நான் மன்றம் வரும் நேரம் மிக குறைவு. அனைத்தையும் படிக்க ஆர்வம் உண்டு ஆனால் நேரம் இல்லை. அரக்க பறக்க ஒரு நோட்டம்விட்டுவிட்டு செல்லும் என்னையும் பதிவிட வைக்கும் பதிவுகளுக்கு சொந்தக்காரர் கீதம்.
பொறுமையாய் படித்து,அழகாய் உயிர்கொடுத்து ...
அருமை தோழி.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
திரும்பத் திரும்ப....மன்றத்தின் வீதிகளில் எந்தத் திருப்பத்திலும், திரும்பத் திரும்ப....திறமை கொட்டிக்கிடக்கிறது. எழுத்துக்களின் வளமை விரவிக்கிடக்கிறது.
நுனிப்புல் மேய வருபவர்களையும், அடிவரை ருசிக்க ஆயத்த பலகாரமாய் ஆக்கிக்கொடுக்கும், எங்கள் தங்கை கீதத்தை....திரும்பத் திரும்ப அதிசயிப்பதைத்தவிர என்ன செய்ய...?
மனம்நிறைந்த வாழ்த்துக்களும், மனமார்ந்த நன்றிகளும் தங்கையே.....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மூன்று மாதங்களாய் அடுத்தடுத்து மன்றத்தின் அனைத்துப் பதிவுகளையும் ஒரு சேரக் கோர்த்துக் கதம்ப மாலையாக்கி மன்றத்தை அலங்கரிக்கும் கீதத்தை என்ன சொல்லிப் பாராட்ட? ”வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றித் தவிக்கிறேன்”
பாராட்டுக்களுடன் வாழ்த்துகிறேன் கீதம்!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks