பக்கத்துக்கு வீட்டில் ஓர்
பத்து வயது சிறுமி,
‘அங்கிள்’ என்றழைப்பாள் என்னை
அழகாக…
சந்தேகங்கள் கேட்டறிவாள்
துடிப்புள்ள மாணவியாக…
வேண்டும் பொருளுக்கு
சண்டையிடுவாள் - உரிமையுள்ள சகோதரியாக…
ஓர் நாள்,
ஏதோ வேலையில் இருந்த என்னை
‘அண்ணா’ என்ற குரல் திரும்ப வைத்தது ???
ஆம், ‘அங்கிள்’ என்றழைத்த குரல்தான் அது…
ஒன்றும் புரியாது
உற்றுப்பார்த்தேன்…..
தாவணி அணிந்திருந்த அவளுக்கு, அவள்
தாய் கொடுத்த அறிவுரையாம் அது…!
Bookmarks