வண்ணத்துப்பூச்சிகளை பற்றி தொடங்கினால்
உற்சாகம் கூடி போகும் உன்னில்.
அதைப் பற்றிய தகவல்களை
எவ்வளவு சொன்னாலும் கேட்பாய்.
சமயங்களில் நான் தெரியாத
அரிய தகவல்களை சொல்வாய்
வயல்வெளிகளின் பசுமையில்
வண்ணத்துப்பூச்சி பிடிப்பதாய் வரும் கனவு
உனக்கு பிடித்ததென்பாய்.
இரு சிறகுகள் கிடைத்தால்
அதன் கூட்டத்திற்கே ராணியாவேன்
என்றபடி சிரிப்பாய்.
நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு சந்திப்பில்
உன் வண்ணத்துப்பூச்சி கனவுகள்
குறித்து கேட்ட பொழுது
விரக்தியாய் புன்னகைத்தபடி
நெடுஞ்சாலை பயணங்களில்
வண்ணத்துப்பூச்சுகள் பொருட்டல்ல என்றாய்.
Bookmarks