Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: சாம்பல் நிற கழுகு.

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0

    சாம்பல் நிற கழுகு.

    வெகு உயரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது
    ஒரு சாம்பல் நிற கழுகு.

    இறகுகளில் எந்த அசைவுமின்றி
    ஒரு துறவியின் மௌனம் போல்
    அத்தனை இலகுவாய் பறக்கிறது.

    காற்றை கிழித்தபடி பறக்கும்
    அதன் வேகம் ரசிக்கும்படியாகவும்
    இரை தேடும் அதன் கண்களின் கூர்மை
    பயப்படுத்தும்படியாகவும் இருக்கிறது.

    மெல்ல மெல்ல உயரம் குறைத்து
    தரையிறங்கும் போது
    சிறு புள்ளியென இருந்தது
    தூறல் மழையாதல் போல்
    உருவம் கொண்டது.

    பதுங்க முயன்று தோற்ற
    ஒரு கோழிக்குஞ்சை
    காற்றின் வேகத்தில் கடத்தி
    சட்டென தூரம் கடந்த நொடியில்

    வியப்பின் எல்லைக்கு கண்களை விரித்து
    மிக உற்சாகமாய் சொல்கிறாய்
    இதுவரை நீ காணாத
    மிக அழகிய காட்சி இதுவென.
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் கலாசுரன்'s Avatar
    Join Date
    31 Jan 2011
    Posts
    115
    Post Thanks / Like
    iCash Credits
    9,960
    Downloads
    0
    Uploads
    0
    நல்லா இருக்கு சசிதரன்..!!

    வாழ்த்துக்கள்

  3. #3
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    அருமை - தொடரட்டும்
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    அழகு கவிதை சசிதரன்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சாம்பல் நிறக் கழுகு
    தன் குணம் தப்பவில்லை,
    தவறுதலாய் அதன் குரூரம் மட்டும்
    கடத்தப்பட்டுவிட்டது
    உன் கருநிறக் கண்களில்!

    அழகான கவிதை. பாராட்டுகள் சசிதரன்.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    கவிதை அருமை..கவியின் கண்கள் கழுகையும் விட்டு வைக்கவில்லை..
    அருமை அருமை..
    ஆமா யாருசார் அப்டி உங்கள்ட்ட சொன்னது..?

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ரொம்ப நாளைக்கப்புறம் சசியின் கவிதை.

    விவிலியத்தில் ஒரு வாசகம் வரும். கடவுள் தான் படைத்த அனைத்தையும் சுற்றிப்பார்த்தார். அனைத்தும் நல்லதெனக் கண்டார்.

    இறைவன் படைப்பில் அனைத்துமே அழகு.

    வசீகரிக்கும் வரிகளுக்கு வாழ்த்துக்கள் சசி.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப நாளைக்கப்புறம் சசியோடக் கவிதை. உங்களுக்கே உரித்தான அழகான வரிகளில். வாழ்த்துக்கள் சசி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    கழுகுப் பார்வையையும் ரசித்த கண்களையும், வர்ணித்த வரிகளையும்....பாராட்ட வேண்டியதுதான்.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    கடத்தப்படுவது நானாக இல்லாதவரை
    காட்சிகள் அழகுதான்..
    இத்தனை நாள் சசியை யார் கடத்திப் போனார்கள்?
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மயில் கறி சமைத்த இரு அழகிய மென்மை + மேன்மையான இரசனை மிக்க உயர்தட்டு சகோதரிகளைப் பற்றிய சுஜாதாவின் சிறுகதை நினைவுக்கு வந்தது..

    ரோஜாவுக்குள்ளும் முள்..
    அழகுத் தோற்றத்துக்குள்ளும் அசாதரண ''இரசனை'!

    கீதம், ஜார்ஜ் - பின்னூட்டங்கள் ஜிலீர்ப்பு!


    பாராட்டுகள் சசி...
    Last edited by இளசு; 11-04-2011 at 09:08 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வியப்பின் எல்லைக்கு கண்களை விரித்து
    மிக உற்சாகமாய் சொல்கிறாய்
    இதுவரை நீ காணாத
    மிக அழகிய காட்சி இதுவென
    அருகினில்
    என்னை வைத்துக் கொண்டு..

    அழகியல் குழைத்த வண்ணம் கொண்டு கவிதை வரைந்தால்
    அனைவரும் தான் விழித்தோகை விரிப்பர், வியப்பு மழை கண்டு.

    சமகாலக் கசமுசாக்களை கண்களில் தூவிச் செல்லவும் தவறில்லை கவிதை.

    பாராட்டுகள் சசி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •