கண்மணியே என்றாய்
கண்ணடித்தே சொன்னாய்
காதலியே எனை இன்று
காதலில் சிக்கவைத்தாய் என்றாய்
பொய்க்காதல் பல உண்டு
பொய்யன் நான் இல்லை
பொன்னான உன்னை
பொழுதெல்லாம் காப்பாய் என்றாய்
நீ சொன்ன கதை
என் மனதை நெருட
நீண்ட நாள் உனை நினைத்தேன்
நித்திரையிலும் மீட்டெடுத்தேன்
உன் பாசம் என் மனதை நெகிழ
உன்னை நேசித்தேன்
இதை அறிந்த நீ
இணையில்லா இன்பம் உற்றாய்
இணைந்த என்னோடு
இயல்பாகப் பழகினாய்
தொடக்கத்தில் எம் காதல்
தொடுகையில்லா கூடல்
இந் நிலமை மாறியது
இடையில் கை படர்ந்தது
இரண்டு மாதங்கள் கழிந்தன
இன்னும் உன்னைக் காணவில்லை
இரவு நேர ஒத்திகை பின்
இருண்ட என் வாழ்வு விடியவில்லை
Bookmarks