Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: வேர் நட்பு..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Lightbulb வேர் நட்பு..!






    அடை மழை கால
    புழுக்கங்கள் போல்
    விடை தெரியாத
    உன் மௌனங்கள்..!!

    உரக்க எழுதினாலும்
    இரங்கவில்லை இதயம்..
    இரவு முழுக்க
    ஈரம் எங்கும்…!!

    பரிமாறல்களின்றி..
    பார்வைகளின்றி..
    பாசம் பேச
    வேற்று மொழியை
    விரும்பவில்லை நான்..!!

    உன் கரம் பற்றி
    விழி ஊன்றி
    ஒரேயொரு முறை
    நாம் நட்பு சமைப்போம்..!!

    பகிர்தல் நட்பிற்கழகாம்..
    பகிர ஏதுமில்லையெனினும்..
    பகிராமலே பாத்திரம் நிரம்புவது
    நட்பில் மட்டுமே சாத்தியம்..!!
    ̀̀
    அன்பின் ஊற்றை
    அந்த நாள் நினைவுகளை
    அழுந்த வாசிக்கையில்
    நிரம்பி விடும் கண்ணீருக்கேனும்
    பதில் சொல்வாயா நீ…??!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    ' பூ ' வைக் கிழித்த முள்...எங்களையும் காயப் படுத்துகிறது....

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    காயப்பட்டதால் காட்ட விரும்பமின்றி விலகிக் காயப்படுத்துகிறதோ நட்பூ?

    நன்றிகள் ஜானகி அம்மா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    முட்கள் காய்ந்து உதிர்ந்துவிடும்.....

    நட்பும் மீண்டும் மலர்ந்துவிடும்....

    உண்மையெனும் உரமிருந்தால்....

    திண்மையெனும் நீர் அருந்தியே.....

    வேர்கள் உயிர்க்க காத்திருப்பாய் !

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பகிர்தல் நட்பிற்கழகாம்..
    பகிர ஏதுமில்லையெனினும்..
    பகிராமலே பாத்திரம் நிரம்புவது
    நட்பில் மட்டுமே சாத்தியம்..!!
    இந்த வரிகள் மட்டும் போதும் பூமகள் நட்பின் அழகினைப் படம் பிடித்துக் காட்ட....

    வாழ்க்கை எனும் வேக இயந்திரத்தில் அகப்பட்டு
    திசைக்கு ஒன்றாய் சிதறுப்பட்டு
    ஓடிக் கொண்டிருந்தாலும்...

    ஓரே எண்ணத்துடன்,
    புரிதலுடன் ஓடிக் கொண்டிருக்க
    நட்பினால் தான் முடிகிறது....

    அந்த வேரினை அழகாக படம் பிடித்த கவிதைக்கு என் வாழ்த்துகளும்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    அன்பு பூமகள்... ஓவியன் குறிப்பிட்ட வரிகளையே சிலாகித்து சொல்ல விரும்பினேன். அதை ஏற்கெனவே ஒருவர் சொல்லிவிட்டபின் அதை அடிகோடிடுகிறேன்.[காயங்கள் விரைவில் ஆறுக]
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    வேதனைக்கும் கண்ணீருக்கும் பிறந்த வரிகள் கவிதையாக...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வேரோடு கொண்ட நட்பூ
    என்றும் வேரோடியிருக்கட்டும்.
    வேறிடம் சென்றாலும்
    வேரிடம் சிநேகம் மாறுமோ?
    நழுவும் நட்பின் ஏக்கத்தை
    நன்றாகவே இயம்புகின்றன வரிகள்.
    வலியாடும் வார்த்தைகளில்
    களியாடக் காத்திருக்கிறேன்.

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் கலாசுரன்'s Avatar
    Join Date
    31 Jan 2011
    Posts
    115
    Post Thanks / Like
    iCash Credits
    9,960
    Downloads
    0
    Uploads
    0
    நன்றாக உள்ளது..

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சில பிறழ்வுகளுக்கு மனம் ஏற்கும் விளக்கம் கிடைக்கும் வரை... ( Unresolved emotional conflict)
    நெஞ்சில் தைத்த நெருஞ்சிமுள் நிலைத்தே உறுத்தும்....

    வலியின் தீவிரம் குறையலாம்... ஆனால் மறைவதில்லை..

    விளக்கமும் சுமுகத் தீர்வும் காலம் தாஆஆஆழ்ந்து கிடைத்தால்...
    கிடைத்தும் வீரியப் பயனில்லை...

    வாழ்க்கை மரத்தின் வேர்களின் சூட்சுமங்கள்
    மனிதம் இன்னும் முழுதாய் அறியாதவை..


    பாமகளின் கவிதைக்குப் பாராட்டுகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் கலாசுரன்'s Avatar
    Join Date
    31 Jan 2011
    Posts
    115
    Post Thanks / Like
    iCash Credits
    9,960
    Downloads
    0
    Uploads
    0
    கொள்ளாம்..

    நளின நடைகொண்டதோர்க் கவிதை...!

    வாழ்த்துக்கள் .

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by பூமகள் View Post
    அன்பின் ஊற்றை
    அந்த நாள் நினைவுகளை
    அழுந்த வாசிக்கையில்
    நிரம்பி விடும் கண்ணீருக்கேனும்
    பதில் சொல்வாயா நீ…??!!
    நட்பில் புரிதல் பூரணத்துவம் அடைந்தால் மட்டுமே இத்தகைய கேள்விகளுக்கு எளிதில் விடைப்பது சாத்தியம்..!!

    தலைப்புக்கு ஏத்தமாதிரியே கவிதையின் வரிகளில் உணர்வுகள் ஆழமாய் மிளிர்ந்திருப்பது அருமை..!! வாழ்த்துக்கள் பூமகள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •