Page 5 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast
Results 49 to 60 of 174

Thread: மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)

                  
   
   
  1. #49
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஒரு அம்மா இருந்தாள் - தவறு
    ஓர் அம்மா இருந்தாள் - தவறு
    அம்மா ஒருவர் இருந்தாள் - தவறு
    அம்மா ஒருத்தி இருந்தாள் - சரி...
    அம்மா ஒருவர் இருந்தார் - சரி..

    ---------------------------------------------

    இரு தேவியர் முருகனுக்கு - தவறு!

    தேவியர் இருவர் முருகனுக்கு - சரி!

    -------------------------------------------------------------

    கண்ணா கருமை நிறக்கண்ணா...

    கறுப்புதான் எனக்குப் பிடித்த ........


    ------------------------------------

    பட்டணந்தான் போகலாமடி....

    -------------------------------------------------
    எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா? -- வாலி

    என் தங்கை என்றேன் .. என் தம்பி சென்றான் - கண்ணதாசன்

    ------------------------------------------

    இக்கட்டுரைப் பகுதிகளை வாசித்தபின் ,
    பல பாடல் வரிகள் சந்த சுகம் தாண்டி இலக்கணப் பாடங்களாகவும்.

    ----------------------------

    எனது பாராட்டு என் தம்பிக்கு!
    Last edited by இளசு; 25-04-2011 at 05:18 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #50
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்"

    இங்கு, " ஓர் பாலம் " என்று பாரதி பாடியுள்ளார். இது இலக்கண விதிப்படி சரியா?

  3. #51
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பழைய பாடல்களைக்கொண்டே பிழைகளை களையலாம் என்பதை அழகாக சுட்டிக்காட்டும் அண்ணாவிற்கு நன்றி.

    ஜெகதீசன் ஐயாவிற்கு,
    பெரிய கவிஞர்களின் கவிதையை அலசும் அளவிற்கு நான் புலமை பெற்றவன் அல்லேன். பொதுவாக கவிதை நயம் மற்றும் இசைக்காக சில விதிவிலக்குகளை அனுமதிப்பது உண்டு என எண்ணுகிறேன். இது அவ்வகையில் இருந்திருக்கலாம். சரியான விடை கிடைக்கும் போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா. நன்றி.

  4. #52
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி -18:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்


    அ, இ, உ சேர்க்கும் முறைமை:-
    தமிழில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் ஒரு சொல்லின் முதலெழுத்தாக வரலாம். ஆனால் உயிர்மெய் எழுத்துகளில் க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங எனும் பத்து மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரக் கூடியவை. இவற்றுள் "ங" மொழி முதலில் எப்படி வரும் என்று ஐயம் தோன்றலாம். அ,இ,உ, எ, யா என்பனவற்றோடு இணைந்து அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் என வரும் என இலக்கணம் இயம்புகிறது.

    "ஞ" எனும் எழுத்து ஞாயிறு, ஞாலம், ஞான்று, ஞிமிறு (வண்டு) ஞமலி (நாய்) எனப் பல சொற்களில் வருதல் காணலாம்.

    இப்போது நாம் சிந்திக்க வேண்டியது, ராமன், லட்சுமணன், ரங்கநாயகி, லோகநாதன் போன்ற பெயர்களைப் பற்றித்தான். இவை போன்ற வடமொழிப் பெயர்களாயிரம் தமிழில் நெடுங்காலமாக வழங்கப்பட்டு வருபவை. "ல,ள, ர, ற" இப்படியான எழுத்துகள் மொழி முதலில் வாரா. பின் எப்படி இவற்றை எழுதுவது?

    முன்னரே நாம் அறிந்து கடைப்பிடிக்கும் முறைதான். மீண்டும் நினைவூட்டுகிறேன். இத்தகைய பெயர்களின் முன்னெழுத்தாக அ, இ, உ ஆகியவற்றை இடமறிந்து, பொருத்தமறிந்து இணைத்து இச்சொற்களை எழுத வேண்டும்.

    (எ-டு) இராமன் (இ), இலட்சுமணன் (இ), அரங்கநாயகி (அ), உலகநாதன்(உ). இப்படிப் பொருத்தமாகச் சேர்க்க வேண்டும்.

    இலட்சுமணன் என்ற பெயரைத் தமிழ் ஒலிப்படுத்தி இலக்குவன் என்றே கம்பர் எழுதினார். லட்சுமணன் என்ற பெயரை அலட்சுமணன் ஆக்கிவிடக்கூடாது.

    ரங்கசாமி என்ற பெயரை அரங்கசாமி என்றெழுதிட வேண்டும். இரங்கசாமி ஆக்கிவிடக்கூடாது.

    ஸ்ரீ ரங்கம் - திருவரங்கம்.
    உலகநாயகி என்ற பெயரை அலகநாயகி என்றோ, இலக நாயகி என்றோ ஆக்கிடல் ஆகாது. பெரும்பாலும் நம் மக்கள் பயன்பாட்டுத் தமிழில் சரியாகவே காண்கிறேன். சிலர் ஏனோ இரங்கசாமி என்று எழுதி வருகிறார்கள். இராமசாமியை யாரும் அராமசாமி என்று இதுவரை ஆக்கவில்லை.

    இறும்பூதும், இறுமாப்பும்:-
    தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் உரைகளில் எழுத்துகளில் இவ்விரு சொற்களும் நிரம்ப இடம் பெற்றிருக்கும். இறும்பூது என்னும் சொல்லுக்கு வியப்பு, அற்புதம், பெருமை, வண்டு, மலை, தாமரைப்பூ எனப் பல பொருள் உண்டு. "உங்கள் வளர்ச்சி கண்டு நான் இறும்பூதடைகிறேன்'' என்றால் பெருமையடைகிறேன் என நல்ல பொருளில் கொள்ள வேண்டும். நான் வியப்படைகிறேன் என்று பொருள் கொண்டால், பாராட்டு மாறிப் பழிப்பாகிவிடும்.

    இறுமாப்பு என்பது, செருக்கு, அகந்தை, பெருமிதம், நிமிர்ச்சி, ஆணவம் என்று பலவாறு பொருள் சொல்லப்பட்டாலும், ஏறத்தாழ ஒரே பொருள் தருவன அச்சொற்கள்.

    அரிய பல நல்லவற்றை, ஆற்றலை, வெற்றியைப் பாராட்டும்போதும், வியப்பான செய்திகளைக் கேட்டபோதும் இறும்பூது என்னும் சொல்லை ஆளுதல் நன்றாம்.

    இறுமாப்பு - பெருமிதம் என்ற பொருளில் மனிதர்க்கு இருக்க வேண்டிய நற்பண்புகளுள் ஒன்றே. ஆனால் அது அகந்தையாய், ஆணவமாய் ஆகிவிடக்கூடாது. கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு மாந்தரிடையே இருப்பது இயற்கையே. இவ்விரு சொற்களும் தக்கவாறு இன்றும் பயன்படுத்தப்படுமானால் தமிழுக்கு ஆக்கமாம்.

    கோவிலா? கோயிலா?
    தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது.
    நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் "ய், வ்" என்றிரண்டு.

    கோ (க் + ஓ) இல் (இ) கோ என்பதில் "ஓ" எனும் உயிரும், இல்லில் "இ" எனும் உயிரும் இணையுமிடத்தில் "வ்" எனும் மெய்யெழுத்து தோன்றும்.
    ஆதலின் கோ + வ் + இல் = கோவில் என்பதே சரியானது.

    கோயில் என்னும்போது கோ + ய் + இல் = கோயில் என்று "ய்" உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால், "இ, ஈ, ஐ" வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும் "ஏ" முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்."

    கோவில் ஓகாரம் இருப்பதால் "வ்" உடன்படு மெய்தான் வர வேண்டும்.
    ஆயினும், மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது.
    இது ஏற்கத்தக்க பிழையே.

    மணி + அடித்தான் = மணியடித்தான் (இகரத்தின் முன் "ய்" உடம்படு மெய் வந்துள்ளது.)
    தே + ஆரம் = தேவாரம் (ஏகாரத்தின் முன் வ் உடம்படு மெய் வந்தது.)
    அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் "வ்" உடன்படு மெய் வந்தது)
    அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் "ய்" உடம்படுமெய் வந்தது. அவனேயழகன் என்றானது.
    போதும் எனக் கருதுகிறோம். இலக்கணம், படிப்பவர்க்குச் சுமை ஆகிவிடாமல் சுவை பயத்தல் வேண்டும் எனும் நோக்கில்தான் எழுதிவருகிறோம்.

    தமிழ் வளரும்.......

    நன்றி:- தினமணி கதிர்

  5. #53
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    இதுவரை நான் காட்டுமன்னார்கோயில் என்றே பயன்படுத்தி வந்தேன். அது பிழை என்பதால் திருத்தியமைத்து கட்டுமன்னார்கோவில் என்றே பயன்படுத்துவேன்.

    மிக்க நன்றி அண்ணா
    தொடருங்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  6. #54
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    பயிற்சி அருமை
    யாவரும் வாழ்க வளமுடன்

  7. #55
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மின்னூலாக்கி மன்றத்தில் வைப்பீர்கள்தானே அண்ணா.

  8. #56
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by Nivas.T View Post
    இதுவரை நான் காட்டுமன்னார்கோயில் என்றே பயன்படுத்தி வந்தேன். அது பிழை என்பதால் திருத்தியமைத்து கட்டுமன்னார்கோவில் என்றே பயன்படுத்துவேன்.
    நண்பரே. ஊக்கத்திற்கு நன்றி. காட்டு மன்னார்கோவில் என்றும் கூட பயன்படுத்தலாம்தானே..

    Quote Originally Posted by aathma View Post
    பயிற்சி அருமை
    நன்றி நண்பரே.

    Quote Originally Posted by அமரன் View Post
    மின்னூலாக்கி மன்றத்தில் வைப்பீர்கள்தானே அண்ணா.
    உங்கள் விருப்பம் அதுவானால் கண்டிப்பாக செய்வேன் அமரன்.

  9. #57
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி -19:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    ஒரு சிறிய சொல்லாய்வு செய்வோமா?
    "இதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு அலைந்தேன்?"
    இச்சொற்றொடரில் மெனக்கெட்டு என்பதன் பொருள் என்ன?
    மனைக்கட்டு நமக்குத் தெரியும். மெனக்கெட்டு?
    ஒருகால் இப்படியிருக்குமோ? எப்படி?
    மனம் கெட்டு அலைந்தேன் என்றிருக்கலாமோ?
    ஒரு வேலையை முடிப்பதற்காக அதே சிந்தையாக அலைதலை மனம் கெட்டு அலைந்தேன் என்று சொல்லுவது சரிதானே?
    ஏனிந்தப் பிழைகள்?

    வழிபாடு வேறு, வழிப்பாட்டு வேறு.
    வழிப்பாட்டுக் கூட்டத்தில் அமைதி நிலவியது என்றால் சரியான சொற்றொடர்.
    வழிபாட்டுக் கூட்டத்தில் என்றெழுதினால், வழிச் செல்வோர் பாடும் பாட்டு என்று பொருள் தருமே.
    அதாவது வழிநடைப் பாட்டு என்பதாம் இது.
    வழிபாட்டை - வழிப்பாட்டு ஆக்க வேண்டா.

    தமிழ் கற்றவரே சிலர் தம் ஏடுகளில் "நாநிலம்" என்றெழுதுகிறார்கள். இதன்பொருள் நாக்கு ஆகிய நிலம் என்பதன்றோ? முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனும் நால்வகை நிலங்களினாலான உலகத்தை "நானிலம்" எனல் வேண்டும்.
    நான்கு+ நிலம்= நானிலம்.

    இவ்வாறே தன்நலம் என்றெழுதுகிறார்கள்.
    தன் + நலம் = தன்னலம் என்றாகும்.
    தம் + நலம் = தந்நலம் என்றாகும்.
    இரண்டுமின்றி தன் நலம் எனல் விட்டிசைக்கிறது.

    இவ்வாறே,
    - என்+ தன் = என்றன் எனவும்,
    - எம்+ தம் = எந்தம் எனவும்
    ஆகுதல் இலக்கணம்.
    எந்தன் என்றெழுதுவது பிழையாகும்.

    தேசீயம், ஆன்மீகம், காந்தீயம் என்றெல்லாம் எழுதுகிறார்களே? சரியா?
    இல்லை. இவற்றை நெடில் போட்டு நீட்டாமல்,
    - தேசியம்
    - காந்தியம்
    - ஆன்மிகம்
    என்றே எழுதிடல் வேண்டும்.

    இஸம் - தமிழில் இயம் என்றாகும்.
    மார்க்சிஸம் - மார்க்சியம் என்றாகும்.
    தேசியம், காந்தியம் இவற்றுள்ளுள் இயம் இருத்தல் காண்க.

    தன்வினை செய்வினையா?
    திருவாரூரிலிருந்து தமிழாசிரிய நண்பரொருவர் தொலைப் பேசி வழியாக வினவினார்:-
    "ஐயா, தன்வினை, பிறவினை என்றும், செய்வினை செயப்பாட்டு வினையென்றும் இலக்கணம் கற்பிக்கிறோமே, இவற்றுள் தன் வினையும், செய்வினையும் ஒன்றுபோல்தானே உள்ளன? இவற்றிடையே வேறுபாடு என்ன?''
    இஃது அறிவினாவா? அறியா வினாவா? என்று நம்மால் சொல்ல இயலவில்லை.

    மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தன்வினை தன்னைச் சுடும் என்பதும், யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் என்பதும் அல்லவா?
    தன்வினையாவது? செய்வினையாவது? எல்லாம் உங்கள் வினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுதல் முறையா?

    செயப்பாட்டு வினை வடிவம் என்பது தமிழ்மொழிக்குப் புதியதே ஆகும்.
    பள்ளிப் பாட நூலில் செய்வினை, செயப்பாட்டு வினை என்று வந்தாலும் அது ஆங்கில மொழியின் தாக்கத்தால் விளைந்ததே.
    சற்றே விளக்கமாக அறிவோமா?

    திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். இது செய்வினை வாக்கியம்.
    திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது செயப்பாட்டு வினை வாக்கியம்.

    இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான். இது தன்வினை வாக்கியம்.
    இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் - இது பிறவினை வாக்கியம்.

    செய்வினை வாக்கியமும், தன்வினை வாக்கியமும் அமைப்பில் ஒன்றுபோலவே இருக்கும்.
    ஆனால் செய்வினையை செயப்பாட்டுவினையாக மாற்றுகிறபோது படு - பட்டது என்ற துணைவினை சேர்கிறது.
    எழுவாய் இருந்த இடத்தில் செயப்படுபொருள் வந்துவிடுகிறது.
    ஆல் எனும் உருபு (ஒட்டுச் சொல்) இணைகிறது.

    தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும்போது "வி, பி" என்னும் இரண்டு எழுத்துகளுள் ஒன்று ஒட்டிக் கொள்கின்றது.
    திருமுழுக்குச் செய்வித்தனர்.
    - செய்தனர் - தன்வினை
    - செய்வித்தனர் - பிறவினை (வி சேர்ந்தது)

    பாடம் படிப்பித்தனர்.
    - படித்தனர் - தன்வினை
    - படிப்பித்தனர் - பிறவினை (பி சேர்ந்தது)

    செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டு வினையாக மாற்றும் போது அத்தொடரின் பொருள் மாறாது.
    ஆனால், தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும் போது அந்தத் தொடரின் பொருளே மாறிவிடும்.
    - திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றாலும்,
    - திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்றாலும் பொருள் ஒன்றே.

    - இராசராசன் பெரிய கோயிலைக் கட்டினான் எனும் தன்வினை வாக்கியத்தை,
    - இராசராசன் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் என மாற்றும்போது, இராசராசன் அல்லாத கொத்தனார், சித்தாள்கள் வாக்கியத்தில் நுழைந்துவிடுகிறார்கள். பொருளில் பெரிய மாற்றம் உண்டாகிறது.

    தமிழ் வளரும் .......

    நன்றி:- தினமணி கதிர்

  10. #58
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by பாரதி View Post
    ஒரு சிறிய சொல்லாய்வு செய்வோமா?
    "இதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு அலைந்தேன்?"
    இச்சொற்றொடரில் மெனக்கெட்டு என்பதன் பொருள் என்ன?
    மனைக்கட்டு நமக்குத் தெரியும். மெனக்கெட்டு?
    ஒருகால் இப்படியிருக்குமோ? எப்படி?
    மனம் கெட்டு அலைந்தேன் என்றிருக்கலாமோ?
    ஒரு வேலையை முடிப்பதற்காக அதே சிந்தையாக அலைதலை மனம் கெட்டு அலைந்தேன் என்று சொல்லுவது சரிதானே?
    ஏனிந்தப் பிழைகள்?
    மெனக்கெட்டு என்பதன் பொருளை அறிந்தேன். நன்றி பாரதி அவர்களே.

    வேலைமெனக்கெட்டு என்கிறார்களே... அதன் பொருள் என்னவாக இருக்கலாம்?

    Quote Originally Posted by பாரதி View Post
    வழிபாடு வேறு, வழிப்பாட்டு வேறு.
    வழிப்பாட்டுக் கூட்டத்தில் அமைதி நிலவியது என்றால் சரியான சொற்றொடர்.
    வழிபாட்டுக் கூட்டத்தில் என்றெழுதினால், வழிச் செல்வோர் பாடும் பாட்டு என்று பொருள் தருமே.
    அதாவது வழிநடைப் பாட்டு என்பதாம் இது.
    வழிபாட்டை - வழிப்பாட்டு ஆக்க வேண்டா.
    இறை வணக்கத்தை வழிபாடு என்கிறோம். அத்தகைய கூட்டத்தை வழிபாட்டுக்கூட்டம் என்பது சரியா? வழிப்பாட்டுக்கூட்டம் என்பது சரியா? இந்த இடத்தில் இன்னும் ஐயம் உள்ளது. தெளிவுபடுத்துங்களேன்.

  11. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    செய்வினை வாக்கியம் தமிழில் அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை.
    பல ஐயங்களுக்கு விடை கண்டேன்.வேலைகெட்டு வீணாக அலைந்தேன் என்பது முற்காலத்தில், "வினைகெட்டு வீணாக அலைந்தேன்" என்று இருந்திருக்கலாம். அதுவே காலப்போக்கில்,"மெனக்கெட்டு அலைந்தேன்" என்று மாறியிருக்கலாம் என்பது என் கருத்து. இக்கருத்து தவறாகவும் இருக்கலாம்.

  12. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by பாரதி View Post
    [CENTER][SIZE="4"]
    - இராசராசன் பெரிய கோயிலைக் கட்டினான் எனும் தன்வினை வாக்கியத்தை,
    - இராசராசன் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் என மாற்றும்போது, இராசராசன் அல்லாத கொத்தனார், சித்தாள்கள் வாக்கியத்தில் நுழைந்துவிடுகிறார்கள். பொருளில் பெரிய மாற்றம் உண்டாகிறது.
    அழகான எடுத்துக்காட்டு
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

Page 5 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •