Page 9 of 15 FirstFirst ... 5 6 7 8 9 10 11 12 13 ... LastLast
Results 97 to 108 of 174

Thread: மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)

                  
   
   
  1. #97
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நண்பர் பாரதி அவர்களே எனக்கு ஒரு சந்தேகம் ..அவனுக்கு விவஸ்தையே இல்லை என்று ஒருவனை சுட்டி காட்டி பேசும் போது இதில் விவஸ்தை என்பதன் தூய தமிழ் வாத்தை என்னவென்று கூறமுடியுமா ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #98
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    நண்பர் பாரதி அவர்களே எனக்கு ஒரு சந்தேகம் ..அவனுக்கு விவஸ்தையே இல்லை என்று ஒருவனை சுட்டி காட்டி பேசும் போது இதில் விவஸ்தை என்பதன் தூய தமிழ் வாத்தை என்னவென்று கூறமுடியுமா ...
    தூய தமிழ் வாத்தா..?

    பொதுவாக வழக்கில்,” அவனுக்கு வெட்கம் இல்லை - அவனுக்கு அறிவு இல்லை” என்ற பொருளில் விவஸ்தை கையாளப்படுகிறது என கருதுகிறேன்.

    ஒரு பேரகராதியில் விவஸ்தை = பகுத்தறிவு என கூறப்பட்டிருக்கிறது.

  3. #99
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    விவஸ்தை என்பதை இங்கிதம் என்றால் பொருந்துமா? இங்கிதம் என்பது தமிழ் வார்த்தைதானா என்பது தெரியவில்லை.

  4. #100
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அகர முதலியில் ”இங்கிதம்” என்ற தமிழ்ச்சொல்லுக்கு விளக்கமாக கீழ்க்கண்டவை தரப்பட்டுள்ளன.

    சூழ்நிலைக்கும் பிறர் இயல்புக்கும் ஏற்ற இணக்கம், நாசூக்கு
    இனிய மன உணர்ச்சி
    கருத்து; நோக்கம்
    இனிய நடத்தை; இனிமை
    சமயோசித நடை
    குறிப்பு

    ======================================
    இவ்விடத்து இது பொருத்தம், இது பொருத்தமில்லை, அல்லது இது அழகு, இது அழகன்று என்று அறிந்து செயல்படுதலே "இங்கிதம்" என்று சொல்லப்படும்.

    இங்கு+ இது + அம். = இங்கிதம்.

    அம் = அழகு.

    நன்றி: சிவமாலா வலைப்பூ
    ========================================

    அகராதி தளத்தில் ”விவஸ்தை” என்பதற்கு வயது, தகுதி, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ளும் பக்குவமும் அறிவும் என விளக்கம் தந்திருக்கிறார்கள்.

  5. #101
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by பாரதி
    தூய தமிழ் வாத்தா..?
    வார்த்தை என்பது வாத்தாகி விட்டது...தவறை சுட்டிக்காட்டி எனது சந்தேகம் தீர்த்த நண்பர் பாரதி அவர்களுக்கு என் நன்றிகள்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  6. #102
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    அமைப்பு வகைப் பிரிவுகள்

    மொழிப் பயிற்சி - 44:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    அமைப்பு வகைப் பிரிவுகள்:-
    தமிழில் மிக நெடிய சொற்றொடர்கள் அமைத்துப் பேசுவோர், எழுதுவோர் உள்ளனர்.

    இறையனார் களவியல் (அகப்பொருள்) உரை என்னும் நூலில் ஒரு பக்கம், இரண்டு பக்கம் அளவுக்கு ஒரு சொற்றொடர் நீண்டு செல்லும்.

    குறிஞ்சி நில வருணனை உரையை ஓரிரு மணித்துளியளவுக்கு அடுக்கிப் பேசும் பேச்சாளர்கள் உள்ளனர்.

    இவற்றுள் வாக்கியம் முடிவு இன்றித் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கும்.

    ஒரு குறிப்பிட்ட இயக்கத்தவர், தம் மேடை பேச்சு சொற்றொடர் முடிவு இன்றிப் போய்க் கொண்டே இருக்கும். எங்கே முடிப்பார்? எப்படி முடிப்பார் என்று எவருக்கும் தெரியாது. இந்தப் போக்கு அவ்வளவாக இப்போது இல்லை. மாற்றிக் கொண்டனர் தம் பேச்சை.
    இங்கு நாம் எழுத நினைப்பது மேற்கண்ட செய்தி பற்றியன்று.
    ஆங்கிலத்தில் வாக்கிய வகைகள் இருப்பதுபோல் தமிழில் அமைப்பு முறையில் வாக்கிய வகைகள் உள்ளனவா என்பது பற்றியே சிந்திக்கலானோம்.

    கீழ்வரும் எடுத்துக்காட்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.
    1. கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதினார்.
    2. திருவள்ளுவர் திருக்குறளையும், சேக்கிழார் பெரியபுராணத்தையும், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தையும் இயற்றினார்கள்.

    முதல் வாக்கியத்தில் கம்பர் எனும் எழுவாய் எழுதினார் என்னும் பயனிலை கொண்டு முடிந்தது. (ஓர் எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தது)

    இரண்டாம் வாக்கியத்தில் பல எழுவாய்கள் ஓரே பயனிலை கொண்டு முடிந்துள்ளன.

    இவ்வாறு ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனி வாக்கியம் (ஆங்கிலத்தில் simple sentence) இன்னும் சில எடுத்துக்காட்டுகளைப் படியுங்கள்.
    1. பொருளீட்டல் மட்டுமே வாழ்வின் குறிக்கோளன்று; அறநெறி பிறழாமையும் வேண்டும்.
    2. வாழ்க்கை என்றால் நன்மைகளும் உண்டு; அதேபோல் தீமைகளும் வருவதுண்டு.
    3. அவன் வேலையை ஒழுங்காகப் பார்ப்பதில்லை; அதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.
    4. காலையில் கதிரொளி எங்கும் பரவிற்று; கவ்வியிருந்த பனிப்படலம் நீங்கிற்று.
    5. உண்ணும் உணவு அளவாக இருத்தல் வேண்டும்; உடம்புக்கு ஒவ்வும் வகையில் இருத்தல் வேண்டும்; ஊட்டமும் சத்தும் உடையதாக இருத்தல் வேண்டும்.
    இப்படிப் பற்பல காட்டுகளை எழுதிக் கொண்டே போகலாம்.

    இவை தொடர் வாக்கியம் எனும் வகையின் பாற்படும். ஒன்றுக்கும் மேற்பட்டவை ஏதோ ஒரு வகையில் இணைக்கப் பெற்றுத் தொடர்வது இது. "ஆகையால், ஏனெனில், அதனால், எனினும், இருப்பினும்", போன்ற சொற்களால் இவை இணைக்கப்படலாம்.
    தனித்தனியே பல வாக்கியமாயினும் கருத்துத் தொடர்பால் ஒரு வாக்கியமாதலே தொடர் வாக்கியம் எனப்படுவது (ஆங்கிலத்தில் compound sentence). ஒரே எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது இவ்வகை என்றும் குறிப்பிடலாம்.

    இனி வேறு ஓரிரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
    1. மொழிப்பற்று மட்டும் இருந்தால் போதாது என்றும் மொழியைத் திருத்தமாய்ப் பேசவும் எழுதவும் பயிற்சி பெற்றிருப்பது அவசியம் என்றும் அறிஞர் கூறுவர்.
    2. திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைக் காணவில்லை என்றதும் தாயானவள் பதறித் துடித்தாள்; அலறினாள்; காவலரிடம் முறையீடு செய்ய ஓடினாள்.

    இவ்விரு வாக்கியங்களும் தொடர் வாக்கியங்கள் போலவே கருத்தால் தொடர்ந்து செல்கின்றன. ஆனால் ஒரு செய்தி முதன்மையாகவும் மற்றவை அதைச் சார்ந்தும் வருவதைப் பார்க்கிறோம்.

    அறிஞர் கூறுவர் என்பது முதன்மையானது.
    "போதாது, பயிற்சி பெற்றிருப்பது", என்பவை சார்ந்து வருபவை.
    தாய் முறையீடு செய்ய ஓடினாள் என்பது முதன்மை வாக்கியம், திருவிழாவில் "காணாமற் போனதும், அலறித் துடித்ததும்", சார்புநிலை வாக்கியங்கள். எல்லாம் இணைந்து ஒரே வாக்கியம் ஆகியுள்ளமை காண்க.

    இவ்விரண்டு எடுத்துக்காட்டுகளையும் கலவை வாக்கியம் (ஆங்கிலத்தில் complex sentence) எனச் சொல்லலாம்.
    சுருக்கமாகச் சொன்னால் ஓர் எழுவாய் அல்லது ஓரிரு எழுவாய் ஒரே பயனிலை கொண்டு முடிவது "தனிநிலை வாக்கியம்".
    ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர் வாக்கியம். பல எழுவாய்கள் பல பயனிலைகள் கொண்டு முடிவது "கலவை வாக்கியம்".


    தமிழ் வளரும்.......


    நன்றி:- தினமணி கதிர்

  7. #103
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Jul 2007
    Posts
    308
    Post Thanks / Like
    iCash Credits
    22,159
    Downloads
    192
    Uploads
    0
    கவிக்கோ. ஞானச்செல்வன் அய்யா அவர்களிடம் இரண்டு ஆண்டுகள் பள்ளியில் தமிழ் படிக்க(1979-1981) எனக்கு வாய்ப்பு கிடைத்தது . அது இன்று வரை எனக்கு சோறு போடுகின்றது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
    எல்லோரையும் விட நான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்!
    எல்லோரையும் விட நான் அதிகம் உழைக்க விரும்புகிறேன்!!
    எல்லோரையும் விட நான் குறைவாகவே எதிர்பார்க்கிறேன்!!!

  8. #104
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு மாதவர், நீங்கள் கொடுத்து வைத்தவரய்யா..!!! உங்களின் நன்றியுணர்வு மிகவும் போற்றத்தக்கது.

    ---------------------------------------------------------------------------------------

    மொழிப்பயிற்சி - 45 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் !



    உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சிலப்பதிகாரத்துக்கு ஒரு பெயருண்டு. அதனால் உரைநடை சங்கச் சார்புக் காலத்திலேயே தமிழில் தோன்றிற்று. இறையனார் களவியலுரையும் பழந்தமிழில் உள்ள உரைநடை. அடியார்க்கு நல்லார் உரை, பரிமேலழகர் உரை, சேனாவரையர் உரை என்றெல்லாம் பழந்தமிழ் உரைநடைகள் பல உண்டெனினும், ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே தமிழில் உரைநடை வளர்ச்சி பெற்றது. உரைநடையில் புதினங்கள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள் என்று பலவும் தோற்றம் பெற்றன. ஆதலின் வாக்கிய அமைப்புப் பற்றிய செய்திகள் ஆங்கில மொழியைத் தழுவியே ஈண்டு எழுதப்பட்டுள்ளன.
    ஈண்டுரைக்கப்பட்ட வாக்கிய அமைப்புகள் பல இந்நாளில் சிதைவுற்றுப் போயின. தொடர் வாக்கியம், கலவை வாக்கியம் இரண்டும் இணைந்த தொடர் கலவை வாக்கியங்கள் நிரம்ப எழுத்துகளில் வந்துவிட்டன. பொதுவாகச் சிறிய சிறிய வாக்கியங்களாக அமைத்து எழுதுதல் நல்லது. மிக நீண்ட வாக்கியங்கள் படிப்பவர்க்குக் குழப்பத்தையும் மலைப்பையும் உண்டாக்கக்கூடும்.

    எழுத்தாளர் சிலர், "எப்படி எழுதினால் என்ன? பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுத வேண்டுமா?' என்று பேசி வருவது நன்றாகாது. பல்லுடைக்கும் தமிழ் எங்குள்ளது? எவர் அறிவார்? தமிழ் எழுத வராதவர்கள் தாம் தப்பித்துக் கொள்ளச் செய்கின்ற வாதம் இது. ஆங்கில நாளிதழ்களில் மொழியறிவு, புலமை இல்லாதவர் எழுத முடியுமா? பிழையான ஆங்கிலத்தைத் தமிழர்கள் ஏற்பார்களா? தமிழ் என்றால் மட்டும் ஏனோ புறக்கணிப்பு?

    உரை வகை நடை என்னும் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. செய்யுளியலில் "பாட்டிடை வைத்த குறிப்பினானும் பாவின்று எழுந்த கிளவியானும்... எனத் தொடங்கி உரைவகை நடை நான்கு என மொழிப' என்றார் தொல்காப்பியர். பாட்டின் உரைக்குறிப்புகள், பாக்கள் அல்லாது தோன்று சொல்வகையாக உலக வழக்கில் நிகழும் உரையாடல் என்று பலவாறு விளக்கம் தரப்படுகிறது. ஆயினும் முற்றிலும் இஃது உரைநடைத் தமிழ் பற்றிய செய்தி ஆகாது. உரையாப்பு வகை என்று இது குறிக்கப்படுகிறது. விரிவு விரும்புவோர் தொல் - நூற்பா 1429 ஐ காண்க. கிளவி - சொல்.

    தமிழின் சீர்மை

    தமிழகத்தில் இயற்கையாய் இருக்கும் அனைத்துப் பொருளுக்கும் தமிழில் சொற்கள் உள்ளன. கருவிகளுக்கும், பண்டங்களுக்கும் சொற்கள் உள்ளன. சொற்பெருக்கம் உடைய மொழி நம் தமிழ். மிகப் பழங்காலம் தொட்டு, நம் நாட்டிற்குப் புதிதாக வந்தவற்றுக்கு எப்படிப் பெயர் அமைத்தார்கள் எனச் சில காட்டுகள் வழியாகக் காண்போம்.

    குதிரை பண்டு தொட்டுத் தமிழகத்தில் இருக்கவில்லை. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுப் புதிதாக வந்தபோது அது குதித்துக் குதித்து ஓடுவது கண்டு தமிழர்கள் அதற்குக் குதிரை எனப் பெயரிட்டனர்.

    நம்நாட்டில் மிளகு இருந்தது. கார்ப்புச் சுவைக்கு (காரம்) இதனையே பயன்படுத்தி வந்தோம். உடல் நலனுக்கும் ஏற்றதாய் இருந்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு காய் புதிதாய் வந்தது. அது கார்ப்புச் சுவை கொண்டது. அதனால் முன்னிருந்த மிளகை அடிச்சொல்லாகக் கொண்டு மிளகாய் என்று புதிய சொல்லை உண்டாக்கினர்.

    பலவகை இலைகள் நம் நாட்டிலே உண்டு. புதிதாக ஓர் இலை இறக்குமதியாயிற்று. அந்த இலையைப் பயன்படுத்திப் புகை வரச் செய்து பயன்படுத்தினார்கள். புகைவரக் கூடிய இலையைப் புகையிலை என்று சொல்லலாயினர்.

    தட்டச்சு, பேருந்து, தொடர்வண்டி, நடைமேடை, அலுவலகம், கணினி, குறுஞ்செய்தி, குறுவட்டு, மின்னஞ்சல், முகப்பக்கம், இணையதளம் என்பனபோல் நூற்றுக்கணக்கான சொற்கள் காலந்தோறும் தமிழில் உருவாகி வந்துள்ளன; வருகின்றன.

    இப்போது புதிதாகத் தமிழ்ச்சங்கமம், இசைச் சங்கமம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். சங்கமம் என்பது வடசொல். கூடல் என்பதே தமிழ்ச் சொல். மூன்று ஆறுகள் சேருமிடம் "திரிவேணி சங்கமம்' என்பதைத் திருமுக்கூடல் என்றே தமிழர் சொல்லி வந்தனர். கூடலுடன் ஒரு "திரு' சேர்த்துக் கொண்டால் சொல்ல அழகாய் இருக்கும். இலக்கியத் திருக்கூடல் எப்படி?

    தமிழ் வளரும்.....

    நன்றி : தினமணிக்கதிர்

  9. #105
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தமிழ்ப் பற்றுடைய ," கவிக்கோ ஞானச் செல்வன் " தம்முடைய பெயரை ," கவிக்கோ அறிவுச் செல்வன் " என்று மாற்றிக் கொண்டிருக்கலாம். "ஞானம் ' வட சொல்லாயிற்றே. பாரதி தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
    Last edited by M.Jagadeesan; 28-06-2011 at 12:23 PM.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #106
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    விவஸ்தை என்பதை இங்கிதம் என்றால் பொருந்துமா? இங்கிதம் என்பது தமிழ் வார்த்தைதானா என்பது தெரியவில்லை.

    ஒரு சொல்லில் ஐந்து எழுத்துக்கள் இருந்தால் அது தமிழ்ச் சொல்லாக இருக்காது.
    Last edited by M.Jagadeesan; 28-06-2011 at 03:31 PM.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #107
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    சுடர் விடும் விளக்கில் ஒளி தரும் திரியாக இத்திரி விளங்குகிறது என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை!

    கவிக்கோவின் படைப்புக்கும் பாரதியின் முயற்சிக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  12. #108
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    தமிழ்ப் பற்றுடைய ," கவிக்கோ ஞானச் செல்வன் " தம்முடைய பெயரை ," கவிக்கோ அறிவுச் செல்வன் " என்று மாற்றிக் கொண்டிருக்கலாம். "ஞானம் ' வட சொல்லாயிற்றே. பாரதி தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
    ஐயா,

    இதில் நான் தவறாக எடுத்துக்கொள்ள ஏதுமில்லை. இதற்கு என்னால் சரியான விடையளிக்க முடியும் என்றும் தோன்றவில்லை. கவிக்கோவின் பெற்றோர் இட்ட பெயரை அவர் மாற்ற வேண்டும் என்ற நமது வேண்டுகோள் சரியோ..? அவர் இடும் பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம் எனில் அது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

    Quote Originally Posted by கௌதமன் View Post
    சுடர் விடும் விளக்கில் ஒளி தரும் திரியாக இத்திரி விளங்குகிறது என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை!

    கவிக்கோவின் படைப்புக்கும் பாரதியின் முயற்சிக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!!
    மிக்க நன்றி கெளதமன்.

Page 9 of 15 FirstFirst ... 5 6 7 8 9 10 11 12 13 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •