அதிக போட்டிகள் விளையாடி , அதிக பங்களிப்பு உள்ளதால் இயல்பாகவே வெற்றி வாய்ப்புகள் போல தோல்வியும் அதிகமாக தெரிகிறது ,இது மாயை தான் ,புள்ளி விவரங்களின்படி பார்த்தால் உண்மை புரியும்
அதிக போட்டிகள் விளையாடி , அதிக பங்களிப்பு உள்ளதால் இயல்பாகவே வெற்றி வாய்ப்புகள் போல தோல்வியும் அதிகமாக தெரிகிறது ,இது மாயை தான் ,புள்ளி விவரங்களின்படி பார்த்தால் உண்மை புரியும்
வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்
ஒரு நல்ல மனிதரின் உழைப்பை இப்படி எல்லாம் மோசமாக முடிச்சு போடக்கூடாது.
aalunga நல்ல விளக்கத்திற்கு மிக்க நன்றி.
அன்புடன் உதயா
சச்சின் குறித்து நான் எழுதலாம் என்றிருந்தேன். நீங்கள் முந்திவிட்டீர்கள்.
முதலில் 11 பேர் குழுவிலிருந்து சச்சின் என்ற தனிமனிதனை முன்னிறுத்தி ”தோல்வி கண்டது” “வெற்றி கண்டது” என்று சொல்வது மிகப்பெரிய தவறு. ஒரு அணி ஜெயிக்க, மற்றும் தோற்க அவ்வணியின் அனைத்துவீரர்களின் முயற்சியில்தான் இருக்கிறது. சச்சின் சதமடித்த போட்டிகளில் மற்ற வீரர்கள் எப்படி ஆடினார்கள்? பவுலர்கள் தங்கள் கடமையை எப்படி செய்தார்கள் என்பதை யாரும் பார்ப்பதேயில்லை. ஒரு அணியில் ஒருவர் மட்டும் சதமடித்துவிட்டாலே ஸ்கோர் சராசரியாக இருநூறைத் தாண்டிவிடும். அப்படியெனில் தோல்விக்கு யார் காரணமாக இருக்க முடியும்?
புள்ளிவிபரங்கள் தந்த ஆலுங்க விற்கு நன்றி!!!!
இன்னொரு குற்றச்சாட்டும் உள்ளது! அது சச்சின் சாதனைக்காகத்தான் ஆடுகிறார் என்று!!! ஒரு பேட்ஸ்மென் சாதனைக்காக ஆடினால் நிச்சயம் ஸ்கோரிங் ரேட் குறையும்... ஆனால் சச்சினின் ஸ்கோரிங் ரேட் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சச்சின் இறங்கி அடிப்பதால் ஏதாவது ஒரு சாதனை தானாகவே நிகழ்ந்துவிடுவதென்பதால் சச்சினை சாதனைக்காகத்தான் ஆடுகிறார் என்று சொல்வது ஆராயாமல் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்!!!
கொஞ்சம் பெருமைப் படுங்கள்!! சச்சின் இந்திய அணிக்குக் கிடைத்த பொக்கிஷம்!! அவரை/அவரது பங்கை பல இடங்களில் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்பது என் கருத்து!
இங்கிலாந்துடன் டையடித்த போட்டியிலும் சரி, தென்னாப்பிரிக்காவுடன் தோல்விகண்ட போட்டியிலும் சரி, லோயர் ஆர்டர் பேட்ஸ்மென்கள் மற்றும் பவுலர்கள் சிறப்பாக செயல்படவில்லை... ஆகவே, சச்சினைக் குறை சொல்வது கொஞ்சம் காட்டமாகச் சொல்லவேண்டுமென்றால் “முட்டாள்தனமானது”
தொடருங்க ஆலுங்க.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
aalunga சச்சின் சதம் அடிக்க முற்பட்டு (50 ஓட்டங்களுக்கு மேல் ஓட்டங்களைக் குவித்த தடவைகள்) ஆனால் சதம் அடிக்க முடியாமல் இந்திய அணி வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த புள்ளி விபரங்கள் இல்லாமல் ஒரு தெளிவான முடிவுக்கு எப்படி வருவது..?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அவர் மட்டும் விளையாடினால் போதுமா அணியில் உள்ள அணைவரும் சிறந்து பங்களித்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம்..
இதில் அவர் மேல் மட்டும் குறை சொல்ல ஒன்றும் இல்லை...
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
ஆதவா சொல்வது போல் சச்சின் ஆட்டத்தை மட்டும் வைத்து இந்தியாவின் வெற்றியை/தோல்வியை பற்றி பேசுவது ஏற்புடையதல்ல.
சச்சன் ஒரு சிறப்பான நட்சத்திர ஆட்டக்காரர், அவர் சிறப்பான ஆட்டங்கள் அணிக்கு வலிமை சேர்க்கலாம், ஆனால் அவர் ஆட்டம் மட்டுமே இந்திய அணியின் வலிமை என்று சொல்லுதல் கூடாது. அப்படி சொல்லுதல் மற்ற இந்திய வீரர்களின் தரத்தை தாழ்த்துவது போலுள்ளது..
அன்புடன் ஆதி
சச்சினைப் பற்றிக் குறை சொல்பவர்களின் திருப்திக்காக ஒரு செய்தி.
ஆரம்பக்கால கட்டத்தில் சச்சினுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் போல யாருக்கும் வழங்கப்படவில்லை. (நன்றி: அன்றிருந்த கவாஸ்கர், வெங்சர்க்கார் போன்ற செல்வாக்கான முன்னாள் பாம்பே வீரர்கள்). அதே மாதிரியான வாய்ப்பு வினோத் காம்ளி, பிரவீன் அம்ரே போன்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.
ஒருநாள் ஆட்டத்தில் சச்சினின் முதல் சதம் எழுபது ஆட்டங்களுக்குப் பிறகே அமைந்தது. ஆனால் இப்போதுள்ள வீரர்கள் முதல் தொடரில் சாதிக்கவில்லையென்றால் அணியில் மீண்டும் இடம் பெறுவது குதிரைக் கொம்பு.
மண்டலம் வாரியாக வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இந்தியாவுக்கு ஒரு சாபக்கேடு. திராவிட் இருந்ததால் தமிழக வீரர் சரத்துக்கு உரிய நேரத்தில் வாய்ப்பு கிட்டவில்லை. ராபின் சிங்குக்கு காலங்கடந்தே வாய்ப்பு வழங்கப்பட்டது.
தேர்வுக்குழுத் தலைவர் சிலசமயம் புகுந்து விளையாடுவார். ஒருசமயம் விஸ்வநாத் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தபோது, தென்மண்டலத்துக்கான கோட்டாவில் கர்நாடக வீரர்களைக் கொண்டு நிரப்பினார்.
ஆரம்பத்தில் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல மறுத்து, அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட கங்குலிக்கு டால்மியா தயவால் இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது. ( உண்மையில் சிறந்த வீரர்)
ஸ்ரீகாந்த் இல்லாவிட்டால் அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்காது. ஸ்ரீகாந்தும் சூப்பர் கிங்ஸில் அனிருத்தை (அவரின் மகன்தான்) நுழைத்தார். அதே போல் மகாராஷ்டிரா மாநில அணியில் இடம் கிடைக்காத ரோகன் கவாஸ்கர் மேற்கு வங்காள அணியில் இடம் பிடித்து பிறகு அந்த மண்டலக் கோட்டாவில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
சுருக்கமாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற திறமையுடன், சிபாரிசும் தேவை. ஆனால் கிரிக்கெட்டில் வெற்றி பெற கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பும் தேவை. (உதாரணம்: சச்சின், கங்குலி).
மற்றவர்கள் அணியில் இடம் பெறலாம். மக்கள் மனதில் இடம் பெற முடியுமா?
[ஹைய்யா! நல்லா சூடேத்தி விட்டாச்சு. இனி ஆளாளுக்கு பிச்சு உதறுவாங்க. தள்ளி இருந்து வேடிக்கை பார்ப்போம்.]
நான் இந்த கருத்தை வலியுறுத்தி எனது முக புத்தகத்திலும் (Face Book) பதிவு இட்டிருந்தேன்..
என் நண்பர் ஒருவர் ஒரு புதுமையான தகவலைச் சொன்னார்..
அதாவது, சச்சின் மிக சரியாக சதம் அடித்தால் (அதாவது சரியாக 100 எடுத்தால் - வெளியேறினாலும் சரி, ஆட்டமிழக்காமல் இருந்தாலும் சரி) இந்தியா தோல்வி காணும். இதுவே, இப்படி ஒரு புரளியாக மாறியது என்றார்...
ஆனால், உண்மை......
சச்சின் 100 மட்டுமே அடித்த ஆட்டங்கள் 6..
அவற்றில் இந்தியா அபார வெற்றியைச் சுவைத்த போட்டிகள் 4!!
போட்டிகள்:
100 - பாகிஸ்தான் (1996) தோல்வி
100 - ஆஸ்திரேலியா (1998) வெற்றி
100* - கென்யா (1998) வெற்றி
100 - ஆஸ்திரேலியா (2003) வெற்றி
100 - பாகிஸ்தான் (2006) தோல்வி
100* - மேற்கிந்திய தீவுகள் (2007) வெற்றி
Last edited by ஆளுங்க; 14-03-2011 at 05:03 PM.
வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சச்சினுக்கு ஏன் அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றால், சச்சினின் மேலுள்ள நம்பிக்கை.. கிட்டத்தட்ட 78 போட்டிகளுக்குப் பிறகுதான் அவரால் சதமடிக்க முடிந்தது என்று கூறுவதை விட, அந்த எழுபது போட்டிகளில் அவரது ரன்கள் எத்தனை?
78 போட்டிகளில் மொத்தம் 2126 ரன்கள் ஆவ்ரேஜ் 32.70!
சச்சின் அப்பொழுது ஓபனர் கிடையாது. ஐந்தாவது மனுசன். அப்படியொன்றும் குறைந்த ஆவ்ரேஜ் அல்ல.
ஓபனராக இறங்க ஆரம்பித்தபிறகுதான் தலைவர் ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார் அதே 78 போட்டிகளில் ஓபனராக இறங்கி அடித்த ரன்களை வரிசைபடுத்தியிருக்கிறேன்...
82, 63, 40, 63, 73, 6, 24, 11, 6 எட்டு போட்டிகளில் நான்கு அரைசதங்கள்,
மொத்தம் 17 அரைசதங்கள்!! மூன்று “டக்” அதில் முதலிரண்டு போட்டிகள்!!
இதற்குப்பிறகு ஆஸ்திரேலியாவுடன் ஒரு சதம்.
இதே காலகட்டத்தில் டெஸ்டில் ஆடியது 32 போட்டிகளில் (45 இன்னிங்ஸ்) 2023 ரன்கள்... ஆவ்ரேஜ் 50.57!!! அப்பொழுதே ஏழுசதங்கள்!!!
அவருக்கு வாய்ப்பு கொடுத்தது இப்பொழுது சரியா தவறா?? நீங்களே முடிவுபண்ணுங்களேன்!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
தகவலுக்கு மிக்க நன்றி ஆதவா....
_____________________________________________________________________________________________
சில காலங்களின் முன்னர் சச்சின் ஒரு போட்டியில் 50 ஓட்டங்களைக் குவித்தால் அதன் பின்னர் நூறு ஒட்டங்களைக் குவிக்க அவர் அதிக பந்து வீச்சுக்களைச் சந்திப்பது வழமையாக இருந்தது. (அண்மைக் காலங்களில் இந்த வழக்கத்தை மாற்றி அதிரடியாக ஆடி வருகிறாரென்பது வேறு விடயம்) சச்சினின் இந்த பண்புதான் சச்சினைப் பற்றிய இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கான அடிப்படைக் காரணமாக இருந்திருக்குமென நான் நம்புகிறேன்.
கிரிக்கட் என்பது என்னதான் பல வீரர்களின் கூட்டு முயற்சியாக இருந்தாலும் சில/பல சந்தர்பங்களில் யாராவது ஒருவரது முயற்சியால் அல்லது தவறினால் அவர் தங்கியிருக்கும் அணியின் வெற்றி தோல்வியில் பாரிய பங்கினை ஏற்படுத்தி விடெமென்பதால் (தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அலன் டொனால்ட் அவசரத்தில் இழைத்த ஒரு தவறினால் அவர்களது அணி உலகக் கோப்பையையே இழந்ததை மறக்க முடியுமா) இது போன்ற குற்றச்சாட்டுக்கள் வழமைதான்.
அதுதாங்க ‘காய்க்கிற மரத்தில்தான் கல்லடி விழுமெங்கிறேன்’
சச்சின் ஒரு அற்புதமான வீரர் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை, கிரிக்கட்டின் நடமாடும் சாதனைப் பெட்டகமாக இருக்கும் அவரது திறமையை காலமெல்லாம் கிரிக்கட் உலகம்சொல்லிக் கொண்டிருக்கும்.
அணியொன்றினைத் தலமை தாங்குவதில் சச்சினின் கணிப்புக்கள் பொய்த்திருக்கலாம் (சென்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் போலார்ட்டுக்கு முன்னர் ஹர்பஜனை துடுப்பெடுத்தாட அனுப்பியது வரை..!! ), ஆனால் ஒரு அணியின் முன்வரிசை ஆட்டக்காரராக அவர் வேண்டியதற்கும் மேலாக இந்திய அணிக்கு செய்து முடித்து விட்டார் என்பதே உண்மை.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks