள்வியில் ஒர் குழப்படி உருவாக வேண்டும், அப்படியென்றால் நாளை என்பது எப்படி? நாம் விட்டுச் செல்லும் சந்ததியர் வாழும் உலகம் எப்படி?

    உலகம் விரைவில் அழியப் போகிறது என்கிறார்களே!!!

    அப்படியென்றால், பாச பாசமாய் பெற்றெடுத்த பிள்ளை அழிவதற்க்கா?

    இல்லை

    வாழ வேண்டுமா?

    வேண்டும் புதுக் கட்சி!!!!!
    இறைவனை பின் தொடர்ந்து செல்ல நினைத்தால் தெரிவது தெய்வம்
    தெய்வம் உன்னை பின் தொடர்ந்து வர நினைத்தால் இல்லை இறைவன்

  4. #28
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    நீண்ட இடைவெளிக்குப் பின், எனது அன்றைய புள்ளிக்கான கோடுகளை வரையாததால் விளைந்த விழைவுகள் தற்போதைய சூழல் மிகப் பெரிய நெருக்கடியினை உருவாக்கும் எனத் தோன்றுவதால், விரைவாக தமிழர்கள் ஒன்றினைந்து நடக்க இருக்கும் அணு ஆயுத உலகப்போரால் எந்தவொரு தாக்கத்தை அடைந்தாலும், அத்தியாவசிய தேவையான நீரையும் நிலத்தினையும் பாதுகாத்து வாழ்வாதரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.


    ஏற்கனவே சொன்னதுதான், இ-பணத்தினை அணு ஆயுதப்போர் சாப்பிட்டுட்டிச்சின்னா நீங்க என்னத்த வாங்கி சாப்பிடுவீங்க??

    மூன்றாம் உலகப்போர் மூண்டால் வங்கிகள் முடங்கும் வாய்ப்புகள் உள்ளது,

    காகிதப் பணத்திற்கு மதிப்பில்லாமல் போகும்.

    உடனே விவசாய நிலத்தினை பண்படுத்தி, உணவிற்கான ஆதாரத்தினை தயார்படுத்துங்கள்.


    உலக மக்கள் தொகையினை குறைக்க நடக்க இருக்கும் யுத்தம் என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று, ஆகையால் அது நடக்கும்.

    நடந்த முடிந்த பின்னர், வா என்று அழைக்கும் ஒர் செயலுக்கு, வா / come என ஏன் பல மொழியில் கற்கிறேன் என்று நமது சந்ததிகள் காலத்தினையும் பணத்தினையும் வீணடிக்க வேண்டும் என்று சிந்தியுங்கள்.

    மனிதர்களுக்கு ஒர் மொழி போதும்,

    வளமிக்க தமிழ் மொழியா அல்லது வளமில்லா பிறமொழியா என்று யோசித்து ஏதேனும் ஒர் மொழியினை மட்டும் சந்ததிக்கு கொடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

    பூமி சொர்க்கமாக மாற வேண்டும், அங்கு ஒரே மொழி.... இயற்கையை காப்பது மட்டுமே வேலை. இயற்கை விவசாயம்... தானாக மரங்கள் வளர்ந்து கனிகள் கொடுக்கும் ... தாவரங்கள் பயிர்களை கொடுக்கும்... வேண்டியதை உண்டு வாழ்வதும், இயற்கையை சமநிலையில் காப்பது மட்டுமே நமது பணி.

    ஒருவர்க்கு பத்து ஏக்கர் போதுமா?

    இல்ல.. பழங்காலம் போல், சுற்றி வளைச்சிக்க போறீங்களா...
    இறைவனை பின் தொடர்ந்து செல்ல நினைத்தால் தெரிவது தெய்வம்
    தெய்வம் உன்னை பின் தொடர்ந்து வர நினைத்தால் இல்லை இறைவன்

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •