ஒரு வித்தைக்காரன் தன்னுடன் ஒரு ஆடு, ஒரு புலி, மற்றும் ஒரு புல்கட்டு இவற்றோடு பயணம் மேற்கொண்டான். வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றின் கரையில் ஒரு படகும் இருந்தது. பின் வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அவன் ஆற்றைக் கடக்க வேண்டும்.
படகில் வித்தைக்காரன் எதாவது ஒன்றைமட்டுமே ஒருமுறை அழைத்துச் செல்ல முடியும்.
ஒரு கரையில்,
1. ஆடு மற்றும் புலி இருக்கவேண்டி வரக்கூடாது.
2. ஆடு மற்றும் புல்கட்டு இருக்கவேண்டி வரக்கூடாது.
அப்படி இருந்தால் புலி ஆட்டையும், ஆடு புல்லையும் தின்றுவிடும்.
3. மூன்றும் சேர்ந்திருந்தால் பிரச்னை இல்லை.
(கயிறுகொண்டு கட்டுதல் போன்றவை வேண்டாமே)
Bookmarks