இந்திய அணி முனைப்புடன் ஆடியது! வெற்றி பெற்றது! அனைவரும் கொண்ட்டாடுவோம்! சச்சின் டெண்டுல்கர் இந்தியக் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் உலகக் கிரிக்கெட்டுக்குக் கிடைத்த மாபெரும் நட்சத்திரம்! அவர் சதம் எடுத்தாலும் எடுக்க விட்டாலும் அவர் இந்திய அணிக்காக எப்போதும் முனைப்பாக ஆடுவார்! அதைத்தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்! மூட நம்பிக்கைகளை விடுத்து, முனைந்து ஆடி, இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டால் பாரம் நீங்கி வெற்றி பெறுவோம்! நமக்கு இருக்கும் முனைப்பு பிற அணிகளுக்கும் இருக்கும் என்பதையும் எப்போதும் நினைப்பில் வைக்க வேண்டும்! வெற்றியைக் கொண்டாடுவோம்! தலைக்கனம் பிடித்து அலையாமல் தொடர்ந்து நன்கு விளையாடுவோம்! இறுதியில் இது ஒரு நல்ல விளையாட்டு, போரல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்போம்!
Bookmarks