மிக அருமையான பதிவு மூன்றாம் உலக போர் உனவுக்காக நடக்கும் என்று வல்லுனர்கள் சொன்னதில் தவறில்லை. அது உன்மைதான். இப்பவும் மூன்றாம் உலக போர் இலைமறைகாயாக பரவலாக வேவ்வேறு பெயர்களில் நடந்து கொன்டு இருக்கிறது. அதாவது பெரிய யுத்தமாக நடக்கவில்லை ஆனால் சிறிய கான்பிலிக்ட் மூலம் அறங்கேறுகிறது.
வளைகுடா, ஈரான் போர் என்னை வளத்துக்காக பெரிய போராக நடந்தது (விரைவில் ஈரானும் ஆக்ரிமிக்க முயல்வார்கள்). லிபியா சிரியா அங்கும் என்னைக்காக போராட்டம் என்ற பெயரில் வல்லரசுகளுக்காக யுத்தம் நடக்கிறது. கசாப்பியன் நாடுகளில் ஆரங்சு போராட்டம் என்ற பெயரில் அந்நாட்டு மக்கள் நலனை காக்கும் அரசாங்கத்தை துரத்தி அமெரிக்காவுக்கு கூஜா தூக்கும் அரசாங்கங்கள் நிறுவ பட்டன. ஜார்ஜியாவிலும் முயற்ச்சி செஞ்சு அது தோல்வியில் முடிந்தது. ஆப்கானிஸ்தான் போர் என்னைவளங்களின் வழிதடத்திற்காக பல வருடமாக போர்களமாக இருக்கிறது. ஐவரி கோஸ்ட் கொக்கோவுக்காக போர் நடக்கிறது. எங்க பிரச்சனை மக்கள் புரட்சி என்ற முகமீடியில் நடக்கிறது என்றால் அதுவும் மேற்கத்திய நாடுகள் தலையீடு இருக்கு என்றால் அது நிச்சயம் ஏதாவது மினரல்ஸ் அல்லது விளை பொருளுக்காக நடக்கும் யுத்தமே.
ஏன் காஸ்மீர் பிரச்சனையின் பின்னனியில் பாக்கிஸ்தான் சீனாவுக்கு இடையில் தடங்கலில்லாத வழிதடம் அமையவே நடத்து மெயின்டெயின் செய்ய படுகிறது.
அடுத்தது நம் நாட்டில்
இங்கு யுத்தம் தான் நடக்கவில்லை ஆனால் போராட்டங்கள், சர்சைகள், நீதிமன்ற வழக்குகள் எல்லாமே விளை நிலங்களை அபகரிக்க அல்லது அதை காப்பாறற நடக்கிறது. சிறப்பு பொருளாதர மன்றம் என்ற பெயரில் நாட்டில் லட்சகனக்கான விளை நிலங்களை அபகரிக்க கார்பரேட்கள் களம் இறங்கி இருக்கிறது. நதி நீர் பிரச்சனை இப்போது நீதிமன்றங்களில் சின்ன யுத்தமாக நடக்கிறது. தொழிற்சாலைகளின் மாசு கழிவு பொருட்கள் விவசாயத்தை நாசம் செய்து விவசாயம் கொஞ்சமாக நிறுத்த பட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றபட்டு வருவது நாம் அறிந்ததே. நக்ஸ்க்லைட் பிரச்சனை கூட விளை நிலங்கள் காடு நிலங்களை அபகரித்ததால் வந்த விளைவு. 10 வருடத்திறுக்கு முன்பு நம் சாலை ஓரங்களில் மரங்கள் நிறைய இருந்தன. போகும் வழி எல்லாம் பசுமையாக இருந்தன. ஆனால் இப்ப நான்கு வழி சாலையாக மாரி விவசாயம் அழிய தொடங்கி விட்டது. அதுவும் எல்லா சிட்டீசை சுற்றியும் பைபாஸ் அமைக்க விவசாய நிலங்கள் குறைந்த விலையில் ஆர்ஜிதம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் சொல்லலாம் ஏர்போர்ட் விரிவாக்கம் செய்ய ஏராளமான நிலங்களை பனக்காரர்களுக்காக பிடுங்க ஆரம்பம் ஆகி விட்டது
உனவு தட்டுபாடு நம் நாட்டில் ஏற்பட ஆரம்பித்து விட்டது. அது இப்போதைக்கு விலையேற்றம் மூலம் நடக்கிறது விரைவில் விலை கொடுத்தாலும் கிடைக்காது. இப்ப ஏழை மக்கள் உனவு பழக்கம் மாறி பழங்களை சாப்பிடுவது குறைந்து சமையலில் காய்கறிகள் குறைத்து வெறும் மசாலா பொருட்களை வறுத்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
Bookmarks